Sunday, November 05, 2017

விவாத அறிவில் சாதிக்கும் மூடர்கள்! - சாந்திபர்வம் பகுதி – 19

Fools, who are accomplished in the science of argumentation! | Shanti-Parva-Section-19 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 19)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் ஆயுதங்களையும் போரையும் மட்டுமே அறிந்தவன் என்றும், அவனால் தவத்துறவுகளின் உண்மையை உணர முடியாது என்றும் அவனிடம் சொன்ன யுதிஷ்டிரன்; முக்தியை அடைய யோகமே சிறந்த வழிமுறை; சாத்திரங்கள் அறிந்தவர்களும் முற்பிறவி வினையால் உண்மையை அறிந்து கொள்வதில்லை; பற்றைத் துறந்து, ஆன்மாவைத் தன்னை நோக்கித் திருப்பினால் முக்தி அடையலாம் என்றது...


யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, "பிரம்மத்தை அடைய வழிகோலும் வேதங்களையும், சாத்திரங்களையும் நான் அறிவேன். செயல்பாடு, துறவு ஆகிய இரண்டு வகை விளக்கங்களும் வேதங்களில் இருக்கின்றன.(1) அறிவை அடிப்படையாகக் கொண்ட சாத்திரங்களின் தீர்மானங்கள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. எனினும், உண்மையில் நான் மந்திரங்களை முறையாக அறிந்திருக்கிறேன்.(2) நீ ஆயுதங்களை மட்டுமே அறிந்தவனாக, வீரர்களின் நடைமுறைகளை நோற்கிறாய். சாத்திரங்களின் உண்மைப்பொருளை நீ புரிந்து கொள்ள இயலாதவனாக இருக்கிறாய்.(3) நீ உண்மையில் கடமையை அறிந்தவனாக இருந்தால், சாத்திரங்களின் உண்மைப் பொருளையும், அறத்தின் உண்மைகளையும் தெளிவாக அறிந்த ஒருவனைப் போல என்னிடம் பேசியிருப்பாய்.(4) எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, சகோதரப்பாசத்தால் தூண்டப்பட்டு, முறையான தகுந்த வார்த்தைகளை நீ பேசியிருக்கிறாய். ஓ! அர்ஜுனா, நான் உன்னிடம் நிறைவடைந்தேன்.(5)


போரோடு தொடர்புடைய கடமைகள் அனைத்திலும், பல்வேறு செயல்களின் திறனைப் பொறுத்தவரையிலும் மூவுலகங்களிலும் உனக்கு இணையானவன் எவனும் இல்லை.(6) எனவே, பிறரால் ஊடுருவிப் பார்க்கமுடியாத நுணக்கங்களைக் கொண்ட அக்காரியங்களுடன் தொடர்புடைய நுணுக்கங்களைக் {போர் நுணுக்கங்களைக்} குறித்து நீ பேசலாம். எனினும், என் நுண்ணறிவில் ஐயங்கொள்வது உனக்குத் தகாது.(7) நீ போரறிவியலை அறிந்தவனே, ஆனால் ஒருபோதும் பெரியோருக்காகக் காத்திருந்தவனில்லை. அக்காரியத்தைக் குறித்து விரிவாகக் கற்ற பெரியோரின் தீர்மானங்களை நீ அறியமாட்டாய். தவம், துறவு, பிரம்ம அறிவு ஆகியவற்றில் முதலை விட இரண்டாவது மேன்மையானது, இரண்டாவதை விட மூன்றாவது மேன்மையானது.(8,9) எனினும், செல்வத்தை விட மேன்மையானது ஏதுமில்லை என நீ நினைப்பது பிழையே. செல்வமானது, அவ்வொளியில் {அவ்வாறு மேன்மையானதாக} உனக்குத் தோன்றாதவாறு உன்னை என்னால் நம்ப வைக்க முடியும்.(10)

