Thursday, May 31, 2018

ஜபம்! - சாந்திபர்வம் பகுதி – 196

Silent recitation! | Shanti-Parva-Section-196 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 23)


பதிவின் சுருக்கம் : ஜபம் செய்வதன் பலன்களையும், அவை செய்யப்பட வேண்டிய வழிமுறைகளையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Silent recitation! | Shanti-Parva-Section-196 | Mahabharata In Tamil
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "நீர் நால்வகை வாழ்வு முறைகள் {ஆசாரங்கள்} மற்றும் அவற்றின் கடமைகளைக் குறித்து உரையாடினீர். அதே போல மன்னர்களின் கடமைகளைக் குறித்தும் உரையாடினீர். பல்வேறு வகை வரலாறுகளையும், அவை தொடர்பான பல்வேறு காரியங்கள் குறித்தும் உரைத்தீர்.(1) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, அறநெறி தொடர்பான பல்வேறு உரைகளையும் நான் உம்மிடம் இருந்து கேட்டிருக்கிறேன். எனினும், எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது. அதைத் தீர்த்து வைப்பதே உமக்குத் தகும்.(2) ஓ! பாரதரே, அமைதியாகப் புனித மந்திரங்களை ஓதுபவர்கள் {ஜபம் செய்பவர்கள்} (தங்கள் நடைமுறையால்) அடையும் கனிகளைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். அத்தகைய மனிதர்களுக்குக் குறிப்பிடப்படும் கனிகள் என்னென்ன? அவர்கள் இறந்த பிறகு எந்த உலகத்திற்குச் செல்வார்கள்?(3) ஓ! பாவமற்றவரே, அத்தகைய அமைதியான {மந்திர} ஓதலுக்கு {ஜபத்திற்கு} விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓதுவார் {ஜபிப்பவர்} என்ற சொல்லைக் கேட்கும்போது, அதன் மூலம் நான் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? அத்தகைய மனிதன், சாங்கிய, அல்லது யோக, அல்லது கர்ம விதிகளைப் பின்பற்றுபவனாகக் கருதப்பட வேண்டுமா?[1](4) அல்லது, அத்தகைய மனிதன் (மனோ) வேள்விகளுக்குரிய விதிகளை நோற்பவனாகக் கருதப்பட வேண்டுமா? ஓதுவார்களின் {ஜபிப்பவர்களின்} பாதை எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்? அண்ட அறிவைக் கொண்டவரென என்னால் கருதப்படும் நீர், இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)

[1] "சாங்கியம் என்பது வேதாந்த விசாரத்தைக் குறிப்பால் உணர்த்துகிறது என உரையாசிரியர் புரிந்து கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, யமன், காலன் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிராமணருக்கு இடையில் என்ன நிகழ்ந்தது என்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது[2].(6) விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை அறிந்த தவசிகள், சாங்கியம், யோகம் என்ற இரு வழிமுறைகளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். இவற்றில், வேதாந்தம் என்றும் அழைக்கப்படும் முன்னதில் {சாங்கியத்தில்), அமைதியான ஓதல் {ஜபம்} என்பதைப் பொறுத்தவரை துறவே போதிக்கப்படுகிறது. (சடங்குகளில் இருந்து) விலகப் போதிக்கும் வேதங்களின் அறிவிப்புகள், அமைதி நிரம்பியவையாகவும், பிரம்மம் தொடர்பானவையாகவும் இருக்கின்றன[3].(7) நன்மை அடைய தவசிகளால் சுட்டப்படும் சாங்கியம் {ஞானம்} மற்றும் யோகம் ஆகிய இரு பாதைகளும், (அமைதியான ஓதல்களுக்கு) தொடர்பானதாகவும், தொடர்பில்லாததாகவும் இருக்கின்றன[4].(8)

