Monday, July 09, 2018

இந்திரனும் பலியும்! - சாந்திபர்வம் பகுதி – 223

Indra and Vali! | Shanti-Parva-Section-223 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 50)


பதிவின் சுருக்கம் : இந்திரனுக்கும், பலிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பலியைத் தேடிய இந்திரன்; பிரம்மனிடம் விசாரித்தது; பலி இருக்கும் இடத்தைச் சொன்ன பிரம்மன்; கழுதையாகப் பிறந்திருந்த பலியைக் கண்ட இந்திரன் அவனை எள்ளி நகையாடியது; காலத்தின் வன்மை குறித்து இந்திரனுக்குப் பதிலளித்த பலி...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, செழிப்பை இழந்தவனும், காலத்தின் கனத்த தண்டத்தால் நொறுக்கப்பட்டவனுமான ஓர் ஏகாதிபதி, எவ்வகைப் புத்தியைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியில் அதற்கு மேலும் வாழ முடியும்?" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பழங்கதையில் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்}, விரோசனனின் மகனான பலிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) வாசவன், அசுரர்கள் அனைவரையும் அடைக்கிய பிறகு, ஒரு நாள், பிரம்மனிடம் சென்று, கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கி, பலி எங்கிருக்கிறான் என்பது குறித்து விசாரித்தான்.(3)

{இந்திரன் பிரம்மனிடம்}, "ஓ! பிரம்மா, தான் விரும்பிய அளவுக்குப் பெரிதாகத் தானம் செய்யப்பட்டாலும் வற்றாத செல்வத்தைக் கொண்டிருந்த பலியை எங்குக் காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக.(4) அவன் காற்றின் தேவனாக இருந்தான். அவன் வருணனாக இருந்தான். அவன் சூரியனாக இருந்தான். அவன் சோமனாக இருந்தான். அனைத்து உயிரினங்களுக்கும் வெப்பமூட்டக்கூடிய அக்னியாக அவன் இருந்தான். (நம் அனைவரின் பயன்பாட்டுக்கான) நீராகவும் ஆனான். இப்போது அவன் எங்கிருக்கிறான் என்பதை நான் காணவில்லை.(5) முன்பு அவன் (சூரியனாக) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டி (மாலையில்) மறைந்தான். சோம்பலைக் கைவிட்ட அவன், உரிய காலங்களில் அனைத்து உயிரினங்களின் மீதும் மழையாகப் பொழிந்தான். அந்தப் பலியை நான் இப்போது காணவில்லை. ஓ! பிரம்மா, உண்மையில் இப்போது நான் அந்த அசுரர்களின் தலைவனை {பலியை} எங்கே காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(6)

பிரம்மன் {இந்திரனிடம்}, "ஓ! மகவத் {இந்திரா}, இப்போது நீ இவ்வாறு பலியைக் குறித்து விசாரிப்பது உனக்குத் தகாது. எனினும், ஒருவனால் கேட்கப்படும்போது மற்றொருவன் பொய் பேசக்கூடாது என்ற காரணத்தினால் நான் பலி எங்கிருக்கிறான் என்பதை உனக்குச் சொல்வேன்.(7) ஓ! சச்சியின் தலைவா, பலி இப்போது ஓட்டகங்களிலோ, காளைகளிலோ, கழுதைகளிலோ, குதிரைகளிலோ தன் பிறப்பை எடுத்து, தன் இனத்தில் முதன்மையானவனாக ஒரு வெற்று அறையில் இருக்கலாம்" என்றான்.(8)

சக்ரன் {இந்திரன்}, "ஓ! பிரம்மா, நான் பலியை ஒரு வெற்று அறையில் சந்தித்தால், அவனை நான் கொல்லவேண்டுமா? அல்லது விட வேண்டுமா? நான் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(9)

பிரம்மன், "ஓ சக்ரா, பலிக்குத் தீங்கிழைக்காதே. பலி மரணத்திற்குத் தகுந்தவனல்ல. ஓ வாசவா, ஓ சக்ரா {இந்திரா}, மறுபுறம், அவனிடம் அறநெறி குறித்த போதனையை நீ விருப்பத்துடன் வேண்ட வேண்டும்" என்றான்".(10)



