Sunday, February 09, 2014

லோமசர் வருகை - வனபர்வம் பகுதி 91

Arrival of Lomasa! | Vana Parva - Section 91| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனிடம் லோமசர் வருகை; இந்திரலோகத்தில் அர்ஜுனன் பெற்ற ஆயுதங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு லோமசர் சொல்லுதல்; யுதிஷ்டிரனுக்கு இந்திரன் சொல்லியனுப்பிய செய்தியையும் சொல்லல்…

வைசம்பயானர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ குருகுலத்தின் மகனே {ஜனமேஜயா}, தௌமியர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கே அந்த இடத்துக்கு பெரும் சக்தி படைத்த லோமசர் வந்தார். பாண்டு மகன்களின் மூத்தவனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தேவலோகத்தில் சக்ரனைச் {இந்திரனைச்} சூழ்ந்த தேவர்களைப் போல தன்னைத் தொடர்பவர்களாலும், உயரிய நேர்மை கொண்ட அந்தணர்களாலும் சூழப்பட்டு இருந்தான். அவரை {லோமசரை} முறைப்படி வரவேற்ற நீதிமானான யுதிஷ்டிரன், அவரது வருகைக்கான காரணத்தையும், அவரது பயணத்தின் நோக்கத்தையும் குறித்து விசாரித்தான்.


இப்படி பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} கேட்கப்பட்ட அந்த சிறப்புமிக்க தவசி {லோமசர்}, மிகவும் திருப்தியடைந்து, பாண்டவர்களுக்கு மகிழ்வூட்டும்படி இனிமையான மொழியில், "ஓ கௌந்தேயா {குந்தியின் மகனே}, நான் எனது விருப்பத்தின்படி அனைத்துப் பகுதிகளுக்கும் பயணித்துக் கொண்டிருந்தபோது,  சக்ரனின் {இந்திரனின்} வசிப்பிடத்திற்கு {இந்திரலோகத்திற்குச்} சென்று, அங்கே அந்தத் தேவர்கள் தலைவனைக் கண்டேன். இடது கையாலும் வில்லைப் பயன்படுத்தும் உனது வீரமிகுந்த தம்பி {அர்ஜுனன்}, சக்ரனின் பாதி ஆசனத்தில் அவனுடன் அமர்ந்திருப்பதை அங்கே கண்டேன். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த ஆசனத்தில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கண்ட நான் வியந்தேன். தேவர்களின் தலைவன் {இந்திரன்} என்னிடம், "பாண்டுவின் மகன்களிடம் செல்லும்" என்று சொன்னான்.

இந்திரனின் வேண்டுதலாலும், பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகனின் {அர்ஜுனனின்} வேண்டுதலாலும், உன்னையும், உனது தம்பிகளையும் காண, நான் இங்கே விரைவாக வந்தேன். ஓ குழந்தாய், உன்னைத் திருப்தியடையச் செய்யும் காரியத்தை உரைக்கப்போகிறேன். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ மன்னா, அதை கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்},  உன்னுடன் இருக்கும் முனிவர்களுடனும் கேள். ஓ பாரத குலத்தின் காளையே, ஒப்பிலா ஆயுதத்தை அடைய உன்னால் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, ருத்திரனிடம் {சிவனிடம்} அதை அடைந்தான். அமுதத்துக்குப் பின்பு எழுந்த பிரம்மசிரம் என்று அழைக்கப்படும் அந்தக் கடும் ஆயுதத்தை ருத்திரன் கடும் தவப்பயன்களால் அடைந்தான். அந்த ஆயுதத்தை, அதை விடுக்கும் மற்றும் திரும்பப்பெறும் மந்திரங்களுடன் அர்ஜுனன் பெற்றுக் கொண்டான்.

