Saturday, July 07, 2018

தவமும், உபவாசமும்! - சாந்திபர்வம் பகுதி – 221

Penance and Fasts! | Shanti-Parva-Section-221 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 48)


பதிவின் சுருக்கம் : தவம் மற்றும் உண்ணாநோன்பின் முறைகளையும், அவற்றின் பயன்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வேள்விகள் மற்றும் பிற சடங்குகளுக்கு அடிமைகளாக உள்ள மூன்று மறுபிறப்பாள வகையினரும், வேள்விகளில் தேவர்களுக்கான படையலாக வைக்கப்பட்டு எஞ்சும் இறைச்சி மற்றும் மது ஆகியவற்றை, பிள்ளைகள் மற்றும் சொர்க்கத்தை அடையும் நோக்கத்துடன் உண்கிறார்கள். ஓ! பாட்டா, இந்தச் செயலின் பண்பியல்பு யாது?" எனக் கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வேதங்களில் விதிக்கப்பட்ட வேள்விகளையும், நோன்புகளையும் நோற்காமல், தடைசெய்யப்பட்ட உணவை உண்பவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு செய்யும் மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். (அவர்கள் இம்மையிலேயே வீழ்ந்துவிட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்). மறுபுறம், வேத வேள்விகள், நோன்புகளை நோற்கவும், சொர்க்கத்தின் வடிவிலான கனிகளில் உள்ள விருப்பத்தாலும், பிள்ளைகளைப் பெறுவதில் உள்ள விருப்பத்தாலும் உந்தப்பட்டு அத்தகைய உணவை உண்பவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வார்கள், ஆனால் அவர்களின் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் கீழே வீழ்வார்கள்" என்றார்.(2)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உண்ணாநோன்பும் {உபவாசமும்} தபமே {தவமே} என்று சாதாரண மக்கள் சொல்கிறார்கள். எனினும், உண்ணாநோன்பு அவ்வாறானதா? அல்லது தவம் வேறேதும் ஒன்றா?" என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மாதங்கள், பிறைநாட்கள் {பக்ஷங்கள்}, நாட்கள் ஆகியவற்றால் அளக்கப்படும் உண்ணாநோன்பை மக்கள் தவமாகக் கருதுகிறார்கள். எனினும், நல்லோரின் கருத்தின் படி அது தவமாகாது. மறுபுறம், உண்ணாநோன்பென்பது {உபவாசம் என்பது}, ஆன்மா ஞானம் அடைவதற்கான ஒரு தடையாகும்[1].(4) (அனைத்திலும் கடினமான ஒன்றான) செயல்களைத் துறப்பது, (அனைத்துயிரினங்களையும் சமமாகக் கருதி அவை அனைத்தையும் வழிபடுவதை உள்ளடக்கிய) பணிவு ஆகியவையே உயர்ந்த தவங்களாகும். இது தவங்கள் அனைத்திலும் மேன்மையான தனிச்சிறப்புக் கொண்டதாகும். அத்தகைய தவத்தைச் செய்பவன் எப்போதும் உபவாசம் இருப்பவனாகவும், எப்போதும் பிரம்மச்சரிய வாழ்வை நோற்பவனாகவும் கருதப்படுகிறான்.(5) எப்போதும் உறக்கமற்றவனும், எப்போதும் அறத்தைச் செய்வதில் மட்டுமே ஈடுபடுபவனுமான ஒரு பிராமணன், குடும்பத்தின் மையத்தில் வாழ்ந்து வந்தாலும் அவன் எப்போதும் ஒரு முனியாகவும், தேவனாகவும், அதற்கு மேலானவனாகவும் ஆகிறான்.(6) அவன் எப்போதும் அமுதத்தை உண்பவனாகவும், எப்போதும் தேவர்கள் மற்றும் விருந்தினர்களைத் துதிப்பவனாகவும் ஆகிறான்.(7) உண்மையில் அவன், எப்போதும் வேள்வியில் எஞ்சியவற்றை மட்டுமே உண்டு வாழ்பவனாகவும், விருந்தோம்பல் கடமையில் எப்போதும் ஈடுபடுபவனாகவும், நம்பிக்கை நிறைந்தவனாகவும், தேவர்கள் மற்றும் விருந்தினர்களை எப்போதும் வழிபடுபவனாகவும் கருதப்படுகிறான்" என்றார் {பீஷ்மர்}.(8)

