Wednesday, August 13, 2014

தன்னைக் காத்த கர்ணன்! - வனபர்வம் பகுதி 239

Karna saving himself!  | Vana Parva - Section 239  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கந்தர்வர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; கந்தர்வர்களின் பெரும்படையைக் கண்டதும் கௌரவப்படை பின்வாங்கியது; கர்ணன் மட்டும் எதிர்த்து நின்றது; கௌரவப் படை திரும்பி வந்து கந்தர்வர்களைத் தாக்கியது; பெரும் கோபம் கொண்ட சித்திரசேனன் மாயப் போர் செய்தது; கர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அவனது தேரைத் தூள் தூளாக்கியது; தன்னைக் காத்துக் கொள்ள கர்ணன் ஓடியது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனிடம் திரும்பி, கந்தர்வர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பச் சொன்னார்கள். ஓ! பாரதா {ஜனமேஜயா}, தனது படைவீரர்கள் கந்தர்வர்களால் எதிர்க்கப்பட்டதைக் கண்ட சக்திமிக்க திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, கோபத்தால் நிறைந்தான். அந்த மன்னன் {துரியோதனன்} தனது படைவீரர்களிடம், "அவர்கள் {கந்தர்வர்கள்}, அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக நூறு வேள்விகளைச் செய்தவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து இங்கு வந்திருந்தாலும், எனது விருப்பங்களை எதிர்க்கும் அந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்" என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனனின் பெரும் பலம் பொருந்திய மகன்களும், அலுவலகர்களும், மேலும் ஆயிரக்கணக்கான போர்வீரர்களும் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர். பத்து திசைகளையும் தங்கள் சிம்மக் கர்ஜனைகளால் நிறைத்தபடி, வாயிலில் காவல் காத்துக் கொண்டிருக்கும் கந்தர்வர்களை நோக்கி விரைந்து காட்டுக்குள் நுழைந்தார்கள்.




குரு {கௌரவப்} படை வீரர்கள் காட்டுக்குள் நுழைந்ததும், பிற கந்தர்வர்கள் அவர்களிடம் வந்து, அவர்கள் முன்னேறுவதை மென்மையான முறையில் தடுத்தனர். ஆனால் அவர்களைக் கிஞ்சிற்றும் மதிக்காத குரு படை வீரர்கள், அந்தப் பெரும் காட்டுக்குள் நுழைய ஆரம்பித்தனர். விண்ணை அதிகாரம் செய்யும் அவர்கள் {கந்தர்வர்கள்}, திருதராஷ்டிரன் படையினரையும், அவர்களது மன்னனையும் {துரியோதனனையும்} வார்த்தைகளால் தடுக்க முடியாது என்பதைக் கண்டு, தங்கள் மன்னனான சித்திரசேனனிடம் சென்று அனைத்தையும் சொன்னார்கள். கந்தர்வர்களின் மன்னனான சித்திரசேனன் இதை அறியவந்தபோது, கோபத்தால் நிறைந்து, குருக்களைச் சுட்டிக்காட்டியபடி தனது தொண்டர்களிடம், "தீய நடத்தை கொண்ட இந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்" என்று கட்டளையிட்டான்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, இப்படிச் சித்திரசேனனால் உத்தரவிடப்பட்ட கந்தர்வர்கள், கைகளில் ஆயுதங்களுடன், திருதராஷ்டிரன் படையினரை நோக்கி விரைந்தனர். உயர்த்திப் பிடித்த ஆயுதங்களுடன் தங்களை நோக்கி கந்தர்வர்கள் விரைவாக வருவதைக் கண்ட குரு வீரர்கள், துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்த போதே திடீரென எல்லாத் திசைகளிலும் ஓடினார்கள். எதிரிக்கு முதுகைக் காட்டியபடி ஓடும் குருவீரர்களைக் கண்டும், ராதேயன் {கர்ணன்} மட்டும் ஓடவில்லை. பெரும் பலம்வாய்ந்த கந்தர்வப்படை தன்னை நோக்கி விரைவதைக் கண்ட ராதேயன் {கர்ணன்} தனது குறிதவறாத அம்புகளின் மழையால் அவர்களைத் தடுத்தான்.

அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, தனது கைகளின் லாவகத்தால், க்ஷுரபரங்கள், அம்புகள், பல்லங்கள் {பாதி நிலா போன்ற வடிவம் கொண்ட அம்புகள்}, உருக்கு மற்றும் எலும்புகளாலான பல்வேறு வகையான ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கந்தர்வர்களை அடித்தான். அந்தப் பலமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, குறுகிய காலத்தில் எண்ணிலடங்கா கந்தர்வர்களின் தலைகளை உருளச் செய்து, சித்திரசேனன் படையினரை வேதனையில் கதறவைத்தான். பெரும் புத்தி கூர்மை கொண்ட கர்ணனால் பெரிய எண்ணிக்கையில் கொல்லப்பட்டாலும், அந்தக் கந்தர்வர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மீண்டும் {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பினார்கள். சித்திரசேனனின் போர்வீரர்கள் களத்திற்கு விரைந்து வந்ததன் விளைவாக, பூமியானது அந்தக் கந்தர்வப் படையால் விரைவில் மறைக்கப்பட்டது.