அறவோர் அனைவரும் தவத்துறவுகளிலும், வேதகல்வியிலும் அர்ப்பணிப்புடன் இருப்பதைக் காணலாம். அழியாத உலகங்கள் பலவற்றைக் கொண்ட முனிவர்களும் கூட, தவத்தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டிருக்கின்றனர்.(11) ஆன்ம அமைதி கொண்டவர்களும், எதிரிகளற்றோரும், வனங்களில் வசிப்போருமான வேறு சிலர் {சில ஆரியர்கள்}, தவங்கள் மற்றும் வேத கல்வியின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர்.(12) உலகம் சார்ந்த உடைமைகளில் உள்ள ஆசையைத் தவிர்த்து, மடமையில் பிறக்கும் இருளை {அறியாமையை} விலக்கி, வடக்கு நோக்கி (ஒளிப்பாதைகளில் சென்று) துறவிகளுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடைகின்றனர்.(13) தெற்கில் கிடப்பதும், ஒளி உலகங்களுக்கு வழிகோலுவதுமான பாதையானது, செயலில் அர்ப்பணிப்பு கொண்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிறப்புக்கும், இறப்புக்கும் உடன்படும் மனிதர்கள் அதையே {தென்திசையில் இருக்கும் யமலோகத்தையே} அடைகின்றனர்.(14) எனினும், முக்தியில் விருப்பம் கொண்டோர் தங்கள் கண்களுக்கு முன்பு வைத்திருக்கும் {சொல்லையும், மனத்தையும் கடந்த} எல்லையானது விவரிக்க முடியாததாகும். அதை அடைவதற்கு யோகமே சிறந்த வழிமுறையாகும். அதை (உனக்கு) விளக்கிச் சொல்வது எளிதானதல்ல.(15)

கல்விமான்கள், எது உண்மையல்ல என்பதைக் கண்டுபிடிக்கும் விருப்பத்தில் சாத்திரங்களை நினைவுகூர்ந்து வாழ்கின்றனர். எனினும், பெரும்பாலும் அவர்கள் இதில் வழி தவறி, தாங்கள் தேடும் பொருளானது, இதிலிருக்கிறது, அதிலிருக்கிறது என்று நம்புகின்றனர்.(16) வேதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் பிற சாத்திரங்களில் இருந்து பலவற்றைத் திரட்டினாலும், வேரறுந்த வாழை மரத்தில் கடினமான மரப்பகுதியை {அதன் சாரத்தைக்} காண முடியாத மனிதர்களைப் போல, அவர்கள் உண்மையைக் காணத் தவறுகின்றனர்.(17) ஆன்மாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையில்லாத சிலர், அதை {அந்த ஆன்மாவை}, ஆசை மற்றும் வெறுப்பு (மற்றும் பிற) தன்மைகளை {குணங்களைக்} கொண்டதாகவும், ஐம்பூதங்களாலான இந்த உடற்கட்டுக்குள் இருப்பதாகவும் கருதுகின்றனர்[1].(18) கண்ணால் காணப்பட இயலாத, வார்த்தைகளால் சொல்லப்பட இயலாத, மிக நுணுக்கமான அது {ஆன்மா}, செயலின் வேரைத் தன் முன்னிலையில் கொண்டு, உயிரினங்களுக்கு மத்தியில் (மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும்) வட்டத்தில் சுழன்று வருகிறது[2].(19) ஒருவன், தனது மனத்தின் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, அனைத்து வகை அருளையும் ஊற்றெடுக்கச் செய்யும் ஆன்மாவைத் தன்னை நோக்கித் திரும்பச் செய்தால், அவன் முற்றிலும் விடுதலையடைந்தவனாகப் பேரின்பத்தை அடைவான்.(20)

