Sunday, August 05, 2018

ஞானமும், கர்மமும்! - சாந்திபர்வம் பகுதி – 241

Knowledge and acts! | Shanti-Parva-Section-241 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 68)


பதிவின் சுருக்கம் : கர்மம் மற்றும் ஞானம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...


சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "வேத அறிவிப்புகள் இருவகையில் இருக்கின்றன. ஒருமுறை "செயல்கள் அனைத்தையும் செய்" என்று அவை கட்டளையிடுகின்றன. மறுமுறை (இதற்கு முரணாக) "செயல்கள் அனைத்தையும் கைவிடு" என்றும் அவை சொல்கின்றன. ஞானத்தின் துணை மூலம் மனிதர்கள் எங்கே செல்கின்றனர் {எந்த கதியை அடைகின்றனர்}[1]? செயல்களின் துணை மூலம் அவர்கள் எங்கே செல்கின்றனர் {எந்த கதியை அடைகின்றனர்}?(1) நான் இதைக் கேட்க விரும்புகிறேன். நீர் எனக்குச் சொல்வீராக. உண்மையில் ஞானம் மற்றும் செயல்கள் {கர்மம்} குறித்த இந்த அறிவிப்புகள் மாறுபாடு கொண்டவையாகவும், முரணானவையாகவும் இருக்கின்றன" என்று கேட்டார்".(2)


[1] "செயல்கள் மற்றும் ஞானம் ஆகிய இரண்டின் நன்மைகளையும் வேதங்கள் அறிவிக்கின்றன. ஞானம் கொண்டவர்களுக்குச் செயல்கள் விதிக்கப்படவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பராசரர் மகன் {வியாசர்}, தன் மகனிடம் {சுகரிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார்: "முறையே செயல்கள் மற்றும் ஞானத்தைச் சார்ந்திருக்கும் அழியக்கூடிய மற்றும் அழிவற்ற இரு பாதைகளை நான் உனக்கு விளக்கப் போகிறேன். ஓ! குழந்தாய், ஞானத்தின் துணை மூலம் ஒருவன் அடையும் இடத்தையும் {கதியையும்}, செயல்களின் துணை மூலம் அவன் அடையும் வேறு இடத்தையும் {கதியையும்} நான் உனக்குச் சொல்கிறேன்; குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. இந்த இரண்டு இடங்களுக்கு இடையிலான வேறுபாடானது எல்லையற்ற வானைப் போன்று மிகப் பெரிதானதாகும்.(3,4) நீ என்னிடம் கேட்டிருக்கும் இந்தக் கேள்வியானது, நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனுக்கு ஒரு நாத்திகனின் உரை அளிக்கும் வலியை எனக்குத் தருகிறது.(5)

வேதங்களில் நிறுவப்பட்டிருக்கும் இருவழிகள், பிரவிருத்தியின் மூலம் குறிப்பிடப்படும் (செயல்கள்) கடமைகள் மற்றும் நிவிருத்தியின் அடிப்படையிலான சிறப்புக் கடமைகள் ஆகியனவே ஆகும்.(6) செயல்களின் மூலம் ஓர் உயிரினம் அழிவடைகிறது. எனினும், ஞானத்தின் மூலம் அது விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}. இதன் காரணமாகவே, வாழ்வெனும் பெருங்கடலின் அடுத்தக் கரையைக் காணும் யோகியர், ஒருபோதும் தங்களைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்வதில்லை.(7) செயல்களின் மூலம், ஒருவன் தனது மரணத்திற்குப் பிறகு, பதினாறு உட்பொருள்களால்[1] தொகுக்கப்பட்ட உடலுடன் மறுபிறப்பெடுக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகிறான். எனினும் ஞானத்தின் மூலம் அவன், எது நித்தியமானதோ, புலப்படாததோ, அனைத்தையும் அறிந்ததோ அதுவாகவே {பிரம்மமாகவே} மாற்றமடைகிறான்.(8) குறைந்த அறிவுள்ள ஒருவகை மனிதர்கள் செயல்களை மெச்சுகின்றனர். இதன் விளைவால் அவர்கள் (ஒன்றன்பின் ஒன்றாக) இடையறாமல் உடல்களை ஏற்கின்றனர்.(9) கடமைகளைப் பொறுத்தவரையில் கூரிய உள்ளுணர்வுகளைக் கொண்டவர்களும், (ஞானத்திற்கு வழிவகுக்கும்) உயர்ந்த புத்தியை அடைந்தவர்களுமான மனிதர்கள், ஓடைகளில் நீர் அருந்துபவர்கள், எவ்வாறு கிணறுகள் மற்றும் குளங்களின் நீரை ஒருபோதும் மெச்சுவதில்லையோ அவ்வாறே செயல்களை ஒருபோதும் மெச்சுவதில்லை.(10)

[1] அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியம்} ஐந்து, செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்து, உயிர் மூச்சுகள் {பிராணன்} ஐந்து, மனம் {அந்தக்கரணம்} ஒன்று ஆகியனவே அந்தப் பதினாறு உட்பொருட்களாகும்.

