Tuesday, August 14, 2018

ஆத்மஞானம்! - சாந்திபர்வம் பகுதி – 250

The Knowledge of Soul! | Shanti-Parva-Section-250 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 77)


பதிவின் சுருக்கம் : கடமைகள் அனைத்திலும் உயர்ந்த தவம்; ஆத்மஞானம்; ஆத்மஞானத்தை அடையும் வழி ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...


சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "இவ்வுலகில் இருப்பனவற்றில் எந்தக் கடமை உயர்ந்ததோ, கடமைகள் அனைத்திலும் எது முதன்மையானதோ, அதை மதிப்பிற்குரிய நீர் எனக்குச் சொல்ல வேண்டும்" என்று கேட்டார்.(1)

வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "புராதானத் தோற்றுவாயைக் கொண்டவையும், முனிவர்களால் விதிக்கப்பட்டவையும், அனைத்திற்கும் மேலாகத் தனித்திருப்பவையுமான கடமைகளை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2) பல்வேறு தீய பழக்கங்களில் வீழக்கூடிய அனுபவமற்ற பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் ஒரு தந்தையைப் போல, பித்துக் கொள்ளச் செய்யும் புலன்களைப் புத்தியின் மூலம் கவனமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.(3) தகுதியற்ற அனைத்துப் பொருட்களில் இருந்து மனத்தையும், புலன்களையும் விலக்கிக் கொள்வதும், (தகுந்த பெருட்களில்) முறையாகக் கவனத்தைக் குவிப்பதுமே உயர்ந்த தவமாகும். அதுவே கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். உண்மையில் அதுவே உயர்ந்த கடமையாகச் சொல்லப்படுகிறது.(4)

ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்களைப் புத்தியின் துணை கொண்டு, எண்ணற வகைச் சிந்தனைகளைத் தூண்டுந்தன்மை கொண்ட உலகப் பொருட்களைக் குறித்துச் சிந்திக்காமல், ஒருவன் தன்னிலேயே நிறைவை அடைந்து வாழ வேண்டும்.(5) புலன்களும் மனமும், வழக்கமாகத் தறிகெட்டு ஓடும் மேய்ச்சல் இடங்களில் இருந்து விலக்கப்பட்டு, தங்களுக்கு உரிய வசிப்பிடத்தில் அவற்றை வசிக்கச் செய்யும் போதுதான் நித்தியமானதையும், பரமாத்மாவையும் நீ உனக்குள்ளேயே காண்பாய்[1].(6) ஞானம் கொண்ட உயர் ஆன்ம பிராமணர்கள், பிரகாசத்தில் சுடர்மிக்க நெருப்பாகவும், உயர்ந்ததாகவும் அண்ட ஆன்மாவாகவும் இருக்கும் அதைக் காண்பதில் வெல்கிறார்கள்.(7) எண்ணற்ற கிளைகளையும், பல மலர்கள் மற்றும் கனிகளையும் கொண்ட ஒரு பெரிய மரமானது, தன்னுடைய எந்தப் பகுதியில் மலர்களையும், எந்தப் பகுதியில் கனிகளையும் கொண்டிருக்கிறது என்பதை அறியாததைப் போலவே,(8) ஆன்மாவும் {புத்தியும்}, பிறப்பு மற்றும் பிற குணங்களால் மாற்றமடைந்து, அஃது எங்கிருந்து வந்தது? எங்குச் செல்லப்போகிறது என்பதை அறியாமல் இருக்கிறது[2].(9) ஒருவன் ஞானம் எனும் விளக்கின் துணையால் தன் ஆன்மாவைக் காண்கிறான். எனவே, உன்னை உன்னிலேயே கண்டு, உனது உடலை நீ என்று கருதுவதை நிறுத்தி, அனைத்தையும் அறிந்த நிலையை அடைவாயாக.(10)

