Wednesday, June 20, 2018

பிரஜாபதிகளும், சாக்ஷீபூதங்களும்! - சாந்திபர்வம் பகுதி – 208

Prajapatis and witnesses of the universe! | Shanti-Parva-Section-208 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 35)


பதிவின் சுருக்கம் : மரீசி முதலிய பிரஜாபதிகளையும், ஒவ்வொரு திக்கிலும் உள்ள முனிவர்களையும் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே முதல் பிரஜாபதிகள் யாவர்? இருப்பில் உள்ளவர்களான உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் யாவர்? அவர்கள் ஒவ்வொருவரும் எந்தத் திசைப்புள்ளிகளில் {திக்குகளில்} வசிக்கிறார்கள்?" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்பதைக் குறித்துச் சொல்கிறேன், என்னிடம் இருந்து கேட்பாயாக. அந்தப் பிரஜாபதிகள் யாவர், அடிவானின் எந்தப் புள்ளியில் {திக்கில்} எந்தெந்த முனிவர்கள் வசிக்கிறார்கள் என்பதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) நித்தியமானவனும், தெய்வீகமானவனும், தான் தோன்றியுமான {சுயம்புவான} பிரம்மனே முதலில் இருந்தான். தான் தோன்றியான அந்தப் பிரம்மன் சிறப்புமிக்க ஏழு மகன்களைப் பெற்றான்.(3) அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் அந்தத் தான்தோன்றிக்கே இணையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான வசிஷ்டர் ஆகியோராவர்.(4) இந்த ஏழு மகன்களே புராணங்களில் ஏழு பிரம்மர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களுக்குப் பின் வந்த பிரஜாபதிகள் அனைவரையும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(5)

அத்ரியின் குலத்தில், நித்தியமானவரும், தெய்வீகமானவரும், தவங்களையே தமது மூலமாகக் கொண்டவரும், பழமையானவருமான பர்ஹி {பராசீனபர்ஹி} பிறந்தார். {ப்ரசேதஸின் மகனான} பர்ஹியில் இருந்து பழமையானவர்களான பத்துப் பிரசேதகர்கள் எழுந்தனர்.(6) அந்தப் பத்து பிரசேதகர்களும் தங்களுக்கு மத்தியில் தக்ஷன் என்றழைக்கப்பட்ட பிரஜாபதியை ஒரு மகனாகக் கொண்டிருந்தனர். இந்த இறுதியானவருக்கு இவ்வுலகில் ’தக்ஷன்’ என்றும், ’க’ என்றும் இரண்டு பெயர் உண்டு.(7)



மரீசி, கசியபர் என்றழைக்கப்பட்ட ஒரு மகனைக் கொண்டிருந்தார். இவருக்கும் இரண்டு பெயர்கள் இருந்தன. சிலர் அவரை ’அரிஷ்டநேமி’ என்றும், சிலர் ’கசியபர்’ என்றும் அழைக்கிறார்கள்.(8)

அத்ரி, தன் மடியில் பிறந்தவனும், அழகனும், பெரும் சக்தி கொண்ட இளவரசனுமான சோமன் {சந்திரன்} என்ற மற்றொரு மகனை {ஔரசப் புத்ரனாகக்} கொண்டிருந்தார். அவன் ஓராயிரம் தேவ யுகங்கள் நெடுகிலும் தவங்களைச் செய்து கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமான அர்யமானும், அவனுக்குப் பிறந்த மகன்களும், உலகங்களைப் படைப்பவர்களென்றும், கட்டளையிடுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.(10) சசபிந்துவுக்குப் பத்தாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தலைவன் {சசபிந்து} ஓராயிரம் மகன்களைப் பெற்றார்.(11) இவ்வாறே அவருக்கு ஆயிரமாயிரம் {பத்து லட்சம்/ கோடி} மகன்கள் இருந்தனர். அந்த மகன்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் பிரஜாபதி என்று அழைக்க மறுத்தனர்.(12)

