Saturday, June 16, 2018

ஆன்மவுணர்வு! - சாந்திபர்வம் பகுதி – 204

Spiritual sense! | Shanti-Parva-Section-204 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 31)


பதிவின் சுருக்கம் : எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


Spiritual sense! | Shanti-Parva-Section-204 | Mahabharata In Tamil
மனு {பிரஹஸ்பதியிடம்}, "இந்த வெளிப்பாடு (உடல்) {ஸ்தூலசரீரம்}, கனவின்போது (செயலின்றி) கிடந்து, ஜீவனானது {ஸூக்ஷமசரீரமானது} முன்னதிலிருந்து {உடலான ஸ்தூலசரீரத்திலிருந்து} தன்னை விடுவித்துக் கொண்டு நுண்ணிய வடிவில் நடப்பதைப் போல, ஆழ்ந்த உறக்கம் (அல்லது மரணம்) என்றழைக்கப்படும் நிலையில், புலன்கள் அனைத்துடன் கூடிய அந்த நுண்ணிய வடிவம் {ஜீவன் / சூக்ஷமசரீரம்} செயலற்றுப் போகவும், புத்தியானது அதனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது. இவ்வாறு இருப்பு மற்றும் இல்லாமை {முக்தி} ஆகிய நிலைகளில நேர்கிறது[1].(1) தெளிந்த நீரில் கண்ணால் வடிவச் சாயல்கள் {பிரதிபிம்பங்கள்} காணப்படுவதைப் போல, புலன்கள் கலக்கமடையாமல் இருந்தால், ஆன்மாவானது புத்தியால் காணப்படவல்லதாக இருக்கிறது.(2) எனினும், அந்நீர் கலங்கினால், அதன் அருகில் இருக்கும் மனிதனால் அந்த வடிவத்தோற்றங்களைக் காண முடியாது. அதைப் போலவே, புலன்கள் கலக்கமடைந்தால், ஆன்மாவைப் புத்தியால் காண முடியாது.(3) அறியாமையானது மாயையைத் தோற்றுவிக்கிறது. மாயை மனத்தைப் பாதிக்கிறது. மனமானது, பழுதாகும்போது, மனத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்ட ஐம்புலன்களும் பழுதடைகின்றன.(4) அறியாமையால் மடக்கப்பட்டு, உலகம் சார்ந்த பொருட்களெனும் சகதிக்குள் மூழ்கும் ஒருவனால், மனநிறைவு அல்லது நிலையமைதியின் இனிமைகளை அனுபவிக்க முடியாது. (இவ்வாறான சூழ்நிலையில்} நன்மை மற்றும் தீமையான செயல்களின் தொடர்பறாத ஆன்மாவானது, மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த பொருட்களுக்கே திரும்புகிறது.(5)

