Monday, May 14, 2018

சம்பாகர்! - சாந்திபர்வம் பகுதி – 176

Campaka! | Shanti-Parva-Section-176 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 01)


பதிவின் சுருக்கம் : இன்பமும், துன்பமும், செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எவ்வாறு ஏற்படுகின்றன என்று கேட்ட யுதிஷ்டிரன், துன்பத்தால் அவதிப்பட்டு, முக்தியை அடைந்த சம்பாகர் எனும் ஒரு ஏழைப் பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்கு உரைத்த பீஷ்மர்...


Campaka! | Shanti-Parva-Section-176 | Mahabharata In Tamil
Campaka! | Shanti-Parva-Section-176 | Mahabharata In Tamil
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, இன்பமும், துன்பமும், வெவ்வேறு நடைமுறைகளையும், சடங்குகளையும் நோற்று வாழும் செல்வந்தனுக்கும், ஏழைக்கும் எங்கிருந்து எவ்வாறு உண்டாகுகின்றன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(1)


[1] "முந்தைய பகுதியில், அல்லது பாடத்தில் ஒருவன் இளைஞனாக இருந்தாலும் மோக்ஷத்தை, அல்லது விடுதலையை {முக்தியை} அடைய முயற்சிக்கலாம் என்று சொல்லப்பட்டது. யுதிஷ்டிரன், (வேள்வி செய்வதற்கு மிக அவசியமான) செல்வம் அந்த அறத்தை {மோக்ஷதர்மத்தை} அடைய தேவைப்படுமா என்று விசாரிக்கிறான். செல்வம் அவசியம் என்றால் ஏழைகளால் அவ்வறத்தை அடைய முடியாது. எனவே செல்வந்தனுக்கும், ஏழைக்கும் இன்பமும் துன்பமும் வரும் வழியைக் குறித்து விசாரிக்கிறான். இதுவே யுதிஷ்டிரனுடைய கேள்வியின் நோக்கம் என இங்கே உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அமைதியையும், விடுதலையையும் {முக்தியையும்} தானே அடைந்த சம்பாகரால் {சம்யாகரால்} என்ன பாடப்பட்டது என்பது குறித்த பழங்கதையொன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில், தீய மனைவி, தீய உடை, பசி ஆகியவற்றால் துன்பத்தை அடைந்தவரும், துறவு நோன்பை நோற்று வாழ்பவருமான ஒரு குறிப்பிட்ட பிராமணர் இந்த ஸ்லோகங்களை என்னிடம் சொன்னார்[2].(3) இந்தப் பூமியில் பிறந்த மனிதனை, அவன் பிறந்த நாள் முதலே பல்வேறு வகை இன்ப துன்பங்கள் அடைகின்றன.(4) அவன் அந்த இரண்டையும் விதியின் செயல் என ஏற்றுக் கொண்டால் இன்பம் வரும்போது மகிழ்ச்சியையும், துன்பம் வரும்போது துயரத்தையும் அவன் உணர மாட்டான்.(5)

[2] "இந்த ஸ்லோகங்கள் பழைமையானவை என்று சொல்லப்படுகின்றன. அதன்படி நீலகண்டர், அவற்றைத் தன்னிடம் சொன்னது சம்பாகர் அல்ல, வேறு ஒருவர் என்று ஊகிக்கிறார். நான் உரையாசிரியரையே பின்பற்றுகிறேன்; ஆனால் இந்தப் பகுதியின் இறுதி ஸ்லோகத்தின் இலக்கணம், அவரை {நீலகண்டரை} ஆதரிப்பதற்காகத் திரிக்கப்பட்டிருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உன் மனம் ஆசையற்றிருந்தாலும், நீ இன்னும் பெருஞ்சுமையைச் சுமக்கிறாய். உனக்கான நன்மையை (விடுதலையை) அடைய நீ முயல வில்லை. உன் மனத்தைக் கட்டுப்படுத்துவதில் நீ வெல்லவில்லையா?(6) வீட்டையும், விருப்பத்திற்குரிய உடைமைகளையும் துறந்து சென்றால், நீ உண்மையான மகிழ்ச்சியைச் சுவைக்கலாம். அனைத்தையும் இழந்த மனிதன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான்.(7) இவ்வுலகில் முற்றான ஏழைமையே மகிழ்ச்சியாகும். அதுவே நல்ல உடற்கோட்பாடாகும், அதுவே அருள்களின் தோற்றுவாயாகும், அதுவே ஆபத்திலிருந்து விடுதலையாகும். எதிரியற்ற இவ்வழி (ஆசையை வளர்ப்பவர்களால்) அடையமுடியாததாகவும், (ஆசையில் இருந்து விடுபட்டவர்களால்) எளிதாக அடையத்தக்கதாகவும் இருக்கிறது.(8) மூன்று உலகங்களின் ஒவ்வொரு பகுதிகளிலும் என் கண்களைச் செலுத்தும் என்னால், தூய நடத்தையிலும், (உலகம் சார்ந்த பொருட்களில்) பற்றில்லாமையிலும் ஓர் ஏழைக்கு இணையான மனிதனைக் காண முடியவில்லை.(9) நான் ஏழைமையையும், அரசுரிமையையும் தராசில் எடை பார்த்தேன். அரசுரிமையைவிட ஏழைமையே கனமானதாகவும், பெரும் தகுதிகளைக் கொண்டதாகவும் தெரிந்தது.(10)



