Wednesday, May 30, 2018

தியானயோகம்! - சாந்திபர்வம் பகுதி – 195

Yoga meditation! | Shanti-Parva-Section-195 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 22)


பதிவின் சுருக்கம் : தியான யோகம் குறித்துச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்தி தியானயோகத்தில் ஈடுபடச் செய்யும் வழிமுறைகள் குறித்துச் சொன்னது...


Yoga meditation! | Shanti-Parva-Section-195 | Mahabharata In Tamil
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, இனி நான் தியான யோகத்தின் நான்கு வகைகளைக் குறித்துப் பேசப் போகிறேன். அதைக்குறித்த அறிவை அடைந்த பெரும் முனிவர்கள், இம்மையிலேயே அழிவில்லா வெற்றியை அடைகிறார்கள்.(1) அறிவால் நிறைவடைந்த பெரும் முனிவர்கள், விடுதலையில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, யோகத்தை அறிந்து, தங்கள் தியான யோகம் சரியாகும் வழியில் செயல்படுகின்றனர்.(2) ஓ! பிருதையின் மகனே, உலகக் குற்றங்களில் இருந்து விடுபட்ட அவர்கள், ஒருபோதும் (மறுபிறவிக்காக இங்கே) திரும்பி வருவதில்லை. மறுபிறவியில் இருந்து விடுதலை அடைந்த அவர்கள், தங்கள் இயல்பான ஆன்ம நிலையிலேயே {ஆத்மரூபத்திலேயே} வாழ்கிறார்கள்[1].(3) (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் போன்ற) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டு, (பற்றுகளில் இருந்து) விடுதலையடைந்து, ஒருபோதும் (கொடையாக) எதையும் ஏற்காமல், தங்கள் (இயல்பான) நிலையிலேயே எப்போதும் நீடிக்கும் அவர்கள், மனைவியர் மற்றும் பிள்ளைகளின் தோழமையிலிருந்து விடுபட்டவையும், யாராலும் எந்தச் சச்சரவுகளும் எழாத நிலையில் இருப்பவையும், முற்றான இதய அமைதிக்கு ஏற்ற வகையில் இருப்பவையுமான இடங்களில் வாழ்கின்றனர்.(4) அத்தகைய மனிதன், பேச்சை அடக்கி, தியானத்தின் உதவியால் (பரமாத்மாவிடம்) பிரியாத ஒன்றிய மனத்துடன், தன் புலன்கள் அனைத்தும் நொறுங்கிய ஒரு மரத்துண்டைப் போல அமர்ந்திருக்கிறான்.(5)

