Tuesday, December 09, 2014

துரோணரை நிந்தித்த கர்ணன்! - விராட பர்வம் பகுதி 47

Drona disregarded by Karna! | Virata Parva - Section 47 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 22)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் குறித்த காலத்திற்கு முன்பே வெளிப்பட்டதாகத் துரியோதனன் பீஷ்மரிடம் சுட்டிக் காட்டுவது; துரியோதனனும் கர்ணனும் துரோணரை நிந்திப்பது; துரோணரை அலட்சியப்படுத்தி, படைகளைப் போருக்காக அணிவகுக்கச் செய்யும்படி கர்ணன் துரியோதனனை வேண்டுவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னன் துரியோதனன் போர்க்கள வீரர்களில் புலிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெருந்தேர் வீரரான கிருபரிடம் இச்சொற்களில், “நான், கர்ணன் ஆகிய இருவரும் ஆசான்களிடம் இதைச் {ஏற்கனவே} சொல்லியிருக்கிறோம் [1]. அதை ஒருமுறை சொல்லி மனநிறைவு கொள்ளவில்லையாதலால், அதை மீண்டும் குறிப்பிடுகிறேன். பனிரெண்டு {12} ஆண்டுகளை நாடுகளிலும் கானகங்களிலும் கழிப்பது என்பதும், மேலும் ஒரு வருடத்தை நாமறியாதவாறு கழிப்பது என்பதும், நமது அறிவுக்கு எட்டிய வகையில் (பகடையாட்டத்தின்போது) பாண்டு மகன்கள் (பாண்டவர்கள்) கொடுத்த வாக்குறுதிகளாகும்.


[1] “இங்கு “ஆச்சாரியர்” என்று துரோணர் கிருபர் ஆகியோர் இருவரைக் குறிக்கும் வகையான சொல் மூலத்தில் கையாளப்பட்டிருக்கிறது. சில உரைகளில் உள்ள சொல் ஒருவரை {துரோணரை} மட்டுமே குறிக்கின்றன. நீலகண்டர் இவ்விரண்டையும் கவனித்து, இவ்விடத்தில் இருவரைக் குறிப்பதையே கைக்கொள்கிறார்” என்கிறார் கங்குலி.

அந்தப் பதிமூன்றாவது {13} வருடம் நடப்பில் இருக்கிறது. அஃது இன்னும் முடியவில்லை. எனவே, இன்னும் தலைமறைவாக வாழவேண்டிய பீபத்சு {அர்ஜுனன்}, நம் முன்னிலையில் தோன்றிவிட்டான். குறித்த வனவாச காலம் முடிவதற்கு முன்னரே பீபத்சு {அர்ஜுனன்} வந்திருக்கிறான் என்றால், பாண்டவர்கள் மற்றுமொருமுறை, மேலும் பனிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்கவேண்டும். (அவர்கள்) (பாண்டவர்கள்) மறந்துவிட்டார்களா? அரசாட்சி மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டு இதை அறியாமல் இருக்கிறார்களா? அல்லது இதில் நமது தவறு {ஏதேனும்} உள்ளதா?என்பதையும், (அவர்கள் (பாண்டவர்கள்) வாக்குறுதி கொடுத்த அந்தக் குறித்த காலத்தின்) குறைவையும் மிகுதியையும் பீஷ்மர் கணக்கிடுவதே தகும். ஆசைக்குகந்த பொருள் அடையப்படுதல் மற்றும் அடையாது போகுதல் ஆகிய இரு நிலைகளில் ஒன்றில் {எப்போதும்} சந்தேகம் ஏற்படும். ஒருவழியில் தீர்மானிக்கப்படுவது, முடியும்போது எப்போதும் வேறுபடுகிறது [2]. ஒழுக்கவியலாளர்கள் {moralists} கூட, தங்கள் சொந்தச் செயல்களை ஆராய்வதில் குழப்பமடைகின்றனர் [3]. என்றான் {துரியோதனன்}.

குறிப்புகளுக்கான விளக்கம்:
[2] “இங்கே சொல்லப்படும் பொருள் சந்தேகத்திற்கிடமானது. அர்ஜுனன் எதிரியாக அங்கே தோன்றியது, அவன் {அர்ஜுனன்} பங்குக்கு அவன் செய்த முன்னாய்வற்ற செயல் என்று துரியோதனன் சொல்வதாகத் தெரிகிறது. “பதிமூன்றாவது வருட காலம் கழிந்துதான் பாண்டவர்கள் தங்கள் அரசைக் கோர வேண்டும். துரியோதனனாகிய நான் அவர்களது கோரிக்கைக்கு இணங்கவும் செய்யலாம்; இணங்காமலும் போகலாம். எனவே, நான் அர்ஜுனனை ஏற்கமாட்டேன் என்பது நிச்சயமில்லாத போது, அவனது {அர்ஜுனனின்} எதிரித் தோற்றம் {அவன் நமக்கெதிராக எதிரியாக வந்திருப்பது} விவேகமற்ற செயலாகும். வெற்றி நிச்சயம் என்று அவன் வந்திருக்கிறான். ஆனால், அவன் தோற்கடிக்கவும் படலாம்” என்று துரியோதனன் சொன்னதற்குப் பொருள் சொல்கிறார் கங்குலி.

