Monday, January 27, 2014

சிவனும் மங்கணகரும்! - வனபர்வம் பகுதி 83இ

Shiva and Mankanaka! | Vana Parva - Section 83c | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "பிறகு ஒருவன் வளர்பிறையின் பத்தாவது நாளில் {தசமி திதியில்} புண்டரீகம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடிய ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், மூன்று உலகத்திலும் திரிவிஷ்டபம் என்று அறியப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே அந்தத் தீர்த்தத்தில் பாவங்களை அழிக்கும் புனிதமான வைதரணி என்றழைக்கப்படும் ஆறு இருக்கிறது. அங்கே நீராடி, காளையைக் குறியீடாகக் கொண்டு, தனது கையில் திரிசூலத்தைக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} வழிபட்டு, அனைத்து பாவங்களில் இருந்தும் ஆன்மசுத்தமடைந்து ஒருவன் மேன்மையான கதியை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பலகீவனம் எனும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கே அந்தத் தீர்த்தத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக தேவர்கள் தங்கள் தவங்களை இயற்றிக் கொண்டிருக்கின்றனர். பிறகு ஒருவன், திரிஷத்வதி என்ற தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடி தேவர்களை வழிபடும் ஒருவன், ஓ பாரதா {பீஷ்மா}, அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகளால் கிடைக்கும் பலனைவிட மேன்மையான பலனை அடைவான். 


ஓ பாரதர்களின் தலைவா {பீஷ்மா}, சர்வதேவ தீர்த்தத்தை அடைந்து அங்கு நீராடும் மனிதன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பாணிகாதம் என்ற தீர்த்தத்தில் நீராடும் மனிதன் அனைத்து தேவர்களையும் வழிபட்டு, அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகளால் கிடைக்கும் பலனைவிட மேன்மையான பலனை அடைவான். மேலும் ராஜசூய வேள்வியின் பலனையும் அடைந்து கடைசியாக முனிவர்களின் உலகை அடைவான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் மிஸ்ரகம் என்று அழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே அந்தணர்களுக்காக உயர் ஆன்ம வியாசர் அனைத்து தீர்த்தங்களையும் கலந்தார் என்று நாம் கேள்விப்படுகிறோம். ஆகையால், மிஸ்ரகத்தில் நீராடும் ஒருவன் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடியவனாவான்.

பிறகு ஒருவன், தனது புலன்களை அடக்கி, முறையான உணவுப்பழக்கத்துடன், வியாசவனம் என்ற தீர்த்தத்தை அடையவேண்டும். பிறகு அங்கே இருக்கும் மனோஜவம் என்ற தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு, மதுவதியில் இருக்கும் தேவி {Devi } தீர்த்தத்தை அடைந்து, அங்கே நீராடி தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன், தேவியின் {அந்தப் பெண் தெய்வத்தின்} உத்தரவின் பேரில் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு முறையான உணவுப்பழக்கத்துடன் கௌசிகியும் திருஷ்டத்வதியும் சங்கமிக்கும் இடத்தில் நீராடும் ஒருவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன், பெரும் புத்திகூர்மை கொண்ட வியாசர், தனது மகனை நினைத்து எரியும் துக்கத்துடன் தனது உடலைக் கைவிட எண்ணி பிறகு தேவர்களால் உற்சாகப்படுத்தப்பட்ட இடமான வியாசஸ்தலியை அடைய வேண்டும். வியாசரின் அந்த இடத்திற்கு வரும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, பிறகு கிந்தத்தம் என்றழைக்கப்படும் கிணற்றை அடைந்து குறிப்பிட்ட அளவு எள்ளை அதற்குள் வீசினால் {ஒரு பிரஸ்தம் [12 பிடி ஒரு குடவம், 4 குடவம் ஒரு பிரஸ்தம்] அதாவது நாற்பத்தெட்டு பிடி எள்ளை தானம் செய்தல் என்றும் சொல்லப்படுகிறது} அவன் அனைத்துக் கடன்களில் இருந்தும் விடுபட்டு வெற்றியை அடைகிறான். பிறகு வேதீ என்ற தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான்.