[1] "இது மிகக் கடினமான சுலோகமாகும். இதில் சம்பந்தப்பட்ட தனிச்சிறப்புகள் புரிந்து கொள்ளக் கடினமானகவும் இருக்கின்றன. இதை விவரிப்பதில் நான் உரையாசிரியரையே பின்பற்றியுள்ளேன். ஒரு கனவில் வியக்தம் Vyaktha (வெளிப்படும் உடல்) செயலற்றுக் கிடக்கிறது, அதே வேளையில் சேதனம் Chetanam (நுண்ணிய வடிவம்) நடக்கிறது. சுசுப்தி Sushupti (மரணம் போன்ற ஆழ்ந்த உறக்கம்) என்றழைக்கப்படும் நிலையில், இந்திரியசம்யுக்தம் Indriyasamyuktam (நுண்ணிய வடிவம்) கைவிடப்பட்டு, முன்னதிலிருந்து {நுண்ணிய வடிவத்திலிருந்து} விடுபட்டு ஞானம் (புத்தி) நிலைக்கிறது. அதே வகையிலேயே, சொல்லப்பட்ட நிலைகள் அனைத்தின் சார்புமற்றதான பரமாத்மாவுக்குள் {ஜீவன் / நுண்ணிய வடிவம் / சூக்ஷமசரீரம்} ஈர்க்கப்படுவதே விடுதலை {முக்தி} என்பதால், காலச் சார்பு, உணர்வு முறை முதலிய அறியப்பட்ட நிலைகளுக்கு ஆட்பட்டுப் பாவம் bhavah, அல்லது இருப்பு அழிந்து, அபாவம் abhava (இல்லாமை, அதாவது {முக்தி} விடுதலை) விளைகிறது. விடுதலை {முக்தி} சாத்தியமானதே என்பதைக் காட்ட இந்த உய்த்துணர்வுகள் {அவதானிப்புகள்} அவசியம் தேவைப்படுகின்றன என உரையாசிரியர் விளக்குகிறார். கடந்த பகுதியில் {அத்தியாயத்தில்} சொல்வபவர் {மனு} உடலைச் சார்ந்ததாக ஆன்ம வெளிப்பாட்டைக் காட்ட தொடர்ந்து விளக்கங்கள் அளித்தார். எனவே, கேட்பவர் {பிருஹஸ்பதி}, முக்தி அல்லது பரமாத்மாவுக்குள் ஈர்க்கப்படுதல் என்ற நிலைக்கு உடல் ஆன்மா பிரிவு அவசியம் என்றாலும், உடலில் இருந்து பிரிக்க முடியாத கறைந்த நிலையிலேயே ஆன்மா இருக்கிறது என்று ஆன்மாவின் உடல் சார்பு என்ற தோற்றத்திற்கு எதிராக வாதிட்டார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ப்ரத்யக்ஷமான இந்த ஸ்தூலசரீரமானது ஸ்வப்ன காலத்தில் உறக்கமடைந்திருக்கிறது. புத்தியென்னும் ஸூக்ஷமசரீரமானது இச்சரீரத்தில் பற்றுதலில்லாமல் ஸஞ்சரிக்கிறது; இது போல ஸம்ஸாரமுண்டாகிறது. ஸ்வப்ன காலத்தில் ஸூக்ஷமசரீரமான இந்திரியங்களுடன் கூடிய ஜ்ஞானரூபியான ஆத்மாவானது ஸுஷுப்தியில் அந்த ஸூக்ஷ்மசரீரத்தை விட்டு விலகியிருப்பது போல மோக்ஷமுண்டாகிறது" என்றிருக்கிறது. இதன் பொருள் பின்வருமாறு: வெளிப்படையாகத் தெரிகின்ற இந்த உடலானது {ஸ்தூல சரீரம்}, கனவின் போது, உறங்குகிறது. அதே வேளையில் புத்தியான ஜீவன் {ஸூக்ஷ்ம சரீரம்} இந்த உடலில் பற்றில்லாமல் உலவி கொண்டிருக்கிறது. கனவின் போது, ஜீவன் மற்றும் புலன்களுடன் கூடிய ஞான வடிவான ஆன்மாவானது மரணம் போன்ற ஆழ்ந்த உறக்க நிலையில் ஜீவனை {புத்தியை} விட்டு விலகி இருக்கும் நிலையைப் போல முக்தியை / விடுதலையை அடைகிறது.



பாவத்தின் விளைவால் ஒருவனுடைய தாகம் ஒருபோதும் அடங்குவதில்லை. அவனுடைய பாவம் அழியும்போதே அவனது தாகமும் தணிகிறது.(6) தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளத்தக்க போக்கைக் கொண்ட உலகப் பொருட்களில் உள்ள பற்றின் விளைவால், ஒருவன் தான் விரும்ப வேண்டியவற்றை விடுத்து வேறு பொருட்களை விரும்புவதால், உயர்ந்ததை {பரமனை / பரம்பொருளை} அடையத் தவறுகிறான்[2].(7) அனைத்துப் பாவச் செயல்களின் அழிவிலிருந்தே மனிதர்களிடம் ஞானம் எழுகிறது. ஞானம் தோன்றியதும், ஒருவன், பளபளப்பான கண்ணாடியில் தன் வடிவத்தைக் காண்பதைப் போலவே, தன் புத்தியில் தன் ஆன்மாவைக் காண்பான்.(8) புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவால் ஒருவன் துன்பத்தை அடைகிறான். புலன்களைக் கட்டுப்படுத்தியதால் ஒருவன் இன்பத்தை அடைகிறான். எனவே, ஒருவன் புலன்களால் உணரப்படும் பொருட்களில் இருந்து தன் முயற்சியுடன் தனது மனத்தை விலக்க வேண்டும்[3].(9) புலன்களுக்கு மேலானதாக மனம் இருக்கிறது; மனத்திற்கு மேலானதாகப் புத்தி இருக்கிறது. புத்திக்கு மேலானதாக ஆன்மா இருக்கிறது; ஆன்மாவுக்கு மேலானதாக உயர்ந்தது அல்லது மிகப்பெரியது {பரம்பொருள் / பரமாத்மா} இருக்கிறது.(10)

[2] கும்பகோணம் பதிப்பில், "விஷயங்களில் பற்றுதலாலும் அதில் சாச்வதத்தன்மையை அடைந்திருப்பதாலும் அதற்கு மாறான ஸுகத்தை மனத்தால் விரும்பிக் கொண்டிருப்பவன் பரமாத்மாவை அடையமாட்டான்" என்றிருக்கிறது.

