Thursday, January 22, 2015

பாண்டியனின் ஆதரவு! - உத்யோக பர்வம் பகுதி 19

The support of Pandya! | Udyoga Parva - Section 19 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 19)

பதிவின் சுருக்கம் : சாத்வத குல சாத்யகி, சேதி நாட்டு திருஷ்டகேது, மகத நாட்டு ஜெயத்சேனன்,  பாஞ்சால நாட்டின் துருபதன், மத்ஸ்ய நாட்டு விராடன் ஆகியோர் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணியுடனும், பாண்டிய மன்னன் பெரும்படையுடனும் என ஏழு அக்ஷௌஹிணி படைகள் பாண்டவர்களிடம் வந்தது; பிராக்ஜோதிஷ {காமரூப} நாட்டின் மன்னன் பகதத்தன், பால்ஹீக நாட்டுப் பூரிஸ்ரவஸ், மத்ர நாட்டு சல்லியன், அந்தகக் குலத்துக் கிருதவர்மன்,  சிந்து சௌவீர நாட்டின் ஜெயத்ரதன், காம்போஜத்தின் சுதக்ஷிணன், மாஹிஷ்மதீயின் மன்னன் நீலன், கேகய நாட்டு இளவரசர்கள் ஆகியோர் ஓர் அக்ஷௌணியோடும், அவந்தீ நாட்டின் அரசர்கள் இருவரும் இரண்டு அக்ஷௌஹிணிகளோடும் மற்றும் பிற மன்னர்கள் கொண்டு வந்த படைகள் எனப் பதினோரு அக்ஷௌஹிணி படைகள் கௌரவர்களிடம் வந்தது; படைகள் நிற்க இடமில்லாமல் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைகப்பட்டிருந்தது; துருபதனால் அனுப்பப்பட்ட புரோகிதர் கௌரவர்களின் படையைக் கண்டது......

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, சாத்வத குலத்தைச் சார்ந்த பெரும் வீரனான யுயுதனன் {சாத்யகி}, காலாட்படை, குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் படையுடன் யுதிஷ்டிரனிடம் வந்தான். பல்வேறு விதமான ஆயுதங்களைத் தாங்கி, பல்வேறு நிலங்களில் இருந்து வந்திருந்த பெரும் வீரம் கொண்ட அவனது {சாத்யகியின்} படையின் வீரர்கள், தங்கள் வீரக்களையால் பாண்டவப் படையை அழகுபடுத்தினர். சிறந்த நிலையில் உள்ள போர்க்கோடரிகள் {Battleaxes - பரசு}, ஏவுகணைகள் {Missiles - பிண்டிபாலங்கள்}, ஈட்டிகள் {Spears - சூலாயுதங்கள்}, வேல்கள் {lances - தோமரங்கள்}, சம்மட்டிகள் {mallets - இரும்பு உலக்கைகள்}, தண்டாயுதங்கள் {Clubs – பரிகங்கள்}, தடிகள் {Staves}, கயிறுகள் {cords – பாசங்கள்}, துருப்பிடிக்காத கைவாள்கள் {swords}, பட்டாகத்திகள் {daggers}, பல்வேறு வகையான கணைகள் {arrows} ஆகியவற்றின் காரணத்தால் அந்தப் படையைக் காண அற்புதமாக இருந்தது. அந்த ஆயுதங்களால் அழகுற்றதும், மேகம் போன்ற நிறத்தைப் பிரதிபலிப்பதுமான அந்தப் படை, மேகங்களின் பெருந்திரளுக்கு மத்தியில் இருக்கும் மின்னல் கீற்றுகளைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்றது. அந்தப் படையில் ஓர் அக்ஷௌஹிணி அளவு துருப்புகள் இருந்தன. பிறகு கடலுக்குள் நுழையும் சிறு நதியைப் போல, யுதிஷ்டிரனின் துருப்புகளுடன் அது {அந்தப்படை} கலந்த போது மொத்தமாக மறைந்தே போனது.