அஹஸ், சூதினம் என்று கொண்டாடப்படும் தீர்த்தங்களும் இருக்கின்றன. அங்கே நீராடும் ஒருவன், ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, சூரியனின் உலகத்திற்குச் செல்கிறான். பிறகு ஒருவன் மிருகதூமம் என்று மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே இருக்கும் கங்கையில் நீராட வேண்டும். அங்கே நீராடி மகாதேவனை {சிவனை} வழிபடுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு தேவி தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் மூன்று உலகங்களாலும் வாமனக தீர்த்தம் என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே விஷ்ணுபதத்தில் நீராடி வாமனனை வழிபடும் ஒருவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களிலிருந்தும் சுத்தப்படுத்தப்பட்டு ஒருவன் விஷ்ணுவின் வசிப்பிடத்தை அடைகிறான். பிறகு குலம்புனத்தில் நீராடும் ஒருவன், தனது சொந்த குலத்தை புனிதமாக்குகிறான். பிறகு பவனஹ்ரதத்தை அடையும் ஒருவன் அந்த அற்புதமான மருதர்களின் தீர்த்ததில் நீராடி, ஓ மன்னா, மனிதர்களில் புலியே {பீஷ்மா}, ஒருவன் வாயுத் தேவனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். பிறகு அமரஹ்ரதத்தில் நீராடும் ஒருவன், அர்ப்பணிப்புடன் தேவர்கள் தலைவனை {இந்திரனை} வழிபட்டு, சொர்க்கத்தில் வழிபடத்தக்கவனாகி அற்புதமான தேரில் அமர்ந்து இறவாதவர்கள் {தேவர்கள்} துணையுடன் உலவும் பேறைப் பெறுகிறான்.

ஓ பெரும் மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன், சாலிஹோத்ரனின் சாலிசூரியம் {சாலிசூர்ப்பம்} என்ற தீர்த்தத்தில் உரிய சடங்குகளுடன் நீராடி, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு, சரஸ்வதி {நதியில்} இருக்கும் ஸ்ரீகுஞ்சம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கே நீராடும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் நைமிஷகுஞ்சத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, முற்காலத்தில் நைமிஷ வன தவசிகளான முனிவர்கள் புனிதநீராட்டுப்பயணத்தை {தீர்த்தயாத்திரையை} முன்னிட்டு குருக்ஷேத்திரத்தை அடைந்தார்கள். ஓ பாரதர்களின் தலைவா {பீஷ்மா}, அங்கே சரஸ்வதி நதிக்கரையில் அவர்கள் {முனிவர்கள்} ஓய்ந்திருக்க ஒரு தோட்டம் உண்டாக்கப்பட்டது. அது அவர்களுக்குப் பெரும் திருப்தியைக் கொடுத்தது. அங்கே அந்த சரஸ்வதியில் நீராடும் ஒருவன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைவான்.

ஓ அறம்சார்ந்தவனே, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான கன்யா தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைவான். பிறகு ஒருவன் பிரம்மனின் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் (மூன்று) தாழ்ந்த வகையிலான ஒருவன் {அந்தணனல்லாத மூன்று வகையினர்} அந்தண நிலையை அடைகிறான். அப்படி நீராடும் ஒருவன் அந்தணனாக இருப்பின் அவனது அனைத்துப் பாவங்களும் அழிந்து அவன் உயர்ந்த நிலையை அடைவான். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் சோமம் என்ற அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் சோமனின் {சந்திரனின்} உலகத்தை அடைவான். ஓ மன்னா, பிறகு ஒருவன், பெரும் ஆன்ம வெற்றிகண்ட மங்கணகர் என்ற பெயரில் கொண்டாடப்படும் முனிவர் இருக்கும் இடமான சப்தசாரஸ்வதம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும்.

ஓ மன்னா, முற்காலத்தில், கூர்மையான குசப்புல்லால் தனது கையை அறுத்துக் கொண்ட மங்கணகரின் கைக்காயத்தில் இருந்து (இரத்தத்திற்குப் பதிலாக) காய்கறிச்சாறு {அல்லது கீரைச்சாறு} சுரந்தது என்று கேள்விப்படுகிறோம். அப்படி தனது கரத்தின் காயத்தில் இருந்து காய்கறிச்சாறு வழிவதைக் கண்ட அந்த முனிவர் கண்களை அகல விரித்து ஆச்சரியமடைந்து கூத்தாடினார். அப்படி அந்த முனிவர் ஆடிய போது அவரோடு சேர்ந்து அசையாத மற்றும் அசையும் உயிரனங்களும் அவரது பராக்கிரமத்தால் ஆடத்தொடங்கின. ஓ மன்னா, பிறகு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும் மங்கணகரின் செயலால் அசைந்து அக்காரியத்தை மகாதேவனிடம் சொல்லினர். அவர்கள், "ஓ தெய்வமே, அந்த முனிவர் {மங்கணகர்} ஆடாதவாறு நீர் செயல்படுவதே உமக்குத் தகும்" என்றனர்.