செல்வத்தைக் கொண்ட அரசுரிமை எப்போதும் கவலையால் கலங்கடிக்கப்பட்டு, காலனின் கோரப்பற்களுக்கிடையில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, ஏழைமைக்ககும், அரசுரிமைக்குமிடையில் இந்தப் பெரும் வேறுபாடு இருக்கிறது.(11) எனினும், ஏழையைப் பொறுத்தவரையில், செல்வம் ஏதும் இல்லாதவனாக இருப்பதால் அவன் நம்பிக்கைகளில் {எதிர்பார்ப்புகளில்} இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நெருப்போ, எதிரியோ, மரணமோ, கள்வர்களோ அவனிடம் இருந்து அடைய முடியாத விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(21) தன் விருப்பப்படி திரிபவனும், தன் கரத்தையே தலையணையாகக் கொண்டு வெறுந்தரையில் கிடப்பவனும், அமைதியை அடைந்தவனுமான அத்தகைய மனிதனை தேவர்களும் மெச்சுகின்றனர்.(13) கோபம் மற்றும் காமத்தால் பாதிக்கப்படும் செல்வந்தன், தீய இதயத்தால் களங்கப்பட்டவனாக இருக்கிறான். அவன் சரிந்த பார்வைகளையும், வெற்று பேச்சுகளையும் பார்க்கவும் பேசவும் செய்கிறான். பாவம் நிறைந்தவனாகும் அவனுடைய முகம் எப்போதும் சுருக்கங்களுடன் கரியதாக இருக்கிறது.(14) தன் உதடுகளைக் கடித்துக் கொண்டும், கோபத்தால் தூண்டப்பட்டும், கடுமையான, கொடுஞ்சொற்களை அவன் பேசுகிறான். அத்தகைய மனிதன் மொத்த உலகத்திற்கும் ஒரு கொடையளித்தாலும், அவனைப் பார்க்கவும் யார் விரும்புவார்?(15)

செல்வத்துடன் தொடர்ந்த தோழமையானது, பலவீன அறிவுடைய மனிதனைக் கலங்கடிக்கிறது. காற்றானது கூதிர் கால மேகங்களை விரட்டுவதைப் போலவே, அது {செல்வத்தின் தோழமை} அவனது அறிவை விரட்டிவிடும். செல்வத்துடனான தோழமை, "நான் அழகானவன். நான் செல்வம்படைத்தவன்.(16) நான் உயர் பிறவி கொண்டவன். நான் செய்வதனைத்திலும் வெற்றியடைபவன். நான் சாதாரண மனிதன் கிடையாது" என்று அவனை நினைக்க வைக்கிறது. இந்த மூன்று காரணங்களின் விளைவால் அவனது இதயம் போதை கொள்கிறது.(17) உலகம் சார்ந்த உடைமைகளில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட இதயத்துடன் அவன் தன் தந்தைமாரால் திரட்டப்பட்ட செல்வத்தை வீணாக்குகிறான். தேவைகளால் செல்வம் குறைந்ததும் அவன் பிறரின் செல்வத்தை அபகரிப்பதை பழியற்றதாகக் கருதுகிறான்.(18) இந்நிலையில் அவன் தடைகள் அனைத்தையும் மீறி,அனைத்துப் பக்கங்களிலும் பிறரின் உடைமைகளை அபகரிக்கும்போது, காடுகளில் காணப்படும் மானைக் கூரிய கணைகளால் பீடிக்கும் விளையாட்டு வீரனைப் போல மனிதர்களின் ஆட்சியாளர்கள் அவனைத் தடுத்துப் பீடிக்கின்றனர்.(19)

அத்தகைய மனிதன், நெருப்பு மற்றும் ஆயுதங்களால் தோன்றும் இதே வகைத் துன்பங்கள் பலவற்றில் மூழ்குகிறான்.(20) எனவே, உலகம் சார்ந்த மனச்சார்புகளையும் (பிள்ளைகள் மனைவியர் போன்ற ஆசைகளையும்), கடந்து செல்பவையான அனைத்து உண்மையின்மைகளையும் (உடல் போன்றவற்றையும்) ஒருவன் தன் நுண்ணறிவின் துணையுடன் அலட்சியம் செய்து, அந்த வலிநிறைந்த துன்பங்களுக்கு உரிய மருந்துகளை இட்டுத் தீர்வு காண வேண்டும்.(21) துறக்காமல் ஒருவனால் இன்பத்தை ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் தனக்கான உயர்ந்த நன்மையை அவனால் ஒருபோதும் அடைய முடியாது. துறக்காமல் எளிதாக ஒருபோதும் உறங்க முடியாது. எனவே, அனைத்தையும் துறந்து, நீ மகிழ்ச்சியை அடைவாயாக" என்றார்.(22)

சம்பாகர் பாடிய இவையனைத்தும், ஹஸ்தினாபுரத்தில் ஒரு பிராமணரால் எனக்குச் சொல்லப்பட்டது. இந்தக் காரணத்திற்காக நான் துறவை அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறேன்" {என்றார் பீஷ்மர்}[3].(23)

[3] [2]ம் அடிக்குறிப்பைக் காண்க. கும்பகோணம் பதிப்பில், "இந்த இதிஹாஸமானது முன்காலத்தில் அஸ்தினாபுரத்தில் சம்பாகரென்னும் பிராம்மணரால் எனக்குக் கூறப்பட்டது. ஆகையால் (பொருள்களை விடுவதென்னும்) த்யாகமானது உத்தமமென்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சம்யாகர் என்ன சொன்னாரோ, அவை பழங்காலத்தில் ஹஸ்தினாபுரத்தில் அந்தப் பிராமணரால் எனக்குச் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 176ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்