Tuesday, May 12, 2015

நகர் நுழைந்த கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 89

Krishna entered the city! | Udyoga Parva - Section 89 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –18)

பதிவின் சுருக்கம் : விருஸ்தலவாசிகளிடம் விடைபெற்ற கிருஷ்ணன் ஹஸ்தினாபுரம் வந்தடைந்தது; துரியோதனனைத் தவிர்த்த மற்ற கௌரவர்கள் வழியிலேயே கிருஷ்ணனை எதிர்கொண்டு அழைத்து வந்தது; திருதராஷ்டிரன் மாளிகையில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணன், பிறகு திருதராஷ்டிரனின் அனுமதியுடன் வெளியேறி, விதுரனின் இல்லத்திற்குச் சென்றது; விதுரன் கிருஷ்ணனை விருந்தோம்பலுடன் வரவேற்றது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(தனது படுக்கையில் இருந்து) அதிகாலையில் எழுந்த கிருஷ்ணன், தனது காலைச் சடங்குகளைச் செய்து, பாரதர்களிடம் இருந்து விடைபெற்று, (குருக்களின்} நகரத்திற்குப் {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான். விருகஸ்தலத்தில் வசிப்போர் அனைவரும் அந்த நீண்ட கரங்களைக் கொண்ட வலியவனுக்கு {கிருஷ்ணனுக்கு} விடை கொடுத்து, அவன் புறப்பட்டதும், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். துரியோதனனைத் தவிர மற்ற தார்தராஷ்டிரர்கள் அனைவரும் சிறந்த ஆடைகளை உடுத்தி, பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் பிறருடன் அவனைச் {கிருஷ்ணனைச்} சந்திக்க வெளியே சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பல்வேறு வகைகளிலான தேர்களில் ஆயிரக்கணக்கான குடிமக்களும், கால்நடையாகப் பலரும் அந்த ரிஷிகேசனைக் {கிருஷ்சனைக்} காண வெளியே வந்தனர்.


களங்கமற்ற செயல்களைக் கொண்ட பீஷ்மர், துரோணர் மற்றும் திருதராஷ்டிரர் மகன்கள் ஆகியோரை வழியிலேயே சந்தித்த அவன் {கிருஷ்ணன்}, அவர்கள் அனைவரும் சூழ நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான். கிருஷ்ணனை மதிக்கும் வகையில் அந்நகர் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. முக்கியமான தெருக்கள் பல்வேறு வகையான ரத்தினங்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அச்சந்தர்ப்பத்தில், ஆண்களோ, பெண்களோ, குழந்தைகளோ எவரும் வீடுகளுக்குள் இல்லை. வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} காண குடிமக்களிடம் அவ்வளவு ஆவல் இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} நகருக்குள் நுழைந்து, அதன் வழியே கடந்து சென்ற போது, குடிமக்கள் அனைவரும் வெளியே வந்து, தெருக்களில் வரிசையாக நின்று தங்கள் சிரங்களைத் தரைவரை தாழ்த்தி அவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து பாடினர்.

உயர்குலப் பெண்கள் நிறைந்திருந்த பெரிய மாளிகைகள், ஒருகட்டத்தில், அவர்களது {அந்தப் பெண்களின்} பாரம் தாங்க முடியாமல் தரையில் விழுந்துவிடுவது போலத் தோன்றின. வாசுதேவனின் குதிரைகள் பெரும் வேகம் கொண்டவை என்றாலும், மனிதர்களின் அடர்த்தியினூடே மிகவும் மெதுவாகவே சென்றது. எதிரிகளைக் கலங்கடிப்பவனான அந்தத் தாமரைக்கண்ணன் {கிருஷ்ணன்}, எண்ணிலடங்கா கட்டடங்கள் நிறைந்த திருதராஷ்டிரனின் சாம்பல் நிற [1] அரண்மனைக்குள் நுழைந்தான். அந்த அரண்மனையின் முதல் மூன்று அறைகளைக் கடந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, விசித்திரவீரியனின் அரச மகனைச் {திருதராஷ்டிரனைச்} சந்தித்தான்.

[1] வெண்மையான அரண்மனை என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.