பீஷ்மர் தொடர்ந்தார், "தெய்வீகமான படைப்பாளனால் {பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்ட இந்திரன், பெரும் காந்தியுடன் கூடிய சூழ்நிலையில் ஐராவதத்தின் முதுகில் அமர்ந்து கொண்டு உலகத்தில் திரிந்தான்.(11) படைப்பாளன் சொன்னது போலவே அவன் {இந்திரன்}, ஒரு கழுதையின் வடிவத்தை உடுத்தி ஒரு வெற்று அறையில் வாழ்ந்திருந்த பலியைச் சந்தித்தான்.(12)

சக்ரன் {பலியிடம்}, "ஓ! தானவா, நீ இப்போது உமிகளை உணவாக உண்டு வாழும் ஒரு கழுதையாகப் பிறந்திருக்கிறாய். நீ இவ்வகையில் பிறந்தது நிச்சயம் ஓர் இழிநிலையே. இதற்காக நீ வருந்துகிறாயா? இல்லையா?(13) நான் இதற்கு முன் ஒருபோதும் காணாததைக் காண்கிறேன். செழிப்பு, நண்பர்கள் ஆகியவற்றை இழந்தவனாக, சக்தி மற்றும் ஆற்றல் குறைந்தவனாக உன் எதிரிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் உன்னை நான் காண்கிறேன்.(14) ஆயிரம் வாகனங்கள் மற்றும் ஆயிரம் சொந்தக்காரர்களுடன் உன் காந்தியினால் அனைவரையும் எரித்தபடி, எங்களை ஒன்றுமில்லாதவர்களாகக் கணக்கிட்டு முன்பு உலகங்கள் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாய். (15) உன்னையே தங்கள் பாதுகாவலனாகக் கருதிய தைத்தியர்கள், உன் ஆட்சியின் கீழ் வாழ்ந்தார்கள். உன் சக்தியின் மூலம், பூமியானது உழவுக்குக் காத்திராமலே பயிர்களை விளைவித்தது. எனினும், இன்றோ நீ பேரிடரில் மூழ்கியிருப்பதை நான் காண்கிறேன். இதற்காக நீ துன்புறுகிறாயா? இல்லையா?(16) முன்பு நீ செருக்கு படர்ந்த முகத்துடன், கிழக்குக் கடற்கரையில் உன் உற்றாருக்கு மத்தியில் பெருஞ்செல்வங்களைப் பிரித்துக் கொடுத்த போது உன் மனநிலை என்னவாக இருந்தது?(17)

முன்பெல்லாம் சுடர்மிக்கக் காந்தியுடன் இருந்த நீ உன் முன் நடனமிடும் ஆயிரக்கணக்கான தெய்வீகக் காரிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாய்.(18) அவர்கள் அனைவரும் தாமரை மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் தங்கத்தைப் போன்ற பிரகாசமிக்கத் தோழிகளையும் கொண்டிருந்தனர். ஓ! தானவர்களின் தலைவா, அப்போதெல்லாம் உன் மனநில்லை என்னவாக இருந்தது? இப்போது என்னவாக இருக்கிறது?(19) தங்கத்தாலானதும், ரத்தினங்கள் மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குடையை நீ கொண்டிருந்தாய். அந்நாட்களில் முழுமையாக நாற்பத்திரண்டாயிரம் கந்தர்வர்கள் உன் முன் நடனமிடுவார்கள்[1].(20) உன் வேள்விகளில் நீ மிகப் பெரியதும், முழுமையாகத் தங்கத்தாலானதுமான யூபத்தைக் கொண்டிருந்தாய். அத்தகைய தருணங்களில் நீ ஆயிரம் லட்சம் பசுக்களைத் தானமாக அளித்தாய். ஓ! தைத்தியா, அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது?(21) முன்பு நீ வேள்வியில் ஈடுபட்டு, சம்யையைச் சுழற்றும் விதியைப் பின்பற்றி முழுப் பூமியையும் வலம் வந்தாய். அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது?[2](22) நான் இப்போது அந்தத் தங்கக் கலனையோ {தங்க ஜாடியையோ}, உனது குடையையோ, உனது விசிறிகளையோ காணவில்லை. மேலும், ஓ! அசுரர்களின் மன்னா, பெரும்பாட்டனால் {பிரம்மனால்} உனக்குக் கொடுக்கப்பட்ட உன் மலர்மாலையையும் நான் காணவில்லை" என்றான் {இந்திரன்}.(23)

