Wednesday, July 25, 2018

பிரளயம்! - சாந்திபர்வம் பகுதி – 233

The universal dissolution! | Shanti-Parva-Section-233 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 60)


பதிவின் சுருக்கம் : அண்டமே அழிந்து போகம் பிரளயம் எவ்வாறு நேர்கிறது என்பதைச் சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்...


வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "உயர்ந்த தலைவனின் {ஈஸ்வரனின்} பகல் கடந்து, அவனது இரவு வேளை வரும்போது, அனைத்துப் பொருட்களையும் அவன் தன்னுள் எவ்வாறு ஈர்த்துக் கொள்கிறான், அல்லது அவன் திரளாக இருக்கும் இந்த அண்டத்தை மிக நுட்பமானதாக்கி, அனைத்தையும் எவ்வாறு தன் ஆன்மாவுக்குள் கலக்கச் செய்கிறான் என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லப்போகிறேன். அண்ட அழிவுக்கான {பிரளயத்துக்கான} காலம் வரும்போது, பனிரெண்டு சூரியர்களும், ஏழு தழல்களுடன் கொண்ட அக்னியும் எரியத் தொடங்குகின்றன. அந்தத் தழல்களால் மறைக்கப்படும் மொத்த அண்டமும், பெருந்தீயாகச் சுடர்விட்டு எரியத் தொடங்கும்.(2) பூமியில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும், இந்தக் கோளானது எந்தப் பொருளால் ஆனதோ அதற்குள் முதலில் கலந்து மறையும்.(3) இவ்வாறு அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் மறைந்தபிறகு, மரம் செடி கொடிகளை இழந்த பூமியானது வெறுமையான ஆமை ஓட்டைப் போலத் தெரியும்.(4)

அப்போது நீரானது, பூமியின் குணமான மணத்தை ஏற்கிறது. பூமி தன் அடிப்படை குணத்தை இழக்கும்போது அந்தப் பூதம் {நிலமெனும் பூதம்} அழிவின் விளிம்பில் நிற்கும்.(5) அப்போது நீரே மேலோங்கி நிற்கிறது. பெரும் அலைகள் பெருகி, பயங்கர முழக்கங்களை உண்டாக்கி இந்த வெளியை நீரே நிரப்பி அசையும் அல்லது அசையாமல் நிற்கும்.(6) பிறகு நீரின் குணம் வெப்பத்தால் எடுத்துக் கொள்ளப்படும். தன் குணத்தை இழக்கும் நீரானது அந்தப் பூதத்திலேயே ஓய்வெடுக்கும்.(7) சுற்றிலும் சுடர்விட்டெழும் பிரகாசமான நெருப்பின் தழல்கள் வெளியின் மையத்தில் உள்ள சூரியனை மறைக்கும். உண்மையில் அப்போது, சீற்றமிகு தழல்கள் நிறைந்த வெளியானது பெருந்தீயாக எரியும்.(8)

காற்று {வாயு} வந்து வெப்பம், அல்லது ஒளியின் குணமான வடிவத்தை எடுத்துக் கொள்ளும். இதனால் பெரும் வலிமை கொண்ட காற்றின் வசப்பட்டுத் தணிவடையும் அது {வெப்பம் / ஒளி}, பயங்கரமாகக் கலக்கமடையத் தொடங்கும்.(9) காற்றானது தன் சொந்த குணமாக ஒலியை அடைந்து மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் பத்துப் புள்ளிகள் அனைத்திலும் கடந்து செல்லும்.(10) அப்போது காற்றின் குணமான ஒலியை எடுத்துக் கொள்ளும் வெளியினால் தணிவடையும் அது, கேள்விப்படாத, அல்லது சொல்லப்படாத ஒலிக்கு ஒப்பான இருப்பு வட்டத்திற்குள் நுழையும்.(11) அப்போது வெறும் வெளி மட்டுமே எஞ்சும், ஒலியைத் தன் குணமாகக் கொண்ட அந்தப் பூதமானது, எவ்வகை வடிவமும் கொள்ளாமல், வடிவம், சுவை, தீண்டல், மணம் ஆகிய பண்புகளை இழந்த பிற பூதங்கள் அனைத்துடன் சேர்ந்து இருப்பின் புலப்படா நிலையான ஒலியைப் போல வசிக்கும்.(12)



