Saturday, August 23, 2014

பாண்டவர்களுக்கு ஈடா கர்ணன்? - வனபர்வம் பகுதி 251

"Karna,  is not a fourth part of the Pandavas" said Bhishma!  | Vana Parva - Section 251 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வனம் சென்றதற்காகப் பீஷ்மர் துரியோதனனைக் கடிந்து கொண்டது; கர்ணன் துரியோதனனிடம் பீஷ்மரைப் பழித்துப் பேசியது; 'நான்கு பாண்டவர்கள் சேர்ந்து வென்ற பூமியை நான் ஒருவனாகவே வெல்வேன்' என்று சூளுரைக்கும் கர்ணன், துரியோதனனிடம் அனுமதி பெற்றுக் கிளம்புவது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகன்கள் கானகத்தில் வாழ்ந்த போது, மனிதர்களில் முதன்மையானவர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான திருதராஷ்டிரனின் மகன்கள் என்ன செய்தார்கள்? சூரியனின் வாரிசான கர்ணனும், பலமிக்கச் சகுனியும், பீஷ்மரும், துரோணரும், கிருபரும் என்ன செய்தார்கள்? இவையனைத்தையும் எனக்கு நீர் சொல்வதே தகும்"


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, இப்படிச் சுயோதனனை {துரியோதனனை} விட்டுப் பாண்டவர்கள் சென்ற பிறகு, பாண்டுவின் மகன்களால் விடுதலை பெற்று அவன் ஹஸ்தினாபுரம் வந்த போது, அந்தத் திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, பீஷ்மர், "ஓ! குழந்தாய் {துரியோதனா}, அந்த ஆசிரமத்திற்குப் பயணிக்கும் உங்கள் நோக்கம் எனக்குத் திருப்தியைத் தரவில்லை என்பதை நான் உனக்கு முன்பே சொன்னேன். ஆனால் நீ அதைச் செய்தாய். அதன் தொடர்ச்சியாக, ஓ! வீரா, நீ எதிரியால் பலவந்தமாகச் சிறைப்பிடிக்கப்பட்டாய். அறநெறிகளை அறிந்த பாண்டவர்களால் விடுவிக்கப்பட்டாய். இருப்பினும் நீ வெட்கப்படவில்லை. ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, உனது முன்னிலையிலேயே, ஓ!மன்னா {துரியோதனா}, உன் படைகளுடன் கூடிய சூதனின் மகன் {கர்ணன்} பீதியடைந்து, கந்தர்வர்களுடனான போரில் இருந்து தப்பி ஓடினான்.



ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஓ! ஏகாதிபதியின் மகனே {துரியோதனா}, நீ உனது படையுடன் சேர்ந்து துயரத்தோடு அழுதுகொண்டிருந்த போது, உயர் ஆன்ம பாண்டவர்களின் பராக்கிரமத்தையும், ஓ! பலமிக்கக் கரங்கள் கொண்டவனே {துரியோதனா}, சூதனின் தீய மகனான கர்ணனின் பராக்கிரமத்தையும் சாட்சியாகக் கண்டாய். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, ஆயுத அறிவியலிலோ, வீரத்திலோ, அறநெறிகளிலோ, ஓ! அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனே {துரியோதனா}, கர்ணன், பாண்டவர்களின் நாலில் ஒரு பங்குக்கு ஈடாக மாட்டான். எனவே, இந்தக் குலத்தின் நன்மையைக் கருதி, நான் நினைப்பது என்னவென்றால், உயர் ஆன்ம பாண்டவர்களுடன் அமைதியைத் தீர்மானிப்பதே விரும்பத்தக்கது என்பதாகும்" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டதும், திருதராஷ்டிரன் மகனான மன்னன் {துரியோதனன்}, உரக்கச் சிரித்தான். பிறகு திடீரெனச் சுபலனின் மகனுடன் {சகுனியுடன்} {அந்த இடத்தைவிட்டு} வெளியேறினான். அவன் சென்று விட்டான் என்பதை அறிந்த வலிமைமிக்க வில்லாளிகளான கர்ணனையும், துச்சாசனனையும் தலைமையாகக் கொண்டவர்கள் அந்த உயர்ந்த பலமிக்கத் திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தொடர்ந்து சென்றனர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டதைக் கண்ட குருக்களின் பாட்டனான பீஷ்மர், அவமானத்தால் தலையைத் தொங்கப் போட்டபடி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் மாளிகைக்குச் சென்றார். ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பீஷ்மர் சென்றவுடன், மனிதர்களின் தலைவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனான்}, மீண்டும் அங்கே வந்து, தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்}, "எது எனக்கு நன்மையைத் தரும்? இன்னும் செய்யப்பட வேண்டியது என்ன? நன்மையை வெளிக்கொணர சிறந்த முறையில் எவ்வாறு செயல்படலாம் என்பதை இன்று விவாதிப்போம்" என்று கலந்தாலோசித்தான்.

