Thursday, October 30, 2014

தலை முடிந்தாள் திரௌபதி! - விராட பர்வம் பகுதி 9

Draupadi bonded her knotted braid! | Virata Parva - Section 9 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 9)

அப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண





பதிவின் சுருக்கம் : தலைமுடிந்து, கருப்புநிற ஒற்றையாடை உடுத்திய திரௌபதியை, மாடியில் இருந்து சுதேஷ்ணை பார்ப்பது. திரௌபதியை யார் என்று சுதேஷ்ணை விசாரிப்பது; திரௌபதி என்ன காரியத்திற்காக வந்திருக்கிறாள் என்று சொல்வது; திரௌபதி அனைவரையும் ஈர்ப்பாள் என்று கருதி சுதேஷ்ணை பயந்தது; பின்பு தனது இல்லத்திலேயே பணி அமர்த்திக் கொண்டது...

ரவிவர்மாவின் படத்தில் கூட
திரௌபதி தலை முடியவில்லை
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கருமையான விழிகளும், இனிய புன்னகையும் கொண்ட திரௌபதி, கருமையான, மென்மையான, மெல்லிய, நீளமான, மெலிந்தமுனைகளுடைய, குற்றமற்ற தனது கூந்தலை, முடிச்சுகள் கொண்ட பின்னலாக்கித் தனது வலது தோளில் தூக்கிவீசி, துணியால் அதை {கூந்தலை} மறைத்தாள் [1]. பிறகு, விலையுயர்ந்ததாக இருந்தாலும் அழுக்காக இருந்த கருப்பு நிற ஒற்றையாடையை அவள் {திரௌபதி} உடுத்தினாள். சைரந்தரியைப் போல உடுத்திக் கொண்ட அவள், துன்பத்திலிருப்பவள் போல அங்கும் இங்கும் நடந்தாள். அப்படி அவள் {திரௌபதி} உலவுவதைக் கண்ட ஆண்களும் பெண்களும், அவளிடம் {திரௌபதியிடம்} விரைந்து வந்து, “நீ யார்? என்ன தேடுகிறாய்?” என்று கேட்டனர்.

இங்கு ஒரு குறிப்பு வருகிறது:
[1] திரௌபதி கூந்தலை முடியமாட்டேன் என்று சபதம் செய்திருந்தாள் என்றொரு கதை உண்டு. அது இந்த வரிகளினால் அடிபட்டுப் போகிறது. அப்படி அவள் சபதம் மேற்கொள்ளவில்லை என்பதையே கங்குலியின் {வங்க, பம்பாய் மூல பதிப்புகளைத் தழுவிய} மொழிபெயர்ப்பு நிறுவுகிறது என்று கொள்ளலாம்.


அதற்கு அவள் {திரௌபதி}, “நான் ஒரு மன்னனின் சைரந்திரி, என்னைப் பராமரிப்பவர் யாராக இருப்பினும், நான் அவர்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்" என்றாள். ஆனால், அவளின் {திரௌபதியின்} அழகையும், ஆடையையும் கண்டவர்களாலும், அவளது இனிய பேச்சைக் கேட்ட மக்களாலும் பிழைப்புக்காக வந்த ஒரு பணிப்பெண்ணாக அவளை {திரௌபதியை} ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படி இருக்கையில், கேகய மன்னனின் மகளும், விராடனின் அன்புக்குரிய ராணியுமானவள் {சுதேஷ்ணை}, உப்பரிகையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாகத் திரௌபதியைக் காணும்படி நேரந்தது.

கதியற்றவளும், ஒற்றையாடையில் இருந்தவளுமான அவளை {திரௌபதியைக்} கண்ட ராணி {சுதேஷ்ணை}, அவளிடம், “ஓ! அழகானவளே, நீ யார்? நீ என்ன தேடுறாய்?” என்று கேட்டாள். அதற்குத் திரௌபதி {ராணி சுதேஷ்ணையிடம்}, “ஓ! அரசிகளில் முதன்மையானவளே, நான் ஒரு சைரந்திரி. என்னைப் பராமரிப்பவர்கள் யாருக்கும் நான் சேவை செய்வேன்" என்றாள்.

