Wednesday, December 10, 2014

கர்ணனின் சொற்கள்! - விராட பர்வம் பகுதி 48

The words of Karna! | Virata Parva - Section 48 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 23)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : தான் அர்ஜுனனை அடிக்கப் போகும் விதத்தைக் கர்ணன் விவரிப்பது...

கர்ணன் {துரியோதனனிடம்} சொன்னான், “இந்த அருளப்பட்டவர்கள், அச்சத்தில் இருப்பவர்களாக, துயரத்தில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியாதவர்களாக, போர் செய்ய விருப்பமில்லாதவர்களாக இருப்பதைக் காண்கிறேன். வருவது மத்ஸ்யர்களின் மன்னனாக {விராடனாக} இருந்தாலும், பீபத்சுவாக {அர்ஜுனனாக} இருந்தாலும், பெருகிவரும் கடலைத் தடுக்கும் கரைகளைப் போல நான் அவனைத் தடுப்பேன். எனது வில்லில் இருந்து அடிக்கப்படும் இந்த நேரான பறக்கும் கணைகள், சீறிச் செல்லும் பாம்புகளைப் போல இலக்குத் தப்பாதவையாகும். எனது இலகுவான கரங்களால் அடிக்கப்படும் இந்தக் கூரிய முனைகளும், தங்க இறகுகளும் கொண்ட கணைகள், வெட்டுக்கிளிகளால் மூடப்படும் மரம் போலப் பார்த்தனை {அர்ஜுனனை} எல்லாப்புறங்களிலும் மூடும். இந்த இறகு படைத்த கணைகளால் அழுத்தப்படும் இந்த வில்லின் நாண், தோலாலான எனது கையுறைகளால் ஒலி எழுப்பும். அதனால் கேட்கப்படும் ஒலி இரு முரசுகளின் ஒலியை ஒத்திருக்கும்.


(கடந்த) பதிமூன்று {13} ஆண்டுகளாகத் தவ நோன்புகளில் ஈடுபட்ட பீபத்சுவால் {அர்ஜுனனால்}, இந்த மோதலில் என்னை மென்மையாகவே தாக்க முடியும். நற்குணங்கள் கொண்ட அந்தணனாக மாறியிருக்கும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, என்னால் அடிக்கப்படும் ஆயிரம் கணைகளை அமைதியாகத் தாங்கிக் கொள்வதற்குத் தகுந்த மனிதனாக மாறியிருக்கிறான். உண்மையில், இந்த வலிமைமிக்க வில்லாளி மூவுலகங்களிலும் கொண்டாடப்படுகிறான். மனிதர்களில் முதன்மையான அந்த அர்ஜுனனுக்கு, நானும், எந்த வகையிலும் சளைத்தவனல்ல. என்னால் அடிக்கப்படும் கழுகின் இறகுகளைக் கொண்ட எனது தங்கக் கணைகள் மின்மினி பூச்சிகள் மொய்ப்பதைப் போல இன்று வானத்தில் தெரியட்டும்.

போர்க்களத்தில் அர்ஜுனனைக் கொன்று, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} நான் வாக்குறுதி அளித்திருந்ததும், திரும்பச் செலுத்துவதற்குக் கடினமானதுமான எனது கடனை இன்று செலுத்துவேன். எனது வில்லில் இருந்து அடிக்கப்படும் நேரான கணைகளின் பற்களுக்கிடையில் நிற்பதற்குத் தேவர்களிலோ அசுரர்களிலோ யாரும் இல்லையெனும்போது, வேறு எந்த மனிதன் இருக்க முடியும்? இறகு படைத்து, அழுந்திய கணுக்களுடன் பறக்கும் எனது கணைகள் மின்மினிப் பூச்சிகளாக வானத்தில் தெரியட்டும். இந்திரனின் வஜ்ரத்தைப் போல அவன் கடினமாக இருந்தாலும், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} சக்தியை அவன் {அர்ஜுனன்} பெற்றிருந்தாலும், எரிகொள்ளிகளைக் கொண்டு ஒரு யானையைத் துன்புறுத்துவதைப் போல, நான் இன்று நிச்சயம் பார்த்தனை {அர்ஜுனனை} அடிப்பேன்.

ஒரு பாம்பைக் கருடன் பிடிப்பது போல, பலமிக்கத் தேர்வீரனும், துணிவுமிக்கவனும், ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவனும், {என்னைத்} தடுத்து நிறுத்த இயலாதவனுமான அந்தப் பார்த்தனை {அர்ஜுனனை} நான் பிடிப்பேன். கட்டுக்கடங்காத நெருப்பு போல, வாட்கள், பராசங்கள் மற்றும் கணைகள் என்ற எரிபொருளால் சுடர்விட்டெரிந்து எதிரிகளை எரிக்கும் அந்தப் பாண்டவ நெருப்பு {அர்ஜுனன்}, (நான் வழிநடத்தும்) எண்ணிலடங்கா தேர்களை இடியாகவும், எனது குதிரைகளின் வேகத்தைக் காற்றாகவும் கொண்டிருக்கும் வலிமைமிக்க மேகம் போன்ற நான் அடிக்கும் தொடர்ச்சியான கணை மழையால் அணைக்கப்படும். பாம்புகள் எறும்புப் புற்றைத் துளைப்பதைப் போல, எனது வில்லில் இருந்து புறப்படும் நஞ்சுமிக்கப் பாம்புகளான எனது கணைகள் பார்த்தனின் {அர்ஜுனனின்} உடலைத் துளைக்கும். கோங்கு மலர்களால் { Karnikara flowers} மூடப்படும் மலையைப் போல, நன்கு கடினமாக்கப்பட்டதும், நேரானதும், தங்க இறகுகள் கொண்டதும், பெரும் சக்தி கொண்டதுமான எனது கணைகளால் குந்தியின் மகன் {அர்ஜுனன்} துளைக்கப்படுவதை நீ இன்று பார்ப்பாய்.

துறவியரில் சிறந்தவரான ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த நான், அவற்றின் சக்தியை நம்பி, தேவர்களுடன் கூடப் போரிட முடியும். எனது எறிவேலால் அடிக்கப்பட்டு, அவனது {அர்ஜுனனது} தேரின் கொடியின் மேல் அமர்ந்திருக்கும் குரங்கு, இன்று பயங்கரமாகக் கதறிக் கொண்டு தரையில் விழும். எதிரியின் {அர்ஜுனனின்} கொடிக்கம்பத்தில் அமர்ந்திருக்கும் (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) உயிரினங்களின் கதறல்கள் இன்று விண்ணை நிறைக்கும். அவை {அந்த உயிரினங்கள்} அனைத்து திக்குகளுக்கும் பறந்து போகும். அர்ஜுனனை அவனது தேரில் இருந்து கீழே வீசி, துரியோதனனின் இதயத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் கணையின் வேரை நான் இன்று பிடுங்குவேன். தேர் உடைந்து, குதிரைகள் கொல்லப்பட்டு, வீரம் குன்றி, பாம்பு போலப் பெருமூச்சு விடும் பார்த்தனை {அர்ஜுனனை}, இன்று கௌரவர்கள் காண்பார்கள். தங்கள் விருப்பப்படி செல்வங்களான பசுக்களைக் கௌரவர்கள் எடுத்துச் செல்லட்டும். ஆனால் அவர்கள் விரும்பினால், தங்கள் தேர்களில் இருந்து கொண்டு, நான் செய்யும் போரைச் சாட்சியாகக் காணட்டும்” என்றான் {கர்ணன்}
இப்பதிவின் PDF பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்