Saturday, August 11, 2018

ஐம்பூத குணங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 247

The charcteristics of Five elements! | Shanti-Parva-Section-247 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 74)


பதிவின் சுருக்கம் : அத்யாத்மா என்றால் என்ன? வெவ்வேறு பொருட்களில் ஐம்பூதங்களின் வெவ்வேறான பகிர்மானத்தைப் புரிந்து கொள்வது எவ்வாறு? என்பன குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; வியாசரின் பதில்; மனம், புத்தி மற்றும் ஆன்மா குறித்த வியாசரின் அவதானிப்புகள்...


சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அத்யாத்மா குறித்து இன்னும் விரிவாக மீண்டும் எனக்குச் சொல்வீராக. உண்மையில் அத்யாத்மா என்பது என்ன? எங்கிருந்து அது வருகிறது?" என்று கேட்டார்[1].(1)

[1] "அத்யாத்மா என்பது ஆன்மா குறித்த சாத்திரமாகும். இங்கே அஃது, ஐந்து செயற்புலன்கள், ஐந்து அறிவுப்புலன்கள், மனம், சித்தம் முதலியவையாக அழைக்கப்படும் இன்னும் மூன்று {எனினும் இஃது ஒன்றாகவே கணக்கிடப்படுகிறது}, ஐந்து உயிர் மூச்சுகள், ஐபூதங்கள், ஆசை, செயல்கள் மற்றும் அவித்யை அடங்கிய இருபத்தேழு காரியங்களுக்கான தத்துவ உரையாடலைக் கூறுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "ஓ! மகனே, மனிதர்களின் அத்யாத்மா என்று கருதப்படுவதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன், (அத்யாத்மா குறித்து) நான் தரப்போகும் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) நிலம், நீர், ஒளி, காற்று, வெளி ஆகியன அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அடங்கிய பெரும்பூதங்களாகும். ஒன்றாகவே இருப்பினும் அவை பெருங்கடலின் அலைகளைப் போல வெவ்வேறானவையாகக் கருதப்படுகின்றன (உள்ளடக்கப் பொருளால் ஒன்றாகவே இருப்பினும் அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகவே கணக்கிடப்படுகின்றன).(3) ஓர் ஆமையானது தனது அங்கங்களை நீட்டி, மீண்டும் அவற்றைச் சுருக்கிக் கொள்வதைப் போலவே, (ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட) பெரும்பூதங்களும், எண்ணிலா சிறு வடிவங்களில் வசிப்பதன் மூலம், (படைப்பு என்றும் அழிவு என்றும் அழைக்கப்படும்) மாற்றங்களுக்கு உட்படுகின்றன.(4) அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய இந்த அண்டம் முழுமையும் இந்த ஐம்பூதங்களே இருக்கின்றன. படைப்பு மற்றும் அழிவு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அனைத்திலும், இந்த ஐந்துவகைப் பூதங்களே குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன.(5) இந்த ஐம்பூதங்களும் இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் இருக்கின்றன. எனினும், அனைத்துப் பொருட்களையும் படைத்தவன், (வெவ்வேறு பொருட்களில் வெவ்வேறு அளவுகளில் அமைத்ததன் மூலம்) வெவ்வேறு முடிவுகளை எட்டுவதற்காக அந்தப் பூதங்களைச் சமமற்ற வகையில் பகிர்ந்திருக்கிறான்" என்றார் {வியாசர்}.(6)



சுகர், "அண்டத்தின் பல்வேறு பொருட்களில் (நீர் சொல்லும் இந்த ஐம்பெரும் பூதங்களின்) சமமற்ற பகிர்வை ஒருவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? அவற்றில் புலன்கள் எவை? குணங்கள் எவை? இஃதை எவ்வாறு புரிந்து கொள்வது?" எனக் கேட்டார்.(7)

