Thursday, June 07, 2018

ஜபிப்பவர்களின் கதி! - சாந்திபர்வம் பகுதி – 200

The end of reciters! | Shanti-Parva-Section-200 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 27)


பதிவின் சுருக்கம் : பிராமணரும், இக்ஷ்வாகுவும் அடைந்த கதியைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டின்; இருவரும் வெகுமதிகளை அடைந்து பிரம்மலோகத்தை அடைந்தது; அவர்கள் உயிரை விட்ட வழிமுறை; அவர்களைப் பிரம்மன் வரவேற்ற விதம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, விரூபன் பேசி முடித்ததும், அந்தப் பிராமணராலோ, அந்த ஏகாதிபதியாலோ {இக்ஷ்வாகுவாலோ} அவனுக்கு என்ன மறுமொழி கொடுக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்வீராக.(1) உம்மால் விவரிக்கப்பட்ட கதிகளுள் அவர்கள் அடைந்த கதியென்ன? உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் என்ன? அங்கே அவர்கள் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(2)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தப் பிராமணர், "நீ சொன்னதுபோலவே ஆகட்டும்" என்று சொல்லி தர்மன், யமன், காலன், மிருத்யு, சொர்க்கம் ஆகியவர்களையும், வழிபாட்டுக்குத் தகுந்த அனைவரையும் வழிபட்டார்.(3) தம்மை வணங்கி அங்கே வந்திருந்த முதன்மையான பிராமணர்களை அனைவரையும் அவர் வழிபட்டார். பிறகு அந்த ஏகாதிபதியிடம் பேசிய அவர், "ஓ! அரசமுனியே, என் ஜபங்களுக்கான வெகுமதிகளுடன் கூடிய நீ உயர்ந்த நிலையை அடைவாயாக. நீ சென்றதும் நான் என்னை மீண்டும் ஜபங்களில் நிறுவிக் கொள்வேன்.(5) ஓ! பெரும் வலிமைமிக்கவனே, "ஜபத்தில் உனது அர்ப்பணிப்புத் தொடர்ச்சியானதாக இருக்கட்டும்" என்று சாவித்திரி தேவி எனக்கு வரமளித்திருக்கிறாள்" என்றார்.(6)

மன்னன்  {இக்ஷ்வாகு}, "(ஜபத்தின் கனிகளை எனக்குக் கொடுத்துவிட்டதன் விளைவால்) உமது வெற்றிக் கனியற்றதாக இருந்தால், உமது இதயம் மீண்டும் பயிற்சியில் நிலைக்க வேண்டுமானால், என்னிடம் பாதி, பாதியைப் பகிர்ந்து கொண்டு, உமது ஜபங்களின் வெகுமதியை அடைவீராக" என்றான்[1].(7)

[1] "இரண்டாம் வரியில் உள்ள சார்த்தம் என்பது மறுக்கத்தக்கதல்ல; அல்லது அவ்வாறே எடுத்துக் கொள்ளப்பட்டாலும் பொருளில் எந்த மாறுபாடும் ஏற்படாது. இங்கே அந்த ஏகாதிபதி, தான் வென்ற வெகுமதிகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அந்தப் பிராமணரை அழைக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உமது மந்த்ரஸித்தியானது இவ்விதம் பயனுள்ளதாயிருந்து உமக்கும் ஜபிக்க வேண்டியதற்கு ச்ரத்தையிருக்குமாகில், அதை அடையும். என்னுடன் கூட ஜபத்திற்குரிய பயனைப் பெற்றுக் கொள்ளும்" என்றிருக்கிறது.

அதற்கு அந்தப் பிராமணர், "(உன் செயல்பாடுகளின் விளைவுகளால் நீ அடைந்த வெகுமதிகளை என்னோடு பகிர்ந்து கொள்ள) இம்மனிதர்கள் அனைவரின் முன்னிலையிலும் நீ தளர்வுறாமல் முயற்சி செய்திருக்கிறாய். எனவே, (மறுமையில்) நமது வெகுமதிகள் நமக்கிடையில் சமமானவையாக இருக்கட்டும். நாம் நமது கதியை அடைவோமாக" என்றார்.(8)

தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவர்கள் அடைந்த தீர்மானத்தை அறிந்து லோகபாலர்கள் மற்றும் தேவர்களின் துணையுடன் அந்த இடத்திற்கு வந்தான்.(9) சத்யஸ்கள், விஸ்வர்கள், மந்திரர்கள், பல்வேறு வகை இசைகள், ஆறுகள், மலைகள், கடல்கள், புனித நீர்நிலைகள்,(10) தவங்கள், யோகம் குறித்த விதிமுறைகள், சாம வேத வரிகளைப் பாடுவதற்குத் துணை புரியும் ஒலிகள், சரஸ்வதி, நாரதர், பர்வதர், விஸ்வாவசு, ஹாஹாக்கள், ஹுஹூக்கள்,(11) குடும்பத்துடன் கூடியவனான கந்தர்வன் சித்திரசேனன், நாகர்கள், சித்தர்கள், முனிவர்கள், தேவர்களின் தேவனான பிரஜாபதி ஆகியோரும்,(12) நினைத்தற்கரியவனும், ஆயிரம் தலைகளைக் கொண்டவனுமான விஷ்ணுவும் அங்கே வந்தனர். ஆகாயத்தில் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(13) உயர் ஆன்மா கொண்ட அவர்கள் மீது தெய்வீகப் பூமாரி பொழியப்பட்டது. சுற்றிலும் அப்சரஸ் கூட்டங்கள் ஆடிக் கொண்டிருந்தனர்.(14)

சொர்க்கமானவன், தன் உடல்வடிவத்துடன் அங்கே வந்தான். அந்தப் பிராமணரிடம் பேசிய அவன் {சொர்க்கம்}, "நீர் வெற்றியை அடைந்தீர். நீர் உயர்வாக அருளப்பட்டிருக்கிறீர்" என்றான். அடுத்ததாக அந்த ஏகாதிபதியிடம் {இக்ஷ்வாகுவிடம்} அவன் {சொர்க்கம்}, "ஓ! மன்னா, நீயும் வெற்றியடைந்தாய்" என்றான்.(15)



ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இருவரும் (அந்தப் பிராமணரும், மன்னனும்) ஒருவருக்கொருவர் நன்மை செய்து, உலக நோக்கங்களில் இருந்து தங்கள் புலன்களை விலக்கிக் கொண்டனர்.(16) பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகிய உயிர்மூச்சுகளை {வாயுக்களைத்} தங்கள் இதயங்களில் {மனத்தில்} நிலைக்கச் செய்த அவர்கள், ஒன்றுகலந்த பிராணன் மற்றும் அபானனில் மனத்தை குவித்தார்கள்.(17) பிறகு அவர்கள் ஒன்று கலந்த அந்த இரு மூச்சுகளையும் வயிற்றில் நிறுத்தி, தங்கள் பார்வையை மூக்கு நுனியில் செலுத்தி, மெல்ல இரு புருவங்களுக்குக் கீழே அவற்றைச் செலுத்தினார்கள். பிறகு அவர்கள், தங்கள் மனத்தின் துணைகொண்டு அந்த இரு மூச்சுக்காற்றுகளையும் படிப்படியாகத் தங்கள் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.(18) முற்றிலும் செயலற்ற உடல்களுடன் அவர்கள் தங்கள் நிலைத்த பார்வையிலேயே மூழ்கியிருந்தார்கள் {லயித்திருந்தார்கள்}. தங்கள் ஆன்மாக்களின் கட்டுப்பாட்டைக் கொண்ட அவர்கள், மூளையில் தங்கள் ஆன்மாவை நிறுத்தினார்கள்.(19) அப்போது அந்த உயர் ஆன்ம பிராமணரின் மகுடத்தை {பிரம்மரந்தரஸ்தானத்தைப்} பிளந்து கொண்டு ஒரு காந்திமிக்க ஒளித்தழல் {ஜ்யோதியின் ஜ்வாலை} சொர்க்கத்திற்கு உயர்ந்தது.(20)

