Monday, July 23, 2018

வியாசரும், சுகமுனியும்! - சாந்திபர்வம் பகுதி – 231

Vyasa and Sugamuni! | Shanti-Parva-Section-231 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 58)


பதிவின் சுருக்கம் : வியாசருக்கும் அவரது மகன் சுகருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; காலத்தின் பல்வேறு பிரிவினைகள், ஒவ்வொரு யுகத்தின் கால அளவு, பல்வேறு யுகங்களில் மனிதர்களின் வாழ்நாட்கள் ஆகியவற்றை வியாசர் சுகருக்கு உரைப்பது...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தவரே, உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்தையும், முடிவையும் குறித்தும்; அவற்றின் தியான இயல்பு மற்றும் அவற்றின் செயல்கள் குறித்தும்; காலப்பிரிவினைகள் மற்றும் ஒவ்வொரு யுகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாள் காலங்கள் குறித்தும் நான் அறிய விரும்புகிறேன்.(1) உலகத்தின் தோற்றம் மற்றும் ஒழுக்கம் குறித்தும்; உயிரினங்களின் வருகை மற்றும் அவை செயல்படும் விதம் குறித்துமான முழு உண்மையையும் நான் அறிய விரும்புகிறேன். உண்மையில், அவற்றின் படைப்பும், அழிவும் எங்கிருந்து நடைபெறுகின்றன?(2) ஓ! அறவோரில் சிறந்தவரே, நீர் எங்களுக்கு உதவ எண்ணினால், நான் கேட்பது குறித்து எங்களுக்குச் சொல்வீராக.(3) இதற்கு முன்பு நீர் சொன்னவகையில் பிருகுவுக்கும், மறுபிறப்பாள தவசியான பரத்வாஜருக்கும் இடையில் நடந்த சிறந்த உரையாடலைக் கேட்டு என் புத்தி அறியாமையில் இருந்து நீங்கி,(4) உலகம் சார்ந்த பொருட்களில் இருந்து விலகி, யோகத்தில் மிகவும் பற்றுக் கொண்டு, தெய்வீகத் தூய்மையில் நிலைத்திருக்கிறது. எனவே, இக்காரியம் குறித்து மீண்டும் உம்மிடம் நான் கேட்கிறேன். (இது குறித்து மேலும் விரிவாக) என்னிடம் உரையாடுவதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(5)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக தெய்வீகமான வியாசரிடம் அவரது மகனான சுகர் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பழைய உரையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(6) எல்லையற்ற வேதங்களையும், அதன் அங்கங்களையும், உபநிஷத்துகளையும் கற்று, சிறந்த அறத்தகுதியை ஈட்டியதன் விளைவால் பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்க விரும்பிய சுகர்,(7) தீவில் பிறந்த முனிவரான தன் தந்தையிடம் {வியாசரிடம்} இதே கேள்விகளையே கேட்டு, அவரால் ஐயங்கள் தீர்க்கப்பட்டார். அவர் (கல்வி மற்றும் தியானத்தின் மூலம்) கடமைகளைக் குறித்த உண்மைகள் தொடர்பான அனைத்து ஐயங்களையும் நீக்கினார்.(8)

சுகர் {வியாசரிடம்}, "கால அறிவால்[1] அனைத்து உயிரினங்களின் படைப்பாளனென உறுதிசெய்யப்பட்டவன் எவன் என்பதையும், ஒரு பிராமணனால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டார்".(9)

[1] "காலஞானேனா நிஷ்திதம் Kaalajnaanena nishthitam என்பதே மூலச் சொற்களாகும். படைப்பு மற்றும் இல்லாமை எனும் அடுத்தடுத்த காலங்கள், அல்லது, பிரம்மன் விழித்திருக்கும் மற்றும் உறங்கும் காலங்களின் எல்லைகளை வரையறுப்பதே வியாசரின் பதிலாக அமையும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "காலத்தின் அறிவில் நிச்சயமுள்ளவரும், பூதக்கூட்டங்களைப் படைத்தவருமான ஈஸ்வரரையும், பிராம்மணன் செய்யத்தக்கதையும் குறித்து நீர் சொல்ல வேண்டும்" என்றிருக்கிறது.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மகனால் {சுகரால்} கேள்வி கேட்கப்பட்டவரும், கடந்த காலம் மற்றும் எதிர் காலம் ஆகிய இரண்டின் அறிவைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், முற்றறிவு பெற்றவருமான தந்தை {வியாசர்}, அக்காரியம் குறித்து இவ்வாறே உரைத்தார்.(10)

