Thursday, August 14, 2014

பீமனின் கிண்டல் பேச்சு! - வனபர்வம் பகுதி 240

The sarcasm speech of Bhima!  | Vana Parva - Section 240  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கர்ணன் முறியடிக்கப்பட்ட பிறகு, கௌரவப் படைச் சிதறுவது; துரியோதனன் மட்டும் தனித்துப் போரிடுவது; கந்தர்வர்களால் வீழ்ப்பட்ட துரியோதனன் சிறைபடுவது; தப்பிய கௌரவப் படையினர் பாண்டவர்களிடம் வந்து முறையிடுவது; பீமனின் கிண்டல் பேச்சு...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தப் பெரும் போர்வீரனான கர்ணன் கந்தர்வர்களால் முறியடிக்கப்பட்ட பிறகு, மொத்த குரு படையும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} கண் எதிரிலேயே களத்தைவிட்டு ஓடியது. தனது துருப்புகள் அனைத்தும், எதிரிக்குத் தங்கள் முதுகைக் காட்டியபடி ஓடிய பிறகும், மன்னன் துரியோதனன் ஓட மறுத்தான். தன்னை நோக்கி வரும் பெரும் கந்தர்வப்படையைக் கண்டதும், அந்த எதிரிகளை ஒடுக்கபவன் {துரியோதனன்}, அவர்கள் மீது, அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். எனினும், அந்தக் கணை மழையைப் பொருட்படுத்தாத கந்தர்வர்கள், அவனைக் {துரியோதனனைக்} கொல்ல விரும்பி அவனது தேரைச் சூழ்ந்து கொண்டனர். தங்கள் கணைகளின் மூலம், அவனது தேரின் நுகத்தையும், ஏர் காலையும், காப்பான்களையும், கொடிக்கம்பத்தையும், மூன்று அடுக்கு மூங்கில் கம்பத்தையும் {திரிவேணுவையும்}, அவனது தேரின் முக்கியக் கோபுரத்தையும் தூள் தூளாக வெட்டி வீழ்த்தினர். பிறகு அவர்கள் {கந்தர்வர்கள்} அவனின் {துரியோதனனின்} தேரோட்டியையும், குதிரைகளையும் வெட்டிக் கொன்றார்கள்.

துரியோதனன் தேரை இழந்து பூமியில் விழுந்த போது, வலுத்த கரம் கொண்ட சித்திரசேனன், அவனை நோக்கி விரைந்து வந்து, அவனது உயிரையே பறிப்போது போல அவனைப் பற்றினான். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்} பிடிபட்ட பிறகு, தனது தேரில் அமர்ந்திருந்த துச்சாசனனைச் சூழ்ந்து கொண்ட கந்தர்வர்கள், அவனைத் தங்கள் கைதியாக்கினர். சில கந்தர்வர்கள் விவிம்சதி மற்றும் சித்திரசேனனையும் சிலர் விந்தன் மற்றும் அனுவிந்தனையும், மேலும் சிலர் அரசகுடும்பத்தின் மகளிரையும் பற்றினர். கந்தர்வர்களால் முறியடிக்கப்பட்ட துரியோதனனின் படைவீரர்கள், முன்பே {களத்தைவிட்டு} ஓடியவர்களுடன் சேர்ந்து கொண்டு, (அங்கே அருகினில் இருந்த) பாண்டவர்களை அணுகினர். துரியோதனன் பிடிபட்ட பிறகு, வாகனங்களும், கடைகளும், அரங்குகளும், வண்டிகளும், வண்டியிழுக்கும் விலங்குகளுமான அனைத்தும் பாண்டவர்களிடம் பாதுகாப்பு நாடி சென்றன. அந்த வீரர்கள் {துரியோதனன் படை வீரர்கள்}, "பெரும் பலமும், அழகிய முகமும், வலுத்த கரமும் கொண்ட திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை}, கந்தர்வர்கள் சிறைபிடித்துச் செல்கிறார்கள்! பிருதையின் {குந்தியின்} மகன்களே, அவர்களைப் பின் தொடருங்கள்! துச்சாசனன், துர்விஷஹன், துன்முகன், துர்ஜயன் ஆகியோருடன், அரச குடும்பத்தின் மகளிர் அனைவரும் சேர்ந்து சிறைபிடிக்கப்பட்டுச் சங்கிலிகளால் கட்டப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள்" என்றனர்.

