Thursday, May 17, 2018

முன்வினைப் பயன்! - சாந்திபர்வம் பகுதி – 181

Karma! | Shanti-Parva-Section-181 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 08)


பதிவின் சுருக்கம் : முற்பிறவியின் நல்வினையும், தீவினையும் அடுத்தப் பிறவியில் அதற்குரிய பலன்களைக் கொடுப்பதன் நிச்சயத் தன்மை; அறம் பயில வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Karma! | Shanti-Parva-Section-181 | Mahabharata In Tamil
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, கொடைகள், வேள்விகள், தவங்கள், ஆசான்களுக்குக் கடமையுணர்வுடன் செய்யக்கூடிய தொண்டுகள் ஆகியவை ஞானத்தையும், உயர்ந்த இன்பத்தையும் உண்டாக்குமா என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மனமானது, ஆசை, கோபம் மற்றும் தீய விருப்பங்களின் நிமித்தமாகப் பாதிப்படைந்தால், அது {மனம்} பாவத்தை நோக்கி நகரும். ஒருவனின் செயல்கள் பாவத்தால் களங்கப்பட்டால், அவன் வலிநிறைந்த {துன்பமிக்க} பகுதிகளில் வசிக்கக் கட்டுப்பட்டவனாவான்.(2) பாவிகள் வறுமையான சூழ்நிலையில் பிறந்து, பஞ்சம், துன்பம், அச்சம், மரணம் ஆகியவற்றின் வேதனைகளுக்கு மீண்டும் மீண்டும் ஆட்படுவார்கள்.(3) தங்கள் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களுமான அறம் சார்ந்த செயல்களைச் செய்வோர் {ஆத்திகர்கள்}, செல்வந்தர்களாகப் பிறந்து, விழாக்களிலும், சொர்க்கத்திலும், மகிழ்ச்சியிலும் மீண்டும் மீண்டும் திளைக்கிறார்கள்.(4) நம்பிக்கையில்லாதவர்கள் {நாத்திகர்கள்}, விலங்கிடப்பட்ட கைகளுடனும், ஊனுண்ணும் விலங்குகள், யானைகள், பாம்புகள் மற்றும் கள்வர்களின் விளைவால் பயங்கரம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?(5)

மறுபுறம், தேவர்களையும், விருந்தினர்களையும் மதிப்போர், ஈகையாளர்கள், நல்லோரையும், நேர்மையானோரையும் விரும்புவோர் ஆகியோர், தங்கள் ஈகைச் செயல்களின் விளைவால், தூய ஆன்மாக்களுக்குச் சொந்தமான இன்பமான வழியில் செல்கின்றனர்.(6) அறத்தை மதிக்காதவர்களான மனிதர்களில் தீயோர், தானியங்களில் பதர்களைப் போலவும், பறவைகளில் கொசுக்களைப் போலவும் ஆகிறார்கள்.(7) செயல்படுபவனுடைய முற்பிறவி செயல்களை அவன் விட்டுச் செல்ல விரும்பினாலும், அவற்றின் {முற்பிறவி செயல்களின்} விளைவால் விதிக்கப்பட்டவையே அவனைப் பின்தொடரும். அவன் உறங்கும்போது, அதுவும் {முன்வினையும்} உறங்குகிறது, அவன் என்ன செய்தாலும் அதுவும் அதையே செய்கிறது[1].(8) அஃது அவனுடைய நிழலைப் போலவே, அவன் ஓயும்போது ஓய்ந்து, செல்லும் போது சென்று, செயல்படும்போது செயல்படுகிறது.(9) ஒரு மனிதன் என்ன செயலைச் செய்தாலும் அதன் கனிகளை அவன் நிச்சயம் அடைவான்.(10)

[1] "செயலைச் செய்பவன் அதன் விளைவைத் தவிர்க்க விரும்பினாலும், அது {அந்தச் செயலின் விளைவு} அவனிடம் இருந்து பிரியாத தோழனாகிறது என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



(தங்களுக்குத் தகுந்த வகை இருப்புகளில்) வீழ விதிக்கப்பட்டவையும், தங்கள் செயல்களின் விளைவால் இன்புறவோ, துன்புறவோ விதிக்கப்பட்டவையுமான உயிரினங்கள் அனைத்தையும் காலம் இழுத்துச் செல்கிறது.(11) முற்பிறவியின் செயல்கள், மலர்களையும், கனிகளையும் போல உரிய காலத்தில் தங்கள் விளைவுகளைப் பெருக்கிக் கொண்டு, உரிய காலத்தில் பெரிதான எவ்வகை முயற்சியுமின்றித் தோன்ற ஒருபோதும் தவறுவதில்லை.(12) மதிப்பு, அவமதிப்பு, ஈட்டல், இழப்பு, சிதைவு, வளர்ச்சி ஆகியவை விதிக்கப்பட்டதுபோலவே, முற்பிறவியல் செய்யப்பட்ட செயல்களின் விளைவுகள் (இன்புறுவதாலோ, துன்புறுவதாலோ) தீர்ந்ததும், எவனிடமும் பாயவோ, தோன்றவோ செய்யாது {வினைகள் தீர்நதாலும் புதிதாகச் செய்யப்படும் செயல்களால்} மீண்டும் மீண்டும் நேர்கின்றன[2].(13) தாயின் கருவறையில் இருக்கும் ஓர் உயிரினம் தன் செயல்களின் விளைவுகளால் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இன்பத்த்திலோ, துன்பத்திலோ இன்புறவோ துன்புறவோ செய்கிறது.(14) குழந்தைப் பருவத்திலோ, இளமைப் பருவத்திலோ, முதுமைப் பருவத்திலோ வாழ்வின் எந்தக் காலத்திலோ நல்ல, அல்லது தீய செயலைச் செய்யும் ஒருவன், தனது அடுத்தப் பிறவியின் அதே காலத்தில் நிச்சயம் அவற்றின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்.(15)