[3] “ஒழுக்கவியலாளர்களே கூடத் தங்கள் சொந்தச் செயல்களில் குழம்புவார்கள் எனும்போது, என்னதான் அறம்சார்ந்தவர்களாக இருந்தாலும், பாண்டவர்கள், தாங்கள் நம்புவதுபோலல்லாமல் பதிமூன்றாவது வருடம் உண்மையில் முடிவதற்கு முன்னரே இப்படித் தோன்றிய காரியத்தால் தவறு செய்துவிட்டார்கள்” என்றே இவ்வரி பொருள் தருவதாகத் தெரிகிறது. அல்லது “இங்கே நமது இருப்பைப் பொறுத்தமட்டில், ஒழுக்கவியலாளர்கள் குழப்பமடைவது போல, நாம் குழம்பாமல், எப்போதும் போலச் சரியான தீர்மானத்திற்கே வந்திருக்கிறோம்” என்றும் பொருள் கொள்ளலாம். அதை நியாயப்படுத்துவதற்காகவே துரியோதனன் பின்வரும் வாக்கியங்களைச் சொல்கிறான் என்றும் தெரிகிறது” என்கிறார் கங்குலி.
குறிப்பு முடிந்து பகுதி 47 தொடர்கிறது... 

நம்மைப் பொறுத்தமட்டில், மத்ஸ்யர்களிடம் போரிடவும், வடக்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் அவர்களது பசுக்களைப் பிடிக்கவும் இங்கே வந்திருக்கிறோம். அதே வேளையில், அர்ஜுனன் இங்கே வந்தான் என்றால், என்ன தவறு நம்முடன் இணையும்? {இதில் நமது தவறு என்ன?}. மத்ஸ்யர்கள் இழைத்த எண்ணிலடங்கா கொடுமையெல்லாம் நமக்குச் சொல்லப்பட்டதால், திரிகார்த்தர்கள் சார்பாக நாம் மத்ஸ்யர்களை எதிர்த்துப் போரிட இங்கே வந்திருக்கிறோம். அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த திரிகார்த்தர்களுக்கு இதன் காரணமாகவே நாம் துணைக்கு வருவதாக வாக்களித்தோம். மத்ஸ்யர்களின் அபரிமிதமான செல்வமான பசுக்களை ஏழாம் சந்திர நாளில் {சப்தமியில்}, மத்திய வேளையில், அவர்கள் {திரிகார்த்தர்கள்} முதலில் பிடிப்பதென்பதும், அப்படி முதலில் எடுத்துச் செல்லப்பட்ட பசுக்களைத் தொடர்ந்து மத்ஸ்ய மன்னன் {விராடன்} செல்லும்போது, எட்டாம் சந்திர நாளின் {அஷ்டமியின்} சூரிய உதய நேரத்தில், இந்தப் பசுக்களை நாம் பிடிக்க வேண்டும் என்பதும் நாம் அவர்களுடன் {திரிகார்த்தர்களுடன்} ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தமாகும்”, என்றான் {துரியோதனன்}.

திரிகார்த்தர்கள் பசுக்களை {இங்கே} இப்போது கொண்டு வரலாம்; அல்லது தோற்றுவிட்ட காரணத்தால், மத்ஸ்யர்களின் மன்னனுடன் (விராடன்) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கலாம்; அல்லது, திரிகார்த்தர்களைத் துரத்திவிட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, இம்மக்களின் தலைமையேற்று, கடும் வீரர்களைக் கொண்ட தனது மொத்தப் படையையும் அழைத்துக் கொண்டு, {இங்கே} காட்சியில் தோன்றி, நம்மீது இரவு தாக்குதல் நடத்த முன்னேறிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஏதோ ஒரு சக்திமிக்கத் தலைவன் நம்மை வீழ்த்துவதற்காக முன்னேறி வந்து கொண்டிருக்கலாம். அல்லது மத்ஸ்யர்களின் மன்னனே {விராடனே} கூட வந்து கொண்டிருக்கலாம். ஆனால், {வருவது} மத்ஸ்யர்கள் மன்னனாக இருப்பினும், பீபத்சுவாக {அர்ஜுனனாக} இருப்பினும் நாம் அனைவரும் {அவனிடம்} போரிட வேண்டும். இதுவே நமது வாக்காகும்”, என்றான் {துரியோதனன்}.

“தேர்வீர்களில் முதன்மையான இந்தப் பீஷ்மர், துரோணர், கிருபர், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அனைவரும் ஏன் துக்கத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் போலத் தங்கள் தேர்களில் அமர்ந்திருக்கிறார்கள்? தற்போது போரிடுவதைத் தவிரச் சிறந்தது எதுவும் கிடையாது. எனவே, உங்கள் மனங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நாம் பிடித்திருக்கும் கால்நடைக்காக வஜ்ரதாங்கியிடமோ {இந்திரனிடமோ}, ஏன் யமனிடமோ கூட ஒரு மோதல் ஏற்பட்டால், {இங்கே இருக்கும்} யார் ஹஸ்தினாபுரத்தை அடைய நேரிடும்? (எதிரியின்) குதிரைப்படையே தப்புவது சந்தேகம் எனும்போது, கணைகளால் துளைக்கப்படும் காலாட்படை வீரர்கள் ஆழ்ந்த கானகத்திற்குள் புறமுதுகிட்டோடி உயிருடன் எப்படித் தப்பிக்க முடியும்?” என்றான் {துரியோதனன்}.