வியாசர், "இவற்றை முறையாக ஒன்றன்பின் ஒன்றாக உனக்கு விளக்குகிறேன். உண்மையில் எவ்வாறு, என்ன நடக்கிறது என்பதை நான் விளக்கும்போது, அதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(8) ஒலி {சப்தம்}, கேள்விப் புலன் {செவி /ஸ்ரோதரம்}, உடலில் உள்ள துளைகள் அனைத்தும் என இம்முன்றும் வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. உயிர் மூச்சுகள் {வாயுக்கள் / பிராணன்}, அங்கங்களின் செயல்பாடு {சேஷ்டை}, ஊறு {தீண்டல் /ஸ்பர்சம்} ஆகியன காற்றின் குணத்தைக் கொண்டுள்ளன.(9) வடிவம் {ரூபம்}, கண்கள் {நேத்ரம்}, குடலுக்குள் உள்ள செரிமான நெருப்பு {அக்னி} ஆகியன ஒளியால் {தேயுவால்} தோன்றுகின்றன. சுவை, நாக்கு மற்றும் உடல் நீர்மங்கள் அனைத்தும் அடங்கிய இம்மூன்றும் நீரில் இருந்து வந்தனவாகும்.(10) மணம், மூக்கு மற்றும் உடலென்ற இம்மூன்றும் பூமியின் குணங்களாக இருக்கின்றன. நான் உனக்குச் சொன்ன இவையே புலன்களுடன் தொடர்புடைய ஐம்(பெரும்)பூதங்களின் மாற்றங்கள் ஆகும்.(11)

தீண்டல் காற்றின் குணமாகவும்; சுவை நீரின் குணமாகவும், வடிவம் ஒளியின் குணமாகவும் சொல்லப்படுகின்றன. ஒலி தன் தோற்றுவாயை வெளியில் {ஆகாயத்தில்} கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது, மணமோ பூமியின் {நிலத்தின்} தன்மையாகச் சொல்லப்படுகிறது.(12) மனம், புத்தி, இயற்கை ஆகிய இம்மூன்றும் தங்கள் முந்தைய நிலைகளில் இருந்து எழுந்து, (ஒவ்வொரு மறுபிறவியிலும் தங்களுக்குரிய) குணங்களை விட உயர்ந்த நிலையை அடைந்து, அந்தக் குணங்களைக் கடந்து செல்லாமல் இருக்கின்றன[2].(13) ஆமையானது தனது அங்கங்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போலவே புத்தியும், புலன்களைப் படைத்து மீண்டும் தனக்குள்ளேயே அவற்றை இழுத்துக் கொள்கிறது[3].(14) உள்ளங்காலுக்கு {பாதங்களுக்கு} மேலும், உச்சந்தலைக்குக் கீழும் உள்ள பகுதியில் இருந்து எழும் தனிப்பட்ட அடையாளத்தின் நனவுநிலையானது, அடிப்படையில் புத்தியின் செயல்பாட்டாலேயே உண்டாகிறது[4].(15)

[2] "மனம், புத்தி, இயற்கை (அல்லது தனிப்பட்ட மனித விலங்கு தாவரம் முதலியவற்றின் நிலைகள்) ஆகியன தங்கள் முந்தைய நிலைகளாலே இருக்கின்றன, அதிலும் குறிப்பாக இயல்பு {இயற்கை} என்பது முந்தைய இருப்புநிலையில் உள்ள ஆசைகளின் விளைவாகவே இருக்கிறது. இத்தகைய தோற்றுவாயைக் கொண்ட இவை ஐம்பூதங்களாலும் உண்டாகின்றன. அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், அடுத்தடுத்து உயர்ந்த குணத்தை அடையும் அக்குணங்களைக் கடந்து செல்வதில்லை, அல்லது வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், அவை உண்மையில் உணரும் (மணம், வடிவம் முதலிய) குறிப்பிட்ட குணங்களைப் பற்றும் சக்தியை அடைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மனம், புத்தி, வாஸனை இம்மூன்றும் மனோமயக்கங்கள், ஸத்வரஜஸ்தமோ குணங்களுக்குப் பிறகு உண்டான இவைகள் அந்தக் குணங்களை விட்டிருப்பதில்லை" என்றிருக்கிறது.