[2] இந்தக்கதை சாந்தி பர்வம் பகுதி 199ல் விவரிக்கப்படுகிறது.
[3] "இந்தச் சுலோகம் மூன்று வரிகளைக் கொண்டதாக இருக்கிறது. இரண்டாம் வரியில் உள்ள வேதாந்தம் என்பது சாங்கியம் என்ற பொருளைக் கொண்டது என்று உரையாசிரியர் விளக்குகிறார். பிற காரியங்களில் வேதாந்தத்துக்கும், சாங்கியத்திற்கும் இடையில் வேறுபாடுகள் இருந்த போதிலும் இக்காரியத்தில் ஒத்துப் போவதால் இவ்வாறு சொல்லப்படுகிறது என நான் நினைக்கிறேன். சாங்கியத்தின்படி, மந்திரங்களை அமைதியாக உரைப்பதற்கான அவசியம் இல்லை என்பதைச் சொல்வதே இந்தச் சுலோகத்தின் நோக்கமாகும். குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொல்லாமல் செய்யப்படும் மனோ தியானமானது பிரம்மத்திற்கு வழிவகுக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "ஒருவன் தன் ஆன்மாவைக் காண்பதில் வெல்லாதவரை, அவன் பிரணவத்தையோ, மூலச் சொல்லான ஓம் என்பதையோ அமைதியாக ஓதலாம் என்று இரண்டும் {சாங்கியமும், யோகமும்} அறிவிக்கின்றன என உரையாசிரியர் விளக்குகிறார். எனினும், அவன் தன் ஆன்மாவைக் காண்பதில் வெல்லும்போது, அவன் அத்தகைய ஓதலைக் கைவிடலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



(அந்த இரு பாதைகளிலும்) அமைதியான ஓதல் {ஜபம்} தொடர்பு கொண்டிருக்கும் முறையையும் {பிரவிருத்தி தர்மத்தையும்}, அதன் காரணத்தையும் நான் இப்போது விளக்கப் போகிறேன். அமைதியான ஓதலை {ஜபத்தைப்} பொறுத்தவரையில், இவ்விரண்டிலும் {சாங்கியம் மற்றும் யோகம் ஆகியவற்றில்}, புலன்களைக் கட்டுப்படுத்துவது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கி) மனத்தை நிலைநிறுத்துவது;(9) வாய்மை, (புனித) நெருப்பைப் பராமரித்தல், தனிமையில் வசித்தல், தியானம், தவம், தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, நன்மை செய்வதில் மனநாட்டம், உணவில் அளவோடிருத்தல்,(10) உலகம் சார்ந்த பற்றுகளில் இருந்து விலகல், பேசிக்கொண்டே இருப்பதைத் தவிர்த்தல், அமைதி ஆகியன அவசியமாகும். இவை (மறுபிறவியில் இன்பநிலைக்கோ, சொர்க்கத்திற்கோ செல்வது குறித்த ஆசையின் கனிக்கு வழிவகுக்கும்) ஒரு வேள்விக்கான {ஜபயஜ்ஞத்திற்கான} செயல்களாகும். (செயல்களில் இருந்து) விடுபடுவது தொடர்பான நடைமுறையை {நிவிருத்தி தர்மத்தை} இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.[5](11)

[5] "ஒருவன் இந்த உலகத்தில் பின்பற்றக்கூடிய இரு பாதைகள் இருக்கின்றன. ஒன்று பிரவிருத்தி தர்மம் மற்றும் மற்றொன்று நிவிருத்தி தர்மம் என்றும் அழைக்கப்படுகின்றன. முதல் வழியானது செயல்களின் நடைமுறையாகும்; இரண்டாவது செயலில் இருந்து விடுபடுவதாகும். சுலோகங்கள் 10 மற்றும் 11ல் சொல்லப்படும் பண்புகள் முதல் வழிக்குச் சொந்தமானவையாகும். எனவே பிரவிருத்தி அல்லது செயலை மூலமாகக் கொண்ட அவை பிரவர்த்தக யஜ்ஞம் அல்லது வேள்வி என்றழைக்கப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிரம்மச்சரிய நோன்பை நோற்று {புனித மந்திரங்களை} ஓதுபவனின் செயல்கள் {ஜபயஜ்ஞகர்மம்} நிற்கும் வகையைக் குறித்து நான் இப்போது அறிவிக்கப் போகிறேன். அத்தகைய மனிதன், என்னால் (ஏற்கனவே) சொல்லப்பட்ட ஒவ்வொரு வழியின்படியும் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்[6].(12) துறவுப் பாதையில் நடக்கும் ஒருவன், புறம் மற்றும் அகச் சார்புகள் இரண்டையும் விடுவதில் முனைய வேண்டும்.(13) குசப்புல்லில் அமர்ந்து, கையில் குசத்துடன், அவனது சடாமுடியை குசத்தால் கட்டி, தன்னைச் சுற்றிலும் குசத்தை வைத்துக் கொண்டு அவன் குச ஆடைகளை உடுக்க வேண்டும்.(14) உலகம் சார்ந்த அனைத்தையும் வணங்கும் அவன், அவற்றில் இருந்து விடுபட்டு, ஒருபோதும் அவற்றை நினைக்காமல் இருக்க வேண்டும். தன் மனத்தின் துணையுடன் சமநிலையை அடையும் அவன், தன் மனத்தை அந்த மனத்திலேயே நிலைநிறுத்த வேண்டும்.(15)

