Sunday, February 16, 2014

லோபாமுத்திரையை உருவாக்கிய அகஸ்தியர்! - வனபர்வம் பகுதி 96

Agastya created Lopamudra! | Vana Parva - Section 96| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

இல்வலன், வாதாபி அறிமுகம்; அகஸ்தியர் தனது மூதாதையர்கள் குழிக்குள் தொங்குவதைக் காண்பது; அகஸ்தியர் லோபாமுத்திரையை உருவாக்கி விதரப்ப்ப மன்னனுக்குக் கொடுப்பது; லோபாமுத்திரை விதரப்ப்ப அரச பரம்பரையில் பிறப்பது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இதன் பிறகு, அந்தணர்களுக்குப் பெரும் பரிசுகளைக் கொடுத்து எப்போதும் தனித்துத் தெரியும் குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, அகஸ்தியரின் ஆசிரமத்தை அடைந்து, துர்ஜயத்தில் {வாதாபியின் மணிமதி நகரம்} வசித்தான். இங்கேதான், பேசுபவர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், லோமசரிடம், அகஸ்தியர் வாதாபியை ஏன் கொன்றார் என்று கேட்டான். மேலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களை அழிக்கும் தைத்திய {வாதாபி} பராக்கிரமத்தையும், அந்த அசுரன் {வாதாபி} மீது அகஸ்தியருக்கு ஏற்பட்ட கோபத்தின் காரணத்தையும் கேட்டான்.

இப்படிக் கேட்கப்பட்ட லோமசர், "ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் மணிமதி என்று ஒரு நகரம் இருந்தது. அந்நகரத்தில் இல்வலன் என்ற ஒரு தைத்தியன் {அசுரன்} இருந்தான். அவனுக்கு வாதாபி என்ற ஒரு தம்பி இருந்தான். ஒரு நாள் அந்தத் திதியின் மகன் {இல்வலன்}, தவப்பலன் மிக்க ஓர் அந்தணனிடம் "ஓ புனிதமானவரே, எனக்கு இந்திரனுக்கு நிகரான மகனை அருளும்" என்று கேட்டான். இருப்பினும், அந்த அந்தணன் அவ்வசுரனுக்கு இந்திரனைப் போன்ற மகனை அருளவில்லை. இதனால் அவ்வசுரன் அந்தணன் மீது பெரும் கோபம் கொண்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்நாளில் இருந்து, அசுரன் இல்வலன் அந்தணர்களை அழிப்பவனானான். மாயச்சக்தி கொண்ட கோபம் நிறைந்த அவ்வசுரன் {இல்வலன்}, தனது தம்பியை செம்மறி ஆட்டுக்கடாவாக மாற்றினான். நினைத்த உரு அடையக்கூடிய வாதாபியும் உடனடியாக ஆட்டுக்கடாவின் உருவத்தை அடைந்தான். சரியாகச் சுத்தம் செய்யப்பட்ட அந்த ஆட்டின் இறைச்சி அந்தணர்களுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது. அதை உண்ட பிறகு அவர்கள் கொல்லப்பட்டனர். இல்வலன், தனது குரலால் யாரொருவனைக் கட்டளையிட்டு அழைத்தாலும், அவன் யமனின் வசிப்பிடத்தில் இருந்தாலும், மீண்டும் உயிருடன் கூடிய தனது உடலை அடைந்து இல்வலனிடம் வந்து விடுவான்.

இப்படிச் செம்மறி ஆட்டுக்கடாவாக அசுரன் வாதாபியை மாற்றி, அவனது இறைச்சியை முறைப்படி சமைத்து, அந்தணர்களுக்கு ஊட்டிய பிறகு, அவன் வாதாபியை கட்டளையிட்டு அழைப்பான் {இல்வலன்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பூமியின் தலைவா, அந்தணர்களின் எதிரியான பெரிய உருவமும், பெரும் பலமும், மாயச்சக்தியும் கொண்ட அசுரன் வாதாபி, இல்வனின் உரத்தக் குரலைக் கேட்டு, {தனது இறைச்சியை உண்ட} அந்த அந்தணனின் விலாவைக் கிழித்துத் திறந்து சிரித்துக் கொண்டே வெளியே வருவான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இப்படியாக அந்தத் தீய இதயம் கொண்ட தைத்தியன் இல்வலன், அந்தணர்களுக்கு உணவு படைத்து, தொடர்ச்சியாக அவர்களது உயிரை எடுத்து வந்தான்.

