Monday, August 18, 2014

நண்பனைக் கண்ட அர்ஜுனன்! - வனபர்வம் பகுதி 243

Arjuna saw his friend!  | Vana Parva - Section 243  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கந்தர்வர்களுடன் மோதிய பாண்டவர்கள்; அர்ஜுனன் வெளிப்படுத்திய வீரம்; அர்ஜுனனால் தாக்கப்பட்ட கந்தர்வ மன்னன் சித்திரசேனன் இறுதியில் தன்னை வெளிக்காட்டுவது...

கந்தர்வ மன்னன் சித்திரசேனனுடன்
அர்ஜுனன் புரிந்த போர்
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தெய்வீக ஆயுதங்களை அறிந்து பொன்மாலைகள் அணிந்திருந்த கந்தர்வர்கள், தங்கள் சுடர்மிகும் கணைகளைக் காட்டி, பாண்டவர்கள் மீது எல்லாப் புறங்களில் இருந்தும் மோதினர். பாண்டுவின் மகன்கள் எண்ணிக்கையில் நான்காகவும், கந்தர்வர்கள் ஆயிரக்கணக்கிலும் இருந்ததால், அந்தக் களம் பார்ப்பதற்கு இயல்புக்குமிக்க வகையில் இருந்தது. கர்ணன் மற்றும் துரியோதனனின் தேர்கள் ஏற்கனவே கந்தர்வர்களால் தூள் தூளாக்கப்பட்டதுபோலவே, அந்த நான்கு வீரர்களின் தேர்களையும் உடைக்க முயற்சி நடந்தது.

ஆனால் அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} தங்கள் ஆயிரக்கணக்கான கணைகளை, ஆயிரக்கணக்கான கந்தர்வர்கள் மீது மழையெனப் பொழிந்து அவர்களை நோக்கி விரைந்தனர். பெரும் சக்தி படைத்த அந்த விண்ணதிகாரிகள் இந்தக் கணை மழையால் எல்லாப்புறங்களிலும் தடுத்து நிறைத்தப்பட்டு, பாண்டுவின் மகன்களின் அருகே வரமுடியாத படி இருந்தனர். பிறகு சினம் தூண்டப்பட்ட அர்ஜுனன், கோபக்கார கந்தர்வர்களை இலக்காக வைத்து, அவர்கள் மீது தெய்வீக ஆயுதங்களை வீசினான்.

இந்த மோதலில், பலமிக்க அர்ஜுனன், தனது அக்னேய ஆயுதத்தால், கந்தர்வர்களை ஆயிரமாயிரமாக யமனுலகுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். களத்தின் போர்வீரர்களில் முதன்மையானவனான வலிமைமிக்க வில்லாளியான பீமன், தனது கூரிய கணைகளால் கந்தர்வர்களை நூற்றுக்கணக்கில் கொன்று கொண்டிருந்தான். வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த மாத்ரியின் பலமிக்க மகன்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} நூற்றுக்கணக்கான கந்தர்வர்களுடன் மோதி, ஓ! மன்னா {ஜனமேஜயா} அனைவரையும் கொன்று கொண்டிருந்தனர். இப்படி அந்தப் பலமிக்கப் போர்வீரர்களின் {பாண்டவர்களின்}, தெய்வீக ஆயுதங்களால் கந்தர்வர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, திருதராஷ்டிரன் மகன்களைத் தங்களுடன் எடுத்துக் கொண்டு அவர்கள் {கந்தர்வர்கள்} வானத்திற்கு எழும்பினர்.

ஆனால் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அப்படி அவர்கள் வானுக்கு எழுவதைக் கண்டு, அவர்களை எல்லாப்புறங்களிலும் சூழ்ந்து தனது கணைகளால் பரந்து விரிந்த ஒரு வலையை அமைத்தான். கூண்டுக்குள் அடைப்பட்ட பறவைகளைப் போல, அந்த அம்பு வலையில் அகப்பட்ட அவர்கள் {கந்தர்வர்கள்} கோபத்துடன் அர்ஜுனன் மீது கதாயுதங்களையும், தண்டங்களையும் {சக்திகளையும்}, அகலமான வாள்களையும் {ரிஷ்டிகளையும்} வீசினர். ஆனால் மிகவும் பயனளிக்கக்கூடிய ஆயுதங்களை அறிந்து வைத்திருந்த அர்ஜுனன், அந்தக் கதாயுதங்கள், தண்டங்கள் மற்றும் அகன்ற வாள்களின் {ரிஷ்டிகளின்} மழையை விரைவில் தடுத்து, தனது சந்திர வடிவு கொண்ட கணைகளால் கந்தர்வர்களின் உறுப்புகளைச் சிதைக்க ஆரம்பித்தான். அவர்களது தலைகளும், கால்களும் கரங்களும் மேலிருந்து கீழே விழ ஆரம்பித்தது, கல் மழை பொழிவது போல இருந்தது. இக்காட்சியைக் கண்ட எதிரிகள் பீதியால் தாக்குண்டனர்.

