Tuesday, September 19, 2017

படைத்தலைவனானான் அஸ்வத்தாமன்! - சல்லிய பர்வம் பகுதி – 65

Aswatthama became the generalissimo! | Shalya-Parva-Section-65 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 34)


பதிவின் சுருக்கம் : துரியோதனன் கிடந்த இடத்திற்குக் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் வந்தது; விழுந்திருக்கும் துரியோதனனைக் கண்டு அஸ்வத்தாமன் புலம்பியது; துரியோதனனின் மறுமொழி; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகச் சபதமேற்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைப் படைத்தலைவனாக்குமாறு கிருபரிடம் கேட்டுக் கொண்ட துரியோதன்; மூன்று வீரர்களும் துரியோதனனைத் தனிமையில் விட்டு அகன்றது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கூரிய கணைகள், கதாயுதங்கள், வேல்கள் மற்றும் ஈட்டிகளால் மிகவும் காயமடைந்தும், கொல்லப்படாமல் கௌரவப் படையில் எஞ்சியிருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மூவரும், துரியோதனனின் வீழ்ச்சியைக் கேட்டு,(1,2) தங்களின் வேகமான குதிரைகளில் ஏறி விரைவாகப் போர்க்களத்திற்கு வந்தனர். அங்கே அவர்கள், காட்டில் சூறாவளியால் வீழ்த்தப்பட்ட பெரும் சால மரத்தைப் போல அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டனர். அவர்கள், காட்டில் வேடனால் வீழ்த்தப்பட்ட ஒரு வலிமைமிக்க யானையைப் போலக் குருதியில் நனைந்து, வெறுந்தரையில் கிடந்து துடித்துக் கொண்டிருக்கும் அவனைக் கண்டனர். அவன், அபரிமிதமான இரத்த ஓடையில் குளித்தவனாக, வேதனையில் உருண்டு புரண்டு கொண்டிருப்பதைக் கண்டனர்.(3-5)


உண்மையில் அவர்கள், அவனைப் {துரியோதனனைப்} பூமியில் விழுந்த சூரியனைப் போலவோ, பெருங்காற்றால் வற்றிய பெருங்கடலைப் போலவோ, ஆகாயத்தில் மூடுபனியால் வட்டில் மறைக்கப்பட்ட முழு நிலவைப் போலவோ கண்டனர். ஆற்றலில் யானைக்கு இணையானவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனுமான அந்த மன்னன், புழுதியால் மறைக்கப்பட்டுப் பூமியில் கிடந்தான்.(6,7) ஒரு நாட்டின் ஏகாதிபதியைச் சுற்றி, செல்வத்தில் ஆசை கொண்டோர் இருப்பதைப் போல அவனைச் சுற்றிலும் ஊனுண்ணும் பல்வேறு பயங்கர விலங்குகளும், உயிரினங்களும் இருந்தன.(8) அவனது நெற்றி சினத்தால் ஆழ்வடுக்களைப் போலச் சுருங்கியிருந்தது, அவனது கண்கள் கோபத்தால் உருண்டு கொண்டிருந்தன. மனிதர்களில் புலியான அந்த மன்னன், (வேடர்களால்) வீழ்த்தப்பட்ட புலியைப் போலச் சினம் நிறைந்தவனாக இருப்பதைக் கண்டனர்.(9) பெரும் வில்லாளிகளான கிருபரும், பிறரும், பூமியில் வீழ்ந்து கிடந்த அந்த ஏகாதிபதியைக் கண்டு திகைப்படைந்தனர்.(10)

அவர்கள் தங்கள் தேர்களில் இருந்து இறங்கி மன்னை {துரியோதனனை} நோக்கி ஓடினர். துரியோதனனைக் கண்ட அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி பூமியில் அமர்ந்தனர்.(11) அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீர் நிறைந்த கண்களுடன், ஒரு பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டு, பூமியில் கிடப்பவனும், மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாரதக் குலத் தலைவனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(12) "ஓ! மனிதர்களில் புலியே, புழுதிக்கறை படிந்து வெறுந்தடையில் நீ கிடப்பதால், மனிதர்களின் உலகில் நிலையானது ஏதுமில்லை என்பது உண்மையே.(13) மொத்த உலகிற்கும் ஆணை பிறப்பிக்கும் மன்னனாக நீ இருந்தாய். பிறகு ஏன், ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இத்தகு தனிமையான காட்டில் வெறுந்தரையில் தனியனாக நீ கிடக்கிறாய்?(14) உன் அருகில் துச்சாசனனையோ, பெரும் தேர்வீரனான கர்ணனையோ, உன் நூற்றுக்கணக்கான நண்பர்களையோ நான் காணவில்லை. ஓ! மனிதர்களில் காளையே, இஃது என்ன?(15)

ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவனே {துரியோதனனே}, புழுதிக் கறைபடிந்து வெறுந்தரையில் நீ இவ்வாறு கிடப்பதால், யமனின் {விதியின்} வழிகளை அறிவது கடினம் என்பதில் ஐயமில்லை.(16) ஐயோ, மணிமுடிசூட்டுவிழாவில் புனித நீர் தெளிக்கப்பட்ட கேசங்களைக் கொண்ட க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் தலைமையில் இந்த எதிரிகளை எரிப்பவன் {இந்தத் துரியோதனன்} செல்வான். ஐயோ இப்போது அவன் புழுதியை உண்கிறான். காலம் அதன் வழியில் கொண்டு வரும் முரண்களைப் பாருங்கள்.(17) தூய்மையான உன் வெண்குடை எங்கே? ஓ! மன்னா {துரியோதனா}, காற்றை வீசும் வெண்சாமரம் எங்கே? ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, உனது பரந்த படையானது இப்போது எங்கே?(18) உலகின் தலைவனாக இருந்த நீ, இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், புத்தகம் {சாத்திரங்களைச்} சாராத காரணங்களைக் கொண்ட நிகழ்வுகளின் வழிகள் புதிர் நிறைந்தவையே என்பது நிச்சயம்.(19) சக்ரனுக்கு இணையான நீ, பரிதாபகரமான இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், மனிதர்கள் அனைவரின் செழிப்பும் நிலையில்லாததே என்பதில் ஐயமில்லை" என்றான் {அஸ்வத்தாமன்}.(20)

அஸ்வத்தாமனின் இந்தக் கவலைநிறைந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, அச்சந்தர்ப்பத்திற்குத் தகுந்த இந்த வார்த்தைகளை அவனுக்குப் பதிலாக அளித்தான்.(21) அவன் தன் கரங்களால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, மறுபடியும் சோகத்தால் கண்ணீர் சிந்தினான். பிறகு அந்த மன்னன், கிருபர் தலைமையிலான அந்த வீரர்களிடம்,(22) "(உயிரினங்கள் அனைத்தின்) மரணக்கட்டுப்பாடு படைப்பாளனால் விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. காலத்தின் வழியில் அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் நேர்கிறது.(23) அந்த மரணமே இப்போதும் உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாக எனக்கு நேர்கிறது. மொத்த உலகையும் ஆட்சி செய்த நான் இந்த அவல நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேன்.(24) என்ன பேரிடர் நேரிட்டாலும், நான் போரில் இருந்து ஒருபோதும் புறமுதுகிடாதது நற்பேறாலேயே. குறிப்பாக வஞ்சகத்தின் துணையைக் கொண்டு அந்தப் பாவிகளால் நான் கொல்லப்பட நேர்ந்ததும் நற்பேறாலேயே.(25)

பகைமையில் ஈடுபட்டபோதும், நான் வீரத்தையும், விடாமுயற்சியையும் எப்போதும் வெளிப்படுத்தியது நற்பேறாலேயே. நான் என் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் போரில் கொல்லப்பட்டதும் நற்பேறாலேயே.(26) இந்தப் பெரும்படுகொலையில் உயிரோடு தப்பியவர்களாக, பாதுகாப்பாக, உடல்நலத்துடன் இருப்பவர்களாக உங்களை நான் காண்பதும் நற்பேறாலேயே.(27) இஃது எனக்கு மிகவும் ஏற்புடையதாகும் {இனிமையானதாகும்}.(27) பாசத்தால் என் மரணத்திற்காக வருந்தாதீர்கள். வேதங்களுக்கு அதிகாரம் இருக்குமானால், நான் நிச்சயம் அழிவில்லாத பல உலகங்களை அடைந்திருக்கிறேன்.(28) அளவிலா சக்தி கொண்ட கிருஷ்ணனின் மகிமையை நான் அறியாதவனல்ல. அவன், க்ஷத்திரியக் கடமைகளை முறையாக நோற்று என்னை விழச் செய்யவில்லை.(29) நான் அவனை அடைந்துவிட்டேன். எக்காரணத்திற்காகவும், எவரும் எனக்காக வருந்தக்கூடாது. உங்களைப் போன்ற மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதையே நீங்கள் செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் வெற்றிக்காக எப்போதும் முயற்சி செய்தீர்கள். எனினும், விதி கலங்கடிக்கப்பட முடியாததாகும்" என்றான் {துரியோதனன்}.(30)