கர்ணன், "ஓ! குருவின் மகனே துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உனது இதயத்தில் நன்றாகப் பதிந்து வைத்துக் கொள். பீஷ்மர் எப்போதும் நம்மைப் பழித்து, பாண்டவர்களைப் புகழ்கிறார். உன்னிடம் அவர் பகரும் பகைமையால், என்னையும் அவர் வெறுக்கிறார். ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, உனது முன்னிலையில் அவர் என்னை எப்போதும் நிந்திக்கிறார். ஓ! பாரதா {துரியோதனா}, பாண்டவர்களைப் புகழ்ந்து, உன்னை நிந்திக்கும் இந்த விஷயத்தில் பீஷ்மரின் இவ்வார்த்தைகளை என்னால் எப்போதும் பொறுக்க முடியாது. ஓ! பகைவர்களை ஒடுக்குபவனே, ஓ! மன்னா {துரியோதனா}, பணியாட்கள், படைகள் மற்றும் ரதங்களோடு எனக்கு அனுமதி அளி. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, நான் மலைகள், காடுகள், வனங்களுடன் கூடிய இந்த உலகை வெல்வேன். நான்கு பலமிக்கப் பாண்டவர்களால் இந்தப் பூமி வெல்லப்பட்டுள்ளது. சந்தேகமற நான், உனக்காகத் தனியொருவனாக அதை {பூமியை} வெல்வேன். நிந்திக்கத்தகாதவர்களை இகழ்பவரும், புகழத்தகாதவர்களைப் புகழ்பவரும் குருகுலத்தில் இழிந்தவரும், அதீத தீய மனம் கொண்டவருமான பீஷ்மர் அதைக் காணட்டும். இந்நாளில் அவர் எனது பலத்தைக் கண்டு, தன்னையே பழித்துக் கொள்ளட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, எனக்கு உத்தரவு கொடு. வெற்றி நிச்சயம் உனதாகும். ஓ! ஏகாதிபதி, எனது ஆயுதங்களின் மேல் நான் உனக்கு உறுதி கூறுகிறேன்" என்றான் கர்ணன்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட, அந்த மனிதர்களின் தலைவன் {துரியோதனன்}, உயர்ந்த மகிழ்ச்சியை அடைந்து, கர்ணனிடம், "நான் அருளப்பட்டவனாவேன். பெரும் பலம் நிறைந்த நீ, எனது நலனில் எப்போதும் அக்கறை கொள்வதால், நான் உன்னால் ஆதரிக்கப்பட்டவனானேன். இன்று எனது வாழ்வு கனி கொடுத்திருக்கிறது. ஓ! வீரா, நமது எதிரிகளை அனைவரையும் நீ வீழ்த்த நினைத்திருப்பதால், நீ செல். உனக்கு நன்மையே விளையட்டும்! (நான் என்ன செய்ய வேண்டும் என்று) நீ எனக்குக் கட்டளையிடு" என்றான். ஓ! பகைவர்களை வீழ்த்துபவனே {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் புத்திசாலி மகனால் இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், தனது திசைப்பயணத்திற்கு {திக்விஜயத்திற்குத்} தேவையான அனைத்து இன்றியமையாத பொருட்களையும் கேட்டுப் பெற்றான். ஒரு மங்களகரமான சந்திர நாளில், ஒரு மங்களகரமான நேரத்தில், மங்களகரமான தெய்வத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட நட்சத்திரம் நடந்த போது, அந்த வலிமைமிக்க வில்லாளி, இருபிறப்பாளர்களால் {பிராமணர்களால்} உரிய முறையில் வணங்கப்பட்டு, மங்களகரமான புனிதமான பொருட்களைப் பயன்படுத்திக் குளித்து, வார்த்தைகளால் வணங்கப்பட்டு, அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய மூவுலகங்களுக்கும் தனது தேரின் சடசடப்பொலி கேட்கும்படி கிளம்பிச் சென்றான்."

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்