Saturday, February 08, 2014

வடக்கு திசையின் புண்ணிய இடங்கள்!! - வனபர்வம் பகுதி 90

Sacred spots of the Northern quarter! | Vana Parva - Section 90| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வடக்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.

தௌமியர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இனி நான் வடக்கே இருக்கும் தீர்த்தங்களையும், புனிதமான இடங்களையும் விவரிக்கிறேன். ஓ மேன்மையானவனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். ஓ வீரனே, இந்த உரையைக் கேட்பவன் பயபக்தியுடைய மனதை அடைகிறான். அது ஒருவனுக்கு நன்மைக்கான வழிகோலுகிறது. அந்தப் பகுதியில்தான் எளியவர்களும் அடையக்கூடிய கரைகள் கொண்டதும், தீர்த்தங்கள் நிறைந்ததுமான, பெரும்புனிதம் வாய்ந்த சரஸ்வதி நதி இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே, அங்குதான் பெரும் பலன்களையும், செழிப்பையும் கொடுப்பவையான, கடலை நோக்கி கட்டுக்கடுங்காமல் பாயும் யமுனையும், பிலாக்ஷவதரணம் என்ற தீர்த்தமும் இருக்கின்றன.


சாரஸ்வத வேள்வியைச் செய்யும் மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} வேள்வியின் முடிவில் அங்குதான் நீராடுவார்கள். ஓ பாவங்களற்றவனே, அங்கே நன்கு அறியப்பட்டு, பெரும் பலன்களைக் கொடுக்கும் தெய்வீக தீர்த்தமான அக்னிசிரஸ் இருக்கிறது. மன்னன் சகாதேவன் {ஸ்ரீஞ்சயனின் மகன்}, அங்கே ஒரு சாம்யத்தை {அளவு கோல்} வீசி எறிந்து, அந்தச் சாம்யம் எவ்வளவு தூரம் சென்றதோ, அவ்வளவு தூரமுள்ள இடத்தில் {சாம்யாக்ஷேபம் எனும்} வேள்வியைச் செய்தான். ஓ யுதிஷ்டிரா, இதனால்தான் இந்திரன் சகாதேவனைப் புகழும் வரிகளைப் பாடினான். "யமுனையில் சகாதேவன், அந்தணர்களுக்கு நூறாயிரம் பரிசுகளுடன் வேள்வி நெருப்பை வணங்கினான்" என்ற அந்த வரிகளை இன்னும் இந்த உலகில் மறுபிறப்பாளர்களால் {அந்தணர்களால்} உரைக்கப்படுகிறது.

அங்கேதான், சிறப்பிமிக்க மன்னனான ஏகாதிபத்தியம் கொண்ட பரதன், முப்பத்தைந்து {நூற்று நாற்பத்தெட்டு என்றும் சொல்லப்படுகிறது} குதிரை வேள்விகளைச் செய்தான். ஓ குழந்தாய், பழங்காலத்தின் சரபங்கர் மறுபிறப்பாளர்களின் {அந்தணர்களின்} முழு விருப்பங்களையும் அங்கேதான் ஈடேற்றுவார். அங்கேதான் பெரும் பலனைத் தரக்கூடிய கொண்டாடப்படும் அவரது ஆசிரமம் இருக்கிறது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ பெரும் மன்னா, பழங்காலத்தில் வாலகில்யர்கள் வேள்வி நடத்திய அந்தப் பகுதியில் தான் தேவர்களால் வழிபடப்படும் சரஸ்வதி நதி ஓடுகிறது. ஓ யுதிஷ்டிரா, அந்தப் பகுதியில் தான் பெரும் பலனைக் கொடுக்கவல்ல திருஷ்டத்வதி நதி ஓடுகிறது.

ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, நியக்கிரோதர், பாஞ்சால்யர், தால்பியகோஷர், தால்பியர் ஆகியோரின் புனிதமான ஆசிரமங்கள் அங்கே இருக்கின்றன. அற்புதமான நோன்புகள் நோற்று, பெரும் சக்தியுடன் மூவுலகங்களாலும் கொண்டாடப்படும் சிறப்பு மிக்க ஆனந்தயசசின் ஆசிரமமும் அங்கே இருக்கிறது. ஓ மனிதர்களின் தலைவா, வேத அறிவில் சொல்லப்பட்டுள்ளவர்களும், வேதங்களையும், வேதச்சடங்குகளையும் அறிந்த சிறப்புமிக்க ஏதாவர்ணம் {நிறமுள்ள}, அவவர்ணம் {நிறமற்ற} என்போர் பலன்கொடுக்கும் வேள்விகளை அங்கே செய்துள்ளனர். ஓ பாரதக் குலத்தின் தலைவா, பழங்காலத்தில் வருணன், இந்திரன் ஆகியோருடன் கூடிய தேவர்கள் தவச்சடங்குகளைப் பயின்ற விசாகயூபம் அங்கேதான் இருக்கிறது. ஆகையால் அந்த இடம் மேம்பட்ட வகையில் புனிதமானதாகும்.

