Showing posts with label சத்தியபாமா. Show all posts
Showing posts with label சத்தியபாமா. Show all posts

Friday, January 10, 2020

துவாரகை மூழ்கியது! - மௌஸலபர்வம் பகுதி – 7

Dwaraka drowned! | Mausala-Parva-Section-7 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : வசுதேவரைத் தேற்றி யாவரையும் இந்திரப்ரஸ்தம் செல்லச் சொன்ன அர்ஜுனன்; யோகத்தால் உடலை விட்ட வசுதேவர்; வசுதேவர், கிருஷ்ணன் ஆகியோரைத் தகனஞ்செய்த அர்ஜுனன்; கள்வர்களால் கொள்ளையிடப்பட்டது; வஜ்ரனுக்கு முடிசூட்டியது; ருக்மிணி தீக்குளித்தது; ஸத்யபாமை தவம் செய்யச் சென்றது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பகைவரை எரிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்} இவ்வாறு தன்னுடைய தாய்மாமனால் {வசுதேவரால்} சொல்லப்பட்டதும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனாக, அதேபோல உற்சாகமற்றிருந்த வசுதேவரிடம்,(1) "ஓ! மாமா, விருஷ்ணி குலதைச் சேர்ந்த அந்த வீரனையும் {கிருஷ்ணனையும்}, என்னுடைய உற்றார் உறவினரான வேறு சிலரையும் இழந்திருக்கும் இந்தப் பூமியை என்னால் பார்க்க முடியவில்லை.(2) மன்னர் {யுதிஷ்டிரன்}, பீமசேனர், சகாதேவன், நகுலன், எண்ணிக்கையில் ஆறாவதாக யாஜ்ஞசேனி ஆகியோரும் இக்காரியத்தில் என்னைப் போலவே மனம் கொண்டுள்ளனர்.(3) மன்னர் புறப்படுவதற்கான காலமும் வந்துவிட்டது. நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் மிக அருகில் இருக்கிறது. காலப்போக்கை நன்கு அறிந்தோரில் நீர் முதன்மையானவராக இருக்கிறீர்.(4) எனினும், ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, விருஷ்ணி குலத்தின் பெண்கள், பிள்ளைகள் மற்றும் முதியோரை முதலில் இந்திரப்ரஸ்தத்திற்கு அனுப்புவீராக" என்றான்.(5)

Thursday, January 09, 2020

துவாரகையில் அர்ஜுனன்! - மௌஸலபர்வம் பகுதி – 5

Arjuna in Dwaraka! | Mausala-Parva-Section-5 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரம் சென்ற தாருகன்; யாதவர்கள் அழிந்ததை பாண்டவர்களுக்குத் தெரிவித்தது; துவாரகை சென்று கிருஷ்ணனின் மனைவியரைத் தேற்றி வசுதேவரிடம் சென்ற அர்ஜுனன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதேவேளையில் தாருகன், குருக்களிடம் சென்று, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிருதையின் {குந்தியின்} மகன்களைக் கண்டு, இரும்பு உலக்கைகளைக் கொண்டு விருஷ்ணிகள் எவ்வாறு ஒருவரையொருவர் கொன்றனர் என்பதைச் சொன்னான்.(1) போஜர்கள், அந்தகர்கள் மற்றும் குகுரர்களுடன் சேர்ந்து விருஷ்ணிகள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கேட்ட பாண்டவர்கள், துயரால் எரிந்து பெருங்கலக்கமடைந்தனர்.(2) கேசவனின் அன்பு நண்பனான அர்ஜுனன், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} விடைபெற்றுக் கொண்டு, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணப் புறப்பட்டுச் சென்றான். அவன் அனைத்திற்கும் அழிவு ஏற்படும் என்று சொன்னான்[1].(3)

Sunday, August 10, 2014

விடைபெற்றான் கிருஷ்ணன்! - வனபர்வம் பகுதி 233

Krishna set out!  | Vana Parva - Section 233 | Mahabharata In Tamil

(திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வத் தொடர்ச்சி)

சத்தியபாமா திரௌபதியிடம் அவளது பிள்ளைகளின் நலம் குறித்துச் சொன்னது; கிருஷ்ணனும் சத்தியபாமாவும் தங்கள் நகருக்குக் கிளம்பியது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படும் மதுவைக் கொன்றவனான {மதுசூதனான} கேசவன் {கிருஷ்ணன்}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகன்களுடனும், மார்க்கண்டேயரின் தலைமையிலான அந்தணர்களுடனும் பல்வேறு ஏற்புடைய கதைகளைப் பேசிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தனது தேரில் ஏறி சத்தியபாமாவை அழைத்தான்.

துருபதன் மகளை {திரௌபதியை} அணைத்துக் கொண்ட சத்தியபாமா, அவளிடம் {திரௌபதியிடம்} மனப்பூர்வமான வார்த்தைகளால் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினாள். அவள் {சத்தியபாமா}, "ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, உனக்கு எந்தக் கவலையோ துயரமோ ஏற்படாதிருக்கட்டும்! தேவர்களுக்கு இணையான உனது கணவர்களால் வெல்லப்பட்ட பூமியை நீ நிச்சயம் திரும்ப அடைவாய், அதனால், உறக்கமில்லா இரவுகளை நீ கடக்க வேண்டிய காரணம் ஏதும் உனக்கு இல்லை. ஓ! கரிய கண்களையுடையவளே {திரௌபதி}, இது போன்ற நிலையையும், மங்களக்குறிகளையும் கொண்ட நீ நீண்ட நாட்களுக்குத் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியாது. அனைத்து முட்களில் இருந்தும் விடுபட்டு, உனது கணவர்களுடன் நீ இந்த உலகை அமைதியாக அனுபவிப்பாய் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

திரௌபதியின் அறிவுரை! - வனபர்வம் பகுதி 232

The advice of Draupadi!  | Vana Parva - Section 232 | Mahabharata In Tamil

(திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வத் தொடர்ச்சி)

கணவனிடம் எப்படி நடந்து கொண்டால், அவன் மனைவிக்குக் கீழ்ப்படிந்தவனாக இருப்பான் எனத் திரௌபதி சத்தியபாமாவுக்குச் சொன்னது...

