Saturday, June 16, 2018

பரப்பிரம்மம்! - சாந்திபர்வம் பகுதி – 205

Supreme Brahma! | Shanti-Parva-Section-205 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 32)


பதிவின் சுருக்கம் : துன்பத்தைத் தவிர்ப்பதும், பிரம்மத்தை அடைவதும் எவ்வாறு என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


Supreme Brahma! | Shanti-Parva-Section-205 | Mahabharata In Tamil

மனு {பிரஹஸ்பதியிடம்}, "உடல் மற்றும் மனத் துன்பங்கள் தோன்றும்போது, ஒருவனால் யோகத்தைப் பயில முடியாது. எனவே, அத்தகைய கவலைகளை நினைத்தேங்கிக் கொண்டிருப்பவனுக்கு அது கைக்கொள்ளக்கூடியதல்ல.(1) கவலைகளை நினைத்து ஏங்காமல் இருப்பதே அதற்கான மருந்தாகும். துன்பங்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால், அவை மேலும் தீவிரமடைந்து, தீங்கை அதிகரிக்கச் செய்கிறது.(2) ஒருவன் ஞானத்தால் மனத்துன்பத்தில் இருந்தும், குணப்படுத்தும் மருந்துகளால் உடல் துன்பத்தில் இருந்தும் விடுபட வேண்டும். ஞானம் இதையே கற்பிக்கிறது. கவலையில் இருக்கும்போது ஒருவன் குழந்தை போல நடந்து கொள்ளக்கூடாது.(3) ஞானம் கொண்ட மனிதன், நிலையற்றவையான இளமை, அழகு, நீடித்த வாழ்நாள் {ஆயுள்}, செல்வத் திரட்டு, அன்புக்குரியோரின் தோழமை ஆகிய ஆசைகளை ஒருபோதும் பேணி வளர்க்கக்கூடாது.(4) மொத்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கவலைக்காக ஒருவன் தனியாக வருந்தக்கூடாது. வாய்ப்பைக் காணும்போது அவன் தீர்வை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.(5)

வாழ்வில் மகிழ்ச்சியை விடத் துன்பத்தின் அளவே பெரியது என்பதில் ஐயமில்லை. புலன்நுகர் பொருட்களில் நிறைவுடன் இருக்கும் ஒருவனுக்கு, அவனது மயக்கத்தின் விளைவால், ஏற்பில்லா {இனிமையற்ற} மரணம் ஏற்படுகிறது.(6) துன்பம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் தவிர்க்கும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் நிச்சயம் வெல்கிறான். அத்தகைய ஞானம் கொண்ட மனிதர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை.(7) உலகம் சார்ந்த உடைமைகள் கவலையையே கொண்டு வருகின்றன. அவற்றைப் பாதுகாப்பதால் உனக்கு எந்த மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியாது. மேலும் அவை துன்பப்பட்டே ஈட்டப்படுகின்றன. எனவே, ஒருவன் அவற்றின் இழப்பைக் கருத்தில் கொள்ளக்கூடாது.(8) தூய அறிவானது (அல்லது பிரம்மம்), அறிவு சார்ந்த பல்வேறு பொருட்களில் (வடிவங்களில்) இருக்கிறது என்று (அறியாமை கொண்டோரால்) கருதப்படுகிறது. மனமானது அறிவின் ஓர் இயல்பே என்று அறிவாயாக. மனமானது அறிவுப்புலங்களோடு கலக்கும்போது, (பொருள் வடிவங்களின் உடல்களை உண்டாக்கும்) புத்தியானது பிறக்கிறது.(9) புத்தியானது, செயலின் குணங்களில் இருந்து விடுபடும்போது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கப்பட்ட) மனத்தை நோக்கிச் செலுத்தப்பட்டு, தியானம், அல்லது யோக முடிவிலான முழுமையான ஈர்ப்பின் (சமாதிநிலையின்) மூலமாகப் பிரம்மத்தை அறிவதில் வெல்கிறது.(10)



அறியாமையில் இருந்து பாய்வதும், புலன்களுடன் கூடியதும், குணங்களைக் கொண்டதுமான புத்தியோ, மலை முகட்டில் இருந்து பிற பகுதிகளை நோக்கிப் பாயும் ஓர் ஆற்றைப் போலப் புறப்பொருட்களை நோக்கி ஓடுகிறது.(11) புத்தியானது, மனத்திற்குள் ஈர்க்கப்படும்போது, உரைகல்லைக் கொண்டு தங்கத்தைத் தீண்டுவதைப் போலக் குணங்களில் இருந்து விடுபட்ட சிந்தனையை ஈர்ப்பதில் வென்று பிரம்ம அறிவை அடைகிறது.(12) புலன் நுகர் பொருட்களை உணர்வது மனமே ஆகும். (பிரம்மத்தை அடைவதற்கு முன்பாக) அதுவே முதலில் அடக்கப்பட வேண்டும். தன் முன்னுள்ள பொருட்களின் குணங்களைச் சார்ந்த மனத்தால், குணங்களற்ற ஒன்றைக் காட்ட முடியாது.(13) புலன்களுக்குண்டான வாயில்களனைத்தும் அடைக்கப்பட்டு, புத்தியானது மனத்திற்குள் ஈர்க்கப்பட வேண்டும். தியானத்தில் ஈர்க்கப்பட்டிருக்கும் இந்நிலையிலேயே அது {புத்தியானது} பிரம்ம அறிவை அடைகிறது.(14) (மொத்த வடிவங்களிலான) ஐவகைப் பூதங்களும், குணங்கள் என்று அறியப்படுபவையின் அழிவுக்குப் பிறகு, (தன்மாத்திரைகள் என்றழைக்கப்படும் தங்கள் நுட்பமான வடிவில்) விலகும் வகையிலேயே, புலன்நுகர் பொருட்களில் இருந்து விலகிய புலன்களுடன் கூடிய புத்தியானது மனத்திற்குள் மட்டுமே வசிக்கும்[1].(15)

