Tuesday, October 24, 2017

காட்டுக்குச் செல்லப்போகிறேன்! - சாந்திபர்வம் பகுதி – 07

I shall go to the woods! | Shanti-Parva-Section-07 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 07)


பதிவின் சுருக்கம் : உறவினர்களின் அழிவை எண்ணி மனம்வருந்திய யுதிஷ்டிரன்; தந்தையும், தாயும் என்ன நினைப்பில் துன்பப்பட்டுப் பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்பதைச் சொல்வது; அப்படிப்பட்ட பிள்ளைகளைக் கொன்றதால் அவர்களின் பெற்றோர் கைவிடப்பட்டு அவல நிலையை அடைந்ததைச் சொல்வது; இந்தப் பாங்களுக்குத் தானே காரணமென்பதால் காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அற ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன் கலங்கிய இதயத்துடன், சோகத்தில் எரிந்து, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்காகத் துயருறத் தொடங்கினான்.(1) மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்ட அவன், அர்ஜுனனிடம், "ஓ! அர்ஜுனா, நாம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்திருந்தாலும், நம் உறவினர்களை இழந்த இந்தப் பரிதாப நிலையை அடைந்திருக்கமாட்டோம்.(2,3) நம் எதிரிகளான குருக்கள் செழிப்பையீட்டியிருக்கும் அதே வேளையில் நாம் நம் வாழ்வின் பொருட்கள் அனைத்தையும் இழந்திருக்கிறோம். {நம்மை நாமே கொன்று} தற்கொலை செய்து கொண்ட குற்றம் நமதாயிருக்கும்போது அறத்தின் எக்கனிகள் நமதாயிருக்கக்கூடும்[1]?(4) இந்தப் பேரிடரில் நாம் மூழ்கியிருப்பதால், க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ, வலிமை மற்றும் வீரத்திற்கு ஐயோ.(5)


[1] "நம் எதிரிகளான குருக்கள் அனைவரும் போரில் வீழ்ந்து சொர்க்கத்திற்குச் சென்றுவிட்ட அதே வேளையில் நாம் நம் பங்காகத் துயரையே அடைந்திருக்கிறோம்" என்று இங்கே பொருள்படும் எனக் கங்குலி விளக்குகிறார்.

மன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, தூய்மை, காட்டில் வாழும் துறவியரால் நோற்கப்படும் துறவு, பணிவு, தீங்கிழையாமை, அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மைநிறைந்த பேச்சு ஆகியனவே அருளப்பட்டவையாகும் {அறங்களாகும்}.(6) எனினும் நாம், செருக்காலும், ஆணவத்தாலும் நிறைந்து, பேராசை மற்றும் மடமையின் மூலமும், அரசுரிமையின் இனிமைகளை அனுபவிக்கும் விருப்பத்தினாலும் இந்த அவலநிலையில் விழுந்துவிட்டும்.(7) உலகின் அரசுரிமையை அடைய விரும்பிய நம் உறவினர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டதை நாம் கண்டது, மூவுலகங்களின் அரசுரிமையைக் கொடுத்தாலும் எவனாலும் நம்மை மகிழ்விக்க முடியாது என்ற அளவுக்குத் துயரமானதாகும்.(8) ஐயோ, பூமியின் நிமித்தமாக, நம்மால் கொல்லத்தகாத பூமியின் தலைவர்களைக் கொன்று, நண்பர்களை இழந்து, வாழ்வின் நோக்கத்தை இழந்து இருப்பின் சுமையை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.(9) இறைச்சித்துண்டிற்காகச் சண்டையிடும் நாய்க்கூட்டத்துக்கு நேர்வது போன்று நம்மை இந்தப் பேரழிவு மூழ்கடித்தது. அந்த இறைச்சித் துண்டு இனியும் நமது விருப்பத்திற்குரியதல்ல. மறுபுறம், அதை வீசியெறிந்துவிடலாம்.(10)

