Friday, May 18, 2018

படைப்புக் கோட்பாடு! - சாந்திபர்வம் பகுதி – 182

Theory of origin! | Shanti-Parva-Section-182 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 09)


பதிவின் சுருக்கம் : அண்டம் படைக்கப்பட்டது குறித்துப் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Theory of origin! | Shanti-Parva-Section-182 | Mahabharata In Tamil
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டம் எதிலிருந்து படைக்கப்பட்டது? அழிவு நேரும்போது அது யாரிடம் செல்கிறது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) உண்மையில், பெருங்கடல், ஆகாயம், மலைகள், மேகங்கள், நிலங்கள், நெருப்பு, காற்று ஆகியவற்றுடன் கூடிய இவ்வண்டம் யாரால் படைக்கப்பட்டது.(2) பொருட்கள் {உயிரினங்கள்} யாவும் எவ்வாறு படைக்கப்பட்டன? இருப்பின் வகைகள் {உயிரினங்களில்} தனித்தனி பிரிவுகள் {ஜாதிகள்} எவ்வாறு ஏற்பட்டன? அறம் மற்றும் மறம் குறித்த விதிகளும், அவற்றின் தூய்மையும், மாசும் எவ்வாறு உண்டாகின? இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? இதைக் குறித்தும், மறுமை குறித்தும் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பரத்வாஜரின் கேள்விகளுக்குப் பிருகு சொன்ன புனிதச் சொற்கள் அடங்கிய பழங்கதை இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(5) சுடர்மிக்க சக்தியும், காந்தியும் கொண்ட பெருமுனிவர் பிருகு, கைலாச சிகரத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட பரத்வாஜர், பின் வரும் வார்த்தைகளில் அவரிடம் பேசினார்.(6)



பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "பெருங்கடல், ஆகாயம், மலைகள், மேகங்கள், நிலங்கள், நெருப்பு, காற்று ஆகியவற்றுடன் கூடிய இந்த உலகம் யாரால் படைக்கப்பட்டது?(7) தொடக்கத்தில் உயிரினங்கள் அனைத்தும் எவ்வாறு படைக்கப்பட்டன? சாதிப் பாகுபாடுகள் எவ்வாறு தோன்றின?[1] (ஒழுக்கத்தில்) தூய்மையும் மாசும் எவ்வாறு உண்டாகின? உயிரினங்களுக்கான அறம் மற்றும் மறத்திற்கான விதிகள் எவ்வாறு உண்டாகின?(8) இறப்பவர்கள் எங்கே செல்கிறார்கள்? இம்மை மற்றும் மறுமை குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டார்.(9) இவ்வாறு தன் ஐயங்களைக் கேட்ட பரத்வாஜரிடம், சிறப்புமிக்கவரும், பிரம்மத்திற்கு ஒப்பானவரும், மறுபிறப்பாள முனிவருமான பிருகு இந்த வார்த்தைகளைத் தன் மறுமொழியாகச் சொன்னார்.(10)

[1] பிபேக்திப்ராயின் பதிப்பில், "உயிரினங்கள் எவ்வாறு உண்டாக்கப்பட்டன? அவை வர்ணங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டன? அவற்றின் தூய்மையும், மாசும் என்ன? தர்மமும், அதர்மமும் எங்கிருந்து உண்டாகின?" என்றிருக்கிறது. கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும் ஜாதிகள் என்று குறிப்பிடப்படுவது, பிபேக்திப்ராயின் பதிப்பில் வர்ணங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.

பிருகு {பரத்வாஜரிடம்}, "பெருமுனிவர்களால் மானஸம் {மானஸர்} என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு பழம்பொருள் இருந்தது. அது தொடக்கமும் முடிவும் அற்றதாக இருந்தது. அந்தத் தெய்வீகப் பொருள் ஆயுதங்களால் ஊடுருவப்படாததாக இருந்தது. அது சிதைவும், அழிவும் அற்றதாக இருந்தது.(11) அது வெளிப்படாத பொருளாகச் சொல்லப்படுகிறது. அது நித்தியமானதாக, சிதைவற்றதாக, மாற்றமில்லாததாக இருக்கிறது. அதன் மூலமே உயிரினங்கள் பிறக்கின்றன, அதன் மூலமே இறக்கின்றன.(12) அது மஹத் என்ற பெயரில் ஒரு தெய்வீகப் பொருளை முதலில் படைத்தது[2].(13) மஹத் நனவுநிலையைப் படைத்தது. அந்தத் தெய்வீகப் பொருள் {மஹத்} வெளியைப் படைத்தது. அந்தப் பலமிக்கப் பொருளே {மஹத்தே}, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.(14) வெளியில் இருந்து நீர் பிறந்தது, நீரில் இருந்து நெருப்பும், காற்றும் பிறந்தன. நெருப்பு மற்றும் காற்றின் கலவையில் பூமி பிறந்தது.(15)

[2] மானஸம் / மானஸர் என்பது மனம் சார்ந்த ஒன்று / ஒருவர் அல்லது விருப்பம் என்பது பொருளாகும். மஹத் என்பது பெரியது / பெரியவர் என்ற பொருளைக் கொண்டதாகும். கும்கோணம் பதிப்பில் மானஸர் என்பது விஷ்ணுவுக்குக் குறிக்கப்படுகிறது.

