Sunday, November 24, 2013

சிசுபால வதத்திற்கு பழி வாங்கிய சால்வன்! - வனபர்வம் பகுதி 14

Salva's revenge for slained Sisupala | Vana Parva - Section 14 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

ஆனர்த்த நாட்டில் {துவாரகையில்} கிருஷ்ணன் இல்லாத காரணம் யாது என்று யுதிஷ்டிரன் கேட்டல்; சிசுபாலனின் வதத்திற்கு பழி வாங்குவதற்காக சால்வன் துவாரகையில் நடத்திய வெறியாட்டத்தை கேள்விப்பட்டு சால்வன் நகரத்தை அழிக்கச் சென்றிருந்தாக கிருஷ்ணன் பதிலுரைத்தல்...

யுதிஷ்டிரன் சொன்னான், "கிருஷ்ணா, நீ ஏன் அங்கு {ஆனர்த்த நாட்டில்) இல்லை? விருஷ்ணி குல வழித்தோன்றலே,  நீ வெளியே சென்றிருந்த போது எங்கே வசித்திருந்தாய்? நாட்டை விட்டு வெளியே சென்று என்ன செய்து கொண்டிருந்தாய்?"

கிருஷ்ணன், "பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நான் சால்வ நகரத்தை {சௌபம்} அழிக்க (அழிக்கும் ஏற்பாட்டைச் செய்ய) சென்றிருந்தேன். கௌரவர்களில் முதன்மையானவரே, நான் அப்படிச் செய்ய வேண்டிய காரணங்களைக் கேளும். தமகோஷனின் வீர மகனும், நன்கு அறியப்பட்ட மன்னனுமான பலம் நிறைந்த கரங்களும் பெரும் சக்தியைக் கொண்டவனுமான சிசுபாலன் கொல்லப்பட்டான். பாரதர்களில் சிறந்தவரே, உமது ராஜசுய வேள்வியில் எனக்கு அளிக்கப்பட்ட முதல் மரியாதையை ஏற்க முடியாததால் கோபம் கொண்ட அந்தத் *தீயவன் {சிசுபாலன்}  என்னால் கொல்லப்பட்டான். ஓ பாரதரே, அவன் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்ட சால்வன், கடும் கோபம் கொண்டு, நான் உம்மிடம் தங்கியிருந்த போது, {மூத்த வீரர்கள்} யாருமற்ற துவாரகைக்குச் சென்றான். 


விலைமதிப்பில்லா உலோகங்களால் செய்யப்பட்டதால் சௌபம் என்று அழைக்கப்பட்ட ரதத்தில் அங்கே சென்று, விருஷ்ணி குலத்தின் இளம் வீரர்களுடன், எங்கள் குல காளைகளுடன் கருணையின்றி போரிட்டான். அங்கே பல விருஷ்ணி குல இளம் இளவரசர்களைக் கொன்ற அந்த தீயவன் {சால்வன்}, அந்த நகரத்தின்  {துவாரகையின்} தோட்டங்கள் அத்தனையும் அழித்துவிட்டான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அவன் {சால்வன்} "அந்த விருஷ்ணி குல தாழ்ந்தவனும், வசுதேவரின் தீய ஆன்மா கொண்ட மகனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்} எங்கே? போரில் விருப்பம் கொண்ட அவனது கர்வத்தை அழிக்கிறேன். ஆனர்த்தர்களே! உண்மையைச் சொல்லுங்கள். அவன் எங்கிருக்கிறானோ நான் அங்கே செல்கிறேன். கம்சன் மற்றும் கேசியைக் கொன்றவனைக் கொன்ற பிறகே நான் திரும்பிச் செல்வேன். அவனைக் கொல்லாது நான் திரும்புவதில்லை என்று எனது ஆயுதங்களின் மீது சத்தியம் செய்கிறேன்" என்று சொல்லித் திரும்பத் திரும்ப "அவன் எங்கே? அவன் எங்கே?" என்றும் கேட்ட சௌபத்தின் தலைவன் {சால்வன்} என்னுடன் போரிட விரும்பி அங்கும் இங்கும் ஓடினான். 