இவ்வளவே சொன்ன அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் அலைமோதும் கண்களுடன், மரணவேதனையால் கலக்கமடைந்து அமைதியை அடைந்தான்.(31) மன்னனின் கண்ணீரையும், துயரத்தையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அண்ட அழிவின்போது காணப்படும் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(32) சினத்தில் மூழ்கிய அவன் {அஸ்வத்தாமன்} தன் கரங்களைப் பிசைந்து கொண்டே, கண்ணீரால் கரகரப்பான குரலுடன் மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(33) "ஒரு கொடூர சதியின் மூலம் அந்த இழிந்தவர்களால் என் தந்தை {துரோணர்} கொல்லப்பட்டார். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, இந்த அவலநிலைக்கு நீ குறைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது எரிக்கப்படுவதைப் போல அச்செயல் கூட என்னை இவ்வளவு அதிகமாக எரிக்கவில்லை.(34) ஓ! தலைவா, உண்மையின் மீதும், என் பக்திச் செயல்கள் அனைத்தின் மீதும், என் தானங்கள், என் அறம், நான் வென்ற அறத்தகுதிகள் அனைத்தின் மீதும் ஆணையிட்டு நான் சொல்லப் போகும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக.(35) நான் இன்று, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து, என் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், பாஞ்சாலர்கள் அனைவரையும் யமலோகம் அனுப்பிவைப்பேன். ஓ! ஏகாதிபதி, எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்" என்றான் {அஸ்வத்தாமன்}.(36)

துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சொன்னதும், தன் இதயத்திற்கு மிகவும் ஏற்புடையதுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரு மன்னன், கிருபரிடம், "ஓ! ஆசானே, ஒரு குடம் நிறைந்த நீரைத் தாமதமில்லாமல் என்னிடம் கொண்டு வாரும்" என்றான்.(37) மன்னனின் இந்த வார்த்தைகளின் பேரில் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {கிருபர்}, ஒரு பாத்திரம் நிறைந்த நீரை விரைவாகக் கொண்டு வந்து, மன்னனை அணுகினார்.(38) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, அந்தக் கிருபரிடம், "ஓ! பிராணர்களில் முதன்மையானவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக, நீர் எனக்கு நன்மையை விரும்பினால், என் உத்தரவின் பேரில் இந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} படைத்தலைவனாக நிறுவப்படட்டும்.(39) மன்னனின் உத்தரவின் பேரில், ஒரு பிராமணன் கூடப் போரிடலாம், அதிலும் குறிப்பாக க்ஷத்திரியப் பயிற்சிகளைப் பின்பற்றுபவர்கள் {நிச்சயம்} போரிடலாம். சாத்திரங்களைக் கற்றோர் இதைச் சொல்கின்றனர்" என்றான் {துரியோதனன்}.(40)

சரத்வான் மகனான கிருபர், மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அம்மன்னனின் உத்தரவின் பேரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} படைத்தலைவனாக நிறுவினார்.(41) பட்டஞ்சூட்டல் முடிந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்களில் சிறந்தவனை ஆரத்தழுவிக் கொண்ட அஸ்வத்தாமன், தன் சிங்க முழக்கங்களால் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கச் செய்து அந்த இடத்தை விட்டு அகன்றான்.(42) மன்னர்களில் முதன்மையானவனான துரியோதனன், அபரிமிதமான குருதியால் மறைக்கப்பட்டு, அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அவ்விரவை அங்கேயே கழிக்கத் தொடங்கினான்.(43) போர்க்களத்தில் இருந்து விரைவாகச் சென்ற அவ்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துயரத்தால் கலங்கிய இதயங்களுடன், கவலையுடனும், மெய்யுறுதிப்பாடுடனும் சிந்திக்கத் தொடங்கினர்" {என்றான் சஞ்சயன்}.(44)

**********கதாயுத்த உப பர்வம் முற்றும்**********

********** சல்லியபர்வம் முற்றிற்று **********


சல்லிய பர்வம் பகுதி – 65 ல் உள்ள சுலோகங்கள் : 44


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்