[3] கும்பகோணம் பதிப்பில், "மனிதன் விஷயங்களிற் சென்ற இந்திரியங்களால் துக்கமுள்ளவனாவான்; அதிலிருந்து அடக்கப்பட்ட அவ்விந்திரியங்களாலேயே ஸுகமுள்ளவனாவான். ஆகையால் இந்திரியங்களென்னும் திருடர்களிடமிருந்து ஆத்மாவைப் புத்தியால் அடக்கி ரக்ஷித்துக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.

வடிவமற்றதிலிருந்து {பரம்பொருளில் இருந்து} ஆன்மா எழுந்தது; ஆன்மாவில் இருந்து புத்தி எழுந்தது; புத்தியிலிருந்து மனம் எழுந்தது. மனம் புலன்களோடு கலக்கும்போது, அஃது {மனம்} ஒலியையும், புலன் நுகர் பொருட்களான பிறவற்றையும் உணர்கிறது.(11) எவன் அந்தப் {புலன்நுகர்} பொருட்களையும், வெளிப்பட்டிருக்கும் அனைத்தையும் கைவிடுவானோ, எவன் மூலப் பொருளில் {ப்ரக்ருதியில்} இருந்து எழும் அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறானோ, அவன் அவ்வாறு விடுபடுவதால் அழிவின்மையை அனுபவிக்கிறான் {முக்தியை அடைகிறான்} [4].(12) உதிக்கும் சூரியன் தன் கதிர்களை வெளியிடுகிறான். அவன் மறையும்போது தன்னால் வெளியிடப்பட்ட கதிர்களைத் தானே விலக்கிக் கொள்கிறான்.(13) அந்த வகையிலேயே ஆன்மாவும், உடலுக்குள் நுழைந்து, புலன்களால் வெளியிடப்படும் கதிர்களால் புலன்களின் ஐந்து வகைப் பொருட்களை அடைகிறது. எனினும், அது திரும்பும்போது, தானே அந்தக் கதிர்களை விலக்கிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(14) செயல்களால் உண்டாக்கப்பட்ட பாதையில் மீண்டும் மீண்டும் வழிநடத்தப்படும் அது {ஆன்மா} செயல்கள் செய்யப்பட்டதைப் பின்தொடர்ந்ததன் விளைவால் தன் செயல்களுக்கான கனிகளை அடைகிறது[5].(15)

[4] "புலன்களால் உணரப்படுபவையும், மூலப் பொருளுக்குச் சொந்தமானவையுமான பொருட்களே கைவிடப்பட வேண்டும். முன்னர்ச் சொன்னப்பட்டவற்றிலிருந்து தனித்தன்மை வாய்ந்தவையும், பூதத்திரள்களின் தன்மாத்திரைகளால் செய்யப்பட்டவையுமான லிங்கங்கள், அல்லது நுண்ணிய வடிவங்கள், அல்லது இருப்புகளே நீடித்திருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சப்தமுதலிய அந்த வியங்களையும், அவைகளுக்கிடமான எல்லா வஸ்துக்களையும் விலக்கிக் கொள்கிறவனும், ஆமையானது தன் அங்கங்களை அடக்கிக் கொள்வது போல வெளியில் சென்ற இந்திரியங்களை அடக்கிக் கொள்ளுகிறவனுமானவன் ப்ரக்ருதியிலிருந்து உண்டானவைகளும், மனம் ஸஞ்சரிக்கும் கிராமங்கள் போன்றவைகளுமான அந்த விஷயங்களை விலக்கிக் கொண்டு மோக்ஷத்தை அடைகிறான்" என்றிருக்கிறது.

[5] கும்பகோணம் பதிப்பில், "ப்ரவிருத்தி மார்க்கத்திற்குரிய தர்மத்தை அடைந்த இந்த ஜீவன் கர்மத்தால் காண்பிக்கப்பட்ட வழியில் அந்தக் கர்மத்தால் திரும்பவும் திரும்பவும் இழுக்கப்பட்டவனாகிக் கர்மத்திற்குரிய பயனை அடைகிறான்" என்றிருக்கிறது.

