Saturday, November 23, 2013

சூது பெருந்தீங்கானது - வனபர்வம் பகுதி 13

The game of dice is evil | Vana Parva - Section 13 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

சூதாட்ட காலத்தில் தாம் துவாரகையில் இல்லாததே யுதிஷ்டிரனுக்கு நேர்ந்த துயரத்திற்குக் காரணம் என்று கிருஷ்ணன் சொல்வது....

வாசுதேவன் சொன்னான், "பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, நான் துவாரகையில் இருந்திருந்தால், ஓ மன்னா, இந்தத் தீமை உம் மேல் விழுந்திருக்காது! கட்டுப்படுத்தப்பட முடியாதவனே, அம்பிகையின் மகனோ (திருதராஷ்டிரரோ), துரியோதனனோ, மற்ற கௌரவர்களோ என்னை அழைக்காதிருந்தால்கூட அந்தச் சூதாட்டத்துக்கு வந்து, அந்த ஆட்டத்தின் தீமைகளை எடுத்துக் கூறி, பீஷ்மர், துரோணர், கிருபர், பால்ஹீகர் ஆகியோரை உதவிக்கு அழைத்து அந்த ஆட்டம் நடவாமல் தடுத்திருப்பேன்.


மேன்மையானவரே {யுதிஷ்டிரரே}! உமக்காக ஏகாதிபதிகளில் முதன்மையான விசித்திரவீரியனின்  மகனிடம் {திருதராஷ்டிரரிடம்}, உமது மகன்களுக்கும் பகடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போகட்டும் என்று சொல்லியிருப்பேன். நீர் இப்படி துயரில் விழக்காரணமான பல தீமைகளையும், முன்பொருகாலத்தில் வீரசேனின் மகன் நாட்டை இழந்த கதையையும் எடுத்துக் கூறியிருப்பேன். மன்னா {யுதிஷ்டிரா}, பகடையினால் ஏற்படும் தீமைகளை எண்ணிப்பாராமல் மனிதன் அதில் விழுகிறான்! அவ்விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் மனிதன் (வெற்றியடையும் விருப்பத்தால்} எப்படித் தொடர்ந்து விளையாடுவான் என்பதை விவரித்துச் சொல்லியிருப்பேன். மனிதர்களை மயக்கி அடிமையாக வைக்கும் பெண், பகடை, வேட்டை, மது ஆகிய நான்கும் மனிதனின் செழிப்பை அழிக்கும் நான்கு தீமைகளாகும். சாத்திரமறிந்த அனைவரும் இவர்களை அனைத்து தீமைகளும் தாக்கும் என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர். பகடைக்கு அடிமையாக இருக்கும் அந்த குறிப்பிட்ட மனிதர்களுக்கே அதன் அனைத்துத் தீமைகளும் தெரியும்.

பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அம்பிகையின் மகனுக்கு {திருதராஷ்டிரருக்கு} முன்னால் தோன்றி, இந்தப் பகடையின் மூலம் ஒரு நாளில் மனிதர்கள் அனைத்து உடைமைகளையும் இழந்து துயரத்தில் வீழ்வதையும், அவர்களே சுவைக்காத அவர்களது செல்வத்தை இழந்து கடும் வார்த்தைகள் பேசும் நிலை ஏற்படுவதையும் எடுத்துக் கூறியிருப்பேன்.

குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {யுதிஷ்டிரரே}, இவற்றையும் இன்னும் பிற தீமைகளையும் சுட்டிக் காட்டியிருப்பேன். நான் சொல்லும் வார்த்தைகளை அவர்{திருதராஷ்டிரர்} ஏற்றுக் கொண்டிருந்தால் குருக்களின் நலனும், அறமும் பாதுகாக்கப்பட்டிருக்கும்!

மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அவர் மருந்து போன்ற எனது நல்ல ஆலோசனைகளை ஏற்க மறுத்திருந்தால், பிறகு, ஓ பாரதகுலத்தில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நான் எனது பலத்தால் அவரை {திருதராஷ்டிரரைக்} கட்டாயப்படுத்தியிருப்பேன்! அந்தச் சபையில் அவருக்காகக் காத்திருப்பவர் எவரும், நண்பர் என்ற போர்வையில் எதிரியாய் இருக்கும் எவரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்தால், அவர்கள் அனைவரையும் அந்த சூதாடிகளுடன் சேர்த்துக் கொன்றிருப்பேன்! கௌரவரே {யுதிஷ்டிரரே}, நான் அப்போது ஆனர்த்த தேசத்தில் {துவாரகையில்} இல்லாததாலேயே உமக்குப் பகடை மூலம் இந்தத் துயர் வந்தது.

குருக்களில் சிறந்தவரே, பாண்டுவின் புதல்வரே {யுதிஷ்டிரரே}, துவாரகைக்கு வந்ததும் யுயூதனன் மூலம் உமக்கு நேர்ந்த பேரிடரைப் பற்றி அறிந்தேன். மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இதைக் கேள்விப்பட்டதும் துயரத்தால் தாக்குண்டு, கனத்த இதயத்துடன், விரைவாக உம்மைப் பார்க்க விரும்பி இங்கு வந்தேன். மன்னா, பாரத குலத்தின் காளையே, நீர் பெரும் துன்பத்தில் விழுந்துவிட்டீர்! கேடுகாலத்தில் மூழ்கியிருக்கும் உம்மையும் உமது சகோதரர்களையும் நான் காண்கிறேன்!" என்றான் {கிருஷ்ணன்}.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்