Friday, June 01, 2018

ஜபமும் மறுபிறவிகளும்! - சாந்திபர்வம் பகுதி – 197

Silent recitation and rebirths! | Shanti-Parva-Section-197 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 24)


பதிவின் சுருக்கம் : விதிப்படி ஜபிக்காதவன் அடையும் நரகங்களை யுதிஷ்டிரனுக்குப் பட்டியலிட்ட பீஷ்மர்...


Silent recitation and rebirths! | Shanti-Parva-Section-197 | Mahabharata In Tamil
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஜபம் செய்பவன் அடையும் உயர்ந்த கதியை நீர் சொன்னீர். இது மட்டுமே அவர்களது ஒரே கதியா? அல்லது அவர்கள் அடையக்கூடிய வேறேதும் கதிகள் உள்ளனவா?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பலமிக்க ஏகாதிபதியே, ஓ! மனிதர்களில் காளையே, ஜபம் செய்பவர்கள் அடையும் கதியையும், அவர்கள் மூழ்கும் பல்வேறு வகையான நரகங்களையும் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(2) ஜபம் செய்யும் எந்த மனிதன், வழிமுறைப்படி விதிக்கப்பட்டுள்ள நடத்தையில் நடந்து கொள்ள வில்லையோ, எவன் விதிக்கப்பட்ட சடங்கு, அல்லது ஒழுக்க நடைமுறையில் முழுமையாக நடந்து கொள்ள வில்லையோ, அவன் நரகத்திற்குச் செல்வான்[1].(3) நம்பிக்கையில்லாமல் ஜபம் செய்பவன், தன் செயல்பாட்டில் நிறைவில்லாதவன், அதில் எந்த மகிழ்ச்சியும் கொள்ளாதவன் ஐயமில்லாமல் நரகத்திற்குச் செல்வான்.(4) தங்கள் இதயங்களில் செருக்குடன் சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நரகத்திற்கே செல்வார்கள். ஜபம் செய்பவன் பிறரை அலட்சியம் செய்பவனாகவும், அவமதிப்பவனாகவும் இருந்தால், அவன் நரகத்திற்குச் செல்வான்.(5) ஜபம் செய்யும் மனிதன், உணர்வு முழுக்க ஆதிக்கத்தின் கீழும், கனியில் {பலனில்} உள்ள விருப்பத்தின் கீழும் அதில் ஈடுபட்டால், தன் இதயத்தில் இருக்கும் அந்தப் பொருட்கள் அனைத்தையும் அடைவான்[2].(6)

[1] இங்கே குறிப்பிடப்படும் நரகம், விடுதலை {முக்தி} என்பதற்கு எதிர்ப்பதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஜபிப்பவன் சொர்க்கத்தின் இன்பங்களை அடையலாம், ஆனால் விடுதலையை ஒப்பிடும்போது, மறுபிறப்போடு தொடர்புடைய எதுவும் நரகமேயாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "இதுவும் மறுபிறப்போடு தொடர்புடையது என்பதால் ஒருவகை நரகம் தான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தெய்வப் பெயரைக் கொண்ட பண்புகளில் தன் இதயத்தை நிலைக்கச் செய்து ஜபம் செய்பவனும் நரகத்திற்கே சென்று, அதில் இருந்து ஒருபோதும் விடுபடமாட்டான்[3].(7) (உலகம் சார்ந்த நோக்கங்களான செல்வம், மனைவியர் போன்ற) பற்றுகளின் ஆதிக்கத்தின் கீழ் ஜபம் செய்பவன், தன் இதயத்தில் நிலைபெற்றிருக்கும் அந்த நோக்கங்களை அடைவான்.(8) தீய அறிவும், தூய்மையற்ற ஆன்மாவும் கொண்டு, நிலையில்லா மனத்துடன் பணியில் ஈடுபட்டு ஜபம் செய்யும் ஒருவன், நிலையற்ற கதியை அடைவான், அல்லது நரகத்திற்குச் செல்வான்.(9) ஞானமில்லாதவனும், மூடனுமான ஒருவன் ஜபம் செய்தால், மலைப்படையவோ, மாயைவசப்படவோ செய்வான்; அத்தகைய மாயையின் விளைவால் நரகத்திற்குச் சென்று வருந்துவான்.(10) உறுதியான இதயம் கொண்ட ஒரு மனிதன், முழு ஒழுக்கத்துடன் ஜபம் செய்தாலும், தங்கள் தீய குணத்தால், நேர்மையான நம்பிக்கையில்லாமல் பலவந்தமாகப் பற்றுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு {ஜப} நிறைவை அடையாமல் இருந்தால், அவனும் நரகத்திற்கே செல்வான்" என்றார் {பீஷ்மர்}.(11)

[3] "ஐஸ்வர்யம், அல்லது கடவுள் பண்புகள் என்பன நிச்சயம் யோகிகள் மற்றும் ஜபம் செய்பவர்கள் அடையப்படும் இயல்புக்குமிக்க சக்திகளே ஆகும். அவை வடிவில் சிறியதாகவோ, பெரியதாகவோ ஆவதற்கும், நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்வதற்கும், இதுபோன்ற அமானுஷ்ய செயல்களுக்கும் உதவும் சக்திகளாகும். இவையும் மறுபிறப்புடன் தொடர்புடையதால் நரகமேயாகும். விடுதலை {முக்தி}, அல்லது பரமாத்மாவுக்குள் ஈர்க்கப்படுதல் ஆகிய நிலைகளைத் தவிர்த்த வேறெந்த கதியும் முனையப்படக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஜபஞ்செய்கிறவன் அணிமா முதலிய ஐச்வர்யங்களில் பற்றுதலுடன் எந்த ஐச்வர்யத்தில் ஆசை பெற்றிருக்கிறானோ அந்த ஐச்வர்யத்தின் ஆசையே அவனுக்கு நரகமாகும். அந்த மனிதன் அவ்வாசையிலிருந்து விடுதலை பெற மாட்டான்" என்றிருக்கிறது.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஜபம் செய்யும் ஒருவன், (படைக்கப்பட்ட எந்தப் பொருளையும் போலல்லாமல்) தன்னியல்பில் நிலைத்திருப்பதும், உயர்ந்ததும், விவரிக்க முடியாததும், புலப்பட முடியாததும் {நினைத்துப் பார்க்க முடியாததும்}, ஜபம் மற்றும் தியானத்தின் காரியமாக அமைந்திருக்கும் ஓம் எனும் அசையில் வசிப்பதுமான சாரத்தை அடையும்போது, (உண்மையில், ஜபம் செய்பவர்கள் பிரம்ம நிலையை அடையும்போது), அவர்கள் ஏன் உடல்கொண்ட வடிவங்களில் மீண்டும் மறுபிறப்படைய வேண்டியிருக்கிறது" என்று கேட்டான்.(12)

பீஷ்மர், "உண்மை அறிவும், ஞானமும் இல்லாததன் விளைவால் ஜபம் செய்பவர்கள் பல்வேறு நரகங்களை அடைகிறார்கள். ஜபம் செய்பவர்கள் பின்பற்றும் ஒழுக்கங்கள் நிச்சயம் மிக மேன்மையானவையாகும். எனினும், நான் சொன்னவை அனைத்தும் குற்றங்களால் நேர்பவையாகும்" என்றார் {பீஷ்மர்}.(13)

சாந்திபர்வம் பகுதி – 197ல் உள்ள சுலோகங்கள் : 13

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்