பிறகு சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “இவ்வளவு அழகுடன் இருக்கும் நீ சொல்வது (உனது தொழிலைப் பொறுத்தவரை) இணக்கமாக இல்லை. (மறுபுறம்) ஆண் மற்றும் பெண் பணியாட்களுக்கு நீ தலைவியாய் இருக்கலாம். உனது குதிங்கால்கள் பிரதானமாக இல்லை {மென்மையானவையாக இருக்கின்றன}. உனது தொடைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கின்றன. உனது புத்திக்கூர்மை பெரிதாக இருக்கிறது, உனது நாபி {தொப்புள்} ஆழமாக இருக்கிறது. உன்னிடம் வார்த்தைகள் மனப்பூர்வமாக வருகின்றன. உனது பெரும் கால்விரல்களும், மார்புகளும், இடைகளும், பின்புறமும், பக்கவாட்டுப் பகுதிகளும், கால்விரல் நகங்களும், உள்ளங்கைகளும் நன்கு வளர்ந்திருக்கின்றன. உனது உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மற்றும் முகம் ஆகியன சிவந்து உள்ளன. உன் பேச்சு அன்னத்தைப் போன்ற இனிய குரலில் இருக்கிறது. உனது கேசம் அழகாக இருக்கிறது. உனது மார்புகள் வடிவத்துடன் இருக்கின்றன. நிறைந்த அருளை நீ பெற்றிருக்கிறாய். உனது இடைகளும் மார்புகளும் பருத்திருக்கின்றன.

காஷ்மீரத்து {Kasmerean} பெண் குதிரையைப் போல அனைத்து நற்குறிகளையும் நீ பெற்றிருக்கிறாய். உனது கண் இமைகள் அழகாக இருக்கின்றன. உனது கீழுதடு சிவந்த நிலம் போல இருக்கிறது. உனது இடை மெலிந்திருக்கிறது. உனது கழுத்தில் சங்கு போன்ற கோடுகள் உள்ளன. உனது நரம்புகள் அரிதாகவே தெரிகின்றன. உண்மையில், உனது முகம் முழு நிலவைப் போன்று இருக்கிறது. உனது கண்கள் இலையுதிர் காலத்து தாமரை இதழ்கள் போல இருக்கின்றன. உனது உடல் அந்தத் தாமரையின் நறுமணத்தையே கொண்டிருக்கிறது. அழகில், இலையுதிர் காலத் தாமரையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீயைப் {மகாலட்சுமியைப்} போல அப்படியே நீ இருக்கிறாய். ஓ! அழகான காரிகையே, நீ யார் என்பதை எனக்குச் சொல். நீ பணிப்பெண்ணாக இருக்கவே முடியாது. நீ யக்ஷியா? தேவியா? {தேவதையா?}, கந்தர்வியா?, அப்சரசா? நீ தேவனின் மகளா? அல்லது நீ நாகப் பெண்மணியா? ஏதாவதொரு நகரத்தின் காவல் தேவதையா? ஒரு வித்யாதரியா? அல்லது கின்னரியா? அல்லது ரோகிணியா? அல்லது ஆலம்புசையா? அல்லது மிச்ரகேசியா? புண்டரீகையா? மாலினியா? இந்திரன் அல்லது வருணனின் ராணியா? அல்லது நீ விஸ்வகர்மனின் மனைவியா? அல்லது படைப்புத்தலைவனின் {பிரம்மனின்} மனைவியா {சரஸ்வதியா}? ஓ! அருளப்பட்டவளே, தேவலோகத்தில் புகழ்பேற்ற இந்தத் தேவியரில் நீ யார்?” என்று கேட்டாள் {விராடன் மன்னனின் மனைவி ராணி சுதேஷ்ணை}.

அதற்குத் திரௌபதி {ராணி சுதேஷ்ணையிடம்}, “ஓ! மங்களகரமான பெண்ணே, நான் தேவியோ, கந்தர்வியோ, யக்ஷியோ, ராட்சசியோ அல்ல. நான் சைரந்திரி வர்க்கத்தைச் சார்ந்த ஒரு பணிப்பெண்ணே. நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் (மணமிக்கப் பொருட்களால்) களிம்புகளும் {#} சிகை அலங்காரமும் செய்வேன். ஓ! அழகான பெண்ணே, மல்லிகைகள், தாமரைகள், நீல அல்லிகள் {கருநெய்தல்}, செண்பக மலர்களைக் கொண்டு அழகான பலவண்ண மாலைகளைச் செய்வேன். கிருஷ்ணனுக்குப் பிடித்தமான ராணியான சத்யபாமாவுக்கும், குருகுலத்தில் அழகில் முதன்மையானவளும், பாண்டவர்களின் மனைவியுமான திரௌபதிக்கும் நான் முன்பு பணி செய்திருக்கிறேன். நல்ல உணவையும், உடையையும் ஈட்டிக் கொண்டு நான் தனியாக உலவி வருகிறேன்; இவை கிடைக்கும்வரை அந்த இடத்திலேயே தொடர்ந்து வாழ்வேன். திரௌபதி என்னை மாலினி (மாலைகள் செய்பவள்) என்று அழைப்பாள்" என்றாள்.