திரௌபதி {சத்தியபாமாவிடம்} சொன்னாள், "கணவரின் இதயத்தை ஈர்ப்பதற்கான சூழ்ச்சியற்ற வழியை நான் இப்போது உனக்குக் குறிப்பிடுவேன். அன்பிற்குரிய தோழியே {சத்தியபாமா}, அதைக் கைக்கொள்வதன் மூலம், நீ மற்ற பெண்களிடம் இருந்து உனது தலைவனை ஈர்த்துக் கொள்வாய். ஓ! சத்தியபாமா, தேவலோகத்தையும் சேர்த்து அனைத்து உலகிலும், கணவனுக்கு நிகரான வேறு தேவன் {தெய்வம்} கிடையாது. அவர் {கணவர்} உன்னிடம் திருப்தியடையும்போது, நீ (உனது கணவரிடம் இருந்து) விரும்பிய பொருட்களையெல்லாம் அடைவாய். அவர் {கணவர்} கோபப்படும்போது, அது அத்தனையும் இழப்பாய். வாரிசையும், மகிழ்வுண்டாக்கும் பல்வேறு பொருட்களையும் கணவரிடம் இருந்தே ஒரு மனைவி பெறுகிறாள். உனது கணவரின் மூலமே நீ அழகிய படுக்கைகளையும், இருக்கைகளையும், ஆடைகளையும், மாலைகளையும், நறுமணப்பொருட்களையும், பெரும் புகழையும், அதன் பிறகு சொர்க்கத்தையும் அடைவாய். எளிதான வழிகளில் யாரும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியாது. உண்மையில் கற்புள்ள பெண், இன்பத்தைத் துன்பத்துடனே பெறுகிறாள்.

Saturday, August 09, 2014

திரௌபதியின் அர்ப்பணிப்பு! - வனபர்வம் பகுதி 231

The devotion of Draupadi!  | Vana Parva - Section 231 | Mahabharata In Tamil

(திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வம்)

கணவனை வசப்படுத்தும் உத்தியை திரௌபதியிடம் சத்தியபாமா கேட்பது; அதற்கு பதிலுரைக்கும் திரௌபதி கணவனுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களின் அறத்தைச் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த அந்தணர்களும், பாண்டுவின் சிறப்புமிக்க மகன்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, திரௌபதியும், சத்தியபாமாவும் ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். வசதியாக அமர்ந்த பிறகு, அந்த இரு மங்கையரும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்பமாகச் சிரித்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, எப்போதும் ஒருவருக்கொருவர் இனிமையாகப் பேசும் அந்த இரு மங்கையரும், சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டபடியால், குருக்கள், யதுக்கள் சம்பந்தமான கதைகளில் இருந்து இனிமையான கதைகளைப் பேசத் தொடங்கினர். கிருஷ்ணனுக்குப் பிடித்தமான மனைவியும், சதராஜித்தின் மகளும், மெல்லிடையாளுமான சத்தியபாமா, தனிமையில் திரௌபதியிடம், "ஓ! துருபதன் மகளே {திரௌபதியே}, பலமும் அழகும் கொண்டு, லோகபாலர்களைப் போல இருக்கும் வீரர்களான பாண்டுவின் மகன்களை, நீ எந்த நடையைக் கொண்டு ஆள்கிறாய்? அழகானவளே {திரௌபதி}, அவர்கள் {பாண்டவர்கள்} உனக்குக் கீழ்ப்படிந்து, உன்னிடம் எப்போதும் கோபம் கொள்ளாமல் இருப்பது எவ்வாறு? ஓ! அழகான அம்சங்கள் கொண்டவளே {திரௌபதி}, சந்தேகமற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உனக்கு எப்போதும் அடங்கியே நடக்கிறார்கள். மேலும், நீ சொல்வதைச் செய்ய எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள். ஓ! மங்கையே {திரௌபதி}, இதற்கான காரணத்தை எனக்குச் சொல். இது நடப்பது நோன்புகள் பயில்வதாலா? தவத்தாலா? மந்திர ஆற்றலாலா? (பருவத்தில்) குளிக்கும்போது மருந்து கொடுக்கப்படுவதாலா? அறிவியல் திறமையாலா? {வித்தையின் சக்தியாலா?}, இளமையான தோற்றத்தின் ஆதிக்கத்தாலா? குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிப்பதாலா? ஹோமத்தாலா? கண் மை {அஞ்சனம்} மற்றும் பிற மருந்துகள் பூசுவதாலா? ஓ! பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, எந்த அருளப்பட்ட மங்களமான பொருளால், ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, கிருஷ்ணர் எனக்கு எப்போது கீழ்ப்படிந்து நடப்பார் என்பதை இப்போது எனக்குச் சொல்" என்று கேட்டாள் {சத்தியபாமா}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்