பிறகு, வெளியின் பண்பான ஒலியானது, புலப்படும் பொருட்கள் அனைத்தின் சாரமாக இருக்கும் மனத்தால் விழுங்கப்படுகிறது. தானே புலப்படாததாக இருக்கும் மனமானது, இவ்வாறே மனத்தின் மூலம் வெளிப்பட்ட அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது. புலப்படாததாக, அல்லது நுட்பமானதாக மனத்தில் தெரியும் இந்த மன ஈர்ப்புநிலையே பரந்த புற அண்ட அழிவு என்றழைக்கப்படுகிறது[1].(13) அப்போது சந்திரமாஸ் {சந்திரன்}, (இவ்வாறு) மனத்தை அதன் குணத்திற்குள் தானே ஈர்க்கும்படி செய்து அதை விழுங்குகிறது. சந்திரமாஸுக்குள் நுழைந்து மனம் இருப்பில் இல்லாமல் போகும்போது, ஈஸ்வரனுக்குச் சொந்தமான பிற குணங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.(14) சங்கல்பம் என்றழைக்கப்படும் இந்தச் சந்திரமாஸ், சித்தம் அல்லது தீர்மானம் என்ற அழைக்கப்படும் செயல்பாட்டில் ஈடுபடும் புலங்களை அழிப்பது என்ற மிகக் கடினமான செயலைச் செய்ய வேண்டிய காரணத்தால். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, அந்தச் சங்கல்பம் ஈஸ்வரனின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகிறது. இதுவும் விளைந்த பிறகு அடையப்படும் நிலையென்பது உயர்ந்த அறிவு என்று சொல்லப்படுகிறது.(15) காலம் இந்த அறிவை விழுங்குகிறது, மேலும் ஸ்ருதியில் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போலக் காலமும் தனக்கான வேளையில் வலிமை அல்லது சக்தியால் விழங்கப்படுகிறது. எனினும் வலிமை அல்லது சக்தியானது, மீண்டும் காலத்தால் விழுங்கப்பட்டு, இறுதியில் வித்யையின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகிறது.(16)

[1] கும்பகோணம் பதிப்பில், "ஆகாயத்தின் குணமான சப்தத்தை ஸ்தூலமாகக் காணத்தக்க உருவமுள்ள மனமானது எப்பொழுது விழுங்குமோ அப்பொழுது பிரளயகாலத்தில் அவ்வாகாசமும் லயப்படுகிறது. வ்யக்தமான மனத்தின் உருவம் வ்யக்தமும் அவ்யக்தமுமாயிருக்கிறது" என்றிருக்கிறது.

வித்யையைக் கொண்ட ஈஸ்வரன், அந்த இல்லாமையையே தன் ஆன்மாவுக்குள் விழுங்கிக் கொள்கிறான். அதுவே புலப்படாததும் உயர்ந்த பிரம்மமுமாகும். அதுவே நித்தியமானதும், உயர்ந்ததில் உயர்ந்ததுமாகும்.(17) இவ்வாறே இருப்பில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுகின்றன.(18) உண்மையில், அறிவியல் காரியமும், (சாத்திரங்களின் துணையுடன்) உணரப்பட வேண்டியதுமான இஃது, உண்மையான அனுபவத்திற்குப் பிறகு, பரம ஆத்மாக்களைக் கொண்ட யோகியரால் இவ்வாறே அறிவிக்கப்பட்டிருக்கிறது.(19) இவ்வாறே, புலப்படாத பிரம்மமானது விரிந்து சுருங்கும் (அதாவது, படைத்து, அழிக்கும்) செயல்பாட்டை மீண்டும் மீண்டும் செய்கிறது. இவ்வாறே ஆயிரம் யுகங்களைக் கொண்ட பிரம்மனின் பகலும், இரவும் இருக்கின்றன" என்றார் {வியாசர்}[2].(20)