[2] "முற்பிறவியின் செயல்களுக்குரிய விளைவுகள் தீர்ந்ததும், (எந்த உயிரினத்திடம் அத்தகை வகையில் விளைவுகள் தீர்ந்ததோ) அந்த உயிரினம் வாழ்வின் தொடர் மாற்றங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறது. எனினும், {விடுதலையடையக்} கூடாது என்று விரும்பினாலும் இத்தகைய உயிரினங்கள் விடுதலையடைகின்றன என்பதில் உள்ள மரபுவழுவாதோரின் கருத்து என்னவென்றால், தகுதி {புண்ணியம்} மற்றும் தகுதியின்மை {பாவம்} ஆகிய இரண்டிலும் எப்போதும் ஏதாவது எஞ்சியிருக்கும், இவ்வாறு எஞ்சியிருப்பதன் விளைவுகளால் இன்புறவும், துன்புறவும் புதுப்பிறவி நேரவேண்டும். மரபுவழுவாத இந்துக்களின் அனைவரின் கருத்தும் இதுவே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸம்மானமும், அவமானமும், லாபமும், நஷ்டமும், ஆபத்தும், ஸம்பத்தும் கர்மங்களின் முடிவில் திரும்பவும் திரும்பவும் செய்யப்பட்ட கர்மங்களை அனுசரித்து உண்டாகும்" என்றிருக்கிறது.

ஆயிரம் பசுக்களுக்கு மத்தியிலும் தன் தாயை அடையாளம் கண்டு அணுகும் கன்றைப் போல, முற்பிறவியின் செயல்களும், அவற்றைச் செய்தவனைப் புதுப் பிறவியில் அடைகின்றன.(16) (அழுக்கான) துணி, நீரில் அலசப்பட்டால் தூய்மையடைகிறது. அதே போல, வருத்தத்தில் எரியும் மனிதர்களும் உரிய தவங்களின் மூலம் எல்லையில்லா இன்பத்தை அடைகின்றனர்[3].(17) காடுகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொள்ள முடிந்தோர், நீண்ட காலத்திற்குத் தவங்களைச் செய்து, தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டு, தங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும் நோக்கங்களை அடையலாம்.(18) வானத்தில் பறவைகளின் பாதையையோ, நீரில் மீன்களின் பாதையையோ யாராலும் குறிக்க முடியாததைப் போல, அறிவால் தூய்மையடைந்த ஆன்மாக்களை அடையும் மனிதர்களின் பாதையும் எவராலும் குறிப்பிடப்பட முடியாது[4].(19) பாவச் செயல்கள் குறித்து இதற்கு மேலும் எந்தக் குறிப்புக்கும், பேச்சுக்கும் அவசியமில்லை. உரிய தீர்மானத்துடனும், தனக்குத் தகுந்த சிறப்பான முறையிலும், ஒருவன் தனக்கு நன்மையானதை செய்து கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளிலேயே ஞானத்தையும், உயர்ந்த இன்பநிலையையும் அடைய முடியும்" என்றார் {பீஷ்மர்}.(20)

[3] "இந்த ஸ்லோகத்தின் முதல் சொல் பல்வேறு விதங்களில் படிக்கப்படுகிறது. நான் பின்பற்றும் உரை, சமுன்னம் samunnam, அதாவது நீரில் நனைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்டதாகும். அது சம்ஜுக்தம் samjuktam- ஆக இருந்தால், அழுக்கோடு கலந்த என்ற பொருளைத் தரும். இன்னுமொரு உரையான சம்ஸ்வின்னம் samswinnam என்பதற்கு, வியர்வையில் நனைந்த என்பது பொருளாகும். உபவாசம் என்பதை உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் இருந்து துறவு கொள்வது என்பதற்கு இணையாக நீலகண்டர் விளக்குகிறார். பொதுவாக அஃது "உண்ணாநோன்புகளையே" குறிக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "முதலில் நன்றாக அழுக்கடைந்த ஆடையானது பிறகு ஜலத்தால் சுத்தி அடைவது போல முதலில் கெட்ட கர்மத்தைச் செய்த மனிதனும் பிறகு புண்ய கர்மத்தால் பரிசுத்தியை அடைவான்" என்றிருக்கிறது.

[4] "இந்த வரிச் சாந்திபர்வத்தில் அடிக்கடி வருகிறது. நல்லோரின் பாதையைக் குறிக்க முடியாது என்பது என்ன பொருளில் சொல்லப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. ஒருவேளை, அத்தகைய மனிதர்கள், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் தவிர்த்து, தங்களுக்குப் பின்னால் எந்த வரலாற்றையும் விட்டுச் செல்வதில்லை என்பதால் அவ்வாறு சொல்லப்படுகிறதோ என்னவோ" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 181ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்