வியாசர் {சுகரிடம்}, "தொடக்கமும் முடிவும் இல்லாததும், பிறப்பில்லாததும், ஒளியுடன் சுடர்விடுவதும், சிதைவுக்கு அப்பாற்பட்டதும், மாற்றமில்லாததும், அழிவில்லாததும், புலப்படாததும், மேன்மையான அறிவுமான பிரம்மம் மட்டுமே படைப்புக்கு முன்பே இருக்கிறது.(11) முனிவர்கள், காலத்தை அளந்து குறிப்பிட்ட பகுதிகளுக்குக் குறிப்பிட்ட பெயர்களை அளித்துள்ளனர். பதினைந்து கண் சிமிட்டல்களின் {கால} அளவு ஒரு காஷ்டை என்று அழைக்கப்படுகிறது. முப்பது காஷ்டைகள் ஒரு கலை என்று அழைக்கப்படுகிறது. முப்பது கலைகளும், கலைகளில் பத்தில் ஒரு பகுதியும் சேர்த்து ஒரு முகூர்த்தம் என்றறியப்படுகிறது. முப்பது முகூர்த்தங்கள் ஒரு பகலையும் இரவையும் உண்டாக்குகின்றன. முப்பது பகல்களும் இரவுகள் ஒரு மாதம் என்றழைக்கப்படுகிறது. பனிரெண்டு மாதங்கள் ஒரு வருடங்கள் என்றழைக்கப்படுகிறது.(12,13) கணித அறிவியலை அறிந்த மனிதர்கள், (சூரியனின் போக்கைச் சார்ந்து) ஒரு வருடத்திற்கு வடக்கு மற்றும் தெற்கு {உத்தராயணம், தக்ஷிணாயனம்} என்ற இரண்டு அயணங்களை அமைத்திருக்கின்றனர்.(14) சூரியன் மனித உலகிற்கான பகலையும், இரவையும் அமைக்கிறான். இரவானது அனைத்து உயிரினங்களும் உறங்குவதற்காகவும், பகலானது செயல்படுவதற்காகவும் இருக்கிறது.(15)



மனிதர்களின் ஒரு மாதமானது பித்ருக்களின் ஒரு பகலுக்கும் இரவுக்கும் {ஒரு நாளுக்கு} இணையானதாகும். (பித்ருக்களைப் பொறுத்தவரையில்) அந்தப் பிரிவானது, (மனிதர்களின்) வளர்பிறை நாட்கள் {சுக்லபக்ஷம்} செயல்படுவதற்கானதாகவும் {பித்ருக்களின் பகலாகவும்}; தேய்பிறை நாட்கள் {கிருஷ்ணபக்ஷம்} உறங்குவதற்காகவும் {பித்ருக்களின் இரவாகவும்} இருக்கிறது.(16) (மனிதர்களின்) ஒரு வருடம் தேவர்களின் ஒரு பகல் மற்றும் இரவுக்கு {ஒரு நாளுக்கு} இணையானதாகும். (தேவர்களைப் பொறுத்தவரையில்) அந்தப் பிரிவானது, இளவேனில் காலத்தில் இருந்து கூதிர் காலம் வரையில் சூரியன் பயணிக்கும் அரை வருடம் {உத்தராயணம்} தேவர்களின் பகலாகவும், கூதிர் காலத்தில் இருந்து இளவேனில் காலம் வரையில் அவன் பயணிக்கும் அரை வருடம் {தக்ஷிணாயனம்} அவர்களின் இரவாகவும் இருக்கிறது.(17) நான் உன்னிடம் சொன்னவாறு மனிதர்களின் பகலிரவுகளைக் கணக்கிடுவதன் மூலம், பிரம்மனின் பகலிரவு மற்றும் அவனுடைய வருடங்களையும் நான் சொல்லப் போகிறேன்.(18) கிருதம், திரேதம், துவாபரம் மற்றும் கலியுகங்களைப் பொறுத்தவரையில், (இவ்வாறு) பல்வேறு காரணங்களுக்காகப் பலவாறு கணக்கிடப்படும் வருடங்களின் எண்ணிக்கையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(19) (தேவர்களின்) நாலாயிரம் வருடங்கள் முதல் அல்லது கிருத யுகத்தின் காலமாகும். அந்த யுகத்தின் காலைப் பொழுது நானூறு வருடங்களையும், அதன் மாலைப் பொழுது நானூறு வருடங்களையும் கொண்டதாகும். (எனவே கிருத யுகத்தின் மொத்த கால அளவானது தேவர்களின் வருடங்களில் நாலாயிரத்து எண்ணூறு {4800} வருடங்ளாகும்).(20)

பிற யுகங்களைப் பொறுத்தவரையில், அவை ஒவ்வொன்றின் கால அளவும் ஒன்றிணைந்த பகுதியுடன் தனித்திருக்கும் நிலை மற்றும் ஒன்றிணைந்த பகுதி ஆகிய இரண்டையும் சேர்த்து கால்பகுதி அளவுக்குப் படிப்படியாகக் குறைகிறது. (இவ்வாறு கணக்கிட்டால் திரேதா யுகமானது மூவாயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது முன்னூறு வருடங்களும், மாலைப் பொழுது முன்னூறு வருடங்களும் சேர்த்து மூவாயிரத்து அறுநூறு {3600} வருடங்களாகும்.

