Tuesday, August 19, 2014

துரியோதனன் விடுதலை! - வனபர்வம் பகுதி 244

Duryodhana liberated!  | Vana Parva - Section 244  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

துரியோதனனை ஏன் சிறைப்பிடித்தான் என்பதைச் சித்திரசேனன் அர்ஜுனனிடம் கூறியது; யுதிஷ்டிரனிடம் துரியோதனன் விலங்குடன் அழைத்துச் செல்லப்பட்டது; யுதிஷ்டிரன் துரியோதனனை விடுவித்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சுடர்மிகும் பிரகாசமிக்க அந்தப் பலமிக்க வில்லாளியான அர்ஜுனன், கந்தர்வப்படைக்கு மத்தியில் சித்திரசேனனிடம் சிரித்துக் கொண்டே, "ஓ! வீரனே, கௌரவர்களை நீ தண்டிக்கும் நோக்கம் என்னது?" என்று கேட்டான்.

அதற்குச் சித்திரசேனன் {அர்ஜுனனிடம்} , "ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, எனது வசிப்பிடத்தை விட்டு அசையாமலேயே, நான் இந்தத் தீய துரியோதனனும், கேடுகெட்ட கர்ணனும் இங்கே வருவதற்கான காரணத்தை அறிந்தேன். கவனிக்க யாருமற்றவர்கள் போல, நீங்கள் வனவாசத்தை மேற்கொண்டிருப்பதையும், அதனால் நீங்கள் பெரும் துன்பங்கள் அனுபவிப்பதையும், தான் செழிப்புடன் இருப்பதையும் அறிந்த இந்தப் பாதகன் {துரியோதனன்}, நீங்கள் துயரத்திலும், துரதிர்ஷ்டத்திலும் மூழ்கியிருப்பதைக் காண விரும்பியே இங்கு வந்தான். உங்களையும், சிறப்புமிக்கத் துருபதன் மகளையும் {திரௌபதியையும்} கேலி செய்யவே இங்கே வந்தனர். அவர்களது நோக்கங்களை உறுதி செய்த தேவர்கள் தலைவன் {இந்திரன்}, என்னிடம், " நீ சென்று, துரியோதனனையும், அவனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} சங்கிலியில் பிணைத்து இங்கே கொண்டு வா. தனஞ்சயன் {அர்ஜுனன்} உனது அன்புக்குரிய நண்பனும், சீடனும் ஆனதால், போர்க்களத்தில், அவனும் {அர்ஜுனனும்}, அவனது சகோதரனும் உன்னால் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று சொன்னான். தேவர்கள் தலைவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நான் இங்கே வேகமாக விரைந்து வந்தேன். இந்தத் தீய இளவரசனும் {துரியோதனனும்} சங்கிலியில் பிணைக்கப்பட்டான். நான் இப்போது, தேவலோகம் செல்வேன். பகனைக் கொன்றவனுடைய {பாகசாசனான இந்திரனுடைய} உத்தரவின் பேரில் இந்தத் தீயவனைக் கொண்டு செல்வேன்" என்றான்.


அதற்கு அர்ஜுனன், "ஓ! சித்திரசேனா, எனக்கு ஏற்புடையதை நீ செய்ய விரும்பினால், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கட்டளைக்கிணங்க எங்கள் சகோதரனான சுயோதனனை {துரியோதனனை} விடுதலை செய்!" என்றான்.