[1] "ஆன்ம நிலை என்பது தூய்மையான நிலையாகும். உலகப் பற்றுகளின் விளைவால் ஒருவன் அதிலிருந்து வீழ்கிறான். அந்தப் பந்தங்களில் இருந்து அவனை விடுதலை செய்யத் துணைபுரியும் யோகத்தின் மூலம் அவன் மீண்டும் தூய்மையை அடைகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அவன் காதின் மூலம் எந்த ஒலியையும் உணர்வதில்லை; தோலின் மூலம் எந்தத் தீண்டலையும் உணர்வதில்லை; கண்ணின் மூலம் எந்த வடிவத்தையும் உணர்வதில்லை; நாவின் மூலம் எந்தச் சுவையையும் உணர்வதில்லை.(6) மணத்திற்கு உரிய உறுப்பின் மூலம் அவன் மணங்கள் எதையும் உணர்வதில்லை. யோகத்தில் மூழ்கிய அவன், தியானத்தில் மெய்மறந்து அனைத்துப் பொருட்களையும் கைவிடுகிறான்.(7) பெரும் மனோ சக்தியைக் கொண்ட அவன், ஐம்புலன்களைத் தூண்டக்கூடிய எதையும் விரும்புவதில்லை. ஐம்புலன்களையும் தன் மனத்திற்குள் இழுத்துக் கொள்ளும் ஞானி, உறுதியற்ற தன் மனத்தை அந்த ஐம்புலன்களைக் கொண்டு (அறிவில் {புத்தியில்}) நிலைநிறுத்த வேண்டும் {மனத்தை ஸமாதியிலிருக்கும்படி செய்வான்}.(8) பொறுமையைக் கொண்ட யோகியானவன், எந்தப் பொருட்கள் உறுதியில்லாதவையாக இருக்கின்றனவோ அவை உறுதியடையும் வகையில், (உலகம் சார்ந்த பொருட்களுக்கு மத்தியில்) எப்போதும் திரியும் தன் மனத்தை (பயிற்சியின் ஆதிக்கத்தின் கீழுள்ள) தன் ஐந்து வாயில்களில் {புலன்களில்} நிலைநிறுத்த வேண்டும். அவன், உடலில் இருந்தோ, வேறு எந்தப் புகலிடத்திலிருந்தோ தன் மனத்தைச் சார்பற்றதாகச் செய்து, இதய ஆகாயத்தின் யோகப் பாதையில் அதை {இதயத்தை} நிலைநிறுத்த வேண்டும்[2].(9) யோகியானவன், முதலில் தன் புலன்களையும், மனத்தையும் நொறுக்கி (தியானப் பாதையில் செலுத்த வேண்டும்) என்பதால், நான் முதலில் தியானப் பாதையைக் குறித்துப் பேசினேன்.(10)

[2] கும்பகோணம் பதிப்பில், "தீரனான மனிதன் விஷயங்களில் ஓடும் தன்மையுள்ளதும், பிடிப்பற்றதும், ஐந்து இந்திரியங்களையும் வழியாகக் கொண்டதும், ஸ்திரமில்லாத வஸ்துக்களில் ஸ்திரமாயிருப்பதுமான மனத்தை முதலில் தியான வழியில் நிலைபெறும்படி செய்ய வேண்டும். இந்த மனிதன் எப்பொழுது இந்திரியங்களையும் மனத்தையும் திரட்டி ஒன்றாகச் சேரும்படி செய்கிறானோ அப்பொழுது இது முதன்மையான த்யானவழியாகிறதென்று என்னால் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.



{புலன்களைத் தவிர்த்து} ஆறாவதாக இருக்கும் மனமானது இவ்வாறு அடக்கப்படும்போது, மேகங்களுக்கு மத்தியில் களித்தாடி கணிக்கப்படமுடியாத வேகத்தில் நகரும் மின்னலைப் போல மின்ன முனைகிறது.(11) ஒரு (தாமரை) இலையில் உள்ள நீர்த்துளி எவ்வாறு நிலையில்லாமல் அனைத்துத் திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கிறதோ, அவ்வாறே அந்த யோகியின் மனமும் தியானப் பாதையில் முதலில் நிலைக்கச் செய்யப்படும்போது {அப்பாதையில்} அலைபாய்கிறது.(12) இவ்வாறு நிலைக்கச்செய்யப்படும்போது, அந்த மனமானது சிறிது நேரத்திற்கு அந்தப் பாதையில் நிலைத்திருக்கிறது. எனினும், அது மீண்டும் காற்றின் பாதையில் சுற்றும்போது, காற்றைப் போலவே அது வேகம் கொள்கிறது.(13) தியான யோகத்தின் வழிகளை நன்கறிந்த மனிதன், இதனால் உற்சாகமிழக்காமல், உழைப்பு வீணானதை ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், சோம்பலையும், வன்மத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் தன் மனத்தைத் தியானத்தில் செலுத்த வேண்டும்.(14) ஒருவன், அமைதிநோன்பை {மௌனவிரதத்தை} நோற்று யோகத்தில் தன் மனத்தை நிலைபெறச் செய்யத் தொடங்கும்போது, பகுத்தறிவு {விகாரஸமாதி}, ஞானம் {விதர்க்கஸமாதி}, தீமையைத் தவிர்க்கும் சக்தி {விவேகஸமாதி} ஆகியவை அவனால் ஈட்டப்படுகின்றன[3].(15)