புலன்நுகர் பொருட்களில் உள்ள ஆசையானது, அத்தகைய ஆசையில் ஈடுபடாத மனிதனிடம் இருந்து விலகி இருக்கிறது. எனினும், ஆசையில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனிடம் இருந்து ஆசையெனும் கோட்பாடே உண்மையில் விலகிச் செல்கிறது[6].(16) புத்தியை ஈர்த்திருக்கும் மனமானது இல்லாமல் போவது சாத்தியமென்பதால், புத்தியானது, புலன் நுகர் பொருட்களில் உள்ள பற்றில் இருந்து விடுபட்டு, மனத்தில் நிலைபெறும்போது, ஒருவன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(17) பிரம்மம் என்பது தீண்டவோ, கேட்கவோ, சுவைக்கவோ, பார்க்கவோ, நுகரவோ, ஆலோசிக்கவோ படக்கூடிய பொருள் அல்ல. (வேறு அனைத்தில் இருந்தும் விடுபட்ட) புத்தியால் மட்டுமே அஃதை அடைய முடியும்.(18) புலன்கள் மூலம் மனம் உணரும் அனைத்துப் பொருட்களும், மனத்திற்குள் ஈர்க்கப்படவல்லவை; மனமானது புத்திக்குள் ஈர்க்கப்படக்கூடியது; புத்தியானது ஆன்மாவுக்குள் ஈர்க்கப்படக்கூடியது, ஆன்மாவோ உயர்ந்ததற்குள் {பரம்பொருளுக்குள்} ஈர்க்கப்படக்கூடியது[7].(19) புலன்களால் மனத்தின் வெற்றிக்குப் பங்காற்ற முடியாது. மனத்தால் புத்தியை உணர முடியாது. வெளிப்படும் ஆன்மாவைப் புத்தியால் உணரமுடியாது. எனினும் நுட்பமான ஆன்மாவானது இவை அனைத்தையும் காண்கிறது[8]" என்றார் {மனு}.(20)

[6] "புலன்நுகர் பொருட்களைத் தவிர்ப்பதால் ஒருவன் அவற்றின் மீது கொண்ட தன் ஆசையை வெல்லலாம். ஆனால், அந்த வழிமுறையின் மூலம் ஒருவன் ஆசையெனும் கோட்பாட்டில் இருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொள்ள முடிவதில்லை. அவன் தன் ஆத்மாவைக் காணும் வரை, ஆசையெனும் கோட்பாட்டை அவனால் அடக்க முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "விஷய போகங்களிலிருந்து விலகுகிற ஜீவனுக்கு ஆசை ஒன்றைத் தவிர விஷயங்கள் விலக்கமடையும். இந்த ஜீவனுக்குள்ள அந்த ஆசையும் பரமாத்மாவைக் கண்டதும் விலக்கமடையும்" என்றிருக்கிறது.

[7] "இங்கே முதற்கூறாக, புற உலகத்தின் தனித்த இருப்பு மறுக்கப்படுகிறது. புலன்நுகர் பொருட்கள் அனைத்தும் அகநிலை இருப்பாகவே சொல்லப்படுகின்றன; எனவே அவற்றை மனத்தால் ஈர்த்துக் கொள்ள முடியும். ஐரோப்பிய தத்துவவியலில் பருப்பொருளின் மிகச் சமீபத்திய விளக்கம், உணர்வுகளின் சாத்தியம் நிரந்தரமான ஒன்று என்பதே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[8] கும்பகோணம் பதிப்பில், "இந்திரியங்கள் யாவும் மனத்தால் விஷயங்களை அறிகின்றன. இந்திரியங்களின் உருவங்கள் மனத்தில் முழுகியிருக்கின்றன. மனமானது ஸங்கல்பத்தை அடைந்திருக்கிறது. ஸங்கல்பமானது புத்தியை அடைந்திருக்கிறது. புத்தியானது மேலான ஆத்மரூபத்தை அடைந்திருக்கிறது. இந்திரியங்களால் மனத்தைக் காண முடியாது. மனமானது புத்தியை அறிகிறதில்லை. புத்தியானது ஸூக்ஷ்மமான ஆத்மாவை அறிகிறதில்லை. ஸூக்ஷ்மமான ஆத்மாவோ இவைகளைப் பார்க்கிறது" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 204ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்