Saturday, August 18, 2018

யோகதர்மம்! - சாந்திபர்வம் பகுதி – 253

The virtue of yoga! | Shanti-Parva-Section-253 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 80)


பதிவின் சுருக்கம் : யோகதர்மம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...


வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "சாத்திரங்களை அறிந்தோர், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களின் துணை கொண்டு, நுண்ணியவுடலை உடுத்திக் கொண்டதும், மிக நுட்பமானதும், திரள் உடலுக்குள் வசித்துக் கொண்டே அதனுடன் தொடர்பறுந்த நிலையில் இருப்பதுமான ஆத்மாவைக் காண்கிறார்கள்[1].(1) அடர்த்தியான திரளாக ஆகாயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் திரியும் சூரியக் கதிர்களின் இருப்பை அறிவால் உள்ளுணர முடியுமென்றாலும் வெறுங்கண்களுக்கு அவை தெரியாததைப் போலவே, இருப்பிலுள்ளவை {உயிரினங்கள்} தங்கள் திரள் உடல்களில் இருந்து விடுபட்டு அண்டத்தில் திரிந்து கொண்டிருப்பதைக் காண்பது மனிதக் கண்களின் உற்றறியும் திறனுக்கு அப்பாற்பட்டதாகும்[2].(2) சூரியனின் பிரகாசமான வட்டில் நீரின் எதிரொளியில் {பிரதிபிம்பத்தில்} தென்படுவதைப் போலவே, யோகியும் திரளுடல்களினுள் இருப்பிலுள்ள சுயத்தை அதன் எதிரொளியில் காண்கிறான்.(3)


[1] "சாத்திரங்களை அறிந்தோர், என்பது யோகிகளைக் குறிக்கும், சாத்திரங்களில் விதிக்கப்பட்ட செயல்கள் என்பது யோகத்தோடு தொடர்புடைய நடைமுறைகளைக் குறிக்கும். சரீரினம் என்பது நுட்பமான உடலைக் கொண்ட ஆன்மாவைக் குறிக்கும் என உரையாசிரியர் குறிப்பிடுகிறார். சரீரம் என்பது உடலையும், சரீரி என்பது சரீரத்தை உடைமையாகக் கொண்ட ஆன்மாவையும் குறிப்பதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. எனவே இந்த வார்த்தையை லிங்க சரீரம் இல்லாத ஆன்மாவைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸ்தூல சரீரத்தினின்றும் விடுபட்டதும், ஸூக்ஷ்மமாயிருக்கிற (லிங்க) சரீரியைச் சாஸ்திரத்தை அறிந்தவர்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட (யோகமுதலான) கர்மங்களால் நன்றாகப் பார்க்கிறார்கள்" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "(நம்மால்) பார்க்கப்படுகிற ஸூர்யகிரணங்கள் சேர்ந்து ஸஞ்சரிக்கின்றன; போகின்றன; நிற்கவுஞ்செய்கின்றன. அப்படியே ஸ்தூலதேஹங்களால் விடப்பட்ட லிங்க சரீரங்கள் மனுஷ்யர்களுக்கு விஷயமில்லாதவைகளாக லோகங்களில் சஞ்சரிக்கின்றன" என்றிருக்கிறது.

மேலும் நுண்ணிய உடல்களில் பொதிந்திருக்கும் அந்த ஆன்மாக்கள் அனைத்தும், தாங்கள் வசித்த திரள் உடல்களில் இருந்து விடுபட்ட பிறகு, புலன்களை அடக்கியவர்களும், ஆன்ம அறிவைப் பெற்றவர்களுமான யோகிகளால் உணரத்தக்கனவாக இருக்கின்றன. உண்மையில் யோகிகள் தங்கள் ஆன்மாக்களின் துணையுடனே புலப்படாத அப்பொருட்களைக் காண்கின்றனர்.(4) பகலில் இரவு போலும், இரவில் பகலைப் போலும் உறங்கிக் கொண்டிருந்தாலும், விழித்துக் கொண்டிருந்தாலும், புத்தி, ரஜஸில் பிறந்த செயல்கள், யோகம் தரும் பலம் ஆகியவற்றால் உண்டான அனைத்தையும் கைவிட்டு யோகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், தங்கள் லிங்க வடிவத்தை முற்றான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் வெல்கிறார்கள்.(5,6)



அத்தகைய யோகியரில் வசிப்பதும், எப்போதும் (மகத், நனவுநிலை {அகங்காரம்}, ஐந்து அடிப்படை புலன்களின் ஐந்து தன்மாத்திரைகள் உள்ளிட்ட) நுட்பமான ஏழு காரியங்களுடன் கூடியதுமான ஜீவனானது, முதுமை மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டு, அருள் உலகங்கள் அனைத்திலும் உலவிக் கொண்டிருக்கிறது. "எப்போதும்" என்றும் "மரணத்தில் இருந்து விடுபட்டு" என்றும் பொதுவான பேச்சு வழக்கிலேயே நான் சொல்கிறேன். ஏனெனில் உண்மையில் அந்த லிங்க வடிவமும் தற்காலிகமானதே.(7) எனினும், (அவற்றைக் கடக்க இயலாமல்) மனம் மற்றும் புத்தியின் ஆதிக்கத்தில் இருக்கும் மனிதன், தன் கனவுகளில் கூடத் தன் உடலின் வடிவத்தையும், பிறவற்றையும் பகுத்துப்பார்த்து, இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்.(8) ஆம், அவனது கனவுகளில் கூட அவன் இன்பத்தையும் துன்பத்தை அனுபவிக்கிறான்; கோபம் மற்றும் பேராசையின் வசப்பட்டு அவன் பல்வேறு வகைப் பேரிடர்களைச் சந்திக்கிறான்.(9)

