Monday, April 04, 2016

மஹாபாரதம் - கால அட்டவணை - 3



மஹாபாரத நிகழ்வுகளின் தொடர்ச்சி…

36. கானக வாழ்வு: சர்வதாரி வருடம், ஆவணி மாதம் தேய்பிறையின் 8-ம் நாளில் பாண்டவர்களின் கானக வாழ்வு தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனின் வயது 76 வருடம் 10 மாதம் 18 நாட்களாகும். ராட்சசன் கிர்மீரன் அன்றிலிருந்து 3-ம் நாளில், அதாவது தேய்பிறை 10-ம் நாளில் கொல்லப்பட்டான். 12 வருட காட்டு வாழ்க்கை சார்வரி வருடம், ஆவணி மாதம் தேய்பிறையின் ஏழாம் நாளில் முடிவுற்றது.



37. 13-ம் ஆண்டுக் கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய காலம் பிலவ ஆண்டு ஆவணி மாதம் தேய்பிறையின் 7ம் நாளில் முடிவுற்றது.

38. கீசகன், பிலவ ஆண்டு ஆடி மாத தேய்பிறையின் 8ம் நாள் இரவில் கொல்லப்பட்டன். அவனது தம்பிகள் அடுத்த நாளான தேய்பிறையின் 9ம் நாளில் கொல்லப்பட்டனர்.

39. இவையனைத்தும் சந்திரமான வருடங்களென்பதால், ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 2 அதிக மாதங்கள் இருக்கும். 13 வருடங்களில் 5 அதிக மாதங்களும், 12 நாட்களும் இருந்திருக்கும். ஆனால் இவை அதிக மாதங்கள் எனச் சந்திரமான வருடங்களில் கலக்கப்பட்டிருந்தன. திதிவயங்கள் போன்றவற்றில் பீஷ்மரும், யுதிஷ்டிரனும் இந்தக் கணக்கீடே சரி என்று அதையே பின்பற்றினர், ஆனால் துரியோதனனோ அந்தக் காலங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத சூரியமான வருடங்களின்படி பாண்டவர்கள் கண்டறியப்பட்டதாக வலியுறுத்தினான்.

40. மறைந்திருக்க வேண்டிய காலம் முந்தைய நாளே முடிந்ததால், அர்ஜுனன் தன்னை வெளிக்காட்டிக் கொண்டான். பிரமோதூத ஆண்டு முதல் சார்வரி ஆண்டுவரை 30 ஆண்டுகளாக அர்ஜுனன் தன் வில்லான காண்டீவத்தைத் தாங்கி வந்தான். அர்ஜுனன் உத்தரனிடம் மேலும் 35 ஆண்டுகள் அவன் அதைத் தாங்கப்போவதாகச் சொன்னான். அடுத்த நாளான தேய்பிறையின் 9ம் நாளில் பாண்டவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 89 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களாகும்.

41. பாண்டவர்கள் {விராட தேசத்தில்} உபப்லாவ்யத்தில் 1வருடம் 2 மாதம் 17 நாட்களுக்குத் தங்கியிருந்தனர். இந்நாட்களில்தான் ஆலோசனைகளும், சுபகிருத ஆண்டு ஆனி மாதத்தில் உத்தரை அபிமன்யு திருமணமும், படைகளைத் திரட்டுவதும், துருபதன் புரோகிதர் மற்றும் சஞ்சயன் ஆகியோர் செய்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஐப்பசி {Aswyuja} மாதத்தில் தீமையையும், அழிவையும் முன்னறிவிக்கும் வகையில் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் நேர்ந்தன.

42. ஸ்ரீகிருஷ்ணனின் அமைதிக்கான பேச்சுவார்த்தை: சுபகிருது ஆண்டுக் கார்த்திகை மாதம் வளர்பிறை 2ம் நாளில், ரேவதி நட்சத்திரத்தில் புறப்பட்ட ஸ்ரீகிருஷ்ணன், 13ம் நாளில் ஹஸ்தினாபுரத்தை அடைந்து, அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தேய்பிறையின் 8ம் நாள் வரை நடத்தினான். கடைசி நாளில் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தினான். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அதே நாளில் பூசம் நட்சத்திரத்தில் தன் பயணத்தைத் தொடங்கி, கர்ணனிடம் 7 நாட்களில் அமாவாசை நாளில் கேட்டை நட்சத்திரத்தில் அனைவரும் பெரும்போருக்காகக் குருக்ஷேத்திரத்தில் கூட வேண்டும் என்று சொல்லி உபப்லாவ்யம் திரும்பினான் [1].

[1] இங்கே ஏதோ குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. கேட்டை நட்சத்திரம் பூரம் நட்சத்திரத்தில் இருந்த ஏழாவது நட்சத்திரமாக வரும். ஆனால் இங்கே தெளிவாகப் பூசம் Pushyami Star என்று கொடுக்கப்பட்டிருக்கிறது ஆங்கிலத்தில் வருவது இதுதான்: Shri Krishna started on Shubhakrit Kartik Bright 2nd Day, in Revati Star, reached Hastinapur on the 13th Day, and held peace talks upto Dark 8th Day. On his last day, His Vishwaroopa was shown. Since talks failed, he started on his return journey the same day in Pushyami Star, told Karna that in 7 days, on New Moon Day in Jyeshta Star, all should assemble at Kurukshetra for the Great War, and returned to Upaplavya.

43. எனவே, பாண்டவர்கள் உபப்லாவ்யத்தில் 1 வருடம் 2 மாதங்கள் 17 நாட்கள் + 15 நாட்கள் = 1 வருடம் 3 மாதங்கள் 2 நாட்கள் தங்கியிருந்தனர்.

44. பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு படையினரும் குருக்ஷேத்திரத்திற்குப் புது நிலவில் அமாவாசையில் சென்றனர். மார்கழி மாதம் வளர்பிறை இரண்டாம் நாளில் இருந்து 12ம் நாள் வரை படைகளின் பாசறை அமைப்பதும், போர் ஒத்திகைகளும் நடந்தன.

45. மகாபாரதப் பெரும்போர் சுபகிருத வருடம் மார்கழி மாதம் வளர்பிறை 13/14ம் நாள், செவ்வாய்க்கிழமை பரணி நட்சத்திரத்தில் தொடங்கியது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 91 வருடம், 2 மாதம் 9 நாட்களாகும். அதற்கு முந்தைய நாளில் அதாவது வளர்பிறை 11/12ம் நாளில் படைகள் வியூக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது அர்ஜுனன் மயங்கினான். அதன் காரணமாகக் கிருஷ்ணன் புகழ்பெற்ற பகவத்கீதை உரையாடலை அர்ஜுனனிடம் நிகழ்த்தினான்.

46. பீஷ்மரின் வீழ்ச்சி : மார்கழி தேய்பிறை 7ம் நாளில்

47. அபிமன்யுவின் மரணம்: அபிமன்யு மார்கழி மாதம் தேய்பிறை 10ம் நாளில் {போரில் சக்கரவியூகத்தில்} கொல்லப்பட்டான். அப்போது அவனுக்கு {அபிமன்யுக்கு} வயது 32 வருடங்களாகும் (பிரமோதூதம் முதல் சுபகிருது வரை). அவனது திருமணம் ஆனி மாதத்தில் நடந்ததால் 6 மாத காலமே அவன் திருமண வாழ்வை வாழ்ந்திருந்தான். அவன் இறக்கும்போது உத்தரை 6 மாத கர்ப்பிணியாக இருந்தாள்.




மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்