இப்படிக் கதறிய துரியோதனனின் தொண்டர்கள், வருத்தமும் மனச்சோர்வும் கொண்டு மன்னனின் {துரியோதனனின்} விடுதலையை விரும்பி யுதிஷ்டிரனை அணுகினர். வருத்தமும் மனச்சோர்வும் அப்படி வேண்டிக் கொண்டிருந்த துரியோதனனின் வயதுமுதிர்ந்த பணியாட்களிடம் பீமன், "உண்மையில், களத்தில் எங்களை வரிசைப்படுத்திக் கொண்டு, குதிரைகளாலும், யானைகளாலும் உதவப்பட்டுப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு நாங்கள் செய்ய வேண்டியதே கந்தர்வர்களால் செய்யப்பட்டுள்ளது! வேறு காரியத்திற்காக இங்கு வந்த அவர்கள், தாங்கள் எதிர்பாராத விளைவுகளால் வீழ்ந்தார்கள். உண்மையில், வஞ்சக விளையாட்டில் விருப்பம் கொண்ட மன்னனின் {துரியோதனனின்} தீய ஆலோசனைகளின் விளைவே இது!

சக்தியற்ற ஒரு மனிதனுக்கு எதிராக இருப்பவன், மற்றவர்களால் வீழ்த்தப்படுவான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தக் கந்தர்வர்கள் இயல்புக்குமிக்க வழியில் இந்தப் பொன்மொழியின் உண்மைத் தன்மையை நம் கண்களுக்கு முன்னால் நிரூபித்துக் காட்டியுள்ளனர். நாங்கள் சோம்பி அமர்ந்திருந்தாலும், உண்மையில், எங்கள் சுமையைத் தங்கள் தோள்களில் ஏற்றுக் கொண்டு, எங்களுக்கு நன்மையைச் செய்ய விரும்பும் மனிதர்கள், அதிர்ஷ்டவசமாக இன்னும் கூட இருக்கிறார்கள் என்று காணப்படுகிறது. அந்தப் பாதகன் {துரியோதனன்}, தான் செழிப்புடன் இருப்பதையும், காற்றையும், குளிரையும், வெப்பத்தையும் பொறுத்துக் கொண்டு, தவத்தினால் உடல் இளைத்துத் தீக்காலத்தில் இருக்கும் எங்களையும் பார்க்க விரும்பியே இங்கு வந்திருக்கிறான். பாவம் நிறைந்தவனும், பாதகனுமான அந்தக் கௌரவனின் {துரியோதனனின்} நடையைப் பின்பற்றுபவர்களே, இந்த அவனது அவமானத்தைக் காண்கிறார்கள்! துரியோதனனிடம் இதைச் செய்யச் சொன்னவன் {தூண்டியவன்} எவனோ, அவன் நிச்சயமாகப் பாவம் நிறைந்த செயலைச் செய்திருக்கிறான். குந்தியின் மகன்கள் தீயவர்களும் பாவிகளும் அல்லர் என்பதை உங்கள் அனைவரின் முன்னால் சொல்லிக் கொள்கிறேன்" என்றான் {பீமன்}.

குந்தியின் மகனான பீமன் இப்படிக் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தபோது, மன்னன் யுதிஷ்டிரன் அவனிடம் {பீமனிடம்}, "கொடுஞ்சொற்களுக்கு இது நேரமில்லை" என்றான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்