யுதிஷ்டிரா, அளவிடமுடியாத சக்தி கொண்ட அர்ஜுனன், வஜ்ரங்களையும், தண்டங்களையும், மற்ற தெய்வீக ஆயுதங்களையும், யமன், குபேரன், வருணன் மற்றும் இந்திரனிடம் இருந்தும் அடைந்தான். ஓ குரு குலத்தின் மகனே! அவன் குரல் மற்றும் கருவி இசையையும், நடனத்தையும், சாமத்தை {சாம வேதத்தை} முறைப்படி உரைத்தலையும் விஸ்வவசுவின் மகனிடம் முழுவதுமாகக் கற்றிருக்கிறான். இப்படி ஆயுதங்களையும் அடைந்து, கந்தர்வ வேதத்தில் நிபுணத்துவம் அடைந்த உனது மூன்றாவது தம்பியான பீபத்சு {பீபத்சு} (சொர்க்கத்தில்) மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். ஓ யுதிஷ்டிரா, நான் இப்போது தேவர்களில் முதன்மையானவன் {இந்திரன்} அனுப்பிய செய்தியை உனக்குச் சொல்கிறேன் கேள்.

``அவன் {இந்திரன்} என்னிடம், "நீர் நிச்சயம் மனிதர்களின் உலகுக்குச் செல்வீர் என்பதில் சந்தேகமில்லை. ஓ அந்தணர்களில் சிறந்தவரே {லோமசரே}, எனது இந்த வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம் சொல்லக்கடவீர். உனது தம்பியான அர்ஜுனன் ஆயுதங்களை அடைந்து, தேவர்களுகளால் செய்ய முடியாத பெரும் சாதனைகளை அவர்களுக்காகச் செய்து விரைவில் உன்னிடம் திரும்புவான். அதே வேளையில், நீ உனது சகோதரர்களுடன் சேர்ந்து உன்னைத் தவச்சாதனைகளுக்கு அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தவத்தை விட மேன்மையானது எதுவும் கிடையாது. தவப்பயன்களாலேயே ஒரு மனிதன் பெரும் பயன்களை அடைகிறான்.

ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, ஆற்றல், வலிமை மற்றும் பராக்கிரமத்தில் பெரும் தீவிரம் கொண்ட கர்ணன் கலங்கடிக்கப்பட முடியாதவன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவன் கடும் போரில் நிபுணத்துவம் வாய்ந்தவன் என்றும், அவன் போர்க்களத்தில் எதிரிகளற்றவன் என்றும், அவன் பெரும் வில்லாளி என்றும், அவன் கடுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தும் செயல்திறம் மிக்க ஒரு வீரன் என்றும் சிறந்த கவசத்தால் பாதுகாக்கப்பட்டவன் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆதித்தியனின் அந்த மேன்மைமிக்க மகன் {கர்ணன்} மகேஸ்வரனின் மகனுக்கு {முருகனுக்கு} நிகரானவன் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். அகன்ற தோள்கள் கொண்ட அர்ஜுனனின் உயர்ந்த இயற்கையான பராக்கிரமத்தைக் குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும்.

போரில், கர்ணன் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {அர்ஜுனனுக்கு} பதினாறில் ஒரு பாகம் கூட நிகரானவன் கிடையாது. ஓ எதிரிகளை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, சவ்யசாசின் {அர்ஜுனன்} சொர்க்கத்தில் இருந்து கிளம்பியதும், நான் உனது இதயத்தில் இருக்கும் கர்ணன் குறித்த பயத்தைப் போக்குகிறேன். ஓ வீரனே, உனது காரியத்தைப் பொறுத்தவரை தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தை உடனே துவங்குவது குறித்து லோமசப் பெருமுனிவர் சந்தேகமற உன்னிடம் பேசுவார். அந்த மறுபிறப்பாளரான முனிவர், தவத்தின் பயன்களைக் குறித்தும், தீர்த்தங்களைக் குறித்தும் உரைக்கும்போது, அதை நீ மதிப்புடன் பெற்றுக் கொள்" என்று கட்டளையிட்டான் {இந்திரன்}" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்