[1] இங்கே கங்குலியால் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் தன்மாத்திரைகள் என்பன சுவை, ஒளி, ஊறு {தீண்டல்}, ஒலி, மணம் ஆகும். கும்பகோணம் பதிப்பில், "ஸூக்ஷ்மமான பூதங்கள் லயமடையும்பொழுது அவைகளின் கார்யங்களான ஸ்தூல பூதங்கள் லயமடைகின்றதுபோலப் புத்தியானது தன் கார்யங்களான இந்திரியங்களை லயப்படுத்திக் கொண்டு அஹங்காரத்தில் லயமடைகிறது" என்றிருக்கிறது.

நிச்சயமான குணத்தைக் கொண்டதாக இருப்பினும் புத்தியானது மனத்திற்குள் வசித்து, உட்புறத்தில் திரிந்தாலும், அது {புத்தி} மனமேயன்றி (தன்னைவிட உயர்ந்த) வேறேதுமாக இல்லை.(16) தியானத்தின் மூலம் சிறப்பை அடையும் மனம், அல்லது நனவுநிலையானது {அஹங்காரமானது}, குணங்களையும், அவற்றைக் கொண்டவைகளாகக் கருதப்படுபவற்றையும் அடையாளம் காண்பதில் வென்று, அந்தக் குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, குணங்களற்ற பிரம்மத்தை {நிர்க்குண பிரம்மத்தை} அடைகிறது[2].(17) வடிவமற்றதை (பிரம்மத்தை) {ஸூக்ஷ்மமானப்ரம்மத்தைக்} குறித்த அறிவைத் தருவதற்குப் போதுமானதாக, தகுந்ததாக எந்தக் குறியீடும் {த்ருஷ்டாந்தமும்} இல்லை. மொழியில் பொருள் அமைக்கப்பட முடியாத ஒன்று, எவராலும் அடையப்பட முடியாததாகும்[3].(18) தூய்மையடைந்த ஆன்மாவுடனும், தவங்கள், ஊகங்கள், தற்கட்டுப்பாடு, தன் வகைக்கென விதிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் பயிற்சிகள், வேதங்கள் ஆகியவை அளிக்கும் உதவியின் மூலமும் ஒருவன் உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைய முயல வேண்டும்.(19) (தங்களுக்குள் உள்ள உயர்ந்ததை {பரம்பொருளைக்} காண்பதைத் தவிர்த்து) தெளிந்த பார்வை கொண்ட மனிதர்கள், குணங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு புற வடிவங்களிலும் அதை {பிரம்மத்தை} அடைய முயல்கிறார்கள். ஞேயம் (Jneya அறியப்பட வேண்டிய ஒன்று) என்ற பெயரால் அழைக்கப்படும் உயர்ந்தது {பிரம்மம்}, குணங்கள் இல்லாததன், அல்லது அவற்றின் இயல்பு இல்லாததன் விளைவாக, வாதத்தால் ஒருபோதும் உணரப்பட முடியாததாக இருக்கிறது {அது யுக்திக்கு எட்டாததாகும்}.(20)

[2] "சாதாரண மனிதர்கள், புறப்பொருட்கள் அனைத்தையும் சுதந்திர இருப்புகளாகவும், அவற்றின் குணங்களை அந்தப் பொருட்களில் இருந்து வேறுபட்டவையாகவும் கருதுகின்றனர். குணங்களும், பொருட்களும் ஒன்றே, அல்லது குணங்களே அந்தப் பொருட்களாக இருக்கின்றன என்ற கருத்தை அடைவதே முதல் படியாகும். ஐரோப்பிய கருத்தியலுடன் இஃது உடன்படுகிறது. தியானத்தின் மூலம் அந்தக் குணங்களை ஒழிப்பதே அடுத்தப் படியாகும். இதன் விளைவு பிரம்மத்தை அடைவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "த்யானத்திற்சென்ற மனமானது விஷயங்களுடன்கூட முக்குணங்களுள்ளப்ருக்ருதியில் எப்பொழுது லயமடைகிறதோ, அப்பொழுது எல்லாக்குணங்களையும் விட்டுவிட்டு நிர்க்குணமானப்ரம்மத்தை அடைகிறது" என்றிருக்கிறது.

