Thursday, October 26, 2017

துறவின் நடைமுறை! - சாந்திபர்வம் பகுதி – 09

Ascetic practice! | Shanti-Parva-Section-09 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 09)


பதிவின் சுருக்கம் : துறவில் தனக்கிருக்கும் உறுதியை வெளிக்காட்டிய யுதிஷ்டிரன்; துறவின் தன்மைகளையும், உலக இயல்புகளையும் எடுத்துரைத்தது...


யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, "ஓ! அர்ஜுனா, சிறிது நேரம் உன் கவனத்தைக் குவித்து, உன் மனத்தையும், கேட்கும் திறனையும் உனக்குள் இருக்கும் ஆன்மாவில் நிலைக்கச் செய்வாயாக. நீ என் வார்த்தைகளை அத்தகு மனநிலையில் கேட்டால், அவை உன் ஏற்பைப் பெறும்.(1) உலக இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, நல்லோர் செல்லும் பாதையில் நான் செல்லப் போகிறேன். உனக்காக நான், நீ பரிந்துரைக்கும் பாதையில் செல்ல மாட்டேன்.(2) எந்த மங்கலப்பாதையில் ஒருவன் தனியாக நடக்க வேண்டும் என்று நீ கேட்டால், நான் உனக்கு அதைச் சொல்வேன். நீ என்னிடம் கேட்க விரும்பவில்லை எனினும், உன்னால் கேட்கப்படாதபோதும் நான் அஃதை உனக்குச் சொல்வேன்.(3) இன்பங்களையும், உலக மனிதர்களின் நடைமுறைகளையும் கைவிட்டு, கடுந்தவங்களைச் செய்து, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, காட்டில் வசிக்கும் விலங்குகளுடன் நான் திரியப் போகிறேன்.(4) முறையான நேரங்களில் நெருப்பில் காணிக்கைகளை {ஆகுதிகளை} ஊற்றி, காலையிலும், மாலையிலும் தூய்மைச் சடங்குகளைச் செய்து, தோல்களால் என்னை மறைத்துக் கொண்டு, என் தலையில் சடாமுடி தரித்துக் கொண்டு, குறைவாக உட்கொள்ளும் உணவுமுறையால் என்னை நானே மெலியச் செய்து கொள்ளப் போகிறேன்.(5)


குளிர், காற்று, வெப்பம், பசி, தாகம், களைப்பு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள நோன்புகளால் நான் என் உடலை மெலியச் செய்யப் போகிறேன்.(6) காட்டில் வசித்து, இதயத்துக்கும், காதுக்கும் இனிமையாக இருக்கும் மகிழ்ச்சிகரமான பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகளை நான் தினமும் கேட்கப்போகிறேன்.(7) காட்டில் மலர்களால் கனக்கும் மரங்கள், செடிகொடிகள் மற்றும் அங்கே வளரும் பல்வேறு வகை அழகிய பொருட்களின் நறுமணத்தை நான் நுகரப் போகிறேன.(8) காட்டில் நான் சிறந்த பல ஆசிரமங்களையும் காணப் போகிறேன். எந்த ஓர் உயிரினத்திற்கும் சிறு தீங்கையும் இழைக்காமல் இருக்கப் போகிறேன் என்று சொல்லும்போது, கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்போரைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன?[1](9) ஓய்ந்த வாழ்வை நோற்று, சிந்தனைக்கு {தியானத்திற்கு} என்னை அர்ப்பணித்துக் கொண்டு, கனிந்த மற்றும் கனியாத கனிகளை உண்டு, காட்டுக் கனிகளையும், ஊற்றின் தண்ணீரையும் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கையளித்தும், நன்றியுடன் கூடிய பாடல்கள் பாடியும் அவர்களை நான் நிறைவு செய்வேன்.(10)

[1] "காட்டுவாசிகளுக்கே நான் எத்தீங்கையும் செய்யவில்லையெனில், உலகின் மனிதர்களுக்கு நான் தீங்கிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவே" என்று இங்கே பொருள் படும் எனக் கங்குலி விளக்குகிறார்.