பெரிதும் அருளப்பட்ட ஜமதக்னி பெருமுனிவர் வேள்விகளைச் செய்த பலாசகம் அங்கேதான் இருக்கிறது. முக்கியமான ஆறுகள் அனைத்தும், தங்கள் தங்கள் சுய உருவை எடுத்து முனிவர்கள் சூழ அங்கே இருக்கின்றனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவரின் {ஜமதக்னியின்} துவக்கத்தைக் கண்ட விபவசு {அக்னி தேவன்}, "சிறப்புமிக்க ஜமதக்னி தேவர்களுக்காக வேள்வி செய்து கொண்டிருக்கும்போது அவரிடம் வந்த ஆறு, அந்தணர்களுக்குத் தேனைத் தானமாகக் கொடுத்து திருப்தி செய்தது" என்ற சுலோகத்தைப் பாடினான். ஓ யுதிஷ்டிரா, கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அடிக்கடி வந்து போகும் இடமும், வேடர்கள் மற்றும் கின்னரர்களின் வசிப்பிடமுமான மலைகளில் முதன்மையான அந்த மலையைப் பிளந்து விரைந்து செல்லும் கங்கை அம்மலையை வெட்டும் இடமே கங்காத்துவாரம் என்றழைக்கப்படுகிறது.

ஓ மன்னா, பிரம்ம முனிவர்கள் அடிக்கடி வந்து செல்லும் அந்த இடத்தை, கனகலத்தைப் போன்ற புனிதமான தீர்த்தமென்று சனத்குமாரர் சொல்கிறார். அங்கே பெரும் முனிவர்கள் வந்து செல்லும் இடமும் புரூரவர்கள் பிறந்த இடமும், பிருகு தவம் பயின்ற இடமும்மான புரு என்ற மலை இருக்கிறது. ஒ மன்னா, அதன் காரணமாகவே அந்தப் பெரும் சிகரம் பிருகுதுங்கம் என்று அழைக்கப்படுகிறது. அந்தச் சிகரத்திற்கு அருகிலேயே புனிதமானதும் அகன்றதும், மூன்று உலகங்களிலும் புகழப்பட்டதுமான பதரி என்ற ஆசிரமம் இருக்கிறது. ஓ பரதக் குலத்தின் காளையே, நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் ஆகிய அனைத்துமான நாராயணன் என்று அழைக்கப்படும், நித்தியமானவனும், ஆண்மக்களில் சிறந்தவனும், அனைத்துச் சிறப்புகளும் கொண்டவனுமான தலைவன் விஷ்ணுவின் ஆசிரமமே பதரி. அந்தப் பதரிக்கு அருகே பாயும் கங்கையின் குளிர்ந்த ஊற்று முன்பொரு காலத்தில் வெப்பமாக இருந்தது. அதன் கரைகள் அனைத்தும் தங்க மண்ணால் விரிக்கப்பட்டிருந்தது. அங்கே மிகுந்த பிரகாசமிக்கத் தேவர்களும், பெரும் நற்பேறு பெற்ற முனிவர்களும் தெய்வீகமான தலைவன் நாராயணனை அணுகி எப்போதும் வழிபட்டு வருகிறார்கள்.

தீர்த்தங்கள், புனிதமான இடங்கள் ஆகிய அனைத்தையும் கொண்ட முழு அண்டமும், தலைமை ஆன்மாவான தெய்வீகமான நித்தியமான நாராயணனிடமே வசிக்கின்றன. அவனே தலைமையான பிரம்மா, அவனே தீர்த்தம், அவனே தவப்பயன், அவனே முதன்மையானவன், அவனே தேவர்களில் முதன்மையானவன். மேலும் அவனே அனைத்து உயிர்களின் பெரும் தலைவனும் ஆவான். அவன் நித்தியமானவன், பெரும் படைப்பாளி அவனே, அவனே அருளின் உயர்ந்த நிலை. சாத்திரங்கள் அறிந்த கற்றவர்கள் அவனை அறிவதாலேயே பெரும் மகிழ்ச்சியை அடைகின்றனர். அந்தப் பகுதியில் தெய்வீக முனிவர்களும், சித்தர்களும், அனைத்து முனிவர்களும், பெரும் யோகி மற்றும் ஆதி தெய்வமுமான மதுவைக் கொன்றவனுடன் {மதுசூதனனான கிருஷ்ணனுடன்} அங்கேயே வசிக்கின்றனர். அந்தப் பகுதியே அனைத்து புனிதமான இடங்களிலும் முதன்மையானது என்பதில் உனது இதயம் சந்தேகம் கொள்ளாது இருக்கட்டும்.

ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவையே நான் உரைத்தபடி பூமியிலுள்ள புனிதமான இடங்களும் தீர்த்தங்களும் ஆகும். ஓ மனிதர்களில் சிறந்தவா, வசுக்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், மருதர்கள், அசுவினிகள் மற்றும் தேவர்களைப் போன்ற சிறப்பு மிக்க முனிவர்கள் ஆகியோர் இவை அனைத்துக்கும் {முன்பு சொன்ன அனைத்து தீர்த்தங்களுக்கும் புனிதமான இடங்களுக்கும்} அடிக்கடி பயணிக்கின்றனர். குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அந்தணர்கள் மற்றும் தவசிகளுடன் மற்றும் உனது அருள் நிறைந்த தம்பிகளுடனும் அங்கெல்லாம் பயணிக்கப்போகும் நீ துயரத்திலிருந்து விடுபடுவாய்!" என்றார் {தௌமியர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்