Wednesday, December 25, 2013

பெண்சுகத்திலும் வல்லவனாக வேண்டும் - வனபர்வம் பகுதி 45

Learn the arts of acquitting in  female company  | Vana Parva - Section 45 | Mahabharata In Tamil

(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)

அர்ஜுனன் ஊர்வசியைப் பார்த்ததைக் கண்ட இந்திரன், சித்திரசேனனை அழைத்து ஊர்வசியிடம் சென்று தனது செய்தியைச் சொல்லுமாறு சொன்னது; சித்திரசேனன் ஊர்வசியிடம் சென்று அர்ஜுனனைப் புகழ்ந்து சொல்லி, அர்ஜுனனிடம் ஊர்வசி செல்ல வேண்டும் என்று உரைப்பது; ஊர்வசி தான் ஏற்கனவே அர்ஜுனன் மேல் மோகத்தில் இருப்பதாகத் தெரிவிப்பது…

வைசம்பாயனர் சொன்னார், "ஒருநாள், அர்ஜுனனின் *பார்வை ஊர்வசியின் மேல் விழுந்ததைக் கண்ட வாசவன் {இந்திரன்}, சித்திரசேனனை {அர்ஜுனனின் கந்தர்வ நண்பன்} தனிமையில்அழைத்து, "ஓ கந்தர்வ மன்னா, நான் திருப்தியடைந்தேன்; அப்சரஸ்களில் முதன்மையான ஊர்வசியிடம் எனது தூதுவனாகச் சென்று, மனிதர்களில் புலியான பல்குனனுக்காக {அர்ஜுனனுக்காக} அவளை {ஊர்வசியைக்} காத்திருக்கச் செய். அவளிடம், {ஊர்வசியிடம்} "எனது {இந்திரன்} பயிற்சியின் மூலம் அர்ஜுனன் அனைத்து ஆயுதங்களையும், மற்ற கலைகளையும் கற்றுக் கொண்டு, எல்லோராலும் கொண்டாடப்பட்டு இருக்கிறான். அவனை {அர்ஜுனனை} பெண்களின் துணையைக் கொள்ளும் கலையை அறிந்தவனாகவும் நீ ஆக்க வேண்டும்" என்ற எனது {இந்திரன்} வார்த்தைகளைச் சொல்" என்றான் {இந்திரன்}.


இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட கந்தர்வ மன்னன் {சித்திரசேனன்}, அந்த வாசவனின் {இந்திரனின்} கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, விரைவாக அப்சரஸ்களில் முதன்மையான ஊர்வசியிடம் சென்றான். அவனைக் கண்டதும், அவனது அடையாளத்தைக் கண்டு கொண்டு, அவனுக்கு மகிழ்ச்சியுண்டாவது போல அவனை வரவேற்கவும் வணங்கவும் செய்தாள். தான் வசதியாக அமர்ந்ததும் அவன் {கந்தர்வ மன்னனான சித்திரசேனன்}, மெல்லி புன்னகையுடன், வசதியாக அமர்ந்திருந்த ஊர்வசியிடம், "ஓ அழகான இடை கொண்டவளே, உன்னிடம் ஒரு உதவியைக் கேட்கும் சொர்க்கத்தின் ஒரே தலைவன் {இந்திரன்} அனுப்பியே நான் இங்கு வந்திருக்கிறேன்.

பிறப்பிலிருந்தே தன்னுள் இருக்கும் பல அறங்களுக்காகவும், தனது அருளுக்காகவும், நடத்தைக்காகவும், அழகுக்காகவும், நோன்புகளுக்காகவும், சுயக்கட்டு பாடுகளுக்காகவும், பலம் மற்றும் வீரத்திற்காகவும் தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் அறியப்பட்டவனும், அறம்சார்ந்தவர்களால் மதிக்கப்பட்டு எப்போதும் தயாரான சொல்நயத்துடனும், அறிவுஜீவியாகவும், அற்புதமான சக்தியுடனும், மன்னிக்கும் தன்மையுடனும், எந்த விதமான கறையும் படாமலும், நான்கு வேதங்களையும், அதன் கிளைகளையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் கற்று, குருவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனும், அறிவாற்றலின் எட்டு பண்புகளைக் கொண்டவனும்,

தனது துறவு, திறன், மூலம் {பிறப்பிடம்}, வயது ஆகியவற்றைக் கொண்டு, தேவலோகத்தை மஹாவத் {இந்திரன்} போன்று தனியாகவே காக்க இயன்றவனும், தற்பெருமை பேசாதவனும், அனைவருக்கும் தகுந்த மரியாதை கொடுப்பவனும், நுட்பமான சிறு பொருளையும் பெரிதாக மொத்தமாகப் பார்ப்பவனும், இனிமையான பேச்சு கொண்டவனும், விதவித விதமான உணவு மற்றும் பானங்களை நண்பர்களுக்கும், தன்னை நம்பி இருப்பவர்களுக்கும் கொடுப்பவனும், உண்மையுள்ளவனும், அனைவராலும் வழிபடப்படுபவனும், நா நலமிக்கவனும், அழகானவனும், கர்வமற்றவனும், தனக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களிடம் அன்புடன் இருப்பவனும், அண்டத்திற்கே திருப்தியாக இருந்து அனைவராலும் விரும்பப்படுபவனும், சத்தியத்தில் உறுதியுடன் இருப்பவனும், மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, வருணனுக்கும் எல்லாவிதத்திலும் சமமான அர்ஜுனனை நீ அறிவாய். ஓ ஊர்வசி, அந்த வீரன் சொர்க்கத்தின் இன்பங்களைச் சுவைப்பதற்காக உருவாக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள். இந்திரனின் கட்டளையின் பேரில் அவன் {அர்ஜுனன்} இன்று உனது பாதத்தை அடையட்டும். ஓ இனிமையானவளே, அர்ஜுனன் உன் பக்கமாகச் சாய்ந்திருப்பதால், இதைச் செய்" என்றான் {சித்திரசேனன்}.

இப்படிச் சொல்லப்பட்டதும் களங்கமற்ற குணம் கொண்ட ஊர்வசி புன்னகை கொண்ட முகத்துடன் அந்த கந்தர்வனின் {சித்திரசேனனின்} வார்த்தைகளை உயர்ந்த மரியாதையுடன் பெற்று, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், "மனிதர்களை அலங்கரிக்க வேண்டிய அறங்களை, அவை உம்மால் சொல்லப்பட்ட போது {அர்ஜுனனை வர்ணித்தது} கேட்டேன். யார் இப்படிப்பட்ட அறங்களைக் கொண்டிருந்தாலும், நான் அவர்களுக்கு எனது ஆதரவை அளிப்பேன். பிறகு, நான் ஏன் அர்ஜுனனை எனது காதலனாகக் கொள்ளக்கூடாது? இந்திரனின் உத்தரவினாலும், உம்மிடம் நான் கொண்டுள்ள நட்பினாலும், பல்குனனின் {அர்ஜுனனின்} எண்ணிலடங்கா நற்குணங்களாலும் ஈர்க்கப்பட்டு, நான் ஏற்கனவே காம தேவனின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறேன். ஆகையால், நீ விரும்பிய இடத்திற்கு செல். நான் மகிழ்ச்சியாக அர்ஜுனனிடம் செல்வேன்" என்றாள் {ஊர்வசி}.

------------------------------------------------------------------------
*  அப்சரஸ்களின் நடனம்! - வனபர்வம் பகுதி 43
அர்ஜுனன் ஊர்வசியை இந்த நடனத்தின் போது கண்டிருக்க வேண்டும் என்ற நினைக்கிறேன்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்