[3] "புலன்களும், மனமும், புத்தியின் குறிப்பிட்ட வடிவத் தோற்றங்களே ஆகும். மனத்தின் அடிப்படைச் செயல்பாடே உணர்வுகளைப் பேணிவளர்ப்பதும், புறக்கணிப்பதும்தான். புத்தியானது, நிச்சயாத்மிகம் Nicchayaatmika, அல்லது நிச்சயமான தீர்மானங்களை எட்டுவதில் ஈடுபடும் ஒன்றாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "உள்ளங்காலுக்கும், உச்சந்தலைக்கும் இடையில் உள்ள அனைத்தும்தான் உண்மையில் மொத்த உடல், அல்லது சுயம் அல்லது நபராகிறது. அஸ்மின் கிருத்யே Asmin Kritye என்பது அஹம் இதி யத் தர்சனம் தஸ்மின் காரணியே aham iti yat darcanam tasmin karniye ஆக இருக்கிறது. உரையாசிரியர் இதன் பொருளைச் சரியாகச் சொல்கிறார் என்பதில் ஐயமேதுமில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பாதத்திற்கு மேல் தலைக்குக் கீழுள்ளதை அறிகிறதென்கிற அக்காரியத்தில் உத்தமமான புத்தியானது இருக்கிறது" என்றிருக்கிறது.

புத்தியே (வடிவம், மணம் முதலிய ஐந்து) பண்புகளாக மாற்றமடைகிறது. புத்தியே, ஆறாவதாக மனத்தைக் கொண்டிருக்கும் (ஐந்து) புலன்களாக மாற்றமடைகிறது. புத்தி இல்லாத போது இந்தப் பண்புகள் எங்கே போகின்றன?[5](16) மனிதனில் ஐம்புலன்கள் இருக்கின்றன. மனமானது ஆறாவதாக (ஆறாம் புலனாகச்) அழைக்கப்படுகிறது. புத்தியானது ஏழாவதாக அழைக்கப்படுகிறது. ஆன்மாவானது எட்டாவதாகும்.(17) கண்கள் (முதலிய புலன்கள்), வடிவ (மற்றும் மணம் முதலிய) உணர்வுகளைப் பெறுவதற்காக மட்டுமே உள்ளன. மனமானது, (அந்த உணர்வுகளின் துல்லியத்தில்) ஐயங்கொள்வதற்காக இருக்கிறது. புத்தியானது இந்த ஐயங்களைத் தீர்க்கிறது {அந்த ஐயங்களில் ஒரு தீர்மானத்தை எட்டுகிறது}. ஆன்மாவானது, அவற்றுடன் கலந்துவிடாமல் சாட்சியாக மட்டுமே இருந்து செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் காண்கிறது.(18) ரஜஸ், தமஸ், சத்வம் ஆகிய இம்மூன்றும் தங்கள் தங்களுக்கு ஏற்றபகுதிகளில் இருந்து உண்டாகின்றன. இவை (தேவர்கள் மற்றும் மனிதர்கள் முதலிய) அனைத்து உயிரினங்களிலும் சமமாகவே இருக்கின்றன. இவை குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. மேலும் இவை தூண்டும் செயல்களின் மூலம் இவற்றை அறியலாம்[6].(19)

[5] வடிவம் முதலியவை மற்றும் அந்தப் பண்புகளை உணரும் மனத்துடன் கூடிய புலன்கள் ஆகிய இரண்டின் தன்மைகளும் புத்தியே ஆகும், அதன்காரணமாகவே புத்தி இல்லாத போது இவை இருப்பதில்லை. புலன்கள், மனம், மற்றும் புலன்களும் மனமும் உணரும் பண்புகளோடு புத்தியை அடையாளம் காண்பது இந்தச் சுலோகத்தின் நோக்கமாகும். இதில் வட்டார {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் பிழை செய்திருக்கின்றனர். கும்பகோணம் பதிப்பில், "புத்தியானது சப்தமுதலான குணங்களின் ஸ்வரூபத்தை அடைகிறது. புத்தியே மனமுதலான எல்லா இந்திரியங்குமாகிறது. புத்தியில்லாத விஷயத்தில் குணங்கள் ஏது?" என்றிருக்கிறது.