அப்படிச் சொல்லப்பட்ட மகாதேவன் {சிவன்}, இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன், ஆடிக்கொண்டிருந்த முனிவரை அணுகி, தேவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, "ஓ பெரும் முனிவரே, ஓ அறம் சார்ந்தவரே, நீர் ஏன் ஆடிக் கொண்டிருக்கிறீர்? ஓ முனிவர்களில் காளையே, உமது இந்த மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?" என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர், "ஓ அந்தணர்களில் சிறந்தவரே {சிவனே}, நான் அறத்தின் வழி நடக்கும் ஒரு துறவி. ஓ அந்தணரே, எனது கைக்காயத்தில் இருந்து வழிந்தோடும் காய்கறிச் சாறை நீர் காணவில்லையா? இக்காட்சியைக் கண்ட மகிழ்ச்சியாலேயே நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்" என்றார். உணர்வுகளில் குருடாகிப் போன அந்த முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தெய்வம் {சிவன்}, சிரித்துக் கொண்டே, "ஓ அந்தணரே, இதனால் நான் ஆச்சரியம் அடையவில்லை. என்னைப் பாரும்" என்றான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, ஓ பாவமற்ற மன்னா {பீஷ்மா}, இதைச்சொன்ன மகாதேவன் {சிவன்}. தனது கட்டைவிரலை, தனது விரலின் நுனியாலேயே அழுத்தினான். அதனால் உண்டான காயத்தில் இருந்து பனியைப் போன்ற சாம்பல் வெளிவந்தது. ஓ மன்னா {பீஷ்மா}, இதைக் கண்ட முனிவர் வெட்கி அந்தத் தெய்வத்தின் {சிவனின்} பாதத்தில் விழுந்தார். ருத்திர தெய்வத்தைவிட பெரிதான சிறந்த எதுவும் இல்லை என்று நினைத்த அவர் இந்த வார்த்தைகளால் வழிபடத்தொடங்கினார்.

அவர், "ஓ திரிசூலத்தைத் தாங்குபவனே, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் புகலிடமாக இருப்பவனே, நீயே அண்டத்துக்கும் புகலிடமாக இருக்கிறாய். அசைவன அசையாதன ஆகியவற்றைக் கொண்ட மூன்று உலகங்களையும் நீயே படைத்தாய். யுகத்தின் முடிவில் நீயே அனைத்தையும் விழுங்குகிறாய். தேவர்களாலேயே உன்னை அறிய முடியாத போது, என்னால் எப்படி உன்னை அறிய முடியும்? ஓ பாவமற்றவனே, பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும் உன்னிலேயே அடக்கம். உலகங்களை ஆக்குபவனும் ஆக்கும்படி செய்பவனும் நீயே. உனது கருணையாலே அனைத்து தேவர்களும் கவலையற்று, பயமற்று இருக்கின்றனர்." என்று மகாதேவனை வழிபட்ட அந்த முனிவர் மேலும், "ஓ தேவர்களுக்குத் தேவா, உனது கருணையை எனக்கு அருள் செய். எனது தவம் சுருங்காமல் இருக்கட்டும்" என்றும் கேட்டார். பிறகு உற்சாக ஆன்மா கொண்ட அந்தத் தெய்வம் அந்த மறுபிறப்பாளரான {பிராமணரான} முனிவரிடம் {மங்கணகரிடம்}, "ஓ அந்தணா, உனது தவம் எனது அருளால் ஆயிரம் மடங்கு உயரட்டும். ஓ பெரும் முனிவா, நான் உன்னுடன் இந்த ஆசிரமத்தில் வசித்திருப்பேன். சப்தசாரஸ்வதத்தில் நீராடி என்னை வழிபடும் எவரும், அதுமுதல் அனைத்தையும் அடையும் சக்தி பெறுவர். மேலும் அவர்கள் கடைசியாக சாரஸ்வத உலகத்தைச் சந்தேகமற அடைவர்." என்று சொன்ன அந்த மகாதேவன் {சிவன்}, அங்கேயே அப்படியே மறைந்து போனான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்