Saturday, August 18, 2018

புத்தியும், மனமும்! - சாந்திபர்வம் பகுதி – 254

The understanding and mind! | Shanti-Parva-Section-254 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 81)


பதிவின் சுருக்கம் : ஆசையை வெல்லும் காரியம் குறித்தும், மனம், புத்தி, புலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்...


வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "மனிதனின் இதயத்தில் ஆசை {காமம்} என்றழைக்கப்படும் ஆச்சரியமான ஒரு மரம் இருக்கிறது. அது பிழை {மோகம்} என்றழைக்கப்பட்ட வித்தில் இருந்து பிறந்ததாகும். கோபமும், செருக்கும் அதன் பெரிய அடிமரமாக இருக்கின்றன. செயல்பாட்டு விருப்பம், (அதை வளர்க்கும் நீரைத் தக்க வைத்துக் கொள்ள) அதனடியைச் சுற்றி வடிநிலமாக {பாத்தியாக} இருக்கிறது.(1) அறியாமையே அம்மரத்தின் வேராகும், கவனமின்மை அதற்கு ஊட்டமளிக்கும் நீராக இருக்கிறது. பொறாமை அதன் இலைகளாக இருக்கிறது. முற்பிறவிகளின் தீச்செயல்கள் அதற்கு உயிர்வளத்தைக் கொடுக்கிறது.(2) தீர்மானமிழப்பு {மயக்கம்} மற்றும் கவலை ஆகியன அதன் கொப்புகளாக இருக்கின்றன; துயரம் அதன் பெரும் கிளைகளாக அமைகின்றன; அச்சம் அதன் முளையாக இருக்கிறது. (வெளிப்படையாகப் பல்வேறு பொருள்களில் உள்ள) ஏற்புடைய தாகம் அனைத்துப் புறத்தில் அதன் சுற்றிப் பிணைக்கும் கொடிகளாக அமைகிறது.(3)

இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்ட பேராசை கொண்ட மனிதர்கள், கனிகொடுக்கும் அம்மரத்தைச் சுற்றி அமர்ந்து கொண்டு, அதனிடமிருந்து கனியைப் பெறும் எதிர்பார்ப்பில் அதற்குத் தங்கள் வணக்கங்களைச் செலுத்துகின்றனர்.(4) எவன் அந்தச் சங்கிலிகளை வென்று, அம்மரத்தை வெட்டி, இன்ப துன்பம் இரண்டையும் கைவிட முயற்சிக்கிறானோ அவன் இரண்டு கதியையும் அடைவதில் வெல்கிறான்.(5) புலன்நுகர் பொருட்களில் ஈடுபடுவதன் மூலம் இம்மரத்தை வளர்க்கும் மூடன், விஷமுள்ள மருந்து நோயாளியை அழிப்பதைப் போலவே அவன் ஈடுபாடு காட்டும் {புலன் நுகர்} பொருட்களாலேயே அழிகிறான்.(6)



எனினும், கைத்திறன்மிக்க ஒருவன், யோகத்துணையின் மூலம் வலுவடைந்தவனாக, அடியாழம் வரை செல்லும் அம்மரத்தின் வேரை சமாதி எனும் வாளால் வெட்டி வீழ்த்துகிறான்.(7) கனியில் உள்ள விருப்பத்தால் மட்டுமே செய்யப்படும் செயல்கள் அனைத்தின் கதியையும் மறுபிறவி அல்லது கட்டும் சங்கிலி என அறிந்த ஒருவன், கவலைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறான்.(8) உடல் ஒரு நகரமாகச் சொல்லப்படுகிறது. புத்தியே அதன் தலைவியாக {அரசியாகச்} சொல்லப்படுகிறது. உடலுக்குள் வசிக்கும் மனமானது, தீர்மானிப்பதையே முக்கியச் செயலாகக் கொண்ட அந்தத் தலைவியின் அமைச்சராகச் சொல்லப்படுகிறது.(9)

