Friday, February 23, 2018

நாட்டின் இயல்பும், பாதுகாப்பு முறைகளும்! - சாந்திபர்வம் பகுதி – 89

The nature of a kingdom and means of security! | Shanti-Parva-Section-89 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 89)


பதிவின் சுருக்கம் : நாட்டின் இயல்பையும், பாதுகாப்பு முறைகளையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, "உன் ஆட்சிப்பகுதிகளில், உண்ணத்தக்க கனிகளைத் தரும் மரங்கள் வெட்டப்பட வேண்டாம். கனிகளும், கிழங்குகளும் பிராமணர்களின் உடைமைகளாகும். தவசிகள் இதை அறவிதியாகவே அறிவித்திருக்கிறார்கள்.(1) பிராமணர்களை ஆதரித்த பின்பு மிகையாக இருப்பவை பிற மக்களை ஆதரிக்கப பயன்பட வேண்டும். எவரும் பிராமணர்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது[1].(2) ஒரு பிராமணன், பிழைத்திருக்க வேண்டிய தேவையால் பீடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை அடைவதற்காக ஒரு நாட்டைக் கைவிட (கைவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்ல) விரும்பினால், மன்னன் அவனுக்கு வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.(3) மேலும் அவன் அதிலிருந்து (நாட்டைவிட்டுச் செல்வதில் இருந்து) விலகவில்லையெனில், மன்னன் பிராமணர்களின் சபையைக் கூட்டி, "இப்படிப்பட்ட ஒரு பிராமணர் நாட்டை விட்டுச் செல்கிறார். என் மக்கள் தங்கள் வழிகாட்டியாக யாரைக் கண்டடைய வேண்டும்?" என்று கேட்க வேண்டும்[2].(4) இதன் பிறகும் அவன் அங்கிருந்து செல்லும் நோக்கத்தைக் கைவிடாமல் வேறேதும் பேசினால், மன்னன் அவனிடம், "கடந்த காலத்தை மறப்பீராக" என்று சொல்ல வேண்டும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே அரசகடமையின் அழிவில்லா வழியாகும்[3].(5)


[1] "பிராமணர்களுக்குப் போதுமான அளவு கிடைப்பதற்கு முன் என இங்கே பொருள் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] பிராமணர்களே பிறமக்களுக்கு வழிகாட்டும் அதிகாரம் கொண்டவர்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட பிராமணன் நாட்டைவிட்டுச் செல்லும்போது, மக்கள் அவனால் ஒரு நண்பனையும், ஆசிரியரையும், வழிகாட்டியும் இழக்கிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "நான்காம் சுலோகத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல, மன்னன் அவனது நிலைக்கு எதிராக அறிவுரைகூற வேண்டும். இதுவும் போதுமானதாக இல்லாமல் முந்தைய புறக்கணிப்பைச் சொல்லி அவன் செல்ல விரும்பினால், மன்னன் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், உண்மையில் அவனைப் பராமரித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அவனுக்கு ஒதுக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மன்னன் மேலும் அவனிடம், "ஓ! பிராமணரே, உண்மையில் ஒரு பிராமணன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்குப் போதுமான அளவு மட்டுமே அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் சொல்கின்றனர். எனினும், நான் அக்கருத்தை ஏற்கவில்லை. மறுபுறம், தன்னைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வு முறைகளை வழங்காதிருந்த மன்னனின் புறக்கணிப்பிற்காக ஒரு பிராமணன் ஒரு நாட்டை விட்டுச் செல்ல முனைந்தால், அத்தகு வழிமுறைகள் அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவன் ஆடம்பர வழிமுறைகளை அடையும் நோக்கோடு அதை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றாலும், அவன் தங்குமாறு வேண்டப்பட்டு, அவ்வழிமுறைகள் அவனுக்கு வழங்கப்பட வேண்டும்[4].(6) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவையே மனிதர்கள் அனைவருக்கும் வாழும் வழிமுறைகளை வழங்குகின்றன. எனினும் வேத அறிவானது, சொர்க்கத்தை அடையும் வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகிறது.(7) எனவே, வேத கல்வியைத் தடுப்பவர்களும், வேத நடைமுறைகளின் காரணத்துக்குத் தடை விதிப்பவர்களும் சமூகத்தின் எதிரிகளாகக் கருதப்பட வேண்டும்[5]. இவர்களை அழிக்கவே பிரம்மன் க்ஷத்திரியர்களை உண்டாக்கினான்.(8) உன் எதிரிகளை அடக்கி, உன் குடிகளைக் காத்து, வேள்வியில் தேவர்களை வழிபட்டு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, துணிவுடன் போர்க்களங்களில் போரிடுவாயாக.(9) ஒரு மன்னன் பாதுகாக்கத் தகுந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதைச் செய்யும் மன்னனே ஆட்சியாளர்களில் சிறந்தவனாவான். பாதுகாக்கும் கடமையைப் பயிலாத மன்னர்கள் வீணே வாழ்கிறார்கள்.(10)