அவனது கனவுகளில் அவன் பெருஞ்செல்வத்தை அடைந்து பெரும் நிறைவை உணர்கிறான்; விழித்திருக்கும் வேளைகளில் போலவே அவன் தகுதிமிக்கச் செயல்களைச் செய்கிறான், பார்க்கிறான் (கேட்கிறான், இன்னும் பிறவற்றையும் செய்கிறான்).(10) கருப்பைக்குள்ளும், அதிகமான உள் வெப்பத்துக்கு மத்தியிலும் கிடக்க வேண்டியதும், முழுமையாகப் பத்து மாதங்களை அவ்விடத்திலேயே கடத்த வேண்டியதுமான ஜீவனானது, வயிற்றுக்குள்ளேயே உணவைப் போலச் செரித்து அழியாமல் போவதைக் காண்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.(11) உயரொளியுடன் கூடிய பரமாத்மாவின் ஒரு பகுதியும், அனைத்து உயிரினங்களின் இதயங்களுக்குள் கிடப்பதுமான ஜீவாத்மாவானது, தங்கள் திரளுடலுக்குள் இருப்பதைக் காண்பதில் ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களில் மூழ்கிய மனிதர்கள் ஒருபோதும் வெல்வதில்லை.(12)

ஆன்மாவை (ஆன்மாவைக் குறித்த அறிவை) அடையும் நோக்கத்தில் யோக அறிவியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள், உயிரற்ற திரள் உடலையும், உணரப்பட முடியாத லிங்க உடலையும், அண்ட அழிவின் போதும் அழியாத காரண உடலையும் கடப்பதில் வெல்கிறார்கள்[3].(13) நான்காவது வாழ்வுமுறை (அல்லது சந்நியாச{ஆசிரம}ம்) உள்ளிட்ட பல்வேறு வாழ்வுமுறைகளில் விதிக்கப்பட்ட கடமைகளில், யோகத்தைத் தங்களில் முதன்மையானதாகக் கொண்டவையும், மனம் மற்றும் புத்தியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நிறுத்துபவையுமான நான் சொன்ன இவை {இந்தக் கடமைகள்} (சாந்தோக்ய உபநிஷத்தில்) சாண்டில்யரால் விதிக்கப்பட்டவையாகும்[4].(14) (மனத்தின் பொருட்களான புலன்கள், மனம், புத்தி, மஹத், புலப்படாதது அல்லது பிரகிருதி மற்றும் புருஷன் உள்ளிட்ட) ஏழு நுட்பமான காரியங்களைப் புரிந்து கொண்டும், (அனைத்தின் அறிவு, மனநிறைவு, அளவற்ற அறிவு, சார்பற்ற நிலை {சுதந்திரம்}, நித்திய விழிப்புத்தன்மை, எல்லையற்ற ஆற்றல் என்ற) ஆறு குணங்களுடன் கூடிய உயர்ந்த காரணத்தை {சகுன பிரம்மத்தைப்} புரிந்து கொண்டும், முக்குணங்களுடன் கூடிய அவித்யையின் மாறுபாடே அண்டம் என்பதையும் இறுதியாகப் புரிந்து கொள்ளும் ஒருவன், (சாத்திரத்தின் மூலம் வழிநடத்தப்பட்டு) உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைவதில் வெல்கிறார்" என்றார் {வியாசர்}.(15)

[3] "முற்பிறவியில் அந்த ஜீவனின் செயல்பாடுகளின் விளைவாக உண்டான பல்வேறு வகை லிங்க உடல்களாக அமைவனவும், அடிப்படைப் பொருட்களின் தன்மாத்திரைகளில் உள்ள நிகழும்தன்மைகளுமே இந்தக் காரண உடல்கள் என்பனவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "யோகசாஸ்திரத்தில் ஸ்ரத்தையுடைவர்களாகி தம் ஆத்மாவை அடைய விருப்பமுள்ளவர்கள் தமஸ் ரஜஸுகளால் விடுபட்டு அறிவற்ற ஸ்தூலசரீரங்களும் ஸூக்ஷ்மசரீரங்களும் வைரம் போலுள்ள காரணச் சரீரங்களுமானவைகளில் அந்த ஆத்மாவைப் பார்க்கிறார்கள்" என்றிருக்கிறது.

[4] "வியாசர் இங்கே சொல்லவருவது, தியானம் என்பது சந்நியாசிகளுக்காக மட்டுமே விதிக்கப்பட்டதல்ல, அனைவருக்காகவும் விதிக்கப்பட்டதே என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 253ல் உள்ள சுலோகங்கள் : 15

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்