மேலும் அந்தச் சால்வன், "சிசுபாலனை அவன் கொன்றதால் ஏற்பட்டிருக்கும் எனது கோபத்தால் அற்பனும், பாவியும், நம்பிக்கை துரோகம் செய்பவனுமான அவனை {கிருஷ்ணனை} இன்று யமனின் மாளிகைக்கு அனுப்புகிறேன்.” மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் அவன் {சால்வன்}, "இளம்பருவம் கொண்டு சிறுவனாக இருந்த என் தம்பியை {சிசுபாலனை} போர்க்களத்தில் இல்லாது இருந்த அவனை {என் தம்பி சிசுபாலனை} தயாராக இல்லாத நிலையில் கொன்ற அந்த இழிந்த ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} நான் கொல்வேன்." என்று சொன்னான். 

பெரும் மன்னா, குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, அவன் {சால்வன்} இப்படி ஒப்பாரி வைத்து அழுது, என்னை நிந்தித்து, விலைமதிப்பில்லாத உலோகங்களால் ஆன, நினைத்த இடத்திற்கு செல்லவல்ல தனது ரதத்துடன் {சௌபம் என்ற ரதத்துடன்} ஆகாயத்தில் எழும்பினான். கௌரவரே {யுதிஷ்டிரரே}, நாடு திரும்பியதும், அந்தத் தீய மனதுடைய மாத்திக நாட்டு மன்னன் {மார்த்திகாவதகம்} என்னைக் குறித்து சொன்னதையெல்லாம் கேள்விப்பட்டேன். குரு குலத்தின் வழி வந்தவரே {யுதிஷ்டிரரே}, ஓ மன்னா, இதனால் கோபம் அடைந்த நான், அனைத்தையும் நினைத்துப் பார்த்து, அவனைக் கொல்ல மனதில் தீர்மானம் செய்தேன். கௌரவரே {யுதிஷ்டிரரே}, ஆனர்த்தர்களை அவன் ஒடுக்கியதையும், என்னை நிந்தித்ததையும், அவனது மிதமிஞ்சிய திமிரையும் அறிந்த நான் அந்த இழிந்தவனை அழிக்கத் தீர்மானம் கொண்டேன். 

பூமியின் தலைவரே {யுதிஷ்டிரரே}, அதன் படி, அந்தச் சௌபனைக் {சௌபத்தின் அதிபதியான சால்வனைக்} கொல்ல நான் {எனது துவாரகை நகரத்தை  விட்டு} வெளியேறினேன். அவனை இங்கும் அங்கும் தேடி, கடைசியாக கடலுக்கு நடுவில் உள்ள தீவு ஒன்றில் அவனைக் {சால்வனைக்} கண்டேன். மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு கடலில் இருந்து பெறப்பட்ட பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதி, சால்வனைப் போருக்கு அழைத்து சவால் விட்டேன். நான் போருக்காக அங்கு நின்றேன். அந்த நேரத்தில் எண்ணிலடங்கா தானவர்கள் என்மீது தாக்குதல் நடத்தினார்கள். கடைசியில் அவர்களையெல்லாம் வீழ்த்தி தரையில் சாய்த்தேன். பெரும் பலம்வாய்ந்த கரம் கொண்டவரே! இந்தக் காரணத்தினால்தான் நான் அங்கு {உம்மிடம்} வரமுடியவில்லை! ஹஸ்தினாபுரத்தில் நடந்த நியாயமற்ற பகடையாட்டத்தைக் கேள்விப்பட்ட பிறகு, துயரில் மூழ்கியிருக்கும் உம்மைக் காண இங்கு வந்தேன்" என்றான் {கிருஷ்ணன்}.
---------------------------------------------------------------------------------------------
*தீயவன் {சிசுபாலன்}  என்னால் கொல்லப்பட்டான்.

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
சிசுபாலன் நிந்தனை - சபாபர்வம் பகுதி 36
கிருஷ்ணனை எதிர்க்கத் துணிந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 38
சிசுபாலனை விமர்சித்த பீஷ்மர் - சபாபர்வம் பகுதி 39
மூர்க்கமாகக் குதித்த பீமன் - சபாபர்வம் பகுதி 41
சிசுபாலனின் பிறப்பு மர்மம் - சபாபர்வம் பகுதி 42
சிசுபால வதம் -சபாபர்வம் பகுதி 44


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்