துவாபர யுகமானது இரண்டாயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது இருநூறு வருடங்களும், மாலைப்பொழுது இருநூறு வருடங்களும் சேர்த்து இரண்டாயிரத்து நானூறு {2400} வருடங்களாகும்.

கலியுகத்தின் கால அளவானது, ஆயிரம் வருடங்களும், அதன் காலைப் பொழுது நூறு வருடங்களும், மாலைப்பொழுது நூறு வருடங்களும் சேர்த்து ஆயிரத்து இருநூறு {1200} வருடங்களாகும்)[2].(21) இந்த யுகங்கள் முடிவில்லாதவையும், நித்தியமானவையுமான உலகங்களை எப்போதும் நீடிக்கச் செய்கின்றன. ஓ! குழந்தாய், பிரம்மத்தை அறிந்தவர்கள் இதையே மாற்றமில்லாத பிரம்மமாகக் கருதுகிறார்கள்.(22) கிருத யுகத்தில் வாய்மையுடன் சேர்த்து அனைத்து கடமைகளும் {தர்மங்களும்} முழுமையாக இருந்தன. நீதியற்ற அல்லது தடுக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் மனிதர்களிடம் எந்த அறிவும், பொருளும் சேரவில்லை.(23) பிற யுகங்கள் ஒவ்வொன்றிலும், வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் படிப்படியாகக் கால் பகுதி குறைவது காணப்படுகிறது. களவு, பொய்மை, வஞ்சகம் ஆகியவற்றின் விளைவால் பாவம் வளர்கிறது.(24) கிருத யுகத்தில், மனிதர்கள் அனைவரும் நோயற்றவர்களாக, அவர்களது நோக்கங்கள் அனைத்திலும் வெற்றிபெற்றவர்களாக நானூறு வருடங்கள் வாழ்கிறார்கள். திரேதா யுகத்தில் கால்பகுதி வாழ்நாள் அளவு குறைகிறது {அதாவது மனிதர்கள் முன்னூறு வருடங்கள் வாழ்கிறார்கள்}.(25)

[2] அதாவது கிருத யுகம் 4,800 வருடங்கள் கொண்டதாகும். திரேதா யுகம் 3,600; துவாபர யுகம் 2,400; கலியுகம் 1,200 வருடங்களைக் கொண்டதாகும். எனினும் இவை தேவ வருடங்களாகும் {தேவர்களின் ஒரு வருடம் மனிதர்களின் 360 வருடங்களைக் கொண்டதாகும்}. இங்கே சொல்லப்படும் 15-17 மற்றும் 20-21 சுலோகங்கள் மனுசாத்திரம் அதிகாரம் 1ல் இருக்கின்றன. கும்பகோணம் பதிப்பில், "கிருதயுகமானது நாலாயிரம் வருஷங்களென்று கூறுகிறார்கள். அந்த யுகத்தின் ஸந்தியாகாலம் நானூறு வருஷங்களும், அப்படியே ஸந்தியாம்சம் நானூறுவருஷங்களுமாகும். அதைவிட வேறான மூன்று யுகங்களிலும் அவைகளின் ஸந்தியைகளிலும் ஸந்தியாம்சங்களிலும் ஒவ்வொன்று குறையக் கூறிய ஆயிரம் வருஷங்களும் நூறு வருஷங்களும் நூறு வருஷங்களுமாகும்" என்றிருக்கிறது.

