Sunday, August 17, 2014

அர்ஜுனன் ஏற்ற உறுதி! - வனபர்வம் பகுதி 241

The pledge taken by Arjuna!  | Vana Parva - Section 241  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

துரியோதனனை மீட்பதே குடும்ப மதிப்பை உயர்த்தும், பாண்டவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் என்று யுதிஷ்டிரன் பீமனிடம் சொன்னது; அர்ஜுனன் துரியோதனனை மீட்க உறுதியேற்றது...

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "ஓ! குழந்தாய் {பீமா}, அவல நிலையில் இருக்கும் குருக்கள், அச்சத்துடன் நமது பாதுகாப்பை நாடி வந்திருக்கும்போது, நீ ஏன் இப்படிப்பட்ட மொழியைப் பேசுகிறாய். ஓ! விருகோதரா {பீமா}, ஒற்றுமையின்மையும், சச்சரவுகளும் இரத்த உறவுகளுக்கு மத்தியில் நடக்கத்தான் செய்கின்றன. இது போன்ற பகைமைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், அதன் காரணமாகக் குடும்ப மதிப்புப் பாதிப்படையக்கூடாது. எந்த அந்நியனாவது நமது குடும்ப மதிப்பைக் கெடுக்கும் வகையில் செயல்படும்போது, அந்நியனிடம் நேரும் இந்த அவமதிப்பை நல்லவர்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். நாம் சில காலமாக இங்கேதான் தங்கியிருக்கிறோம் என்பதைக் கந்தர்வர்களின் தீய மன்னன் {சித்திரசேனன்} அறிவான். எனினும் நம்மை எண்ணிப் பாராமல், நமக்கு ஏற்பில்லாத இக்காரியத்தை அவன் செய்திருக்கிறான்.




ஓ! மேன்மையானவனே {பீமா}, துரியோதனனை வலுக்கட்டாயமாகச் சிறைபிடித்திருப்பது, நமது குடும்பப் பெண்களை அவமதித்திருப்பது ஆகியவற்றை ஓர் அந்நியன் செய்ததால் நமது குடும்ப மதிப்பு அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மனிதர்களில் புலிகளே {தம்பிகளே}, எழுந்திருங்கள். தாமதமின்றி ஆயுதமேந்தி நமது பாதுகாப்பை நாடியிருப்பவர்களை மீட்டு, நமது குடும்ப மதிப்பைக் காப்பாற்றுங்கள். மனிதர்களில் புலியே {பீமா}, வெல்லப்பட முடியாத வீரமிக்க அர்ஜுனனும், இரட்டையர்களும் {நகுல, சகாதேவர்களும்}, நீயும் சென்று சிறைபிடிக்கப்பட்டிருக்கும் துரியோதனனை விடுவியுங்கள். போர்வீரர்களில் முதன்மையானவர்களே {தம்பிகளே}, தங்கக் கொடிகளுடன் கூடிய இந்தச் சுடர்மிகும் தேர்களும், திருதராஷ்டிரன் மகன்களுக்குச் சொந்தமான அனைத்துவிதமாக ஆயுதங்களும் ஏற்கனவே இங்குத் தயாராக இருக்கின்றன. இந்திரசேனனையும், பிற தேரோட்டிகளையும் அவற்றை வழிநடத்தச் செய்து, ஆழ்ந்த சடசடப்போசை கொண்ட அந்த ரதங்களில் செல்லுங்கள். அவற்றில் {அந்தத் தேர்களில்} பயணித்து, கந்தர்வர்களோடு போரிட்டு, துரியோதனனை மீட்க ஊக்கமுடன் முயற்சி செய்யுங்கள்.

(இங்கு இருப்பவர்களுக்கு மத்தியில் உள்ள) சாதாரண க்ஷத்திரியன் கூட, தனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, தன்னை அடைக்கலமாக நாடி வந்தவனைக் காப்பான். அப்படியிருக்கையில், ஓ! விருகோதரா {பீமா}, உன்னைக் குறித்து நான் என்ன சொல்வேன்? "ஓ!, எனது உதவிக்கு விரைந்து வாருங்கள்" என்று துணைக்கு அழைக்கும் வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கைகள் கூப்பித் தஞ்சமடைவதைக் கண்ட பிறகும், உயர் ஆன்மா படைத்த எவன்தான் அந்த எதிரிக்குத் துணையாகச் செல்ல மாட்டான்? வரம் பெறுதல், ஆட்சி அடைதல், மகனின் பிறப்பு ஆகியவை மகிழ்ச்சியின் பெரும் ஊற்றக்கண்கள் ஆகும். ஆனால், பாண்டுவின் மகன்களே {தம்பிகளே}, துயரத்தில் இருக்கும் எதிரியை விடுவிப்பது, ஒன்று சேர்ந்த இவை மூன்றையும் பெறுவதற்குச் சமமாகும். துயரத்தில் மூழ்கியிருக்கும் துரியோதனன், நமது கரங்களின் பலத்தால், தனது உயிரைப் பெறக் {காத்துக்கொள்ளக்} கோரும்போது, அதைவிட மகிழ்ச்சியின் பெரிய ஊற்றுக்கண் உங்களுக்கு வேறு என்ன இருக்கிறது?

ஓ! விருகோதரா {பீமா}, இப்போது நான் ஈடுபட்டிருக்கும் நோன்பு முடிந்துவிட்டால், நானே அவனது உதவிக்கு ஓடுவேன் என்பதில் சிறிதும் சந்தேகம் கொள்ளாதே. ஓ! பாரதா {பீமா}, துரியோதனனை விடுவிக்கச் சமரசக் கலைகள் அனைத்தையும் முயன்று பார். எனினும், அந்தச் சமரசக் கலைகளின் மூலம் கந்தர்வர்களின் மன்னனைச் சமாளிக்க முடியவில்லையென்றால், எதிரியிடம் சிறு பூசல் செய்தாவது சுயோதனனை {துரியோதனனை} மீட்க நீ முயற்சிக்க வேண்டும். ஆனால், அதன் பிறகும் கந்தர்வர்களின் தலைவன் {சித்திரசேனன்} குருக்களை விடவில்லையென்றால், அனைத்து வகைகளிலும் எதிரியை நசுக்கி அவர்கள் {குருக்கள்} மீட்கப்பட வேண்டும். ஓ! விருகோதரா {பீமா}, எனது நோன்பு ஆரம்பித்து இன்னும் முடியாத நிலையில், இதைத்தான் என்னால் உனக்குச் சொல்ல முடியும்" என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூத்தவரின் {அண்ணனின்} கட்டளைகளை மதித்து, தானே {அந்த} உறுதியேற்றுக் கொண்டான். அர்ஜுனன், "அமைதியின் மூலம், கந்தர்வர்கள் திருதராஷ்டிரர்களை {கௌரவர்களை} விடுவிக்கவில்லையெனில், இன்று இந்தப் பூமி கந்தர்வ மன்னனின் இரத்தத்தைக் குடிப்பாள்!" என்றான். உண்மை பேசும் அர்ஜுனன் ஏற்ற இந்த உறுதியைக் கேட்ட கௌரவர்களுக்கு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, (தொலைந்து போன} தங்கள் மனம் மீண்டு வந்தது போல இருந்தது.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்