அதேவேளையில், சிறப்புமிக்க அகஸ்தியர், இறந்து போன தனது மூதாதையர்கள், தலைகீழாக ஒரு குழிக்குள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருந்தவர்களிடம் அவர், "உங்களது காரியம் என்ன?" என்று கேட்டார். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மனை உச்சரிப்பவர்கள் {மூதாதையர்கள்}, "வாரிசுக்காக" என்றனர். மேலும் அவர்கள், "நாங்கள் உனது மூதாதையர்கள். வாரிசுக்காகவே நாங்கள் இப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம். ஓ! அகஸ்தியா, நீ எங்களுக்காக ஒரு நல்ல மகனைப் பெற்றால், நாங்கள் இந்த நரகத்தில் இருந்து காக்கப்படுவோம். நீயும் அந்த வாரிசினால் உனது உன்னத நிலையை அடையலாம்" என்றர்.

பெரும் சக்தியும், உண்மையும், அறநெறியும் கொண்ட அகஸ்தியர், "பித்ருக்களே, நான் உங்கள் விருப்பதை நிறைவேற்றுவேன். இந்தத் துயரம் உங்களை விட்டு அகலட்டும்" என்றார். பிறகு அந்தச் சிறப்புமிக்க முனிவர் {அகஸ்தியர்} தனது குலத்தைத் தழைக்க வைப்பது குறித்துச் சிந்தித்தார். ஆனால் தானே தனது மகனாகப் பிறக்க, தனக்குத் தகுதியான மனைவியை அவர் காணவில்லை. ஆகையால் அந்த முனிவர் {அகஸ்தியர்}, ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கும் மிக அழகான அங்கங்களை எடுத்து ஓர் அற்புதமான பெண்ணைப் படைத்தார். பிறகு அந்த முனிவர், வாரிசுக்காகத் தவநோன்புகளில் இருந்த விதரப்ப்ப நாட்டு மன்னனிடம் தனக்காகப் படைத்த அந்தப் பெண்ணைக் கொடுத்தார்.

(இப்படிக் கொடுக்கப்பட்ட) இனிமையான முகம் கொண்ட அந்த அருளப்பட்ட மங்கை (விதரப்ப்ப அரச பரம்பரையில்) தனது பிறப்பை அடைந்தாள். மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் அவளது அங்கங்கள் நாளுக்கு நாள் வளர்ந்தன. ஓ பூமியின் தலைவா, விதரப்ப்பத்தின் ஆட்சியாளனான அந்தப் பூமியின் தலைவனின் வாழ்வில் அவள் நுழைந்தவுடன், அவன் {விதரப்ப்ப அரசன்} இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் அந்தணர்களுக்குச் சொல்லி அனுப்பினான். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தணர்களும் அந்த அருளப்பட்ட பெண்ணுக்கு லோபாமுத்திரை (லோபத்தை அளிப்பவள் = அனைத்து உயிரினங்களின் அழகைக் கவர்பவள்} என்ற பெயரை அளித்தனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீருக்கு மத்தியில் இருக்கும் தாமரை போல அல்லது நெருப்பில் இருக்கும் சுடரைப் போல அவள் பெரும் அழகுடன் விரைவாக வளர்ந்தாள்.

அந்தப் பெண் {லோபமுத்திரை} வளர்ந்து, பருவமடைந்தவுடன், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு கன்னிகளும், நூறு பணிப்பெண்களும் அவளுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்யக் காத்திருந்தனர். அந்த நூறு பணிப்பெண்கள் மற்றும் கன்னியர்களால் சூழப்பட்ட அவள், பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் ரோகிணியைப் போலப் பிரகாசித்தாள். அவள் {லோபமுத்திரை} பருவம் அடைந்த பின்னரும், அவளது நன்னடத்தைகளையும், அற்புதமான குணங்களையும் கண்ட எவரும், அவளது தந்தையான விதரப்ப்ப மன்னனின் மீதிருந்த பயத்தால், அவளது கரத்தைக் கேட்கத் துணியவில்லை. உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த லோபாமுத்திரை, அழகில் அப்சரசுகளையும் விஞ்சி, தனது நடத்தையால், தன் தந்தையையும், தனது உறவினர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தாள். விதரப்ப்ப இளவரசியான தனது மகள் பருவமடைந்ததைக் கண்ட தந்தை {விதரப்ப்ப மன்னன்}, தனது மனதிற்குள், "இந்த எனது மகளை நான் யாருக்குக் கொடுக்க வேண்டும்?" என்று நினைத்தான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்