மொத்த உலகத்திற்காகவோ, தங்கமலைகளுக்காகவோ, இந்த உலகத்தில் உள்ள குதிரைகள் மற்றும் பசுக்கள் அனைத்தின் நிமித்தமாகவோ கூட இப்போது கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடாது.(11) பொறாமையில் நிறைந்தவர்களும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பேராவல் கொண்டவர்களும், கோபம் மற்றும் இன்பத்திற்கு வசப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும், மரணமெனும் நெடுஞ்சாலையில் நடந்து, யமலோகத்தை அடைந்துவிட்டனர்.(12) தவம், பிரம்மச்சரியம், உண்மை, துறவு ஆகியவற்றைப் பயிலும் தந்தைமார், அனைத்து வகையான செழிப்புடன் கூடிய மகன்களை அடைய விரும்புகின்றனர்.(13) அதேபோலவே, உண்ணாநோன்புகள், வேள்விகள், விரதங்கள், புனிதச் சடங்குகள், மங்கல காரியங்கள் ஆகியவற்றின் மூலம் தாய்மாரும் கருத்தரிக்கின்றனர். பிறகு அவர்கள் அந்தக் கருவைப் பத்து மாதங்கள் சுமக்கின்றனர்.(14) கனியின் எதிர்பார்பார்ப்பில் பேரிடரில் தங்கள் காலத்தைக் கடத்தும் அவர்கள், தங்களுக்குள், "இந்தக் கருவை பாதுகாப்பாக ஈன்றெடுப்போமா? பிறப்புக்குப் பிறகு இவை வாழுமா? வலிமையில் வளர்ந்து இவர்கள் பூமியில் மரியாதைக்குரியவர்களாக இருப்பார்களா? இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் இவர்களால் நமக்கு இன்பத்தை அளிக்க முடியுமா?" என்று கேட்டுக் கொள்கின்றனர்.(15)

{அப்படிப்பட்ட அந்தப் பெற்றோர்}, ஐயோ, வயதால் இளைமை நிரம்பியவர்களும், காது குண்டலங்களுடன் பிரகாசமாக இருந்தவர்களுமான தங்கள் மகன்கள் கொல்லப்பட்டு, தங்கள் எதிர்பார்ப்புகள் கனியற்றுப் போன அவர்கள் {இப்போது} கைவிடப்பட்ட நிலையை அடைந்திருக்கின்றனர்.(16) இவ்வுலகத்தில் இன்பத்தை அனுபவிக்காமல், தங்கள் தந்தைமாருக்கும், தேவர்களுக்கும் தாங்கள் பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் அவர்கள் {அந்தப் பிள்ளைகள்} யமலோகம் சென்றுவிட்டனர்.(17) ஐயோ, ஓ! தாயே, அந்த மன்னர்களின் வலிமை மற்றும் செல்வத்தின் கனிகளை அறுவடை செய்ய அவர்களின் பெற்றோர் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்[2].(18) அவர்கள் எப்போதும் பொறாமை நிறைந்தவர்களாகவும், உலகப் பொருட்களில் பேராவல் கொண்டவர்களாகவும், கோபம் மற்றும் இன்பத்தின் வசப்பட்டவர்களாகவும் இருந்தனர். இதன் காரணமாக அவர்களால் வெற்றியின் கனிகளை எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் அனுபவிக்க முடியாமல் போனது.(19) (இந்தப் போரில்) பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களில் வீழ்ந்து தொலைந்தவர்கள், அல்லது கொல்லப்பட்டவர்கள் அனைவரும், அவர்களது அந்தச் செயலால் அருள் உலகங்களை அடைந்திருக்கூடும் என்று நான் நினைக்கிறேன்[3].(20)

[2] கும்பகோணம் பதிப்பில், "அம்மா! இவர்களுடைய தாய்தந்தைகள் பிறந்த குழங்தை வடிவமுடைய இவர்கள் விஷயத்தில் எப்பொழுது ஜாதகர்மத்தைச் செய்தார்களோ அப்பொழுதே இந்த அரசர்கள் கொல்லப்பட்டவர்களானர்கள்" என்றிருக்கிறது.