[1] "பர்துவான் மொழிபெயர்ப்பாளர்கள், இரண்டாவது வரியை "ஆறாயிரம் கந்தர்வர்கள் உன் முன்பு ஏழு வகை நடனங்களை ஆடுவார்கள்" என்று கொடுத்திருக்கின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவ்விடத்தில் ஆறாயிரம் கந்தர்வர்கள் ஏழு வகுப்பாகி நர்த்தனம் செய்தார்கள்" என்றிருக்கிறது.

[2] "வாட்டார மொழி {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் இந்தச் சுலோகத்தைத் தவறாகப் புரிந்திருக்கின்றனர். சம்யை என்பது முப்பத்தாறு விரல்கட்டை அளவு உயரம் கொண்ட ஒரு சிறிய மரக்கூம்பாகும். பலி அப்போது ஒரு சம்யையை வீசிக் கொண்டோ, சுழற்றிக் கொண்டோ பூமியை வலம் வந்தான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஒரு பலமிக்க மனிதன் வீசும்போது, அந்தச் சம்யை ஒரு குறிப்பிட்ட தொலைவைக் கடக்கும். அந்த வெளி தேவயஜனம் Devayajana என்றழைக்கப்படுகிறது. பலி அத்தகைய ஒவ்வொரு தேவயஜனத்திலும் வேள்விகளைச் செய்தபடியே உலகை வலம் வந்தான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் சம்யை குறித்த ஓர் அடிக்குறிப்பு இருக்கிறது. அது பின்வருமாறு: "’அடி பருத்து நுனி சிறுத்து முப்பத்தாறு அங்குலம் நீளமுள்ள தடி சம்யை என்று சொல்லப்படும். அது பலசாலி ஒருவனால் எறியப்பட்டு எவ்வளவு தூரம் சென்று விழுகிறதோ அவ்வளவு வரைக்கும் ஒரு யாகம் செய்வதற்குத் தகுதியான இடம். இவ்விதம் பல யாகங்கள் செய்து பூமி முழுமையையும் யாகசாலையாக்கி அவற்றை விட்டு விலகினான்’ என்பது பழைய உரை" என்றிருக்கிறது.

பலி {இந்திரனிடம்}, "ஓ! வாசவா {இந்திரா}, நீ இப்போது என் கலனையும், குடையையும், விசிறிகளையும் காணவில்லை. பெரும்பாட்டனால் எனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட எனது மலர்மாலையையும் நீ காணவில்லை.(24) நீ கேட்கும் அந்த என் மதிப்புமிக்க உடைமைகள் இப்போது ஒரு குகையின் இருளுக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் என் நேரம் வரும்போது நான் அவற்றை நிச்சயம் காண்பேன்.(25) எனினும், இந்த உன் நடத்தை உன் புகழுக்கோ, பிறப்புக்கோ தகுந்ததல்ல. செழிப்பில் இருக்கும் நீ, வறுமையில் மூழ்கியிருக்கும் என்னைக் கேலி செய்ய விரும்புகிறாய்.(26) ஞானத்தை அடைந்தவர்கள், அதன் மூலம் நிறைவை அடைந்தவர்கள், அமைதிமிக்க ஆன்மாக்கள், உயிரினங்களுக்கு மத்தியில் அறவோராகவும், நல்லோராகவும் இருப்பவர்கள், ஒருபோதும் துயரில் துன்புறுவதோ, இன்பத்தில் மகிழ்வதோ கிடையாது.(27) எனினும், ஓ! புரந்தரா, இழிபுத்தியினாலே நீ தற்புகழ்ச்சியில் ஈடுபடுகறாய். என்னைப் போல நீ ஆகும்போது, இது போன்ற பேச்சுகளில் நீ ஈடுபடமாட்டாய்" என்றான் {பலி}" என்றார் {பீஷ்மர்}.(28)

சாந்திபர்வம் பகுதி – 223ல் உள்ள சுலோகங்கள் : 28

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்