சித்திரசேனன் {அர்ஜுனனிடம்}, "இந்த இழிந்த பாவி எப்போதும் கர்வம் நிறைந்தவனாக இருப்பவன். விடுதலைக்கு இவன் தகுந்தவனில்லை. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இவன் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் கிருஷ்ணை {திரௌபதி} ஆகிய இருவருக்கும் தீங்கிழைத்திருக்கிறான். குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்தப் பாதகன் {துரியோதனன்} ஏன் இங்கு வந்தான் என்பதை இன்னும் அறியான். எனவே, அனைத்தையும் அறிந்த பிறகு, மன்னனே {யுதிஷ்டிரனே}, தான் விரும்பியதைச் செய்யட்டும்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதற்குப் பிறகு, அவர்கள் அனைவரும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் சென்றனர். மன்னனிடம் சென்ற பிறகு, அவர்கள் துரியோதனனின் நடத்தைகள் குறித்த அனைத்தையும் அவனிடம் தெரிவித்தார்கள். கந்தர்வர்கள் சொன்ன அனைத்தையும் கேட்ட அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, அனைத்து கௌரவர்களையும் விடுவித்து, கந்தர்வர்களைப் பாராட்டினான். பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, "பெரும் பலத்தைக் கொடையாகக் கொண்டிருந்தும் நீங்கள், திருதராஷ்டிரரின் இந்தத் தீய மகனையும், அவனது ஆலோசகர்கள் மற்றும் உறவினர்களையும் இன்னும் கொல்லாமல் வைத்திருந்தது நாங்கள் செய்த நற்பேறாகும். ஓ! ஐயா, இது கந்தர்வர்கள் எனக்குச் செய்த மிகப்பெரிய கருணையாகும். இந்தத் துன்மார்க்கனை விடுவித்ததால் என் குடும்ப மதிப்பும் காக்கப்பட்டது. உங்கள் அனைவரையும் கண்டு நான் மகிழ்கிறேன். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற்றுக் கொண்ட பிறகு, எங்கிருந்து வந்தீர்களோ அங்கே நீங்கள் திரும்புங்கள்" என்றான் {யுதிஷ்டிரன்}.

பாண்டுவின் புத்திசாலி மகனால் {யுதிஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்ட கந்தர்வர்கள் மிகவும் மகிழ்ந்து, அப்சரசுகளுடன் சேர்ந்து அங்கிருந்து சென்று விட்டார்கள். பிறகு அந்த இடத்திற்குத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} வந்து, குருக்களுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட கந்தர்வர்கள் மீது தெய்வீக அமுதத்தைத் தெளித்து அவர்களை மீட்டெடுத்தான் {உயிர்ப்பித்தான்}. அரச குடும்பத்தின் மகளிரையும், தங்கள் உறவினர்களையும் விடுவித்து, (கந்தர்வப் படையை வீழ்த்தி} செயற்கரிய செயலைச் செய்த பாண்டவர்கள், அதனால் மிகவும் திருப்தியடைந்தனர். தங்கள் மகன்கள் மற்றும் மனைவியரோடு கூடிய குருக்களால் வழிபடப்பட்ட சிறப்புமிக்கவர்களும், பலம்வாய்ந்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள் {பாண்டவர்கள்}, வேள்வி மண்டபத்தில் சுடர்விடும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசித்தனர். பிறகு, பாசத்தால், தன் சகோதரர்களுடன் கூடி விடுதலை அடைந்த துரியோதனனிடம் யுதிஷ்டிரன், "ஓ! குழந்தாய், மீண்டும் இது போன்ற மூர்க்கச் செயலை ஒருபோதும் செய்யாதே. ஓ பாரதா {துரியோதனா}, மூர்க்கமானவன் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைந்ததில்லை. ஓ! குரு குலத்தின் மகனே {துரியோதனா}, உனது தம்பிகளுடன் மகிழ்ச்சியாக இரு. மனவருத்தம் {விரக்தி} மற்றும் உற்சாகமின்மைக்கு உன்னை இழக்காமல், உனது விருப்பப்படி, உன் தலைநகருக்குச் செல்" என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} விடுவிக்கப்பட்ட மன்னன் துரியோதனன், பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை வணங்கி, அவமானத்தில் மூழ்கி, இதயம் இரண்டாகப் பிளப்பபட்டு, உயிரற்ற ஒருவனைப் போல, இயந்திரத்தனமாகத் தனது தலைநகரை நோக்கிச் சென்றான். அந்தக் கௌரவ இளவரசன் {துரியோதனன்} சென்றதும், குந்தியின் மகனான வீரமிக்க யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் கூடி அந்தணர்களை வணங்கினான். பிறகு, துறவை செல்வமாகக் கொண்ட அந்த அந்தணர்களால் சூழப்பட்ட அவன் {யுதிஷ்டிரன்}, தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சக்ரனைப் {இந்திரனைப்} போல, அந்தத் துவைதவனத்தில் தனது நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்தான்." 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்