செயல்களின் மூலம் ஒருவன் அடையும் கனியானது, இன்பம் மற்றும் துன்பம், இருப்பு மற்றும் இல்லாமை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஞானத்தின் மூலமோ, எங்கே எந்தத் துன்பமும் இல்லையோ;(11) எங்கே ஒருவன் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிவற்றில் இருந்து விடுபடுவானோ; எங்கே ஒருவன் முதுமைக்கு ஆட்படுவதில்லையோ; எங்கே ஒருவன் நனவுநிலையிருப்பை {அகங்காரத்தைக்} கடந்த நிலையை அடைகிறானோ;(12) எங்கே உயர்வானதும், புலப்படாததும், அனைத்தையும் அறிந்ததும், எப்போதும் இருப்பதும், உணரப்பட முடியாததும், துன்பத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதும், அழிவில்லாததும், அழிவை விஞ்சி இருப்பதுமான பிரம்மம் இருக்கிறதோ;(13) எங்கே (இன்பம் மற்றும் துன்பம் முதலிய) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்தில் இருந்தும், விருப்பம் அல்லது நோக்கத்தில் இருந்தும் அனைவரும் விடுபடுவார்களோ அந்த இடத்தை {பிரம்ம ஸ்வரூபத்தை ஞானத்தினால்} அவன் அடைகிறான். அவர்கள், அந்த நிலையை அடைந்து, அனைத்துப் பொருட்களின் மீதும் சமமான கண்களைச் செலுத்தி, உலகளாவிய நண்பர்களாகி, அனைத்து உயிரினங்களின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் ஆகிறார்கள். ஓ! மகனே, ஞானத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனுக்கும், செயல்களில் அர்ப்பணிப்புள்ளவனுக்கும் இடையில் ஒரு பெரிய வளைகுடா இருக்கிறது.(14) ஞானம் கொண்ட மனிதன் அழிவை அடையாமல், தேய்பிறையின் இறுதி இரவில் (அழிவடையாத) நுட்பமான வடிவில் இருக்கும் சந்திரனைப் போல எப்போதும் {நுட்பமாகவே} நீடித்திருக்கிறான்.(15)

(பிருஹதாரண்யகத்தில் யாக்ஞவல்கியர் எனும்) பெரும் முனிவர் இதைக் குறித்து இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதனைப் பொறுத்தவரையில், அவனது இயல்பானது {ஸ்வபாவமானது}, புதிதாகப் பிறந்த நிலவானது, ஆகாயத்தில் வளைவான நூலாகத் தெரிவதைப் போல ஊகித்தறியப்படுகிறது[2].(16) ஓ! மகனே, செயல்களைச் செய்யும் மனிதன் {கர்மமயமான புருஷன்}, மாறுதலின் விளைவுகளான பதினோரு உட்பொருள்களுடனும், பதினாறு நுட்பமான வடிவங்களுடனும் மறுபிறப்பெடுக்கிறான் என்பதை அறிவாயாக.(17) தாமரை இலையில் தண்ணீர் துளியைப் போல, அந்த (பொருள்) வடிவத்தில் {உயிரினத்தில்} புகலிடம் கொள்ளும் தேவன், நித்தியமானதும், மனம் மற்றும் புத்தியைக் கடந்து யோகத்தில் வெல்வதுமான க்ஷேத்ரஜ்ஞனாக (ஆன்மாவாக) அறியப்பட வேண்டும்[3].(18) தமஸ், ரஜஸ் மற்றும் சத்வம் ஆகியன புத்தியின் குணங்களாகும். புத்தியானது, உடலுக்குள் வசிக்கும் தனிப்பட்ட ஆத்மாவின் குணமாகும். மேலும், தனிப்பட்ட ஆன்மாவோ பரமாத்மாவில் {பரமாத்மாவின் குணத்தில்} இருந்து வருகிறது[4].(19) ஆன்மாவுடன் கூடிய உடலானது, ஜீவனின் குணமெனச் சொல்லப்படுகிறது. ஜீவனே செயல்பட்டு, அனைத்து உடல்களையும் உயிர்வாழச் செய்கிறது. எது க்ஷேத்திரம் (என்றும், எது க்ஷேத்ரஜ்ஞன்) என்று{ம்} அறிந்தவர்கள், ஏழு உலகங்களையும் படைத்தவனே {பரமாத்மாவே} மேற்கண்ட ஜீவன் {ஆத்மா} என்று சொல்கிறார்கள்" என்றார் {வியாசர்}[5].(20)