[4] "மூலத்தின் கட்டுமானம் நீள்வட்டமாக இருக்கிறது. முதல் வரியில் உள்ள எதாத் etat என்பதற்கான மொழிபெயர்ப்பு வழங்கப்படுகிறது. இரண்டம் வரியைச் சொல்லும்போது, இரண்டாம் பாதியே முதலில் வர வேண்டும். வழக்கம் போலவே பர்த்துவான் பதிப்புப் பிழையுள்ளதாக இருக்கிறது. கே.பி.சிங்கினுடைய பதிப்பும் முழுமையடையாமல் துல்லியமற்றதாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவ்விதமில்லாமல் ஜீவனத்திற்கும் மேலான போகம் வேண்டுமென்று நகரைவிடுவானாகில், ’ஓ பிராம்மண, முதன்மையான இப்போகவிருப்பத்தை மறக்க வேண்டும்’ என்று தெரிவிக்க வேண்டும். ஓ கௌந்தேய, இது சாஸ்வதமான தர்மமென்று ஜனங்கள் சொல்லுகிறார்கள். நான் இதை நம்பவில்லை. (பிராம்மணன்) போகங்களை வேண்டினால் அவைகளாலும் உபசரிக்கத்தக்கவன். ஜீவனமில்லாமற் போனால் அதையும் அவனுக்குச் செய்து கொடுக்க வேண்டும்" என்றிருக்கிறது.

[5] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் தஸ்யுஸ் என்பது உண்மையில் கள்வர்களைக் குறிக்கும்; இங்கே சமூகம் மற்றும் சமூகஒழுங்கின் எதிரிகள் எனப் பொருள்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வேதவித்தையானது மேலுலகத்திற்கும் ஸாதனமாகும்; அது பிராணிகளைப் பரிசுத்தமாகவுஞ்செய்யும். அவ்வித்தையானது கீழே விழுங்காலத்தில் எவர்கள் அதற்கு விரோதியான திருடர்களாயிருக்கிறார்களோ அவர்களைக் கொல்ல வேண்டிப் பிரம்மதேவர் இவ்வுலகில் க்ஷத்திரியனைப் படைத்தார்" என்றிருக்கிறது.

ஓ! யுதிஷ்டிரா, மன்னன் தன் குடிமக்கள் அனைவரின் நன்மைக்காக அனைவரின் செயல்பாடுகளையும், எண்ணங்களையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்; அக்காரணத்திற்காகவே அவன் {மன்னன்} ஒற்றர்களையும், இரகசிய முகவர்களையும் நியமிக்க வேண்டும்[6].(11) உன்னவர்களிடம் இருந்து பிறரையும், பிறரிடம் இருந்து உன்னவர்களையும், பிறரிடம் இருந்து பிறரையும், உன்னவரிடம் இருந்து உன்னவரையும் பாதுகாத்து, எப்போதும் உன் மக்களை நீ பேணி வளர்க்க வேண்டும்.(12) மன்னன், முதலில் தன்னை அனைவரிடம் இருந்தும் பாதுகாத்துக் கொண்ட பிறகு பூமியைப் பாதுகாக்க வேண்டும். அனைத்தும் தனக்குள்ளேயே வேரைக் கொண்டுள்ளன என்று ஞானிகள் சொல்கின்றனர்.(13) மன்னன், தன் தவறுகள் என்ன? தான் அடிமைப்பட்டிருக்கும் தீய பழக்கவழக்கங்கள் என்னென்ன? தன் பலவீனத்தின் ஆதாரங்கள் என்னென்ன? தன் தவறுகளின் ஆதாரங்கள் என்னென்ன என்பனவற்றைக் குறித்து எப்போதும் சிந்திக்க வேண்டும்.(14)
[6] சில உரைகளில் போத்தியார்யம் Boddhyaryam என்பதற்கு யோத்தியார்யம் Yoddhyaryam என்றும் and யுஞ்சித Yunjita என்பதற்குப் பதில் துஞ்சிதா thunjita என்றும் இருக்கிறது.