மனத்தால் (தலைவியின் தொண்டில்) ஈடுபடுத்தப்படும் புலன்களே அதன் குடிகளாகும். அந்தக் குடிகளைப் பேணி வளர்ப்பதற்காக மனமானது பல்வேறு வகைச் செயல்களில் பலமான விருப்பத்தை வெளிக்காட்டுகிறது. அச்செயல்களின் காரியத்தில் தமஸ், ரஜஸ் எனும் இரு பெரும்பிழைகள் காணக்கிடைக்கின்றன[1].(10) அச்செயல்களின் கனிகள், (மனம், புத்தி மற்றும் நனவுநிலை என்ற) அந்நகரின் தலைவர்களோடு கூடிய குடிகளிடமே இருக்கின்றன. (ஏற்கனவே சொல்லப்பட்ட) இரு பிழைகள், தடைசெய்யப்பட்ட வழிமுறைகளின் மூலம் நிறைவேறப்பட்டும் அச்செயல்களின் கனிகளிலேயே வாழ்கின்றன.(11) இவ்வாறிருக்கையில், (ரஜஸாலோ, தமஸாலோ) வெல்லப்படமுடியாத புத்தியானது, (தனக்குத் தொண்டாற்றும் மனத்தின் அளவுக்குக் களங்கமடைந்து அந்த) மனத்திற்கு இணையான ஒரு சமநிலைக்கு இறங்குகிறது. களங்கப்பட்ட மனத்தால் கலக்கமடையும் புலன்களும் தங்கள் நிலையுறுதியை இழக்கின்றன.(12)

[1] "உடல் நகரமாகும். புத்தி அதன் தலைவியாகும். மனம் அவளது முக்கியத் தொண்டனாகும். புலன்கள், மனத்தின் தலையில் செயல்படும் குடிமக்களாகும். அந்தப் புலன்களைப் பேணி வளர்ப்பதற்காக மனமானது வீடுகள், தோட்டங்கள், வேள்விகள் மற்றும் கொடைகள் முதலிய புலப்படும் மற்றும் புலப்படாத கனிகளைத் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுகிறது. அந்தச் செயல்கள் ரஜஸ் மற்றும் தமஸ் என்ற இரு பிழைகளைக் கொள்ளத்தக்கனவாகும். புலன்கள் அச்செயல்களின் (இன்ப அல்லது துன்பக்) கனிகளையே (இப்பிறப்பிலும் அடுத்தடுத்த பிறவிகளிலும்) சார்ந்திருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

புத்தியானது (நன்மையெனக் கருதி) அடைய விரும்பும் பொருட்கள் துன்பத்தை உண்டாக்குவதாக அமைந்து இறுதியில் அழிவைக் கொண்டு வருகிறது. அழிவடைந்த பிறகு, மனத்தால் மீண்டும் நினைத்துப் பார்க்கப்படும் அப்பொருட்கள், அவ்வாறே அழிந்த பிறகும் மனத்தைப் பீடிக்கின்றன.(13) மனமானது, தீர்மானிக்க முடியாத நிச்சயத்தன்மையற்ற உணர்வுகளை அடையும் தன் முக்கியச் செயல்பாட்டைச் செய்யும்வரையில் மட்டுமே புத்தியில் இருந்து வேறுபட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும் உண்மையில் மனமும் புத்தியும் ஒன்றாகவே இருக்கின்றன. புத்தியில் (துன்பத்தையும், அனைத்து வகைத் தீமைகளையும் மட்டுமே உண்டாக்கியபடி) இருக்கும் ரஜஸ், நிலைக்கண்ணாடியில் உள்ள பிம்பத்தைப்போல ரஜஸால் களங்கப்பட்ட புத்தியில் கிடக்கும் ஆன்மாவை அப்போது மறைக்கிறது[2].(14) மனமே ரஜஸுடன் முதலில் நட்பில் கலக்கிறது. அவ்வாறு தன்னைக் கலந்த பிறகு, (பகைவனுடன் சதியில் ஈடுபடும் போலி அமைச்சன் மன்னனையும் அதன் குடிமக்களையும் கைப்பற்றுவதைப் போல) ஆன்மா, புத்தி மற்றும் புலன்களைக் கைப்பற்றிப் பற்றி, அவற்றை (மனம் எதனுடன் கலந்ததோ அந்த) ரஜஸிடமே அளிக்கிறது" என்றார் {வியாசர்}".(15)

[2] "புத்தி களங்கப்படும்போது ஆன்மாவும் களங்கப்படுகிறது, அல்லது அதனால் பீடிக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 254ல் உள்ள் சுலோகங்கள் : 15

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்