[2] "செயல்களைச் செய்யும் மனிதனானவன், எப்போதும் வளர்ந்து சிதையும் புதிய நிலைவைப் போன்றவனாவான் என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "உடலின் எந்தக்குணத்திலும் தொடர்புகொள்ளாமல் ஆன்மா அந்த உடலுக்குள்ளேயே வசிக்கிறது. எனவே, அது தாமரை நீருக்கு ஒப்பிடப்படுகிறது. இலையில் இருந்தாலும் அந்நீர், அந்த இலையின் எந்தப் பகுதியையும் நனைத்துவிடாமல் அதனுடன் எந்தப் பற்றும் கொள்ளாமல் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "தமஸ், ரஜஸ் மற்றும் சத்வம் ஆகியவை ஜீவனின் குணத்தையே தங்கள் சாரமாகக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட ஜீவனின் குணம் ஞானமயகோஷம் Jnaanamay Kosha என்று சொல்லப்படுகிறது. மேலும் ஜீவன் என்பது தற்செயலான ஆன்மாவே ஆகும். ஆன்மா பரமாத்மாவிலிருந்து வருகிறது. இவ்வேறு இருப்பின் சங்கிலி பரமாத்மாவில் இருந்து சுவடு காணப்படுகிறது. 20ம் ஸ்லோகத்தில் அசைவில்லாததாக இருக்கும் உடலானது, ஆன்மாவுடன் இருக்கும்போது, தற்செயலாகக் குணங்களற்ற ஜீவனாகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] மேற்கண்ட 18-20 ஸ்லோகங்கள் பிபேக்திப்ராயின் பதிப்பில், "க்ஷேத்திரக்ஞன் என்பவன், தாமரை இதழ் தண்ணீர் துளியைப் போல உடலில் புகலிடம் கொள்பவனாவான். துறவின் மூலம் ஆத்மாவை வெல்பவன், இஃதை எப்போதும் அறிவான். அனைத்து உயிரினங்களும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் கலந்ததே என்பதை அறிவாயாக. ஜீவாத்மாவுக்கு இக்குணங்கள் உண்டு. ஆனால் ஜீவாத்மாவை பரமாத்மாவாக அறிவாயாக. நனவுநிலையானது உயிரினங்களின் குணம் என்று சொல்லப்படுகிறது. அதுவே அனைத்திலும் அவற்றை முயற்சி செய்ய வைக்கிறது. இஃதை அறிந்தவர்கள் உடலைக்கடந்து உயர்ந்திருப்பதைக் குறித்துப் பேசுகிறார்கள். ஏழு உலகங்களும் அதனிலிருந்தே பாய்கிறது" என்றிருக்கிறது. இதே வரிகள் கும்பகோணம் பதிப்பில், "மேகத்தில் ஜலத்திவலை போல அந்தச் சந்திரனிடத்திலிருக்கிற தேவனே நித்தியம் யோகத்தால் மனத்தை ஜயித்தவனான ஜீவனாகத் தெரிந்து கொள். தமஸ், ரஜஸ், ஸத்வங்களை ஜீவன் குணமாகவும், ஜீவனைப் பிரத்யகாத்மாவின் குணமாகவும், பிரத்யகாத்மாவைப் பரமாத்மாவின் குணமாகவும் அறியக்கடவாய். க்ஷேத்ரவித்துக்களானவர்கள் அசேதனத்தை ஜீவன் குணமாகவும், ஜீவனைப்ரவிருத்தியுள்ளவனென்றும் எல்லாவைற்றையும் சேஷ்டிக்கும்படி செய்கிறவனென்றும் ஏழுலோகங்களையும் கற்பித்தவன் ஜீவனைக் காட்டிலும் பரனென்றும் சொல்லுகிறார்கள்" என்றிருக்கிறது. கங்குலி, பிபேக்திப்ராய் மற்றும் கும்பகோணம் பதிப்பில் உள்ளவை ஒன்றுக்கொன்று முற்றிலும் வெவ்வேறானவையாக இருக்கின்றன.

சாந்திபர்வம் பகுதி – 241ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்