Friday, December 05, 2014

துரோணரின் எச்சரிக்கை! - விராட பர்வம் பகுதி 39

The warning of Drona! | Virata Parva - Section 39 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 14)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்துக் கொண்ட துரோணர், கௌரவர்களை எச்சரித்தது; கர்ணன் கோபம் கொண்டது; துரியோதனன் விளக்கம்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{புறமுதுகிட்டு} (ஓடிய) உத்தரனை ஏற்றிக் கொண்டு, வன்னி மரத்தை நோக்கிச் செல்பவனும், மூன்றாம் பாலினப் பழக்கத்தில் இருப்பவனும் தேரில் அமர்ந்திருப்பவனுமான அந்த மனிதர்களில் காளையைக் {அர்ஜுனனைக்} கண்டவர்களும், பீஷ்மர், துரோணர் ஆகியோரைத் தலைமையாகக் கொண்டவர்களுமான பெரும் தேர்வீரர்கள் யாவரும், வந்தவன் தனஞ்சயனே {அர்ஜுனனே} என்று சந்தேகித்து இதயத்தில் பயங்கொண்டனர்.


அவர்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டதைக் கண்டும், அற்புதமான அத்தாட்சிகள் பலவற்றைக் குறித்தும் கொண்ட ஆயுதம் தாங்குபவர்களின் முதன்மையானவரும், பரத்வாஜரின் மகனுமான ஆசான் துரோணர், “கடுமையாகவும், வெப்பமாகவும் வீசும் காற்று, கீழே கற்களைத் தாராளமாகப் பொழிகிறது. வானம் மேகமூட்டத்துடன் சாம்பல் நிறத்தில் இருண்டிருக்கிறது. உலர்ந்ததும், வறண்டதுமான விசித்திரமான காட்சியை மேகங்கள் முன்வைக்கின்றன. நமது பல்வேறு விதமான ஆயுதங்களும், உறைகளில் இருந்து நழுவுகின்றன. அனைத்துப்புறங்களிலும் ஏற்படும் காட்டுத்தீயைக் கண்டு அச்சமுறும் நரிகள் கொடூரமாக ஊளையிடுகின்றன.

குதிரைகளும் கண்ணீர் வடிக்கின்றன. யாரும் அசைக்காத போதே நமது பதாகைகள் நடுங்குகின்றன. இத்தகு மங்கலமற்ற குறியீடுகள், வரப்போகும் பெரும் ஆபத்தையே குறிக்கின்றன. எச்சரிக்கையுடன் இருப்பீராக. உங்களை நீங்களே பாதுகாத்துக் கொண்டு, துருப்புகளைப் போருக்காக அணிவகுத்திடுங்கள். பசுக்களைப் பாதுகாத்துக் கொண்டு, கொடும் படுகொலைகளை எதிர்பார்த்து நில்லுங்கள். மூன்றாம் பாலினப் பழக்கம் கொண்டு இங்கே வந்திருக்கும் இந்த வலிமைமிக்க வில்லாளி, ஆயுதங்கள் தாங்குபவர்களில் முதன்மையான பிருதையின் மகனே {குந்தியின் மகன் அர்ஜுனனே}, இதில் ஐயமில்லை” என்றார் {துரோணர்}.

பிறகு பீஷ்மரிடம் பேசும் வகையில் தொடர்ந்த அந்த ஆசான் {துரோணர்}, “ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, இங்கே பெண்ணாடை பூண்டு வந்தவன், இலங்கைத் தலைவனின் {ராவணனின்} நந்தவனத்தை அழித்தவனைத் {அனுமானைத்} தனது பதாகையில் {கொடியில்} தாங்கியிருப்பவனும், மரத்தின் பெயரால் அழைக்கப்படுபவனும், மலைகளின் எதிரியுடைய {இந்திரனுடைய} மகனுமான கிரீடியாவான் {அர்ஜுனனாவான்}. இவன் நிச்சயம் இன்று நம்மை வீழ்த்தி பசுக்களை எடுத்துக் கொள்வான்! இந்த எதிரிகளைத் தண்டிப்பவன், சவ்யசச்சின் என்ற புனைப்பெயர் கொண்ட வீரம்செறிந்த பிருதையின் மகனாவான் {குந்தியின் மகன் அர்ஜுனனாவான்}. தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து வந்தாலும் அவன் {அர்ஜுனன்} போரில் இருந்து விலகமாட்டான். கானகத்தில் பெரும் துன்பத்துக்குள்ளாக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, கோபத்துடன் வந்திருக்கிறான். இந்திரனால் கற்பிக்கப்பட்ட அவன், போர்க்களத்தில் இந்திரனைப் போலவே இருப்பான். எனவே, கௌரவர்களே, அவனிடம் {அர்ஜுனனிடம்} தாக்குப்பிடிக்கக்கூடிய எந்த வீரனையும் நான் காணவில்லை. இமயத்தின் மலைகளில், வேடனாக மாறுவேடத்தில் வந்த தலைவன் மகாதேவனையே {சிவனையே}, இந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, போரில் மனநிறைவு கொள்ளச் செய்தான் என்று சொல்லப்படுகிறது” என்றார் {துரோணர்}.

இச்சொற்களைக் கேட்ட கர்ணன், “பல்குணனின் {அர்ஜுனனின்} அறங்களைப் பேசி, எப்போதும் நீர் எங்களை நிந்திக்கிறீர். எனினும், என்னிலோ, துரியோதனனிலோ பதினாறில் ஒரு பங்குக்குக் கூட {1/16} அர்ஜுனன் ஈடாகமாட்டான்!” என்றான். பிறகு துரியோதனன், “இது பார்த்தனாக {அர்ஜுனனாக} இருந்தால், ஓ! ராதேயா {கர்ணா}, எனது காரியம் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகவே ஆகும். ஓ! மன்னா {கர்ணா}, பாண்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், மீண்டும் பனிரெண்டு வருட காலத்திற்கு உலவித் திரிய வேண்டியிருக்கும். அல்லது அலியின் ஆடியில் இருந்த அவன், வேறு எவனாகவாவது இருந்தால், என் கூரிய கணைகளால் விரைவில் நான் அவனைப் பூமியில் சாய்ப்பேன்” என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} இப்படிச் சொன்னதும், பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அவனது {துரியோதனனின்} ஆண்மையைப் பாராட்டினர்!”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்