Thursday, October 26, 2017

ஓர் அலிக்குக் கீழ்ப்படிந்து ஆதரவற்றவர்களானோம்! - சாந்திபர்வம் பகுதி – 10

Obedient to an eunuch, we are helpless!! | Shanti-Parva-Section-10 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 10)


பதிவின் சுருக்கம் : க்ஷத்திரியனுக்குத் துறவு தகாது என யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்துக் கண்டித்த பீமசேனன்; தன் வகைக்கான கடமைகளே ஒருவன் செய்யத்தக்கது என்று சொன்னது; துறவே வெற்றியைத் தரும் என்றால் மரங்களும், மலைகளும் சொர்க்கத்தை அடைந்திருக்க வேண்டும் என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன பீமசேனன்...


பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மூடனும், அறிவற்றவனுமான ஒருவன் மீண்டும் மீண்டும் குருட்டுப் பாடமாக வேதம் ஓதுவதால் உண்மையைக் காணாததைப் போலவே, உமது புரிதலும் இருக்கிறது.(1) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மன்னர்களின் கடமைகளை நிந்தித்துக் கொண்டு, சோம்பேறியின் வாழ்வை நீர் நோற்றால், இந்தத் தார்தராஷ்டிரர்களின் அழிவானது தேவையே இல்லாததாகும்.(2) மன்னிக்கும் இயல்பு, கருணை, இரக்கம், தீங்கிழையாமை ஆகியவை க்ஷத்திரியக் கடமைகளின் பாதையில் நடப்போர் எவரிடமும் காணப்படவில்லையா?(3) இதுவே உமது நோக்கம் என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் ஒருபோதும் ஆயுதமெடுத்திருக்க மாட்டோம்; ஓருயிரையும் கொன்றிருக்க மாட்டோம்.(4) இந்த உடல் அழியும்வரை நாங்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ்ந்திருப்போம். பூமியின் ஆட்சியாளர்களுக்கிடையிலான இந்தப் பயங்கரப் போரும் ஒருபோதும் நடந்திருக்காது.(5)


நாம் காணும் அனைத்தும் பலவான்களின் உணவே என்று கல்விமான்கள் சொல்கின்றனர். உண்மையில், அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இவ்வுலகமானது, பலவானின் இன்பநுகர் பொருளாகும்.(6) க்ஷத்திரியக்கடமைகளை அறிந்த ஞானியர், பூமியின் அரசுரிமையை எடுக்க முனையும் ஒரு மனிதனின் வழியில் தடையாக இருக்கக்கூடியவன் கொல்லத்தக்கவன் என்று சொல்கிறார்கள்.(7) அந்தக் குற்றத்தைச் செய்து, நமது நாட்டின் எதிரிகளாக நின்றோர் அனைவரும் நம்மால் கொல்லப்பட்டனர். ஓ! யுதிஷ்டிரரே, அவர்களைக் கொன்ற பிறகு, இந்தப் பூமியை நேர்மையாக ஆட்சி செய்வீராக.(8)

(நாட்டை மறுக்கும்) இந்த நமது செயலானது, ஒரு மனிதன் கிணற்றைத் தோண்டி விட்டு, நீரை அடையும் முன்னர், தன் பணியை நிறுத்திவிட்டு, சேறு பூசப்பட்டு வெளியே வருவதைப் போன்றதாகும்.(9) அல்லது, இந்தச் செயல்பாடானது, ஒரு மனிதன், நெடுமரத்தில் ஏறி தேனையும் எடுத்துவிட்டு, அதைச் சுவைப்பதற்கு முன் இறப்பதைப் போன்றதாகும்.(10) அல்லது, அது நீண்ட பயணத்திற்குப் புறப்பட்ட ஒரு மனிதன், சேருமிடத்தை அடையாமல் துயருடன் திரும்பி வருவதைப் போன்றதாகும்.(11) அல்லது, ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, அது தன் எதிரிகள் அனைவரையும் கொன்ற ஒரு மனிதன், இறுதியில் தன் கையாலேயே இறப்பதை {தற்கொலை செய்து கொள்வதைப்} போன்றதாகும்.(12) அல்லது, அது பசியால் துன்பப்படும் ஒரு மனிதன், உணவை அடைந்துவிட்டு, உண்ண மறுப்பதைப் போன்றதோ, ஆசையின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு மனிதன், தன் ஆசைக்குகந்த பெண்ணை அடைந்தும், அவளைச் சந்திக்க மறுப்பதைப் போன்றதோ ஆகும்.(13)

ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஓ! மன்னா, நீர் எங்கள் மூத்த அண்ணன் ஆனதன் விளைவால், மந்தமான புரிதல் {மந்தபுத்தி} கொண்ட உம்மைப் பின்தொடர்ந்து நாங்கள் நிந்திக்கத்தக்கவர்கள் ஆகிவிட்டோம்.(14) நாங்கள் வலிய கரங்களைக் கொண்டிருக்கிறோம்; நாங்கள் அறிவுடனும், பெருஞ்சக்தியுடனும் இருக்கிறோம். இருப்பினும், ஓர் அலியின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஏதோ முற்றிலும் ஆதரவற்றவர்களைப் போன்று இருக்கிறோம்.(15) ஆதரவற்ற மனிதர்கள் அனைவருக்கும் நாங்கள் புகலிடமாக இருக்கிறோம். இருப்பினும், மக்கள் எங்களை இவ்வாறு பார்க்கும்போது, எங்கள் நோக்கங்களை அடைவதில் நாங்கள் முற்றிலும் சக்தியற்றவர்கள் என்று அவர்கள் ஏன் சொல்லமாட்டார்கள்? நான் சொல்லும் இவற்றை நினைத்துப் பாரும்.(16)

முதுமையை அடைந்த, அல்லது எதிரிகளிடம் தோல்வியுற்ற மன்னர்கள் துயர்நிறைந்த காலங்களில் மட்டுமே துறவை (துறவு வாழ்வைப்) பின்பற்ற வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(17) எனவேதான், ஞானியர், துறவை க்ஷத்திரியனின் கடமையாக மெச்சுவதில்லை. மறுபுறம், தெளிவான பார்வையைக் கொண்ட அவர்கள், (ஒரு க்ஷத்திரியன்) அந்த வாழ்வு முறையை {துறவு வாழ்வைப்} பின்பற்றுவது அறத்தை இழப்பது என்றே கருதுகின்றனர்.(18) அந்த வகையில் {க்ஷத்திரிய வகையில்} பிறந்தவர்களும், அந்த வகையின் நடைமுறைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அவற்றையே தங்கள் புகலிடமாகக் கொண்டவர்களால் எவ்வாறு அந்தக் கடமைகளை நிந்திக்க முடியும்?(19) செழிப்பு, செல்வம் ஆகியவற்றை இழந்தவர்களும், நம்பிக்கையற்றவர்களுமான மனிதர்கள் மட்டுமே, (துறவு வாழ்வைப் பின்பற்றும் ஒரு க்ஷத்திரியனின் ஒழுங்குமுறை குறித்து) வேதங்களில் சொல்லப்பட்டுள்ள இந்த ஆணைகளை உண்மையென அறிவிக்கிறார்கள். எனினும் உண்மையில் அஃது ஒரு போதும் க்ஷத்திரியன் செய்வதற்கு உகந்ததல்ல.(20)

ஆற்றலினால் தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளத் தகுந்தவனும், தன் சொந்த முயற்சிகளால் தன்னைத் தாங்கிக் கொள்ளக்கூடியவனுமான ஒருவன், துறவு வாழ்வின் போலி வெளிப்பாடுகளால், வாழமுடியாமல் உண்மையில் வீழ்ந்தே போகிறான்.(21) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், தேவர்கள், முனிவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் ஆகியோரை ஆதரிக்க இயலாத மனிதனே காட்டில் வாழும் தனிமையான வாழ்வில் மகிழ்ச்சியடைய முடியும்.(22) (காட்டு வாழ்வை வாழும்) மான், பன்றிகள், பறவைகள் ஆகியன சொர்க்கத்தை அடைய முடியாததைப் போலவே, காட்டு வாழ்வை வாழ்பவர்களும், ஆற்றலற்றவர்களுமான க்ஷத்திரியர்களும் சொர்க்கத்தை அடைய முடியாது.(23) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துறவின் மூலம் யாராவது வெற்றியடைய முடியுமென்றால், இந்த மலைகளும், மரங்களும் நிச்சயம் அஃதை அடைந்திருக்கும்.(24) அவை யாருக்கும் தீங்கிழைப்பதில்லை. மேலும் அவை அனைத்தும் உலகக் காரியங்களில் இருந்து விலகி, பிரம்மச்சாரிகளைப் போல இருக்கின்றன.(25)

ஒருவனின் வெற்றியானது, மற்றவர்களின் வாழ்வைச் சாராமல், அவனது சொந்த வாழ்வைச் சார்ந்தே அமையும் என்றால், (க்ஷத்திரிய வகையில் பிறந்த ஒருவராக) நீர் செயல்பாட்டையே தேர்ந்தெடுக்க வேண்டும். செயலற்றவனால் ஒருபோதும் வெல்ல முடியாது.(26) தன் வயிற்றை மட்டும் நிறைத்துக் கொள்பவர்கள் வெற்றியை அடைய முடியும் என்றால், நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தும் தங்களைத் தவிர வேறு யாரையும் ஆதரிக்க வேண்டிய தேவை இல்லாததால் அவை வெற்றியை அடைந்து விடும்.(27) இந்த உலகமானது, தன் இயல்புக்கு ஏற்ற செயல்களில் ஈடுபட்டுவரும் உயிரினங்களுடன் சேர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதைப் பாரும். எனவே, ஒருவன் செயலிலேயே ஈடுபட வேண்டும். செயல்பாடு அற்றவனால் ஒருபோதும் வெற்றியை அடைய முடியாது" என்றான் {பீமசேனன்}.(28)

சாந்திபர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்