தான்தோன்றியான மானஸம், ஆற்றலைக் கருவில் கொண்ட ஒரு தெய்வீகத் தாமரையைப் படைத்தது. அந்தத் தாமரையில், வேதப் பெருங்கடலான பிரம்மன் எழுந்தான்[3].(16) அந்தத் தெய்வீகமானவன் பிறந்ததும், "நானே அஃது" என்ற வார்த்தைகளைச் சொன்னான் என்று ஸ்ருதிகள் சொல்கின்றன. இதன் காரணமாக அவன் நனவுநிலை என்ற பெயரில் அழைக்கப்படலானான். அவனே படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தின் உடலாக இருக்கிறான். அவனே அவற்றின் படைப்பாளனாகவும் இருக்கிறான். நாம் காணும் இந்த ஐந்து பூதங்களும் பேராற்றல் கொண்ட அந்தப் பிரம்மனே.(17) மலைகளே அவனது எலும்புகளாக இருக்கின்றன. பூமி அவனது கொழுப்பாகவும், சதையாகவும் இருக்கிறது. பெருங்கடல்கள் அவனது குருதியாக இருக்கின்றன. அண்டவெளி அவனது வயிறாக இருக்கிறது.(18) காற்று அவனது மூச்சாக இருக்கிறது. நெருப்பு அவனது ஆற்றலாக இருக்கிறது. ஆறுகள் அவனது நரம்புகளாக இருக்கின்றன. சூரியன், சந்திரன் என்று அழைக்கப்படும் அக்னியும், சோமனும், அவனது கண்களாகச் சொல்லப்படுகின்றனர்.(19) மேலுள்ள ஆகாயம் அவனது தலையாகச் சொல்லப்படுகிறது. பூமி அவனது இரு கால்களாக இருக்கிறது. அடிவானத்தின் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் அவனது கரங்களாக இருக்கின்றன. அவன் அறியப்பட முடியாதவனாகவும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்களாலேயே உணரப்பட முடியா ஆன்மா கொண்டவனாகவும் இருக்கிறான்.(20) மொத்த அண்டத்திலும் படர்ந்தூடுவியிருக்கும் அந்தத் தெய்வீகமானவன், அனந்தன் (முடிவற்றவன்) என்ற பெயரில் அறியப்படுகிறான். நனவுநிலையில் வாழும் அவன், தூய்மையற்ற ஆன்மா கொண்டோரால் அறியப்பட முடியாதவனாக இருக்கிறான்.(21) உன்னால் கேட்கப்பட்டதால், எவன் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் இருப்புக்கு அழைக்க நனவுநிலையைப் படைத்தவனோ, எவனிலிருந்து இந்த அண்டம் எழுந்ததோ அவனைக் குறித்து இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்" என்றார் {பிருகு}.(22)

[3] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் வேதம் என்ற சொல் அறிவு மற்றும் சக்தி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பரத்வாஜர், "ஆகாயம், அடிவானின் புள்ளிகள், இந்தப் பூமியின் பரப்பு, காற்று ஆகியவற்றின் எல்லை எது? உண்மையை எனக்குச் சொல்வதன் மூலம் என் ஐயங்களைத் தீர்ப்பீராக" என்று கேட்டார்.(23)