பழமையான பிராமணர்கள், சசபிந்துவிடம் இருந்து பெறப்பட்ட பட்டப்பெயரை உலகின் உயிரினங்களுக்கு அளித்தனர். பரந்த அளவில் இருந்த பிரஜாபதியான சசபிந்துவின் குலத்தவரே, காலப்போக்கில் விருஷ்ணி குலத்தின் முன்னோர்களானார்கள்.(13) என்னால் சொல்லப்படும் இவர்கள் சிறப்புமிக்கப் பிரஜாபதிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

இதன் பிறகு நான் மூவுலகங்களின் தலைவர்களாக இருக்கும் தேவர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(14) பகன், அம்சன், அர்யமான், மித்ரன், வருணன், சவிதன், தாத்ரி {தாதா}, பெரும் வலிமைமிக்க விவஸ்வான்,(15) துவஷ்டிரி {த்வஷ்டா}, பூஷன், இந்திரன், பனிரெண்டாவதாக அறியப்படும் விஷ்ணு ஆகிய இந்தப் பனிரெண்டு ஆதித்தியர்களும் கசியபரில் இருந்து எழுந்தவர்களாவர்.(16) நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினிகள் இருவராகச் சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மேற்கண்ட வரிசையில் எட்டாவதாக உள்ள {எட்டாவது பிரஜாபதியான} சிறப்புமிக்க மார்த்தாண்டரின் மகன்களாவர்.(17) இவர்களே தேவர்களில் முதல்வர்கள் என்றும், பித்ருக்களின் இரண்டு வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். துவஷ்டிரிக்குப் பல மகன்கள் இருந்தனர். அழகர்களும், புகழ்மிக்கவர்களுமான அவர்களில் விஸ்வரூபன்,(18) அஜைகபாத், அஹி, பிரத்னன், விரூபாக்ஷன், ரைவதன், ஹரன், பஹுரூபன், தேவர்களின் தலைவனான திரியம்பகன்,(19) சாவித்ரியன், ஜயந்தன், வெல்லப்பட்ட முடியாத பினாகி ஆகியோர் {பதிமூன்று ருத்திரர்களாக அறியப்படும் இவர்கள்} அடங்குவர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் எட்டாக இருப்பவர்களுமான வசுக்கள் என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றனர்.(20) பிரஜாபதி மனுவின் காலத்தில் இவர்களே தேவர்களாக அறியப்பட்டனர். இவர்களே தேவர்கள் மற்றும் பித்ருக்களில் முதல்வர்களாக அழைக்கப்பட்டனர்.(21)

சித்தர்கள் மற்றும் சாத்யஸ்களில் நடத்தை மற்றும் இளமையின் விளைவால் இரண்டு வர்க்கத்தினர் இருந்தனர். முன்னர் ரிபுக்கள் மற்றும் மருத்துகள் என்று இரண்டு வர்க்கங்களாகத் தேவர்கள் கருதப்பட்டனர்.(22) விஸ்வர்கள், தேவர்கள்[1], அசுவினிகள் ஆகியோர் இவ்வாறே சொல்லப்படுகின்றனர். இவர்களில் ஆதித்தியர்கள் க்ஷத்திரியர்களும், மருத்துகள் வைசியர்களுமாவர்.(23) கடும் தவங்களில் ஈடுபடுபவர்களான அசுவினிகள் இருவரும் சூத்திரர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அங்கீரஸ குலத்தில் எழுந்த தேவர்கள் பிராமணர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இஃது உறுதியானதாகும்.(24) இவ்வாறே தேவர்களில் நால்வகை வர்ணங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஒரு மனிதன், காலையில் தன் படுக்கையில் இருந்து எழுந்ததும், இந்தத் தேவர்களின் பெயர்களை உரைத்தால்,(25) தெரிந்தோ, தெரியாமலோ, பிறரது சேர்க்கையில் பிறந்தவையோவான தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைகிறான்.