[6] "ரஜஸ், தமஸ் மற்றும் சத்வம் என்ற இந்த முக்குணங்களும் தங்களில் இருந்து வேறுபட்ட எதனிலிருந்தும் தோன்றாமல், முற்பிறவியில் அல்லது முந்தைய இருப்பில் தங்களுக்குரிய ஒப்பான பகுதிகளில் இருந்தே தோன்றுகின்றன. முற்பிறவியில் சித்தம் அல்லது புத்தியில் நீடித்த அவை தங்களுக்குரிய அந்த நிலைகளில் இருந்தே எழுகின்றன. எனவே அவற்றில் இருந்து எழும், சித்தமும், புலன்நுகர் பொருட்களும் {தன்மாத்திரைகளும்}, புலன்களும் இந்த முக்குணங்களால் பாதிப்பை அடைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ரஜஸ், தமஸ் ஸத்வம் இம்மூன்றும் (பூர்வவாஸனையான) தன் காரணத்தினால் உண்டாகின்றன. அந்தக் குணங்கள் எல்லாப்பிராணிகளிடத்திலும் ஸமமாயிருக்கின்றன. அந்தக் குணங்களை ஊகித்து அறிய வேண்டும்" என்றிருக்கிறது.

அந்தச் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், ஒருவன் தன்னை உற்சாகம் அல்லது மகிழ்ச்சி, அமைதி மற்றும் தூய்மையுடன் கலந்து {செயல்பட்டு} உணரும் நிலைகள் அனைத்தும் சத்வ குணம் என்று அறியப்படுகிறது.(20) கவலையுடன் கலந்த உடல் அல்லது மன நிலைகள் அனைத்தும், ரஜஸ் என்றழைக்கப்படும் குணத்தின் ஆதிக்கத்தால் விளைவதாகக் கருதப்பட வேண்டும்.(21) உறுதியற்ற தன்மையைக் காரணமாகக் கொண்டு (புலன்கள், மனம் அல்லது புத்தி கொள்ளும்) மயக்கத்தோடு கூடியவையும், (அறிவின் மூலமோ உள்ளொளியின் மூலமோ) புரிந்து கொள்ள முடியாதவையுமான நிலைகள் அனைத்தும் தமஸ் செயல்பாட்டைச் சார்ந்தவையாக அறியப்பட வேண்டும்.(22) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, உற்சாகம் {ப்ரீதி), இன்பம் {ஆனந்தம்}, உள்ளச்சமநிலை {ஸம்பாவனை}, இதய நிறைவு {மனத்தின் தெளிவு} ஆகியன அனைத்தும் சத்வ குணத்தின் விளைவுகளாகும்.(23) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் செருக்கு {அபிமானம்}, வாக்கில் பொய்மை {பொய்யுரைத்தல்}, பேராசை {லோபம்}, மயக்கம் {மோகம்}, பழியுணர்ச்சி {பொறாமை} ஆகியன ரஜஸ் குணத்தின் குறியீடுகளாகும்.(24) எந்தவொரு காரணத்திலுமிருந்து எழும், தீர்மான மயக்கம் {மோகம்}, கவனமின்மை {அஜாக்ரதை}, உறக்கம் {நித்ரை}, மயக்கநிலை {அறியாமை}, சோம்பல் ஆகியவற்றைத் தமஸ் குணத்தின் குறீயீடுகளாக அறியப்பட வேண்டும்" என்றார் {வியாசர்}.(25)

சாந்திபர்வம் பகுதி – 247ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்