[3] "இங்கே விசாரம் vichaara, விவேகம் viveka மற்றும் விதர்க்கம் vitarka ஆகிய மூன்று சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை யோக முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகளைக் குறிக்கும் நுட்பமான சொற்களாகும். உரையாசிரியர் அவற்றை விரிவாக விளக்கியிருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "த்யானயோகத்தைத் தெரிந்து கொண்ட மனிதன் (இதில்) வெறுப்பில்லாமலும், வருத்தமில்லாமலும், சோம்பலில்லாமலும், மத்ஸரமில்லாமலும் திரும்பவும் மனத்தை த்யானத்துடன் சேர்த்து வைக்க வேண்டும். முதலாவதான த்யான வழியை அடைந்து ஸமாதியிலிருக்கும் யோகிக்கு ஆரம்பத்தில் விசாரஸமாதியும், விதர்க்கஸமாதியும், விவேகஸமாதியுமுண்டாகும்.

மனோவேகத்தின் விளைவாக எரிச்சலை உணர்ந்தாலும், அவன் அதை {மனத்தை} (தியானத்திலேயே) நிலைநிறுத்த வேண்டும். அந்த யோகி, ஒருபோதும் நம்பிக்கையை இழக்காமல், தன் நன்மையை நாட வேண்டும்.(16) புழுதி, அல்லது சாம்பல், அல்லது எரிக்கப்பட்ட சாணக் குவியல் நீரால் நனைக்கப்படும்போது நனையாதிருப்பதாகத் தோன்றி,(17) உண்மையில், அரைகுறையாக நனைக்கப்படும்போது காய்ந்ததாகவே இருந்து, அவை {சாம்பற்குவியல்கள்} முற்றாக நனையும் முன் இடையறாமல் தொடர்ந்து நனைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பது போல,(18) அந்த யோகியும் தன் புலன்களைப் படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அவன் அவற்றை {புலன்களை} (அனைத்துப் பொருட்களில் இருந்தும்) படிப்படியாக விலக்க வேண்டும். இவ்வழியில் செயல்படும் மனிதன் அவற்றை {புலன்களைக்} கட்டுப்படுத்துவதில் வெல்கிறான்.(19) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் தன் மனத்தையும், புலன்களையும் தானே தியானப் பாதையில் செலுத்துவதால், உறுதிமிக்க யோகத்தின் மூலம் அவற்றை {புலன்களை} முழுக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதில் வெல்கிறான்.(20) தன் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதில் எவன் வெல்கிறானோ, அவன் முயற்சியாலோ, விதியாலோ ஒருபோதும் அடைய முடியாத இன்பநிலையை உணர்வான்[4].(21) அத்தகைய இன்பநிலையில் ஒன்றியிருக்கும் அவன், தியானச் செயல்பாட்டில் தொடர்ந்து மகிழ்கிறான். இவ்வாறே யோகிகள் அருள்மிக்க உயர்ந்த நிலையான நிர்வாணத்தை அடைகின்றனர்" என்றார் {பீஷ்மர்}.(22)

[4] "மனிதன் கொண்டிருக்கும் அனைத்தும் முயற்சி அல்லது விதியால் கிடைத்த விளைவே ஆகும்; அதாவது வெளிப்படையான செயல்பாடுகளில் செய்யப்படும் முயற்சி மற்றும் முற்பிறவியின் செயல்களைச் சார்ந்த விதி, அல்லது தேவர்களின் விருப்பம் அல்லது வெறும் வாய்ப்பின் மூலம் கிடைக்கும் பொருட்களே ஆகும். யோகத்தின் இன்பநிலை என்பது இவ்விரண்டு வழிமுறைகளால் அடையப்பட முடியாததாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 195ல் உள்ள சுலோகங்கள் : 22

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்