[1] "ஆசை, வெறுப்பு, விருப்பம், இன்பம், வலி, அறிவுப்புலங்கள் ஆகியவற்றின் குணங்களால் ஆன்மா அல்லது மனம் வேறுபடுகிறது என்று சொல்வதும், நன்கறியப்பட்டதுமான நியாயத் தத்துவத்தை இங்கே குறிப்பிடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "ஆன்மாவானது உண்மையில் குணங்களற்றதாக இருப்பினும், ஏற்கனவே எதில் வசித்திருக்கிறதோ, அதன் அழிவில் வேறு உடல்களுக்குள் நுழைந்து உயிரினங்களுக்கு மத்தியில் வட்டமாகச் சுழன்று வருகிறது. இந்த வட்டத்தில், அல்லது தொடர்பயணத்தின் காரணம் அவித்யை அல்லது மாயையாகும்; அதாவது மனிதர்கள் எதில் ஈடுபடுவார்களோ அந்தச் செயல்பாட்டின் விளைவால் உண்டாகும் அறிவிழப்பாகும். அந்த அவித்யையிலிருந்து விடுபட்டால் செயல்பாடு நின்று, ஆன்மாவானது, அனைத்துக் குணங்களும் அற்ற அதன் உண்மை இயல்பில் வெளிப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

நல்லோரால் பின்பற்றப்படுவதும், ஞானிகளால் அடையப்படுவதுமான அத்தகு பாதை இருக்கும்போது, ஓ! அர்ஜுனா, அனைத்து வகைப் பேரிடரும் நிறைந்த செல்வத்தை நீ ஏன் மெச்சுகிறாய்?(21) ஓ! பாரதா, சாத்திரங்களை அறிந்தவர்களும், கொடைகள், வேள்விகள், செயல்பாடு ஆகியவற்றில் எப்போதும் ஈடுபடுபவர்களுமான பழங்காலத்து மனிதர்களும், {உன்னைப் போன்றே} இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.(22) ஓ! பாரதா, முறைப்படி விவாதிக்கும் அறிவியலில் {தர்க்க சாஸ்திரத்தில்} சாதிக்கும் சில மூடர்கள், தங்கள் முற்பிறவி குற்றங்களுடைய வலிமையின் விளைவால், ஆன்மாவின் இருப்பை மறுக்கின்றனர். இறுதி விடுதலையை {முக்தியைக்} குறித்த இந்த உண்மையை அவர்களை ஏற்கச் செய்தல் மிகக் கடினமானதாகும்[3].(23) அந்தத் தீய மனிதர்கள், பெரும் கல்வியறிவைக் கொண்டவர்களாயிருப்பினும், பூமி முழுவதும் பயணித்து, சபைகளில் உரையாற்றி, விடுதலை {முக்தி} குறித்த உண்மைக் கோட்பாட்டை மறுக்கின்றனர்.(24) ஓ! பார்த்தா, நாம் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை, வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்? உண்மையில், அதைப் போலவே (அந்த மனிதர்களால் சாத்திரங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள முடியாததைப் போலவே), சாத்திரங்களை ஆழமாகப் புரிந்து கொண்ட ஞானியரையும், பக்திமான்களையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியாது.(25) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உண்மையை அறிந்த மனிதர்கள், தவத்தினாலும், நுண்ணறிவினாலும் பிரம்மத்தை அடைந்து, துறவினால் பேரின்பத்தை அடைகின்றனர்" என்றான் {யுதிஷ்டிரன்}".(26)

[3] "இங்கே சொல்லப்படும் ஹேதுமந்தா பண்டிதா Hetumantah Panditah என்பது, பகுத்தறிவின் அறிவியலைக் கற்றோர் என்பதாகும். திருடபூர்வே Dridhapurve என்பதன் பொருள் முற்பிறவியின் வலிமைமிக்க குற்றங்கள் எனவும், சுதுராவர்த்தம் Suduraavartah என்பதன் பொருள் புரிய வைப்பதற்குக் கடினமானது எனவும் நீலகண்டர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 19ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்