Monday, August 18, 2014

"என் அண்ணனை விடுங்கள்" என்ற அர்ஜுனன்! - வனபர்வம் பகுதி 242

"Leave my brother" said Arjuna!  | Vana Parva - Section 242  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனின் உத்தரவுக்கிணங்க முதலில் கந்தர்வர்களைப் பாண்டவர்கள் மெதுவாகத் தாக்கியது; பின்பு கந்தர்வர்களிடம் சமரசம் பேசியது; இரண்டும் பலனளிக்காத்தால் கடுமையான போர் வெடித்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட பீமசேனனைத் தலைமையாகக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர் {பாண்டவர்கள்}, மகிழ்ச்சி பொங்கிய பிரகாசமான முகங்களுடன் எழுந்தனர். அந்தப் பலமிக்கப் போர்வீரர்கள் {பாண்டவர்கள்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு அருகில் இருந்த சுத்தமான தங்கத்துடன் பல வண்ணங்களில் இருந்த துளைக்கமுடியாத கவசங்களைப் பூண்டு, பல்வேறு வகையான தெய்வீக ஆயுதங்களை ஏந்திக் கொண்டனர். இப்படிக் கவசம் பூண்ட அந்தப் பாண்டவர்கள் கொடிக்கம்பங்களுடன் கூடிய அந்த ரதங்களில் ஏறி, விற்களையும் அம்புகளையும் ஏந்தி, பார்ப்பதற்குச் சுடர்விடும் நெருப்பு போலத் தெரிந்தனர். போர்வீரர்களில் புலி போன்ற அவர்கள், வேகமாகக் குதிரைகளால் இழுக்கப்பட்ட நன்கு அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேர்களில் பயணித்து, ஒரு கணமும் தாமதியாமல் அந்த இடத்திற்கு முன்னேறினர்.


பாண்டுவின் மகன்களான அந்தப் பலமிக்கப் போர்வீரர்கள் இப்படி (துரியோதனனை விடுவிப்பதற்காக) ஒன்றுகூடி விரைந்து வருவதைக் கண்ட குரு படையினர் {கௌரவப் படையினர்}, ஓங்கிக் குரல் கொடுத்தனர். வெற்றியில் மிதந்து கொண்டிருந்த அந்த விண்ணதிகாரிகளும் {கந்தர்வர்களும்}, கட்டுக்கடங்காத போர்வீரர்களான பாண்டுவின் மகன்களும், அச்சமற்று அந்தக் கானகத்தில் மோதிக் கொண்டனர். வெற்றிக்களிப்பில் இருந்த கந்தர்வர்கள், தேர்களில் அமர்ந்து தங்களை நோக்கி வரும் பாண்டுவின் நான்கு வீரமிக்க மகன்களைக் கண்டதும், தங்களை நோக்கி வரும் போராளிகளை நோக்கித் திரும்பினர். சினத்தால் தூண்டப்பட்டு உலகின் சுடர்மிக்கப் பாதுகாவலர்களைப் {லோகபாலர்களைப்} போல வரும் பாண்டவர்களைக் கண்ட கந்தமாதனவாசிகள் {கந்தர்வர்கள்} களத்தில் வரிசையாக நிற்க ஆரம்பித்தனர்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெரும் ஞானம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் வார்த்தைகளுக்கு இணங்க, அங்கே நடந்த மோதல் சிறியதாகவே இருந்தது. ஆனால், எதிரிகளை அழிப்பவனான அர்ஜுனன், கந்தர்வ மன்னனின் {சித்திரசேனனின்} முட்டாள் வீரர்கள், இந்தச் சிறுமோதல் மூலம் தங்களுக்கு எது நன்மை என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் கண்டு, அந்த ஒப்பற்ற விண்ணதிகாரிகளிடம் {கந்தர்வர்களிடம்} சமரசத் தொனியில், "என் சகோதரனான மன்னன் சுயோதனனை {துரியோதனனை} விட்டுவிடுங்கள்" என்றான். பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட கந்தர்வர்கள் பெருத்த ஒலியுடன் சிரித்து, அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ! குழந்தாய், நாங்கள் யாருடைய ஆட்சியின் கீழ் எங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்துகிறோமோ, அந்த ஒருவரின் கட்டளைக்கே இவ்வுலகில் கீழ்ப்படிவோம். ஓ! பாரதா {அர்ஜுனா}, அந்த ஒருவரின் கட்டளையின் படியே நாங்கள் செயல்படுவோம். அந்தத் தேவனைத் {சித்திரசேனனைத்} தவிர வேறு யாரும் எங்களுக்கு உத்தரவிடமுடியாது" என்றனர்.

கந்தர்வர்களால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவர்களிடம், "பிறர் மனைவியருடனான இத்தொடர்பு, மனிதர்களுடனான இந்தப் பகைமை ஆகிய இவை இரண்டும் கந்தர்வ மன்னனைக் கண்டிக்கப் போதுமானவை ஆகும். இவை அவனுக்குத் {சித்திரசேனனுக்கு} தகாது. எனவே, வலிமைமிக்க ஆற்றல் கொண்ட இந்த அனைத்து திருதராஷ்டிரன் மகன்களையும் விட்டுவிடுங்கள். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணைக்கிணங்க இந்தப் பெண்டிரையும் விட்டுவிடுங்கள். கந்தர்வர்களே! அமைதியான முறையில் நீங்கள் திருதராஷ்டிரன் மகன்களை விடவில்லையென்றால், நான் நிச்சயம் எனது பராக்கிரமத்தை வெளிப்படுத்திச் சுயோதனனை (அவன் கட்சியில் இருந்து) மீட்பேன்" என்றான்.

அவர்களுடன் இப்படிப் பேசிய பிருதையின் {குந்தியின்} மகனும், இடது கையாலும் வில்லைப் பயன்படுத்துபவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} விண்ணை அதிகாரம் செய்யும் தனது கூரிய கணைகளை, ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்கள் மீது மழையெனப் பொழிந்தான். இப்படித் தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கக் கந்தர்வர்கள், பதிலுக்குப் பாண்டுவின் மகன்கள் மீது அடர்த்தியான அம்புகளின் மழையைப் பொழிந்தனர். பாண்டவர்களும் அந்தச் சொர்க்கவாசிகளை {கந்தர்வர்களைத்} திரும்பத் தாக்கினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு, சுறுசுறுப்பான செயல்கள் கொண்ட கந்தர்வர்களுக்கும், கட்டுக்கடங்காதவர்களான பாண்டுவின் மகன்களுக்கும் இடையில் நடந்த அந்த மோதல் கடுமையின் எல்லையைக் கடந்ததாக இருந்தது.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்