அதே போலச் சேதி நாட்டவரின் வலிமைமிக்கத் தலைவனான திருஷ்டகேது, ஓர் அக்ஷௌஹிணி படையின் துணையுடன், அளவிடமுடியாத சக்தி கொண்ட பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தான். மகத மன்னனான, பெரும்பலமிக்க ஜெயத்சேனன், யுதிஷ்டிரனுக்காகத் தன்னுடன் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளைக் கொண்டு வந்தான். அதே போல, கடல் அருகே கரையோர நிலத்தில் வசித்த பாண்டியன், மன்னர்களின் மன்னனான யுதிஷ்டிரனுக்காகப் பல்வேறு வகையான துருப்புகளுடன் வந்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, இந்தத் துருப்புகளெல்லாம் கூடிய போது, நன்கு உடுத்தி அதீத பலத்துடன் இருந்த அவனது {பாண்டியனின்} படை கண்ணுக்கு இனிய தோற்றத்தை அடைந்தது.

மேலும், துருபதனின் படையும், பல்வேறு நிலங்களில் {நாடுகளில்} இருந்து வந்திருந்த வீரர்களாலும், அவனது {துருபதனின்} மகன்களாலும் அழகு பெற்றிருந்தது. அதே போல, மத்ஸ்யர்கள் மன்னனும் துருப்புகளுக்குத் தலைவனுமான விராடனும், மலைப்பகுதிகளின் மன்னனுடன் சேர்ந்து பாண்டுவின் மகன்களிடம் வந்தான். உயர்ந்த ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன்களுக்காகப் பல்வேறு திசைகளில் இருந்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட பதாகைகள் நிறைந்த ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளும் இப்படியே அங்கே ஒன்று கூடின. குருக்களுடன் போரிட ஆவல் கொண்ட அவர்கள் பாண்டவர்களின் இதயங்களை மகிழ்வித்தனர்.

பாண்டவர்களிடம் ஏழு அக்ஷௌஹிணி படை சேர்ந்தது எனப் பார்க்கிறோம்.   1.சாத்யகி, 2. திருஷ்டகேது, 3.ஜெயத்சேனன்,  4.துருபதன், 5. விராடன் ஆகியோர் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணியுடன் வந்ததாக குறிப்பு இருக்கிறது. எனவே அவர்கள் மூலம் 5 அக்ஷௌஹிணி படை சேர்ந்து விட்டது. மீதம் இரண்டு அக்ஷௌஹிணியைப் பாண்டிய மன்னன் கொண்டு வந்தானா? அல்லது வேறு சில மன்னர்களின் சிறு படைகள் ஒன்றிணைந்து இரண்டு அக்ஷௌஹிணி சேர்ந்ததா? என்பதற்கு இப்பகுதியில் தெளிவில்லை.

இதே போலவே, மன்னன் பகதத்தனும், திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} இதயத்தை மகிழ்வுறச்செய்யும் வகையில் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளை அவனிடம் {துரியோதனனிடம்} கொடுத்தான். மேலும், குறையற்ற நிறை கொண்ட அவனது துருப்புகளில், சீனர்களும் {chins}, வேடர்களும் {kiratas} நிறைந்திருந்தனர். பொன்னிற உருவம் கொண்ட அவர்கள் அனைவரும் சேர்ந்த போது, அந்தப் படை, கோங்கு {Karnikara} மரங்கள் நிறைந்த காட்டின் அழகைப் பெற்றது. அதே போல, வீரமிக்கப் பூரிஸ்ரவஸ்ஸும், சல்லியனும், ஓ! குருவின் மகனே {ஜனமேஜயா}, ஆளுக்கொரு அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்தார்கள். மேலும், ஹிருதிகனின் {ஹார்த்திகயனின்} மகனான கிருதவர்மனும், போஜர்கள், அந்தகர்கள், குகுரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்தான். அவனது {கிருதவர்மனது} துருப்புகளில் பலவண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிந்தவர்களான பெரும் பலமிக்க வீரர்களைப் பார்ப்பதற்குக் காடுகளில் விளையாடும் அருள்நிறைந்த யானைகளைப் போல இருந்தது.

ஜெயத்ரதனால் வழிநடத்தப்பட்டு வந்த சிந்துசௌவீர நிலத்தில் வசிப்பவர்களும், பிறரும், தங்கள் நடையால் மலைகளையே நடுங்கச் செய்தபடி வந்து கொண்டிருந்தனர். ஓர் அக்ஷௌஹிணி எண்ணிக்கை கொண்ட அவர்களின் படை, காற்றால் தள்ளப்படும் மேகத்திரள் போல நகர்ந்து வந்தது. மேலும், காம்போஜர்களின் மன்னான சுதக்ஷிணன், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, யவனர்கள், சகர்கள் ஆகியோர் அடங்கிய ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் குரு தலைவனிடம் {துரியோதனனிடம்} வந்தான். வெட்டுக்கிளிகள் {[அ] மின்மினிப்பூச்சிகள்} பறப்பதைப் போலப் பறந்து வந்த அவனது {சுதக்ஷிணனின்} துருப்புகள், குரு படையைச் சந்தித்ததும், அதற்குள் உறிஞ்சப்பட்டுக் காணாமல் போனது.