பாண்டுவின் சிறப்பு மிக்க மகனால் {அர்ஜுனனால்} கந்தர்வர்கள் இப்படிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, அவர்கள் வானத்தில் இருந்து, பூமியின் தரையில் நின்று கொண்டிருந்த அர்ஜுனன் மீது கனமாகக் கணைகளின் மழையைப் பொழிய ஆரம்பித்தனர். ஆனால் எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பலமும் சக்தியும் வாய்ந்த அர்ஜுனன், அந்தக் கணை மழையைத் தனது ஆயுதங்களின் மூலம் தடுத்து, பதிலுக்கு அவர்களுக்குக் காயம் ஏற்படுத்தத் தொடங்கினான். பிறகு குரு குலத்தைச் சேர்ந்த அர்ஜுனன், ஸ்தூணாகர்ணம் {Sthunakarna}, இந்திரஜாலம் {Indrajala}, சௌரா {Saura}, ஆக்நேயா {Agneya}, சௌமயா {Saumya} ஆகிய நன்கு அறியப்பட்ட தனது ஆயுதங்களைப் பயன்படுத்தினான். குந்தியின் மகன் அடித்த நெருப்பைக் கக்கும் அந்த ஆயுதங்களால் எரிக்கப்பட்ட கந்தர்வர்கள், சக்ரன் {இந்திரன்} அடித்த வஜ்ரத்தால் எரிக்கப்பட்ட திதியின் மகன்களைப் போலப் பெரிதும் பாதிப்படைந்தனர்.

அவர்கள் மேலே இருந்தபடி அர்ஜுனனைத் தாக்கிய போது, தனது கணைகளின் வலையால் அவர்களை அவன் தடுத்தான். பூமியின் பரப்பில் நின்று கொண்டிருந்த அவனை {அர்ஜுனனை} அவர்கள் எல்லாப் புறங்களில் இருந்தும் தாக்கிய போது, அவன் {அர்ஜுனன்} தனது பிறை வடிவம் கொண்ட கணைகளால் அவர்களைத் தடுத்தான். குந்தியின் மகனால் {அர்ஜுனனால்} அச்சமூட்டப்பட்ட கந்தர்வர்களைக் கண்டதும், ஓ! பாரதா {ஜனமேஜயா} கதாயுதத்தை ஏந்தியபடி சித்திரசேனன் அங்கு விரைந்தான். மேலே இருந்த அந்தக் கந்தர்வ மன்னன் அர்ஜுனனை நோக்கி கைகளில் கதாயுதத்துடன் வந்தபோது, அர்ஜுனன் முழுவதும் இரும்பாலான அந்தக் கதாயுதத்தை ஏழு துண்டுகளாக்கினான்.  கணைகளின் பெரும் செயலால் அர்ஜுனன் அவனது கதாயுதத்தைப் பல துண்டுகளாக்கியதைக் கண்ட சித்திரசேனன், தான் அறிந்த அறிவியலின் உதவியுடன், தன்னை அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} பார்வையில் இருந்து மறைத்துக் கொண்டு, அவனுடன் {அர்ஜுனனுடன்} போரிட ஆரம்பித்தான்.

எனினும், வீரனான அர்ஜுனன் தனது தெய்வீக ஆயுதங்களால், தன்னை இலக்காக வைத்து கந்தர்வர்களால் அடிக்கப்பட்ட தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் தடுத்தான். சிறப்புமிக்க அர்ஜுனன், அந்த ஆயுதங்களைக் கொண்டு தன்னைத் தடுப்பதைக் கண்ட கந்தர்வர்களின் தலைவன் {சித்திரசேனன்}, தன் மாய சக்திகளைப் பயன்படுத்தி அவனது காட்சியில் இருந்து முழுவதுமாக மறைந்தான். பார்வையில் இருந்து மறைந்திருந்து தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த கந்தர்வர்களின் தலைவனை அவதானித்த அர்ஜுனன், முறையான மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு தனது பகைவனைத் {சித்திரசேனனைத்} தாக்கினான். பல உருவம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} கோபத்தால் நிறைந்து, சப்த வேதம் {Sabda-veda} என்ற பெயரால் அறியப்பட்ட தனது ஆயுதத்தைக் கொண்டு, எதிரி காணாமல் போவதைத் தடுத்தான்.

சிறப்பு மிக்க அர்ஜுனனின் அந்த ஆயுதங்களால் தாக்கப்பட்டபோது, அவனது {அர்ஜுனனின்} அன்புக்குரிய நண்பனான கந்தர்வமன்னன், தன்னை அவனுக்குக் காட்டினான். சித்திரசேனன், "உன்னுடன் போராடும் என்னில் உனது நண்பனைப் பார்!" என்றான். போரால் களைத்துப் போன தனது நண்பன் சித்திரசேனனைக் கண்ட பாண்டு மகன்களில் காளை {அர்ஜுனன்}, தான் அடித்த ஆயுதங்களைத் திரும்பப் பெற்றான். அர்ஜுனன் தனது ஆயுதங்களைத் திரும்பப் பெற்றதைக் கண்ட பாண்டுவின் பிற மகன்களும் ஓடிக்கொண்டிருந்த தங்கள் குதிரைகளையும், தங்கள் ஆயுதங்களின் வீரியத்தையும் தடுத்து, தங்கள் விற்களைத் திரும்பப் பெற்றனர். பிறகு, சித்திரசேனன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் ஆகியோர் தங்கள் தங்கள் தேர்களில் அமர்ந்தவாறு ஒருவர் நலத்தை மற்றவர் விசாரித்தனர்.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்