காட்டு வாழ்வின் தவ விதிமுறைகளை இவ்வழிகளில் நோற்று, என் உடல் அழிவதற்காகப் பொறுமையாகக் காத்திருந்து என் நாட்களை நான் கடத்தப் போகிறேன்.(11) அல்லது, தனியாக வாழ்ந்து, எண்ணங்களை வெளியிடாமல் பேசா நோன்பிருந்து, என் தலையை முற்றாக மழித்துக் கொண்டு, ஒரே ஒரு மரத்திடம் மட்டுமே ஒவ்வொரு நாளும் இரந்து என் உணவை நான் அடையப் போகிறேன்[2].(12) என் உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக் கொண்டு, கைவிடப்பட்ட வீடுகளை உறைவிடமாகக் கொண்டோ, மரத்தடிகளில் கிடந்தோ, அன்புக்குரிய அல்லது வெறுப்புக்குரிய அனைத்துப் பொருட்களைக் கைவிட்ட நிலையில் நான் வாழப்போகிறேன்.(13) துன்பத்திலோ, இன்பத்திலோ ஈடுபடாமல், நிந்தனையையும், பாராட்டையும், நம்பிக்கையையும், பாசத்தையும் சமமாகக் கருதி, முரண்பட்ட இரட்டைகளைக் கடந்து, உலகப் பொருட்கள் அனைத்தையும் கைவிட்ட நிலையில் நான் வாழப்போகிறேன்.(14) எவரிடமும் உரையாடாமல், வெளிப்படையாக ஒரு குருட்டு, செவிட்டு மூடனின் வடிவத்தை ஏற்றுக் கொண்டு, என் ஆன்மாவிலேயே இன்புற்று, உள்ள நிறைவுடன் நான் வாழப் போகிறேன்.(15)

[2] "துறவியரில் ஒரு வகையினர், மரங்களில் இருந்து விழும் கனிகளைச் சேகரித்துத் தங்கள் உயிரைத் தாங்கிக் கொள்கின்றனர். அவர்கள் அம்மரத்தை உயிர் கொண்ட மனிதனாகவே நினைத்துக் கொண்டு, அதன் நிழலுக்குச் சென்று, அதன் கனிகளை இரந்து கேட்கின்றனர். அத்தகு சந்தர்ப்பங்களில் விழும் கனிகளை அந்த மரத்தால் அளிக்கப்படும் பிச்சையாக {அந்த மரத்தின்} விருந்தினரான அத்துறவி கருதுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அசையும் மற்றும் அசையாத நால்வகை உயிரினங்களுக்கும் சிறு தீங்கையும் செய்யாமல், தங்கள் கடமைகளில் மனநிறைவுடன் இருக்கும் அல்லது உணர்வுகளின் ஆணைகளைப் பின்பற்றும் உயிரினங்கள் அனைத்திடமும் சமமாக நடந்து கொள்ளப் போகிறேன்.(16) நான் எவரிடமும் ஏளனமோ, முகச் சுளிப்போ செய்ய மாட்டேன். என் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு, எப்போதும் மகிழ்வான முகத்துடன் நான் இருக்கப் போகிறேன்.(17) எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று நான் சந்திக்கும் யாரிடமும் கேட்காமல், நாட்டையோ, திசையையோ கருத்தில் கொள்ளாமல் நான் பயணித்துக் கொண்டே இருக்கப் போகிறேன்.(18) நான் எங்கே செல்லப்போகிறேன் என்பதைக் கருத்தில் கொள்ளாமலும், திரும்பிப் பாராமலும் நான் செல்லப் போகிறேன். ஆசை, கோபம் ஆகியவற்றைக் கைவிட்டு, என் பார்வையை உள்நோக்கிச் செலுத்தி, ஆன்மா மற்றும் உடலின் செருக்கைக் கைவிட்டுவிட்டு நான் செல்லப் போகிறேன்.(19) இயற்கை எப்போதும் முன்பே நடக்கிறது. எனவே, உணவும், நீரும் ஏதோ ஒரு வகையில் கிடைக்கும். அத்தகு வாழ்வுமுறையின் வழியில் நிற்கும் முரண்பட்ட இரட்டைகளைக் குறித்து நான் சிந்திக்கப் போவதில்லை.(20)

