Wednesday, March 21, 2018

சோம்பேறி ஒட்டகம்! - சாந்திபர்வம் பகுதி – 112

An idle Camel! | Shanti-Parva-Section-112 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 112)


பதிவின் சுருக்கம் : சோம்பலால் உண்டாகும் தீங்கைக் குறித்து ஓர் ஒட்டகத்தின் கதை மூலம் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhisma, "An idle Camel!" | Shanti-Parva-Section-112 | Mahabharata
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு மன்னனால் எச்செயல்கள் செய்யப்பட வேண்டும்? எச்செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவான்? ஓ கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரே, இஃதை எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடன்}, “நீ அறிய விரும்புவதை நான் உனக்குச் சொல்வேன். ஒரு மன்னனால் இவ்வுலகில் செய்யப்பட வேண்டியது மற்றும் மன்னன் மகிழ்ச்சியடையக்கூடிய செயல்கள் என்னென்ன என்பது குறித்துத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உண்மையைக் கேட்பாயாக.(2) ஒரு மன்னன், நாம் கேள்விப்பட்டிருக்கும் ஓர் ஒட்டகத்தின் உயர்ந்த வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஓ! யுதிஷ்டிரா அந்த வரலாற்றைக் கேட்பாயாக. ஓ! யுதிஷ்டிரா, இப்போது அந்த வரலாற்றைக் கேட்பாயாக.(3) கிருத யுகத்தில், தன் முந்தைய பிறவியின் செயல்கள் அனைத்தையும் நினைவில் கொண்டுள்ள ஒரு பெரிய ஒட்டகம் இருந்தது. கடும் நோன்புகளை நோற்றுவந்த அவ்வொட்டகம், காட்டில் கடுந்தவத்தைச் செய்து வந்தது.(4) அதனுடைய தவத்தின் முடிவில் பலமிக்கப் பிரம்மன் அதனிடம் நிறைவு கொண்டான். எனவே, பெரும்பாட்டன் அதற்கு {அந்த ஒட்டகத்திற்கு} வரங்களை அளிக்க விரும்பினான்.(5)



ஒட்டகம் {பிரம்மனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பலமிக்கத் தலைவா, நூறு யோஜனைகள் தொலைவில் உள்ள எந்த உணவையும் பற்றும் வகையில், உமது அருளால் என் கழுத்து நீண்டதாகட்டும்” என்று கேட்டது.(6)

வரங்களை அளிக்கும் அந்த உயர் ஆன்மா {பிரம்மன்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். பிறகு அந்த ஒட்டகம் தன் காட்டிற்குச் சென்றது.(7)

வரம்பெற்ற நாள்தொடங்கி அந்த மூட விலங்கு சோம்பேறியானது. உண்மையில், விதியால் மயக்கமடைந்த அந்த இழிந்த விலங்கு, அந்த நாள் முதலே மேய்ச்சலுக்குச் செல்லவில்லை.(8) ஒரு நாள், அந்த விலங்கு நூறு யோஜனைகள் கொண்ட தன் கழுத்தை நீட்டி, எந்த முயற்சியுமின்றித் தன் உணவை அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெரும்புயலொன்று எழுந்தது.(9) அந்த ஒட்டகம் தன் தலையையும், தன் கழுத்தின் ஒரு பகுதியையும் ஒரு மலைக்குகையில் மறைத்துக் கொண்டு, புயல் ஓயும்வரை காத்திருக்கத் தீர்மானித்தது.(10)

அப்போது ஒரு நரியானது, தன் மனைவியுடன் சேர்ந்து மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே, பெரும் சிரமங்களுக்குப் பிறகு அதே குகையை நோக்கிச் சென்று உறைவிடத்திற்காக அதற்குள் விரைவாக நுழைந்தது.(11) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இறைச்சியை உண்டு வாழ்ந்தது என்பதாலும், களைப்புடன் இருந்ததாலும், அந்த நரியானது ஒட்டகத்தின் கழுத்தைக் கண்டு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உண்ணத் தொடங்கியது. தன் கழுத்து உண்ணப்படுவதைக் கண்ட ஒட்டகம், அதைக் குறுக்கி {சுருக்கிக்} கொள்ள முயற்சித்தது.(12) ஆனால், அது தன் கழுத்தை மேலும் கீழும் அசைத்த போது, நரியும், அதன் மனைவியும், அதைப் பிடித்திருக்கும் தங்கள் பிடியை விடாமல் தொடர்ந்து உண்டன.(14) குறுகிய காலத்திற்குள்ளாகவே அந்த ஒட்டகம் இறந்தது. இவ்வாறு அந்த ஒட்டக்கதைக்கொன்று தின்ற நரியானது, புயல் அடங்கி, மழை நின்றதும் அந்தக் குகையைவிட்டு வெளியே வந்தது.(15) இவ்வாறே அந்த மூட ஒட்டகம் மரணமடைந்தது.

செயலின்மையின் தொடர்ச்சியாக எவ்வளவு பெரிய தீமை விளைந்தது என்பதைப் பார்.(16) உன்னைப் பொறுத்தவரையில் நீ சோம்பலைத் தவிர்த்து, உன் புலன்களைக் கட்டுப்படுத்தி, இவ்வுலகில் அனைத்தையும் முறையான வழிமுறைகளில் செய்வாயாக. வெற்றியானது புத்தியைச் சார்ந்திருக்கிறது என்று மனுவே சொல்லியிருக்கிறார்.(17) நுண்ணறிவின் துணையால் நிறைவேற்றப்பட்ட செயல்கள் அனைத்தும் முதன்மையானவையாகவும், கரங்களின் உதவியால் அடையப்பட்டவை நடுநிலையாகவும், கால்களின் உதவியால் அடையப்பட்டவை தாழ்ந்தவையாகவும் கருதப்படுகின்றன.(18) தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டு, புலனடக்கத்துடன் உள்ள மன்னன், தன் நாட்டைத் தக்க வைத்துக் கொள்கிறான். ஆர்வமிக்க மனிதர்கள், நுண்ணறிவின் உதவியுடன் வெற்றிகளை அடைவார்கள் என்று மனுவே சொல்லியிருக்கிறார்.(19)

ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாவமற்றவனே, பொதுவாக அறியப்படாத விவேகமிக்க ஆலோசனைகளைக் கேட்பவர்களும், கூட்டாளிகளைக் கொண்டவர்களும், முறையான கூராய்வுக்குப் பிறகு செயல்படுபவர்களும், இவ்வுலகில் தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள்.(20) இத்தகு துணைகளைப் பெற்ற ஒருவன், மொத்த பூமியையும் ஆள்வதில் வெல்கிறான்.(21) ஓ! இந்திரனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவனே, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை அறிந்த பழங்காலத்து ஞானிகளால் இது சொல்லப்பட்டிருக்கிறது. சாத்திரங்களை நோக்கும் பார்வை கொண்ட நானும், அதையே உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, உன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, இவ்வுலகில் செயல்படுவாயாக” என்றார் {பீஷ்மர்}.(22)

சாந்திபர்வம் பகுதி – 112ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்