துரியோதனனின் இச்சொற்களைக் கேட்ட கர்ணன் {துரியோதனனிடம்} , “ஆசானை {துரோணரை} அலட்சியம் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய். அவர் {துரோணர்}, பாண்டவர்களின் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டு, நமது இதயங்களில் அச்சமூட்டுகிறார். அர்ஜுனனிடம் அவர் {துரோணர்} கொண்ட பாசம் மிகப் பெரிதென நான் காண்கிறேன். அவன் {அர்ஜுனன்} வருவதைப் பார்த்தாலே, அவனது புகழை இவர் பாடுகிறார். நமது துருப்புகள் உடையாதிருக்க உரிய ஏற்பாடுகளைச் செய். {அர்ஜுனனுடைய} குதிரைகளின் கனைப்பொலியைக் கேட்டே துரோணர் அனைவரையும் குழப்பிவிடுகிறார். இந்த வெப்பகாலத்தில் தொலைவான நிலத்தில் இருக்கும் இந்தப் பெரும் வனத்திற்கு மத்தியில் இந்தத் துருப்புகள் வந்திருக்கின்றன. எனவே அவை குழப்பமடைந்து எதிரிகளிடம் வீழாமல் இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்.

நமது ஆசானுக்குப் {துரோணருக்கு} பிடித்தவர்களில் சிறந்தவர்களாக எப்போதுமே பாண்டவர்கள் இருக்கின்றனர். தன்னலம் கொண்ட பாண்டவர்கள் நமக்கு மத்தியில் துரோணரை நிறுத்தியிருக்கின்றனர். உண்மையில், இவர் தனது பேச்சால் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறார். ஒருவனது குதிரைகளின் கனைப்பொலியை மட்டுமே கேட்டு, யாரால் ஒரு மனிதனை இப்படிப் போற்ற முடியும்? நடந்தாலும், நின்றாலும் எப்போதும் குதிரைகள் கனைக்கவே செய்யும்; காற்று எல்லாக் காலங்களிலும் வீசத்தான் செய்கிறது. இந்திரன் எப்போதும் மழையைப் பொழிந்து கொண்டுதான் இருக்கிறான். மேகங்களின் கர்ஜனை அடிக்கடி கேட்கப்பட்டே வருகிறது. இவை யாவற்றுக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்ன செய்தான்? இவற்றுக்காக அவன் {அர்ஜுனன்} ஏன் புகழப்பட வேண்டும்? எனவே, (துரோணரின் பங்குக்கு), அவர் அர்ஜுனனுக்கு நல்லது செய்ய விரும்புகிறார் அல்லது கோபத்தால் நம்மீது வெறுப்புக் கொண்டிருக்கிறார்”, என்றான் {கர்ணன்}.

விவேகிகளும், பாவமற்றவர்களும், அனைத்துயிர்களிடமும் கருணை கொண்டவர்களும் தான் ஆசான்கள் ஆவார்கள். எனினும், ஆபத்துக் காலங்களில் அவர்களிடம் {ஆசான்களிடம்} எப்போதும் ஆலோசிக்கக் கூடாது. பேசும் வல்லமை பெற்ற கற்ற மனிதர்கள், ஆடம்பர மாளிகைகளிலும், சபைகளிலும், இன்பத் தோட்டங்களிலுமே தங்கள் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. சபைகளில் அற்புதமான காரியங்களைச் செய்யும் கற்ற மனிதர்கள், அங்கேயோ அல்லது வேள்வி பொருட்கள் சரியாக வைத்து கழுவப்பட வேண்டிய இடங்களிலோதான் தங்கள் நிலையை அடைகின்றனர். பிறர் குறை அறிவது, மனிதர்களின் குணங்களைப் படிப்பது, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களின் அறிவியல், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுகள் மற்றும் பசுக்களின் நோய்களைக் குணப்படுத்துவது, கட்டடங்கள் மற்றும் நுழைவாயில்களைத் திட்டமிடுவது, உணவு மற்றும் பாணங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றிலேயே உண்மையில் கற்ற மனிதர்கள் தங்கள் நிலையை அடைகின்றனர். எதிரியின் வீரத்தைப் புகழும் கற்ற மனிதர்களை அலட்சியம் செய்து, அவ்வெதிரி அழிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய். பசுக்களைப் பாதுகாப்பாக நிறுத்தி, போரிடுவதற்காக இந்தத் துருப்புகளை அணிவகுக்கச் செய். எதிரியிடம் நாம் போரிடும் வகையில், உரிய இடங்களில் காவலர்களை நிறுத்து” என்றான் {கர்ணன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்