[3] "இங்கே யுதிஷ்டிரன் இதையே சொல்ல விழைகிறான்: "இந்தப் போரில் கொல்லப்பட்ட போர்வீரர்கள் அனைவரும் அழிவை அடைந்து சொர்க்கத்தை அடையாமல் இருக்கிறார்கள்; உண்மையில், சொர்க்கம் அவர்களுடையதாய் இருந்திருந்தால், சாத்திரங்களின் விதிப்படி கொலை செய்தவர்களும் சொர்க்கத்தையே அடைவார்கள். எனினும், கோபத்தின் வசப்பட்டு இத்தகு தீய செயல்களைச் செய்த மனிதர்கள் இதற்கு மேலும் அருள் உலகங்களை அடைவது சாத்தியமற்றது". இவ்வாறே யுதிஷ்டிரன் சொல்ல வருவதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உலகத்தின் அழிவுக்குக் காரணமாக நாம் கருதப்படுகிறோம். எனினும், உண்மையில் இந்தக் குற்றம் திருதராஷ்டிரரின் மகன்களின் மீதே சுமத்தப்பட வேண்டும்.(21) துரியோதனன் எப்போதும் தன் இதயத்தை வஞ்சனையிலேயே நிலைக்கச் செய்திருந்தான். எப்போதும் கெடுநோக்கை வளர்த்த அவன் {துரியோதனன்}, வஞ்சனைக்கே அடிமையாக இருந்தான். நாம் அவனுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காமல் இருந்த போதும், அவன் நம்மிடம் பொய் நடத்தையுடனே நடந்து கொண்டான்.(22) நாமும் நமது நோக்கை அடையவில்லை, அவர்களும் அவர்களுடைய நோக்கை அடையவில்லை. நாமும் அவர்களை வெல்லவில்லை, அவர்களும் நம்மை வெல்லவில்லை. தார்தராஷ்டிரர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கவில்லை, பெண்களையும், இசையையும் அனுபவிக்கவில்லை.(23) அவர்கள், தங்கள் மந்திரிகள், நண்பர்கள் மற்றும் சாத்திரங்களைக் கற்றோரின் ஆலோசனைகளைக் கேட்கவில்லை. உண்மையில், அவர்களால், தங்கள் விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், நன்கு நிறைக்கப்பட்ட கருவூலத்தையும், பரந்த ஆட்சிப் பகுதிகளையும் அனுபவிக்க முடியவில்லை.(24) தங்கள் வெறுப்பால் நம்மை எரித்த அவர்களால் இன்பத்தையோ, அமைதியையோ அடையமுடியவில்லை. நம் செல்வாக்குப் பெருகுவதைக் கண்ட துரியோதனன் நிறமற்றவனாக, வாடிப்போனவனாக, மெலிவடைந்தான்.(25)

பாசம் நிறைந்த ஒரு தந்தையாக, திருதராஷ்டிரர் தம் மகனின் தீய கொள்கைகளைப் பொறுத்து வந்தார்.(26) விதுரர் மற்றும் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஆகியோரை அலட்சியம் செய்து, ஆசைகளாலேயே ஆளப்பட்டவனும், பேராசை கொண்டவனுமான தமது தீய மகனைத் {துரியோதனனைத்} தடுக்காமல் புறக்கணித்ததன் விளைவாக மன்னரும் என்னைப் போலவே அழிவைச் சந்தித்தார் என்பதில் ஐயமில்லை.(27) சுயோதனன், தன் உடன்பிறந்த தம்பிகள் கொல்லப்படக் காரணமாக அமைந்தும், எப்போதும் பாவம் நிறைந்த இதயத்துடனேயே இருந்து, நம் மீது கொண்ட வெறுப்பால் எரிந்து, இந்த முதிர்ந்த தம்பதியரைத் துயரில் எரியவிட்டுவிட்டான். உயர் பிறப்புக் கொண்ட வேறு எந்த உறவினன், போரின் மீது கொண்ட விருப்பத்தால், கிருஷ்ணனின் முன்னிலையில், அத்தகு வார்த்தைகளை உறவினர்களிடம் பேச முடியும்?(29) சுற்றிலும் இருக்கும் அனைத்தையும் தம் சொந்த சக்தியால் எரிக்கும் சூரியர்களைப் போல, நாமும், துரியோதனனின் குற்றத்தின் மூலம் அழிவின்மையை இழந்துவிட்டோம்[4].(30)

[4] கும்பகோணம் பதிப்பில், "தேஜஸினலே எல்லாத் 'திக்குக்களையும் கொளுத்துகிறவர்கள் போலப் பிரகாசிக்கும் நாம் நம்முடைய தோஷத்தால் மிகப் பல வருஷங்களுக்கு நாசமடைந்தோம். கெட்டபுத்தியுள்ள நம்முடைய அந்தப் பகைமையென்னும் புருஷன் உறுதியான கட்டுள்ளவனானான். துர்யோதனன் நிமித்தமாக நம்முடைய இந்தக் குலமானது விசேஷமாய் நசிக்கும்படி செய்யப்பட்டது" என்றிருக்கிறது.

தீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனும், பகைமையின் வடிவமுமான அவனே நமது தீய நட்சத்திரமானான். ஐயோ, அந்தத் துரியோதனனின் செயல்களால் மட்டுமே நமது குலம் நிர்மூலமாக்கப்பட்டது.(31) கொல்லத்தகாதவர்களைக் கொன்று நாம் உலகத்தின் நிந்தனையை அடைந்தோம்.(32) மன்னர் திருதராஷ்டிரர், தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனும், குலத்தை அழிப்பவனுமான அந்த இளவரசனை {துரியோதனனை} அரசுரிமையில் நிறுவியதால், இன்று இந்தத் துயரத்தை அடைந்திருக்கிறார்.(33) வீரர்களான நம் எதிரிகள் கொல்லப்பட்டனர். நாம் பாவம் இழைத்துவிட்டோம். அவனது உடைமைகளும், நாடும் தொலைந்து போயின. அவர்களைக் கொன்று நமது கோபம் தணிவடைந்திருக்கிறது. ஆனால் துயரமான என்னைத் திகைப்படையச் செய்கிறது.(34) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இழைக்கப்பட்ட பாவமானது, அனைத்தையும் துறந்து தீர்த்தங்களுக்குப் பயணிப்பது, சாத்திரங்களைத் தொடர்ந்து தியானிப்பது போன்ற மங்கலச் செயல்களால் நிவர்த்திச் செய்யப்படுகிறது. இவை யாவற்றிலும், துறவை பயில்பவன், புதிய பாவங்களை இழைப்பதில்லை என்று நம்பப்படுகிறது.(35)

நிலைத்த ஆன்மாவுடன் துறவை பயில்பவன், பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து தப்பித்து, சரியான சாலையை அடைந்து, பிரம்மத்தை அடைகிறான் என்று சுருதிகள் அறிவிக்கின்றன.(36) எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, ஓ! எதிரிகளை எரிப்பவனே, நான் உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, எண்ணங்களை வெளியிடாப் பேசா நோன்பைப் பின்பற்றி, அறிவு சுட்டிக் காட்டும் பாதையில் நடக்கப் போகிறேன்[5].(37) ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, சுருதிகள் இதையே சொல்கின்றன. இப்பூமியில் பற்றுக் கொண்ட ஒருவன், எந்த வகை அறத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஒரு போதும் அடைவதில்லை என்பதை நானும் கண்டுவருகிறேன்.(38) இந்தப் பூமியின் பொருட்களை அடையும் என் விருப்பத்தின் மூலம், நான் பாவத்தை இழைத்திருக்கிறேன். எது, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது எனச் சுருதிகள் அறிவிக்கின்றனவோ, அந்தப் பாவத்தையே, இந்தப் பூமியின் பொருட்கள் மீது கொண்ட விருப்பத்தால் நானும் இழைத்திருக்கிறேன். எனவே, நான் என் மொத்த நாட்டையும், இந்தப் பூமியின் பொருட்களையும் கைவிட்டு, இவ்வுலகப் பற்றில் இருந்து தப்பி, துன்பத்தில் இருந்து விடுபட்டு, எப்பொருளிலும் விருப்பமில்லாதவனாகக் காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(40) அமைதி மீட்கப்பட்டதும், முட்கள் அனைத்தும் களையப்பட்டதுமான இந்தப் பூமியை நீ ஆள்வாயாக[6]. ஓ! குருகுலத்தில் சிறந்தவனே {அர்ஜுனா}, எனக்கு நாட்டிற்கான, அல்லது இன்பத்திற்கான எந்தத் தேவையும் இல்லை" என்றான் {யுதிஷ்டிரன்}.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்திக் கொண்டான். பிறகு அவனது தம்பியான அர்ஜுனன் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் பேசினான்" {என்றார் வைசம்பாயனர்}.(42)

[5] "முரண்பட்ட இரட்டைகள் என்பன, வெப்பம், குளுமை, இன்பம், துன்பம் போன்றனவாகும். இதைப் புரிந்து கொள்ளக் கீதையை ஒப்புநோக்கவும்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] கும்பகோணம் பதிப்பில், "ஏ ! குருவம்சத்தில் பிறந்தவனே! ராஜ்யத்தினுலாவது போகங்களாலாவது எனக்குப் பிரயோஜனமில்லை. சத்துருக்களில்லாமலிருக்கிற இந்தப்பூமியை க்ஷேமமாய் நீங்கள் ஆளுங்கள்" என்று எஞ்சியிருக்கும் நால்வரையும் குறிப்பதாகப் பொதுவாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், தனிப்பட்ட முறையில் அர்ஜுனனைச் சுட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்