(நான் செல்லும்) முதல் வீட்டில் சிறு அளவு தூய உணவும் கிட்டவில்லையெனில், நான் வேறு வீடுகளுக்குச் சென்று அஃதை அடைவேன். அப்படி வலம் வந்தும் அது கிட்டவில்லையெனில், என் ஆவலை நிறைவு செய்ய அடுத்தடுத்து ஏழு வீடுகளுக்குச் செல்வேன்.(21) பரபரப்பான சாலைகளைத் தவிர்த்து, வீடுகளில் புகை அடங்கியதும், அடுப்பங்கரையில் நெருப்புத் தணிந்ததும், வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் உண்டு முடிந்ததும், பிச்சைக்காரர்களும், உறவினர்களும் திரிவது நின்றதும்,(22) பிச்சையெடுக்கும் கணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, இரண்டு, மூன்று, அல்லது அதிகபட்சம் ஐந்து வீடுகளில் நான் பிச்சை கேட்பேன். ஆசையின் பற்றுகளை அறுத்து நான் இவ்வுலகில் திரியப் போகிறேன்.(23) வெற்றி மற்றும் தோல்வியில் சமமான நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பெரும் தவத் தகுதியை நான் ஈட்டப் போகிறேன். உயிரில் ஆசை கொண்டவனைப் போலவோ, சாகப்போகிறவனைப் போலவோ நான் நடந்து கொள்ள மாட்டேன்.(24) உயிர் வாழும் விருப்பம், அல்லது மரணத்தில் வெறுப்பு ஆகிய எதையும் நான் வெளிக்காட்ட மாட்டேன். ஒருவன் என் ஒரு கரத்தை வெட்டினாலும், மற்றொருவன் என் மற்றொரு கரத்தை சந்தனக் குளம்பினால் பூசினாலும், அவர்களில் எவருக்கும் நான் நன்மையையோ, தீமையையோ விரும்பமாட்டேன்.(25)

ஒருவனது வாழ்வில் செய்யக்கூடிய செழிப்புக்கு உகந்த செயல்கள் அனைத்தையும் தள்ளி, கண்களைத் திறக்கவும், மூடவும் செய்யும் வேலைகளை மட்டுமே செய்து, உயிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கும் மட்டுமே உணவையும், நீரையும் நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்.(26) செயலில் ஒருபோதும் பற்றுக் கொள்ளாமல், எப்போதும் புலன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, என் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, அசுத்தங்கள் அனைத்தில் இருந்தும் என் ஆன்மாவை நான் தூய்மையடையச் செய்யப் போகிறேன்.(27) பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, கட்டுகள் அனைத்தையும் அறுத்து, காற்றைப் போல நான் சுதந்திரமாக வாழப் போகிறேன்.(28) பற்றில் இருந்து விடுபடும் எனக்கு, என்றும் நிலைத்திருக்கும் துறவே வாழ்வாக இருக்கப் போகிறது. ஆசையாலும், அறியாமையாலும் நான் பெரும்பாவங்களை இழைத்துவிட்டேன்.(29)

மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட வகையினர், மங்கல மற்றும் மங்கலமற்ற செயல்கள் ஆகிய இரண்டையும் இங்கே செய்து, காரணம் மற்றும் விளைவுகளின் அடிப்படையிலான உறவுகளாகத் தங்கள் மனைவியர், பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோர் அனைவரையும் கட்டிக் காத்து வருகின்றனர்[3].(30) அவர்களது வாழ்வின் காலம் முடிந்ததும், தங்கள் பலவீனமான உடல்களைக் கைவிட்டு, தங்கள் பாவம் நிறைந்த செயல்களின் விளைவுகளை அவர்கள் ஏற்கின்றனர். தன் செயல்களின் விளைவால் வந்த சுமையை அந்தச் செயலைச் செய்தவனே சுமக்கிறான்.(31) இவ்வாறே, செயல்களுடன் கூடிய உயிரினங்கள், தேர்ச்சக்கரத்தைப் போல, இந்த வாழ்வெனும் சக்கரத்தைத் தொடர்ச்சியாகச் சுழற்றி, இங்கே வந்து தங்கள் சக உயிரினங்களைச் சந்திக்கின்றன.(32)

[3] "மனிதனின் உடைமைகளாக இருக்கும் அனைத்தும், முந்தைய வாழ்வில் செய்த செயல்களைச் சார்ந்தே இருக்கின்றன. எனவே, மகிழ்ச்சி மற்றும் மாறுபாடு ஆகியவற்றிற்குக் காரணமாக இருக்கும் மனைவியர், பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோர் ஒருவரின் கடந்த காலச் செயல்களைச் சார்ந்தே {காரணங்களின் விளைவுகளாக[காரியங்களாக}} அமைகின்றனர். அவர்கள் ஏற்கனவே இருப்பில் இருக்கும் காரணங்களுக்கான விளைவுகளே {காரியங்களே} ஆவார்கள். மேலும், அவர்களது செயல்கள் அவனது அடுத்த வாழ்விலும் எதிரொலிக்கும் என்பதால், அவர்கள் விளைவுகளின் காரணங்கள் {காரியங்களின் காரணங்கள்} ஆகின்றனர் என்றும் கொள்ளப்படலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அழிவற்றதாகத் தெரிவதும், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிவற்றால் பீடிக்கப்படுவதுமான மாயை நிறைந்த இவ்வுலகம் சார்ந்த வாழ்வு முறையைக் கைவிடுபவன், நிச்சயம் மகிழ்ச்சியையே அடைகிறான்.(33) மேலும், தேவர்கள் சொர்க்கத்தில் இருந்தும், பெரும் முனிவர்கள் தங்கள் மதிப்பிற்குரிய நிலைகளிலிருந்தும் விழுவார்கள் எனில், காரணங்களின் (மற்றும் காரியங்களின்) உண்மைகளை அறிந்த எவன் சொர்க்கத்தின் செழிப்பை அடைய விரும்புவான்?(34) முக்கியத்துவமற்ற மன்னர்கள், ஆட்சித்திறனின் பல்வேறு வழிகள் சம்பந்தமான (ஒப்பந்தம், கொடை என்ற பெயர்களில் அறியப்படும்) பல்வேறு செயல்களைச் செய்து, ஏதாவது சதியின் மூலம் பெரும் மன்னர்களைக் கொல்கின்றனர்.(35) இச்சூழ்நிலைகளைச் சிந்தித்ததினாலேயே இந்த ஞான அமுதம் என்னிடம் வந்திருக்கிறது. இஃதை அடைந்த நான், நிலையானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததுமான ஓர் இடத்தை (எனக்காக) விரும்புகிறேன்.(36) இத்தகு ஞானத்திலேயே எப்போதும் (என்னை ஈடுபடுத்திக் கொண்டு), இவ்வழியிலேயே எப்போதும் செயல்பட்டு, வாழ்வெனும் இந்த அச்சமற்ற பாதையில் சென்று, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் மற்றும் வலிக்கு ஆட்படும் இந்த உடலில் இருந்து விடுபடப் போகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(37)

சாந்திபர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 37

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்