[3] கும்பகோணம் பதிப்பில், "ஸூக்ஷ்மமானப்பரம்மத்தை அறியும் விஷயத்தில் இவ்வுலகில் ஸரியான த்ருஷ்டாந்தமில்லை. எந்த விஷயத்தில் சொல்லத்தக்க பதப்ரயோகமில்லையோ அந்த விஷயத்தை எவன் அறிய முடியும்?" என்றிருக்கிறது.

புத்தியானது, குணங்களில் இருந்து விடுபடும்போது மட்டுமே அதனால் பிரம்மத்தை அடையமுடியும். குணங்களில் இருந்து விடுபடாதபோது அஃது உயர்ந்ததிலிருந்து {பிரம்மத்திலிருந்து} மீண்டும் வீழ்கிறது. உண்மையில், குணங்களை நோக்கி விரைவதும், விறகுக்கு மத்தியில் நெருப்பைப் போல அவற்றின் மத்தியில் திரிவதுமே புத்தியின் இயல்பாகும்.(21) சுசுப்தி (கனவற்ற ஆழ்ந்த உறக்கம்) என்றழைக்கப்படும் நிலையில், ஐம்புலன்களும் தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து விடுபட்டிருக்கும் வகையிலேயே, உயர்ந்த பிரம்மமானது, குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்ட நிலையில், பிரக்ருதிக்கு {மூல இயற்கைக்கு} மேலாக உயர்ந்து நிலைத்திருக்கிறது[4].(22) இவ்வாறே, உடல்படைத்த உயிரினங்கள் குணங்களின் விளைவுகளால் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து அவை விலகும்போது விடுதலையை {முக்தியை} அடைகின்றன. (செயலின் மூலம்) சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன.(23) வாழும் பூதம் {ஜீவன்}, மூல இயற்கை {ப்ரக்ருதி}, புத்தி, புலன்நுகர் பொருட்கள் {விஷயங்கள்}, புலன்கள், நனவுநிலை {அஹங்காரம்}, தன்னடையாள நம்பிக்கை {அபிமானம்} ஆகியன (அழிவுக்குரியவையாக இருப்பதால்) பூதங்கள் என்றழைக்கப்படுகின்றன.(24) இவற்றின் மூலப் படைப்பு உயர்ந்ததில் {பரம்பொருளில்} இருந்து பாய்ந்தது. இரண்டாவது, அல்லது அடுத்தப் படைப்பானது, (எதிர்பாலின) இணைகள், அல்லது துணைகளின் மூலம், அடிப்படையான ஐந்தை {புலன்களைத்} தவிர்த்து அனைத்துப் பொருட்களையும்[5] உள்ளடக்கி, இனங்கள் அதே இனங்களைப் படைக்கும் விளைவிலான விதிகளுக்குக் கட்டுப்பட்டு உண்டாக்குகின்றன[6].(25) (வாழும்) உயிரினங்கள அறத்தின் மூலம் உயர்ந்த கதியை அடைகின்றன, பாவத்தின் மூலம் அவை இழிந்த கதியை ஈட்டுகின்றன. பற்றுகளில் இருந்து விடுதலையடையாதவன் மறுபிறப்பைச் சந்திக்கிறான்; அதே வேளையில் அவற்றில் இருந்து விடுதலை அடைந்தவன் அறிவை (அல்லது பிரம்மத்தை) {முக்தியை} அடைகிறான்" என்றார் {மனு}.(26)

[4] கும்பகோணம் பதிப்பில், "எப்பொழுது ஐந்து இந்திரியங்களும் தம் வேலைகளிலிருந்து விடுபட்டவைகளாயிருக்கின்றனவோ அப்பொழுது (குணங்களால்) விடுபட்டதும், ப்ரக்ருதியை விட வேறானதுமான அந்தப் பரப்ரம்மம் விளங்கும்" என்றிருக்கிறது.

[5] சுவை, ஒளி, தீண்டல் {ஊறு}, ஒலி, மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகள், வாய், கை, கால், மலவாய், கருவாய் ஆகிய ஐந்து செயற்பொறிகள் {கர்மேந்திரியங்கள்}, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து அறிவுப்பொறிகள் (ஞானேந்திரியங்கள்}, மனம், நனவுநிலை {அஹங்காரம்} ஆகியவையே இந்தப் பொருட்கள்

[6] கும்பகோணம் பதிப்பில், "இக்கூட்டத்தின் முதலான ஸ்ருஷ்டியானது ப்ரதானமென்ற மூலகாரணத்திலிருந்து உண்டாகிறது. இரண்டாவது ஸ்ருஷ்டியானது இரண்டு வஸ்துக்களின் சேர்க்கையால் வெளியாகி இந்திரிய முதலிய பொதுவான பொருள்களை அடங்கி நடக்கச் செய்கிறது" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 205ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்