மன்னன், தான் முந்தைய நாளில் வெளிப்படுத்திய நடத்தையை மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நம்பிக்கைக்குரிய இரகசிய முகவர்களை நாடு முழுவதும் திரிய விட வேண்டும்.(15) உண்மையில் அவன் {மன்னன்}, தன் நடத்தை பொதுவாகப் புகழப்படுகிறதா, இல்லையா, அல்லது மாகாணத்து மக்கள் அதை ஏற்கிறார்களா, இல்லையா, அல்லது நாட்டில் நல்ல பெயரை ஈட்டுவதில் அவன் வென்றிருக்கிறானா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும்.(16) ஓ! யுதிஷ்டிரா, நல்லோர், விவேகிகள், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதோர், உன் நாட்டில் வசிக்காதோர் உன்னைச் சார்ந்திருப்போர், உன் அமைச்சர்கள், எத்தரப்பையும் சாராதவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உன்னைப் புகழவோ, பழிக்கவோ செய்பவர்களை ஒருபோதும் நீ அவமதிக்கக்கூடாது.(17,18) ஓ! ஐயா, உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் நல்ல கருத்தையும் எவனாலும் ஒருபோதும் ஈட்ட முடியாது. ஓ! பாரதா, அனைத்து மனிதர்களும், நண்பர்கள், எதிரிகள் மற்றும் நடுநிலையாளர்களைக் கொண்டுள்ளனர்" என்றார் {பீஷ்மர்}.(19)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கரவலிமை, சாதனை ஆகியவற்றில் இணையாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மத்தியில், ஒருவன் எவ்வாறு எஞ்சிய அனைவரைவிடவும் மேன்மையை அடைகிறான், அவர்களை ஆள்வதில் அவன் வெல்வது எவ்வாறு?" என்று கேட்டான்.(20)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அசையும் உயிரினங்கள், அசையாதனவற்றை விழுங்குகின்றன {உண்கின்றன}; பற்களையுடைய விலங்குகள், பற்களற்றவையை விழுங்குகின்றன; கடும்நஞ்சுமிக்கக் கோபக்கார பாம்புகள் தங்கள் வகையைச் சேர்ந்த சிறு பாம்புகளையே விழுங்குகின்றன. (இந்தக்கொள்கையின்படி மனிதர்களுக்கு மத்தியில் பலவானான மன்னன், பலமற்றவர்களை இரையாகக் கொள்கிறான்).(21) ஓ! யுதிஷ்டிரா, மன்னன், தன் குடிமக்களிடமும், தன் எதரிகளிடமும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவன் கவனமற்றவனாக இருந்தால், அவர்கள் அவன் மீது (அழுகும் பிணங்களின் மீது பாயும்) கழுகுகளாகப் பாய்வார்கள்.(22) ஓ! மன்னா, (விற்பனைக்காக) உயர்வான மற்றும் மலிவான விலைகளில் பொருட்களைக் கொள்முதல் செய்வோரும், தங்கள் பயணங்களின்போது காடுகளிலும், அடைவதற்கரிதான இடங்களிலும் உறங்கவோ, ஓய்வெடுக்கவோ செய்யும் வணிகர்கள், கடும் வரிவிதிப்பால் பீடிக்கப்படாமல் இருக்க வேண்டும்[7].(23) மன்னனின் சுமைகளைச் சுமப்பவர்களும், நாட்டின் பிற குடிமக்களை ஆதரிப்பவர்களுமான உழவர்கள், ஒடுக்குமுறையின் மூலம் உன் நாட்டை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும்[8].(24) உன்னால் இவ்வுலகில் கொடுக்கப்படும் கொடைகள், தேவர்களையும், பித்ருக்கள், மனிதர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளையும் ஆதரிக்கின்றன.(25) ஓ! பாரதா, இவையே ஒரு நாட்டை ஆள்தற்கும், அதன் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்குமான வழிமுறைகளாகும். ஓ! பாண்டுவின் மகனே, நான் மேலும் இது குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்" என்றார் {பீஷ்மர்}.(26)

[7] "அதாவது, பயன்தரும் தொழிலின் நிமித்தமாக இவ்வாறு தனியாகச் செல்வோருக்குக் கடும் வரிகளை விதிக்கக்கூடாது என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[8] "சரியான சொல் பரந்தி Bharanti என்பதாகும். தரந்தி Taranti என்பதும் அதே பொருளையே தரும். இரண்டாம் வரியைப் பொருள் கொள்வதில் கே.பி.சிங்கா பிழை செய்திருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 89ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்