அந்தத் தாசார்ஹ குலத்தின் மகன் {கிருஷ்ணன்}, தனது முன்னிலையை அணுகியதும், பெரும் புகழையுடைய அந்தப் பார்வையற்ற ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, துரோணர், பீஷ்மர், கிருபர், சோமதத்தன், மன்னன் பாஹ்லீகன் ஆகியோரோடு எழுந்து நின்றான். ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} மதிக்கும் வண்ணம் அங்கே இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அந்த விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்}, பெரும் புகழைப் படைத்த மன்னன் திருதராஷ்டிரனை அணுகியதும், நேரம் எதையும் வீணடிக்காமல், அவனையும் {திருதராஷ்டிரனையும்}, பீஷ்மரையும் முறையான வார்த்தைகளால் வழிபட்டான்.

நிறுவப்பட்ட பயன்பாடுகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு வழிபாட்டை வழங்கிய பின்னர், அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, பிற மன்னர்களை வயது மூப்பின் அடிப்படையில் வணங்கவும் வாழ்த்தவும் செய்தான். பிறகு அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஒப்பற்ற துரோணரையும், அவரது மகனையும் {அஸ்வத்தாமனையும்}, பாஹ்லீகனையும், கிருபரையும், சோமதத்தனையும் அணுகினான். அந்த அறையில், அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தங்கத்தாலான இருக்கை ஒன்று ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு ஓரிடத்தில் இருந்தது. திருராஷ்டிரனின் வேண்டுகோளுக்கிணங்க, அச்யுதன் {கிருஷ்ணன்} அந்த இருக்கையில் அமர்ந்தான். திருதராஷ்டிரனின் புரோகிதர்கள் ஒரு மாடு, தேன், தயிர்க்கடைசல் மற்றும் நீரை ஜனார்த்தனனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} காணிக்கையாக வழங்கினர். [2]

[2] மாடு, மதுபர்க்கம், நீர் ஆகியவற்றை வழங்கியதாக ஒரு பதிப்பு சொல்கிறது. மதுபர்க்கம் = தேன், பால் மற்றும் பழம் கலந்த உணவு.

விருந்தோம்பல் சடங்குகள் முடிந்த பிறகு, ஒவ்வொருவர் உறவுமுறைக்கேற்ப அவர்களுடன் கேலி செய்து கொண்டும், சிரித்துக் கொண்டும் சிறிது நேரம் கோவிந்தன் {கிருஷ்ணன்} குருக்கள் சூழ அங்கே இருந்தான். திருதராஷ்டிரனால் வழிபடப்பட்டு, மதிக்கப்பட்ட அந்த எதிரிகளைக் கலங்கடிக்கும் ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, மன்னனின் {திருதராஷ்டிரனின்} அனுமதியுடன் வெளியே வந்தான். குருக்கள் அனைவரையும் அவர்களது சபையில் முறையாக வணங்கிய மாதவன் {கிருஷ்ணன்}, விதுரனின் இனிமையான இல்லத்திற்குச் சென்றான்; தனது இல்லத்திற்கு வந்த தாசார்ஹ குலத்து ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} அணுகி, அனைத்து மங்கலகரமான மற்றும் விரும்பத்தக்க காணிக்கைகளாலும் அவனை {கிருஷ்ணனை} விதுரன் வழிபட்டான்.

அவன் {விதுரன் கிருஷ்ணனிடம்}, "ஓ! தாமரைக்கண்ணா {கிருஷ்ணா}, உடல் கொண்ட அனைத்து உயிரினங்களுக்கும் நீயே உள்ளுறையும் ஆன்மாவாக இருப்பதால், உனது வருகையால் நான் உணர்ந்த மகிழ்ச்சியை உனக்குச் சொல்லி என்ன பயன்?" என்றான். உபசரிப்பும், வரவேற்பும் முடிந்த பிறகு, அறநெறியின் அனைத்துக் கொள்கைகளையும் அறிந்த விதுரன், மதுசூதனனான கோவிந்தனிடம் பாண்டவர்களின் நலன் குறித்து விசாரித்தான்.

கடந்த காலமும், வருங்காலமும், எவனிடம் நிகழ்காலமாக இருக்கிறதோ, அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்து, அந்த விருஷ்ணிகள் தலைவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களால் விரும்பப்படுபவனாக, அவர்களிடம் நட்புணர்வோடு இருப்பவனாக, கல்விமானாக, அறநெறியில் உறுதியுள்ளவனாக, நேர்மையாளனாக, (பாண்டவர்களுக்கு எதிராக) எந்தக் கோபத்தையும் அடையாதவனாக, அறிவுள்ளவனாக விதுரனை அறிந்து, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} செயல்பாடுகள் அனைத்தையும் விரிவாக அவனிடம் {விதுரனிடம்} சொல்ல ஆரம்பித்தான்" என்றார் {வைசம்பாயனர்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்