[2] "16 மற்றும் 17ம் ஸ்லோகங்கள் மிகக் கடினமானவையாக இருக்கின்றன. உரையாசிரியர் அவற்றுக்குப் பொருள் கொள்வதில் பெரும் கல்வித் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். எனினும், இக்காரியம் யோகப் புதிரைக் குறித்ததாகும், அதன் உரையாசிரியர் கொடுக்கும் விளக்கமும் விவரிப்பும் சாதாரண அனுபவமும், புத்தியும் கொண்டவர்களுக்கு எட்டாத பொருட்களைக் குறிப்பதாக இருக்கிறது. (17ம் ஸ்லோகத்தில் வரும்) சந்திரமாஸ், காலம், வலம், ஆகாசம் மற்றும் கோசம் ஆகியன யோகத்தின் கலைச்சொற்களாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட கல்விமான்களிடம் நான் இந்தச் சுலோகத்தைக் குறிப்பிட்டுக் கேட்டிருக்கிறேன். எனக்கு வழிகாட்டிகளான அவர்கள், இங்கே யோகிகள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய யோகப் புதிர் விளக்கப்படுவதாகக் கருதுகிறார்கள். ஐரோப்பிய அறிஞர்கள் மறைபொருள் கொண்ட இந்த வாக்கியத்தின் வார்த்தைகளைக் கண்டு சிரிக்கலாம். பல வாசகர்கள் இந்த ஸ்லோகங்கள் பொருளில்லாதவை என்றும் எடுத்துக்கொள்ளக்கூடும். எனினும், தீவிர சிந்தனைக்குப் பிறகு யோகம் என்பது பொருளற்றதல்ல என்றே நான் நம்புகிறேன். வடிவியல் அல்லது இயற்கணிதக் கூறுகளை Elements of Geometry or Algebra கல்லாத ஒருவன், எவ்வளவுதான் நுண்ணறிவு படைத்தவனாக இருப்பினும், டின் மோயிரின் கோட்பாடு அல்லது முக்கிய முன்மொழிவின் ஒரு பகுதியை உடனே புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பான். உண்மை பொருளைக் கொடுக்கத் தவறியிருக்கும் நான், சொல்லுக்குச் சொல்லான மொழிபெயர்ப்பைக் கொடுப்பதோடு நிறைவடைகிறேன்" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார். சாந்தி பர்வத்தின் 245ம் பகுதியில் உள்ள 2ம் அடிக்குறிப்பில் இதற்கு பிரத்யாஹார யோகம் என்று பெயர் குறிப்பிடப்படுகிறது. கும்பகோணம் பதிப்பில், "ஸங்கல்பத்தை வசமாக்கிக் கொள்ளுவது மிக உத்தமமான ஞானமாகும். அந்த ஞானத்தையும் காலம் விழுங்குகிறது. அக்காலத்தையும் சக்தி விழுங்குகிறதென்று வேதம் உபதேசிக்கிறது. சக்தியைக் காலம் விழுங்குகிறதென்பதில்லை. அக்காலத்தையும் பிரம்மஜ்ஞானமுள்ளவன் தன் வசமாக்கிக் கொள்ளுகிறான். அப்பொழுது பிரம்மஜ்ஞானமுள்ளவன் ஆகாயத்தின் குணமான நாதத்தையும் (அதாவது சப்தப்ரம்மத்தையும்) ஆத்மரூபத்தில் லயிக்கச் செய்கிறான். அந்த ஆத்மரூபம் ஸூக்ஷ்மமான பரப்ரம்மமாகும். அது சாஸ்வதமும் மிக உத்தமமுமாகும். இவ்விதம் எல்ல வஸ்துகளையும் பிரம்மமே லயப்படுத்திக் கொள்ளுகிறது. இது இவ்விதமே உண்மையானது. ஸந்தேகமில்லை" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 233ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்