[1] விஸ்வதேவர்கள் என்று இருந்திருக்க வேண்டும். கும்பகோணம் பதிப்பில் அவ்வாறே குறிப்பிடப் பட்டிருக்கிறது.

யவக்ரீதர், ரைப்யர், அர்வாவசு, பராவசு,(26) ஔஸிஜன், கக்ஷீவான், பலன் ஆகியோர் அங்கீரஸின் மகன்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவர்களும், முனிவர் மேதாதியின் மகனான கண்வர், பர்ஹிஷதன் ஆகியோரும்,(27) நன்கறியப்பட்டவர்களும், மூவுலகங்களுக்கும் மூதாதையராக இருப்பவர்களுமான ஏழு மனிவர்களும் {சப்தரிஷிகளும்} கிழக்கில் {கிழக்குத் திசையில்} வசிக்கிறார்கள்.

உன்முசர், விமுசர், பெரும் சக்தியைக் கொண்டவரான ஸ்வஸ்தாய்தரேயர், பிரமுசர், இத்மவாஹர், தெய்வீகமானவரான திருடவிரதர், மித்ரவருணர்களின் மகனும், பெரும் சக்தியைக் கொண்டவருமான அகஸ்தியர்(29) ஆகிய இந்த மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் தெற்கில் வசிக்கிறார்கள்.

உஷங்கு, கருஷர் {கவஷர்}, தௌம்யர், பெரும் சக்தியைக் கொண்டவரான பரிவ்யாதர்,(30) ஏகதர், திவிதர், திரிதர், அத்ரியின் மகனும், சிறப்புமிக்கவரும், பலமிக்கவருமான சாரஸ்வதர் {துர்வாசர்},(31) ஆகிய இந்த உயரான்மாக்களைக் கொண்டவர்கள் மேற்கில் வசிக்கிறார்கள்.

ஆத்ரேயர் {அத்ரி}, வசிஷ்டர், பெரும் முனிவரான காஸ்யபர்,(32) கௌதமர், பரத்வாஜயர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர், உயர் ஆன்மா கொண்டவரும், ரிசீகரின் சிறப்புமிக்க மகனுமான ஜமதக்நி(33) ஆகிய இந்த எழுவரும் வடக்கில் வாழ்கிறார்கள்.

இவ்வாறே, திசைகளின் பல்வேறு புள்ளிகளில் {திக்குகளில்} வாழும் கடும் சக்தி கொண்ட பெரும் முனிவர்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(34) அந்த உயர் ஆன்மாக்களே, இந்த அண்டத்தின் சாட்சிகளாகவும், உலகங்கள் அனைத்தையும் படைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறே அவர்கள் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.(35) இவர்களது பெயர்களைச் சொல்வதால் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அந்தந்தத் திசைகளில் பயணிக்கும் ஒரு மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, பாதுகாப்பாக வீட்டை அடைவதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}[2].(36)

[2] கும்பகோணம் பதிப்பில், "ஒவ்வொரு திக்கிலுமிருப்பவர்களும், தீக்ஷணமான தேஜஸுள்ளவர்களும், உலகங்களைப் படைப்பவர்களும், மஹாத்மாக்களும், ஸாக்ஷிபூதர்களுமான இவர்களனைவரும் சொல்லப்பட்டார்கள். இவ்விதம் மஹாத்மாக்களான இந்தரிஷிகள் தனித்தனியே திக்குகளிலிருக்கிறார்கள். இவர்களைக் கீர்த்தனம் செய்பவன் எல்லாப் பாவத்திலிருந்தும் விடுபடுகிறான். எந்த எந்தத் திக்குகளில் இவர்களிருக்கிறார்களோ அந்த அந்தத் திக்கைச் சரணமடைந்தவன், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான், அவ்விதமே க்ஷேமமுள்ளவனுமாகிறான்" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 208ல் உள்ள சுலோகங்கள் : 36

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்