[6] "அஃதாவது, அவன் முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள அறங்களை நோற்று தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உயர்ந்த நன்மையைத் தரும் (காயத்ரி என்ற) தொகுப்பை உரைத்துக் கொண்டும், அறிவின் துணையுடன் அவன் பிரம்மத்தை மட்டுமே தியானிக்க வேண்டும். அதன் பிறகு அவன், அதையும் கைவிட்டு, குவிந்த தியானத்தில் ஈர்க்கப்பட்டவனாக இருக்க வேண்டும்.(16) அவன் ஓதும் காயத்ரி {மந்திர} பலத்தைச் சார்ந்திருப்பதன் விளைவாக, குவிந்த தியானமானது தானே அவனுக்குக் கைக்கூடும். அவன் தவங்களின் மூலம் ஆன்மத் தூய்மை, தற்கட்டுப்பாடு, வெறுப்பின்மை மற்றும் ஆசைகளை அடைகிறான்.(17) பற்று மற்றும் மாயையிலிருந்து விடுபட்டு, (வெப்பம், குளிர், இன்ப துன்பம் போன்ற) முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கங்கள் அனைத்திற்கும் மேம்படும் அவன், ஒருபோதும் வருத்தம் அடையாமலும், உலகப் பொருட்களை நோக்கி இழுக்கப்படாமலும், ஒரு போதும் துன்பமடையாமலும் இருக்கிறான். அவன் தன்னைச் செயல்படுபவனாகவோ, தன் செயல்களின் விளைவுகளாலும் இன்புறுபவனாகவோ, துன்புறுபவனாகவோ கருதிக் கொள்வதில்லை.(18) தன்னலத்தின் மூலம் அவன் ஒருபோதும் வேறெதிலும் தன் மனத்தை நிலைநிறுத்துவதில்லை. செல்வத்தை அடைவதில் ஈடுபடாமல் இருக்கும் அவன், பிறரை அலட்சியம் செய்வதையோ, அவமதிப்பதையோ தவிர்க்கிறானேயன்றி செயல்படுவதைத் தவிர்ப்பதில்லை.(19)

அவன் தியானத்தில் ஈடுபடவே செயல்படுகிறான்; அவன் தியானத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான, மாறாத தியான நாட்டம் கொண்டவனாக இருக்கிறான். அவன் தியானத்தின் மூலம் குவிந்த தியான {ஸமாதி} நிலையை அடைந்து, படிப்படியாக {காலகர்மத்தில்} தியானத்தையே கைவிடுகிறான்.(20) அந்நிலையில் அவன் அனைத்துப் பொருட்களையும் கைவிடுவதால் உண்டாகும் இன்பநிலையை அனுபவிக்கிறான். ஆசையின் கோட்பாடுகளில் முழுமையான திறன் பெற்ற அவன் தன் உயிர் மூச்சுகளை {ப்ராணன்களைக்} கைவிட்டுப் பிரம்மவுடலில் {ப்ரம்மரூபமானசரீரத்தில்} நுழைகிறான்.(21) அல்லது, அவன் பிரம்மவுடலுக்குள் நுழைய விரும்பவில்லையெனில், உடனே அவன் பிரம்மலோகத்திற்கு மேல்நோக்கி {தேவயானமென்னும் மார்க்கத்தில்} சென்று, மறுபிறப்பென்பதை மீண்டும் ஒருபோதும் அடையாமல் இருக்கிறான்.(22) அமைதித்தன்மையை {ஆத்மஞானத்தை} அடைந்து, அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் விடுபட்ட அத்தகைய மனிதன், தன் நுண்ணறிவைச் சார்ந்திருந்து, தூயதும், அழிவற்றதும், ஒரு களங்கமும் அற்றதுமான ஆன்மாவை அடைவதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(23)

சாந்திபர்வம் பகுதி – 196ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்