அதே போல, மாஹிஷ்மதீ {Mahishmati} நகரில் குடியிருப்பவனான மன்னன் நீலனும், தென்னாட்டைச் சேர்ந்த, அழகிய ஆயுதங்களை ஏந்திய பெரும்பலமிக்க வீரர்களுடன் வந்தான். பெரும் படைகளோடு கூடிய அவந்தீ நாட்டு மன்னர்கள் இருவரும், தனித்தனியே ஆளுக்கோர் அக்ஷௌஹிணி துருப்புகளைத் துரியோதனனுக்காகக் கொண்டு வந்தார்கள். மனிதர்களில் புலிகளைப் போன்ற ஐந்து அரசச் சகோதரர்களான கேகய இளவரசர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் விரைந்து வந்து, அவனது இதயத்தை மகிழச் செய்தனர். ஓ! பாரதக் குலத்திற்சிறந்தவனே {ஜனமேஜயா}, பிற பகுதிகளைச் சேர்ந்த ஒப்பற்ற மன்னர்களும், மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்ட துருப்புகளுடன் அங்கே வந்தனர்.

1. பகதத்தன், 2. பூரிஸ்ரவஸ், 3. சல்லியன், 4. கிருதவர்மன்,  5. ஜெயத்ரதன், 6. சுதக்ஷிணன், 7. நீலன், 8. கேகய நாட்டு இளவரசர்கள் ஆகியோர் ஓர் அக்ஷௌணியோடும் வந்தார்கள் என்றால் அவர்கள் மூலமே 8 அக்ஷெஹிணி படை திரண்டு விட்டது. இதனுடன் அவந்தீ நாட்டின் அரசர்கள் இருவரும் கொண்டு வந்த 2 அக்ஷௌஹிணிகளைச் சேர்த்தால் 10 அக்ஷௌஹிணி படை சேர்ந்துவிட்டது. மீதம் ஒரு அக்ஷௌஹிணி குரு படை மற்றும் பிற மன்னர்களின் சிறு படைகள் இணைந்ததாக இருக்க வேண்டும். இங்கே கேகய இளவரசர்கள் துரியோதனன் பக்கம் இருந்ததாக குறிப்பு இருக்கிறது. உத்யோக பர்வம் பகுதி 22ல் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் இருந்ததாக திருதராஷ்டிரன் சொல்வதாக வருகிறது. கேகய இளவரசர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள் என்பதைப் பின்பு வரப்போகும் பகுதிகளில் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

பல்வேறு வடிவங்களிலான கொடிகள் சடசடக்கக் குந்தியின் மகன்களோடு {பாண்டவர்களோடு} போரிட விரும்பிய அனைவரும் அடங்கிய துரியோதனனின் படை, எண்ணிக்கையில் பதினோரு அக்ஷௌஹிணிகள் கொண்டதாகியது. ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அப்பொழுது, துரியோதனனுடைய படையின் முக்கியத் தலைவர்களுக்குக்கூட ஹஸ்தினாபுரம் நகரில் நிற்பதற்கு அங்கே இடமில்லாமல் இருந்தது. அதற்காக ஐந்து நதிகளைக் கொண்ட நிலத்திலும் {பஞ்சாபிலும்}, குருஜாங்கல நாடு முழுவதிலும், சீரான ரோஹிதம் என்கிற காட்டிலும், அஹிச்சத்ரம், காலகூடம், கங்கைக்கரை, வாரணம், வாடதானம், யமுனையை அடுத்த மலைத்தொடர்கள் ஆகியவற்றிலும் எனச் சோளமும், செல்வமும் அபரிமிதமாக இருந்த அனைத்து இடங்களிலும் கௌரவர்களின் படை நிரம்பியிருந்தது. பாஞ்சாலர்களின் மன்னனால் {துருபதனால்} குருக்களிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த புரோகிதர், இப்படி அணிவகுக்கப்பட்டிருந்த அந்தப் {கௌரவப்} படையைக் கண்டார்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்