[1] "பீஷ்மர் அளிக்கும் இரு பதில்களின் நோக்கம், பிறருக்கு (வேள்வி விலங்குகளுக்கு) வலியைக் கொடுக்கும் எதுவும் கண்டிக்கத்தக்கது, அதற்கு இணையாகத் தனக்கே வலியைக் கொடுப்பதும் கண்டிக்கத்தக்கதே என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யுதிஷ்டிரன், "அத்தகைய தவத்தைப் பயில்பவன், எப்போதும் உண்ணா நோன்பிருப்பவனாகவோ, எப்போதும் பிரம்மச்சரிய நோன்பில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவோ, வேள்வியில் எஞ்சுபவற்றை எப்போதும் உண்டு வாழ்பவனாகவோ, விருந்தினர்களை எப்போதும் மதிப்பவனாகவும் எவ்வாறு கருதப்படலாம்?" என்று கேட்டான்.(9)

பீஷ்மர், "ஒருவன் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் பகலில் ஒருமுறையும், இரவில் ஒருமுறையும் உண்டு, இடைவேளையில் எதையும் உண்ணாதிருந்தால், அவன் எப்போதும் உண்ணாநோன்பு {உபவாசம்} இருப்பவனாகக் கருதப்படுவான்.(10) அத்தகைய பிராமணன், எப்போதும் வாய்மை பேசுவதன் மூலமும், எப்போதும் ஞானத்தை ஒட்டி ஒழுகுவது, வேறுகாலங்களில் அல்லாமல் பருவகாலத்தில் மட்டும் தன் மனைவியிடம் செல்வது ஆகியவற்றின் மூலமும் பிரம்மச்சாரி ஆகிறான்.(11) வேள்வியில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியை ஒருபோதும் உண்ணாமல் இருப்பதன் மூலம், அவன் புலால் உண்ணாதவனாகிறான்[2]. ஈகையாளனாக இருப்பதன் மூலம் அவன் எப்போதும் தூய்மையானவனாகவும், பகலில் உறக்கத்தைத் தவிர்ப்பதன் மூலம் அவன் எப்போதும் விழிப்புடைபவனாகவும் ஆகிறான்.(12) ஓ! யுதிஷ்டிரா, தன் பணியாட்கள் மற்றும் விருந்தினர்கள் உண்ட பிறகு மட்டுமே உண்ணும் மனிதன், எப்போதும் அமுதத்தை உண்பவனாகிறான்.(13) தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் உணவு அளிக்கும் வரை உண்ணாதிருக்கும் பிராமணன், அத்தகைய நோன்பின் மூலம் சொர்க்கத்தையே வெல்கிறான்.(14) தேவர்கள், பித்ருக்கள், பணியாட்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு உணவளித்த பிறகு எஞ்சியவற்றை மட்டுமே உண்பவன் வேள்வி எச்சங்களில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்.(15)

[2] கும்பகோணம் பதிப்பில் "வீணான மாம்ஸத்தைப் புஜியாமலிருப்பவன் எப்பொழுதும் மாம்ஸத்தைப் புஜியாதவனாகிறான்" என்றிருக்கிறது. இதுவே http://sacred-texts.com/hin/mbs/mbs12214.htm என்ற லிங்கில் உள்ள மூல ஸ்ம்ஸ்க்ருத ஸ்லோகத்திற்குப் பொருத்தமாக உள்ளதாகத் தெரிகிறது.

அத்தகைய மனிதர்கள், மறுமையில் எண்ணற்ற இன்ப உலகங்களை வெல்கிறார்கள். அவர்களுடைய இல்லங்களுக்குப் பிரம்மனுடன் கூடிய தேவர்களும், அப்சரஸ்களும் வருகிறார்கள்.(16) தேவர்கள் மற்றும் பித்ருக்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்பவர்கள், தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் நிலையான மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்களைக் கடத்தி, இறுதியாக இவ்வுடலை விட்ட மிக உயர்ந்த கதியை அடைகிறார்கள்" என்றார் {பீஷ்மர்}.(17)

சாந்திபர்வம் பகுதி – 221ல் உள்ள சுலோகங்கள் : 17

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்