அடுத்தடுத்த யுகங்களில் வேதங்களின் வார்த்தைகள், வாழ்நாள் காலம், (பிராமணர்கள் சொல்லும்) அருளாசிகள், வேத சடங்குகளின் கனிகள் ஆகியன அனைத்தும் படிப்படியாகக் குறைவதாக நாம் கேள்விப்படுகிறோம்.(26) கிருத யுகத்திற்காக நிறுவப்பட்டுள்ள கடமைகள் ஒருவகையாக உள்ளன. திரேதா யுகத்திற்காக நிறுவப்பட்டவை மறு வகையாக உள்ளன. துவாபர யுகத்திற்காக நிறுவப்பட்டவை வேறு வகையாக உள்ளன. மேலும் கலியுகத்திற்காக நிறுவப்பட்டவை மறுவகையாக உள்ளன. இவை அடுத்தடுத்த யுகங்களில் நேரும் வீழ்ச்சி குறிக்கும்படி அமைகின்றன.(27) கிருத யுகத்தில் தவமே முதன்மையான இடத்தைப் பெறுகிறது. திரேதா யுகத்தில் அறிவே முதன்மையானதாக இருக்கிறது. துவாபர யுகத்தில் வேள்வி முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. கலியுகத்தில் தானமே ஒரே பொருளாக விதிக்கப்பட்டிருக்கிறது.(28)

(தேவர்களின்) இந்தப் பனிரெண்டாயிரம் வருடங்களே யுகங்கள் என்றழைக்கப்படுபவையாக அமைகின்றன {ஒரு தேவயுகம் என்றழைக்கப்படுகிறது} எனக் கல்விமான்கள் சொல்கிறார்கள். இத்தகைய ஆயிரம் யுகங்களே பிரம்மனின் ஒரு பகல் வேளையாக அமைகிறது[3].(29) பிரம்மனின் இரவும் அதே கால அளவைக் கொள்கிறது. பிரம்மனின் பகல் தொடங்கியதும், அண்டம் உயிர்பெறத் தொடங்குகிறது. அண்டத்தின் அழிவுக்காலத்தில், படைப்பாளன் {பிரம்மன்} தியான யோகத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறான். உறக்க காலம் முடிந்ததும் அவன் விழிப்படைகிறான்.(30) இத்தகைய ஆயிரம் யுகங்கள் பிரம்மனின் ஒரு பகலாகின்றன. அதே போல ஆயிரம் யுகங்கள் அவனது ஓரிரவு ஆகின்றன. இஃதை அறிந்தவர்களே பகல் மற்றும் இரவை அறிந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(31) பிரம்மன், இரவு கடந்து விழித்ததும், அழிவற்ற சித்-ஐ அவித்யையால் மறைத்துத் திருத்தி அமைக்கிறான். பிறகு அவன் எழச்செய்யும் நனவுநிலையில் இருந்து, புலப்படுபவைக்கு ஒப்பான மனம் உண்டாகிறது" என்றார் {வியாசர்}[4].(32)

[3] "மொத்தம் 12,000 வருடங்கள். இவையே ஒரு தேவயுகமாக அமைகின்றன. ஓராயிரம் தேவ யுகங்கள் பிரம்மனின் ஒரு பகலாக அமைகின்றன. இந்த 28ம் சுலோகம் மனுசாத்திரம், அத்தியாயம் 1லும் வருகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "முந்தைய பகுதிகளை {அத்தியாயங்களை} ஏற்கனவே படித்திருப்போர் சிரமமில்லாமல் இஃதை எளிதில் புரிந்து கொள்வார்கள். புறவுலகென்பது மாற்றமடைந்த மனமேயன்றி வேறில்லை. எனவே, மனம் என்பது வியக்தாத்மகம் vyaktaatmaka அல்லது வியக்தத்தின் ஆத்மா, அல்லது புலப்படுவது, அல்லது வியக்தமாக இருப்பது, அல்லது வியக்தத்திற்கு எதற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாதது எதுவோ அதுவே ஆகும். சில வங்கப்பதிப்புகளில் இந்தப் 231ம் பகுதி 32ம் சுலோகத்தோடு முடிவடையாமல் 232-ம் பகுதியில் உள்ளவற்றையும் சேர்த்துத் தொடர்கிறது. எனினும், பம்பாய் உரைகளிலும், நான் பார்க்கும் சில வங்க உரைகளிலும் அவ்வாறில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஆயிரம் யுகங்களின் முடிவைப் பிரம்மதேவரின் பகலென்றும் ஆயிரம் யுகங்களின் முடிவையே இரவென்றும் இரவு பகல்களை அறிந்த ஜனங்கள் அறிவிக்கிறார்கள். விழித்துக் கொண்ட பிரம்மதேவர் இரவு சென்றதும் அழிந்த மஹத்துவத்தைப் படைக்கிறார். அதிலிருந்து ஸ்தூல உருவமுள்ள மனமுண்டாகிறது. மனமானது படைக்க வேண்டுமென்ற விருப்பத்தால் ஏவப்பட்டுப் படைப்பைச் செய்கிறது" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 231ல் உள்ள சுலோகங்கள் : 32

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்