பிறகு, மன்னன் துரியோதனன், சுபலனின் மகனான சகுனி, துச்சாசனன், விகர்ணன் மற்றும் திருதராஷ்டிரனின் பிற மகன்கள் ஆகியோர், கர்ணனின் தலைமையைத் {ஏற்றுத்} தொடர்ந்து, கருடனின் கர்ஜனைகளைப் பிரதிபலிக்கும் ஒலிகொண்ட சக்கரங்கள் பொருந்திய தங்கள் ரதங்களில் அமர்ந்து, {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பி, எதிரிகளைக் கொல்ல ஆரம்பித்தனர். கர்ணனுக்கு ஆதரவைத் தர விரும்பிய அந்த இளவரசர்கள், பெரும் எண்ணிக்கையிலான தங்கள் ரதங்களையும், உறுதியான உடல் படைத்த குதிரைகளையும் கொண்டு, அந்தக் கந்தர்வப் படையிடம் மோதினர். கந்தர்வப் படை முழுவதும் கௌரவர்களுடன் போர்புரிய ஆரம்பித்தது. போர் செய்த அவ்விரு படைகளுக்கிடையில் நடந்த மோதல், மிகக் கடுமையாகவும், {அதைக் காணும்} ஒருவரின் ரோமம் சிலிர்க்கும்படியும் இருந்தது. குரு படையின் கணைகளால் துன்புற்ற கந்தர்வர்கள் களைப்படைந்தது போலக் காணப்பட்டது. கந்தர்வர்கள் துன்புறுவதைக் கண்ட கௌரவர்கள் உரக்க கர்ஜித்தனர்.

கந்தர்வப்படை பயத்தில் கதறுவதைக் கண்டு கோபம் கொண்ட சித்திரசேனன், குரு படையை அழிப்பதெனத் தீர்மானித்து தனது இருக்கையில் இருந்து எழுந்தான். பல்வேறு வகையான போர்க்கலைகளை அறிந்த அவன் {சித்திரசேனன்} மாய ஆயுதங்களின் துணை கொண்டு போர் நடத்தினான். சித்திரசேனன் ஏற்படுத்திய மாயையால், கௌரவ வீரர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு, குரு படையின் ஒவ்வொரு வீரனும் கீழே விழுந்தான். அப்படி விழுந்தவன் பத்து கந்தர்வர்களால் சூழப்பட்டான். பெரும் ஆவேசமான தாக்குதலுக்கு உள்ளான குரு படையின் வீரர்கள் பெரிதும் துன்புற்று பீதியடைந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, வாழ விரும்பிய அனைவரும் களத்தைவிட்டு ஓடினர். திருதராஷ்டிரன் படை முழுவதும் கலைந்து ஓடிய போது, சூரியனின் வாரிசான கர்ணன் மட்டுமே அங்கு அசையாத மலையென நின்று கொண்டிருந்தான். உண்மையில், துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகிய அனைவரும் அந்த மோதலின் காரணமாகக் காயமுற்று சிதைந்து போயிருந்தாலும், கந்தர்வர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

கர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அனைவரும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் ஒன்று சேர்ந்து, கர்ணனை நோக்கி விரைந்தனர். அந்தப் பெரும் பலமிக்கப் போர்வீரர்கள் {கந்தர்வர்கள்}, சூதனின் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரும்பி, வாள்கள், போர்க்கோடரிகள் மற்றும் ஈட்டிகளுடன் எல்லாப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். சிலர் அவனின் {கர்ணனின்} தேர் நுகத்தடியையும், சிலர் அவனது கொடிக்கம்பத்தையும், சிலர் அவனது தேரின் ஏர்க் காலையும், சிலர் அவனது குதிரைகளையும், சிலர் அவனது தேரோட்டியையும் வெட்டி வீழ்த்தினர். மேலும் சிலர் அவனது {தேரில் இருந்த} குடையையும், சில அந்தத் தேரின் மரக் காப்பான்களையும் {தேரில் சுற்றிலும் இருக்கும் மரங்களையும்}, சிலர் அந்தத் தேரின் இணைப்புகளையும் வெட்டி வீழ்த்தினர். இப்படிப் பல்லாயிரம் கணக்கான கந்தர்வர்கள் ஒன்றுகூடி அவனது தேரைத் தாக்கி, நொடிப்பொழுதில் அதை {அத்தேரை} தூள் தூளாக்கினர். இப்படி அவனது {கர்ணனின்} தேர் தாக்கப்பட்ட போது, கைகளில் வாளுடனும் கேடயத்துடனும் கர்ணன் அதிலிருந்து குதித்து, விகர்ணனின் தேரில் ஏறி, தன்னைக் காத்துக் கொள்ள குதிரைகளை வேகமாகச் செலுத்தினான்."
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்