பிருகு, "நீ மேலே காணும் வானம் எல்லையற்றதாகும். தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களுக்கும், தெய்வீகமானவர்களுக்கும் அதுவே வசிப்பிடமாக இருக்கிறது. அஃது இனிமை நிறைந்ததாகவும், பல்வேறு உலகங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதன் எல்லைகளை உறுதிப்படுத்த முடியாது.(24) சூரியனாலும், சந்திரனாலும் தங்கள் கதிர்களின் எல்லைக்கு அப்பால் மேலேயோ, கீழேயோ பார்க்க முடியாது. சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் அடைய முடியாத இடங்களில் சூரியனையோ, நெருப்பையோ போன்ற காந்தியைக் கொண்டவையும், தன்னொளி கொண்டவையுமான ஒளிக்கோள்கள்[4] இருக்கின்றன.(25) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அடைவதற்கரிதாக, முடிவிலா எல்லைகளைக் கொண்டதாக இருப்பதன் விளைவால், பரந்த புகழ்பெற்ற காந்தியைக் கொண்ட இவற்றாலும் {ஒளிக்கோள்களாலும்} கூட ஆகாயத்தின் எல்லைகளைக் காண முடியாது.(26) தேவர்களாலும் அளக்க முடியாத இந்த அண்டவெளியில், ஒன்றன் மேல் ஒன்றாகத் தன்னொளி கொண்ட சுடர்மிக்க உலகங்கள் பல இருக்கின்றன.(27) நிலத்தின் எல்லைகளுக்கு அப்பால் பெருங்கடலின் நீர் இருக்கிறது. நீருக்கு அப்பால் இருள் இருக்கிறது. இருளுக்கு அப்பால் நீரே இருக்கிறது, அதற்கும் அப்பால் நெருப்பிருக்கிறது.(28) கீழ்நோக்கி பாதாள உலகங்களுக்கு அப்பால் நீர் இருக்கிறது. அந்த நீருக்கு அப்பால், பெரும்பாம்புகளின் உலகம் இருக்கிறது. அதற்கும் அப்பால் மீண்டும் வானம் இருக்கிறது, வானத்திற்கு அப்பால் மீண்டும் நீர் இருக்கிறது.(29) இவ்வாறே நீரும் வானமும் மாறி மாறி முடிவில்லாமல் இருக்கின்றன. நீரால் பிரதிபலிக்கப்படும் தெய்வீகத்தின் எல்லைகள் இவ்வாறே இருக்கின்றன. நெருப்பு, காற்று மற்றும் நீரின் எல்லைகளைத் தேவர்களாலும் உறுதி செய்ய முடியாது.(30)

[4] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் தேவா என்ற வார்த்தை, ஒளிக்கோள்களையே குறிப்பிடுகின்றனவேயன்றி தேவர்களையோ, தெய்வங்களையோ அல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் இயல்பு அண்டவெளியைப் போன்றதே. உண்மையான அறிவின்மையின் மூலம் அவை தனிப்பட்டவையாகத் தெரிகின்றன.(31) மூன்று உலகங்கள் மற்றும் பெருங்கடலின் எல்லைகளைத் தீர்மானிக்கும் பல்வேறு சாத்திரங்களைத் தவசிகள் படிக்கின்றனர்.(32) எனினும், அடையமுடியாததாகவும், பார்வையால் புரிந்து கொள்ள முடியாதாக இருக்கும் ஒன்றின் எல்லைகள் எவரால் தீர்மானிக்க முடியும்?(33) தேவர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களின் பாதையாக இருக்கும் ஆகாயத்தின் எல்லைகளை உறுதி செய்வது சாத்தியமானால் கூட, அளவற்றதும், முடிவிலி என்ற பெயரால் அறியப்படுவதும், உயர் ஆன்ம மானஸம் என்ற பெயரால் அழைக்கப்படுவதுமான ஒன்றின் அளவுகளை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது.(34) சில வேளைகளில் அதன் வடிவம் சுருங்கி இருக்கிறது, சில வேளைகளில் விரிந்திருக்கிறது, அதற்கு {மானஸத்திற்கு} இணையான ஒன்றைத் தவிர, அதன் எல்லைகளைப் புரிந்து கொள்ள வேறு எவரால் முடியும்?(35) அறத்தின் சாரத்தைக் கொண்டவனாகவும், அசையும் மற்றும் அசையாத பொருட்களின் படைப்பாளனாகவும் அனைத்தையும் அறிந்த தலைவன் பிரம்மன், (நான் ஏற்கனவே சொன்னது போல) அந்தத் தாமரையில் முதன்முதலில் வடிவத்துடன் படைக்கப்பட்டான்" என்றார் {பிருகு}.(36)

பரத்வாஜர், "அந்தத் தாமரையில் இருந்து பிரம்மன் எழுந்ததால், அந்தத் தாமரையே முதலில் பிறந்ததாகக் கருதப்பட வேண்டுமேயன்றி பிரம்மன் கிடையாது. எனினும், பிரம்மன் ஏன் முதல்வனாகச் சொல்லப்படுகிறான்? எனது இந்த ஐயத்தை நீர் நீக்குவீராக" என்று கேட்டார்.(37)

பிருகு, "பூமியே அந்தத் தாமரையாகச் சொல்லப்படுகிறது. பிரம்மனாக மாறிய அந்த மானஸத்தின் வடிவத்திற்கு ஓர் இருக்கை அளிப்பதற்காக அது {அந்தத் தாமரை} படைக்கப்பட்டது.(38) சொர்க்கத்தையே அடைந்த சுமேரு அந்தத் தாமரையின் கர்ணிகையானது[5]. அதிலிருந்தே, பலமிக்க அண்டத் தலைவன் {பிரம்மன்} உலகங்கள் அனைத்தையும் படைத்தான்" என்றார்.(பிருகு}.(38)

[5] கர்ணிகை என்பது தாமரைப் பூவின் நடுவில் இருக்கும் காயாகும் எனக் கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 182ல் உள்ள சுலோகங்கள் : 38

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்