அனைத்து உயிரினங்களின் துன்ப ஓலங்களும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. அனைவராலும் துதிக்கப்பட்ட அந்தக் காந்தி {ஜ்யோதி}, பிரம்மனின் சுயத்துக்குள் நுழைந்தது.(21) அப்போது எதிர்கொண்டு சென்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, ஒரு சாண் உயரமுள்ள வடிவத்தை ஏற்றிருந்த அந்தக் காந்தியிடம் {ஒளியிடம்}, "நல்வரவு" என்று சொல்லி,(22) மீண்டும் இந்த இனிய வார்த்தைகளைச் சொன்னான்: "உண்மையில், ஜபிப்பவர்களும் யோகிகளின் அதே கதியையே அடைவார்கள்.(23) (இங்கே திரண்டிருக்கும்) இவை அனைத்தையும் நேரடியாகப் பார்ப்பதே, யோகி அடையும் கதியாகும். ஜபிப்பவர்களைப் பொறுத்தவரையில், ஒரு வேறுபாடு இருக்கிறது. (அவர்கள் பூமியில் இருந்து புறப்பட்டதும்) பிரம்மனே எதிர்கொண்டு வந்து அழைக்கும் கௌரவம் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.(24) நீ என்னில் வசிப்பாயாக" என்றான். இவ்வாறு பேசிய பிரம்மன் மீண்டும் அந்த ஒளிக்கு நனவுநிலையைக் கொடுத்தான். உண்மையில், அந்தப் பிராமணர், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு படைப்பாளனின் வாய்க்குள் நுழைந்தார்.(25)

அந்த ஏகாதிபதியும் {இக்ஷ்வாகுவும்}, அந்த முதன்மையான பிராமணரைப் போலவே அதே வழியில் தெய்வீகப் பெரும்பாட்டனுக்குள் நுழைந்தான்.(26) (அங்கே திரண்டிருந்த) தேவர்கள் அந்தத் தான்தோன்றியை {சுயம்புவை} வணங்கி, "ஜபிப்பவர்களுக்கு உண்மையில் மேன்மையான கதியே விதிக்கப்பட்டிருக்கிறது.(27) (நாங்கள் காண நீர் செய்திருக்கும்) இந்த முயற்சியானது ஜபிப்பவர்களுக்கானதாகும். எங்களைப் பொறுத்தவரையில், இதைக் காணவே நாங்கள் இங்கே வந்தோம். சமமானவர்களான இவ்விருவருக்கும் சம கௌரவத்தைக் கொடுத்து, சமகதியையே அவர்களுக்கு அளித்திருக்கிறீர்.(28) யோகிகள் மற்றும் ஜபிப்பவர்கள் அடையும் உயர்ந்த கதியை நாங்கள் இன்று கண்டோம். (இன்ப) உலகங்கள் அனைத்தையும் விஞ்சி செல்லும் இவர்கள் இருவரும் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல வல்லவர்களாக இருப்பார்கள்" என்றனர் {தேவர்கள்}.(29)

பிரம்மன், "எவன் பெரிய ஸ்மிருதியை (வேதங்களைப்) படிப்பானோ, எவன் முன்னதை {வேதங்களைப்} பின்தொடரும் (மனு மற்றும் எஞ்சிய) பிற மங்கலமான ஸ்மிருதிகளைப் படிப்பானோ, அவனும் இவ்வழியிலேயே என்னுடன் இதே உலகத்தை அடைவான்.(30) எவன் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறானோ, அவனும் தன் மரணத்திற்குப்பிறகு இவ்வழியிலேயே எனக்குச் சொந்தமான உலகங்களை அடைவான்.(31) நான் செல்கிறேன். நீங்கள் அனைவரும் உங்களுடைய காரிய நிறைவேற்றத்திற்காக அவரவர் இடங்களுக்குச் செல்வீராக" என்றான் {பிரம்மன்}".(32)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த முதன்மையான தேவன் அங்கேயே, அப்போதே மறைந்து போனான். முன்பே அவனிடம் விடைபெற்றிருந்தவர்களும் அங்கே திரண்டிருந்தவர்களுமான தேவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(33) ஓ! ஏகாதிபதி, அந்த உயர் ஆன்மாக்கள் அனைவரும் தர்மனால் கௌரவிக்கப்பட்டு, நன்கு நிறைவடைந்த இதயங்களுடன் அந்தப் பெரும் தேவனின் பின்னால் நடந்து சென்றனர்.(34) இவையே ஜபிப்பவர்களின் வெகுமதிகளும், இதுவே அவர்களுடைய கதியுமாகும். நான் கேட்டவாறே இவற்றை நான் உனக்கு விளக்கிவிட்டேன். ஓ! ஏகாதிபதி, நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?" {என்று கேட்டார் பீஷ்மர்}.(35)

சாந்திபர்வம் பகுதி – 200ல் உள்ள சுலோகங்கள் : 35

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்