இதைக் கேட்ட சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “மன்னரே {விராடரே} உன்னிடம் முழு இதயத்துடன் ஈர்க்கப்படுவார், என்ற சந்தேகம் எனது மனதில் வராதிருந்தால், நான் உன்னை எனது தலையிலேயே வைத்துக் கொண்டிருப்பேன். உன்னால் ஈர்க்கப்பட்டு, எனது அரசகுடும்பத்தின் பெண்மணிகளும், எனது பணிப்பெண்களும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர், எந்த ஆண்மகனால்தான் உன் மீது ஏற்படும் ஈர்ப்பைத் தடுக்க முடியும்? ஓ! அழகிய இடைகள் கொண்டவளே, ஓ! அழகிய குணங்கள் கொண்ட காரிகையே, மனிதப்பெண்ணுக்கு அப்பாற்பட்ட அழகுடைய உனது வடிவத்தைக் கண்டால், மன்னர் விராடர் நிச்சயம் என்னைக் கைவிட்டுவிட்டு, முழு இதயத்துடன் உன்னை நோக்கித் திரும்பிவிடுவார்.

ஓ! குறையற்ற அங்கங்கள் கொண்டவளே, ஓ! துரிதப் பார்வைகளை வீசும் பெரிய கண்களைக் கொண்டவளே, ஆசையுடன் நீ யாரையாவது பார்த்தால், அவன் நிச்சயம் பாதிக்கப்படுவான். ஓ! இனிய புன்னகைகள் கொண்டவளே, ஓ! குற்றமற்ற வடிவம் கொண்டவளே, உன்னைத் தொடர்ந்து பார்ப்பவன், நிச்சயம் நெருப்பைத் தொட்டவனாவான். ஓ! இனிய புன்னகை கொண்டவளே, தனது சொந்த அழிவிற்காகக் கருத்தரிக்கும் நண்டைப் போலவும், தனது சொந்த அழிவை நிர்ணயித்து மரம் ஏறுபவனைப் போலவும், உனக்குத் தஞ்சமளித்தால் நானே எனக்கான அழிவைக் கொண்டு வந்ததாக ஆகிவிடும்" என்றாள் {ராணி சுதேஷ்ணை}.

அதற்குத் திரௌபதி {ராணி சுதேஷ்ணையிடம்}, “ஓ! அழகான பெண்மணியே, கந்தர்வ மன்னனின் மகன்களான ஐந்து இளம் கந்தர்வர்கள் எனக்குக் கணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னை எப்போதும் பாதுகாப்பதால், விராடரோ, அல்லது எந்தப் பிற மனிதரோ என்னை அடைய முடியாது. யாராலும் எனக்குத் தீங்கிழைக்க முடியாது. மற்றொருவர் ஏற்கனவே தொட்ட உணவைக் கொடுக்காதவர்கள் மற்றும் தங்கள் பாதங்களை, என்னைக் கழுவச் சொல்லாதவர்கள் ஆகியோருக்கு மட்டுமே நான் பணி செய்ய வேண்டும் என்பது எனது கந்தர்வ கணவர்களின் விருப்பமாகும். ஏதோ பொது மனைவியைப் போல என்னை அடைய முயலும் மனிதன் அந்த இரவே மரணத்தைச் சந்திப்பான். ஓ! அழகான பெண்ணே {ராணி சுதேஷ்ணையே}, ஓ! இனிய புன்னகை கொண்டவளே, பெரும் சக்தியும், பெரும் பலமும் கொண்ட அந்த அன்புக்குரிய கந்தர்வர்களால் கமுக்கமாக {இரகசியமாக} எப்போதும் நான் பாதுகாக்கப்படுவதால், என்னை அடைவதில் யாரும் வெல்ல முடியாது" என்றாள் {திரௌபதி}.

சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “ஓ! இதயத்துக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருபவளே, நீ சொல்வது போல இருந்தால், நான் நிச்சயம் உன்னை எனது வீட்டில் வைத்துக் கொள்கிறேன். வேறு ஒருவர் தொட்ட உணவை நீ தொட வேண்டியதோ, வேறொருவர் பாதங்களைக் கழுவ வேண்டியதோ இல்லை" என்றாள்” {ராணி சுதேஷ்ணை}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விராடனின் மனைவியால் இப்படிச் சொல்லப்பட்டதும், ஓ! ஜனமேஜயா, தன் தலைவர்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்த கிருஷ்ணை (திரௌபதி) அந்நகரத்தில் வாழ ஆரம்பித்தாள். உண்மையில் அவள் யார் என்பதை யாராலும் உறுதிசெய்ய முடியவில்லை!”.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்