[1] "உண்மையில் மேய்ச்சல் நிலங்கள் என்ற பொருளில் இங்கே சொல்லப்படும் "கோச்சாரேப்யம்" Gocharebhyah என்பது, புலன்கள் மற்றும் மனம் ஆகியவை ஈடுபடும் புற மற்றும் அகப் பொருட்கள் அனைத்தையும் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவற்றின் முறையான இல்லம் அல்லது வசிப்பிடமானது பிரம்மம் என்று சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "இத்தகைய ஸ்லோகங்களைக் கவனிக்கையில் மொழித்துல்லியம் இல்லையென்றால் குழப்பமேற்படும். முதல் வரியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆத்மா என்ற வார்த்தை அறுதியற்றதாகும். அசேதன புத்தி, அஃதாவது அழியத்தக்க புத்தியை அது குறிக்கும் என உரையாசிரியர் கருதுகிறார். எனினும் நான் பிறப்பால் மாறுதலை அடையும் சித் எனும் பொருளைக் கொள்கிறேன். இறுதியில் ஒரே பொருளையே இது தருகிறது என நான் நினைக்கிறேன். இருந்தாலும், "உள் ஆன்மா" என்பது பிறப்பு மற்றும் குணங்களால் மாறுபாடு அடையாததே" ஆகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புஷ்பமும், பழமுள்ளதும், அனேக கிளைகளுடையதுமான பெரிய மரமானது (’எனது மலர் எங்கே? கனி எங்கே?’ என்று) தன்னுடைய மலர்களை அறிகிறதில்லை. அப்படியே புத்தியானது, "எங்கிருந்து வந்தேன்? எங்கே போகப்போகிறேன்?" என்று அறிகிறதில்லை" என்றிருக்கிறது. ஆன்மா மாற்றமடையாதது என்று சொல்லப்படுவது மேற்கண்டதை கும்பகோணம் பதிப்பில் உள்ளபடியே புத்தி எனக் கொள்க.



சட்டையை உரித்த பாம்பைப் போலப் பாவங்கள் அனைத்தையும் கழுவிய ஒருவன், இங்கேயே உயர்ந்த புத்தியை அடைந்து, ஒவ்வொரு கவலையில் இருந்தும், (மறுபிறவியில்} புதிய உடலை அடையும் கடப்பாட்டில் இருந்தும் வடுபடுகிறான்.(11) பல்வேறு திசைகளில் பரந்து விரிந்து ஓடும் நீரோட்டங்களைக் கொண்டதும், தன் போக்கில் இவ்வுலகைச் சுமந்து செல்வதுமான வாழ்வெனும் ஆறு அச்சம்நிறைந்ததாக இருக்கிறது. ஐம்புலன்களே அதன் முதலைகளாக இருக்கின்றன. மனமும், அதன் காரணமும் கரைகளாக இருக்கின்றன.(12) பேராசையும், தீர்மான மயக்கமும் அதை மறைத்து மிதக்கும் புல்லாகவும், துரும்பாகவும் இருக்கின்றன. காமமும், கோபமும், அதனில் வாழும் சீற்றமிகு பாம்புகளாக இருக்கின்றன. வாய்மை அதன் சேறுநிறைந்த கரைகளில் தீர்த்தமாக அமைந்திருக்கிறது.(13) புலப்படாததிலிருந்து பிறக்கும் அதன் நீரோட்டம் வேகமானதாகவும், தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோரால் கடக்க முடியாததாகவும் இருக்கிறது. நீ புத்தியின் துணை கொண்டு, ஆசைகளையே முதலைகளாகக் கொண்ட அந்த ஆற்றைக் கடப்பாயாக.(14) உலகமும், அதன் காரியங்களும் அந்த ஆறு எதை நோக்கி ஓடுமோ அந்தப் பெருங்கடலாக இருக்கிறது. உயிரினங்களும், பேருயிரினங்களும், ஒருவராலும் புரிந்து கொள்ளப்பட முடியாத அதன் ஆழமாக இருக்கின்றன. ஓ குழந்தாய், அந்த ஓடையானது ஒருவனின் பிறப்பையே தோற்றுவாயாகக் கொண்டிருக்கிறது. வாக்கே அதன் சுழல்களாகும். கடப்பதற்கு அரிதான அதை,(15) கல்வி, ஞானம் மற்றும் புத்தியைக் கொண்ட மனிதர்களே கடக்கிறார்கள்.

அதைக் கடந்து, அமைதியான இதயத்தை அடைந்து, ஆன்மாவை அறிந்தவனாக, ஒவ்வொரு தன்மையிலும் தூய்மையடைந்தவனாக, ஒவ்வொரு பற்றில் இருந்தும் விடுபடுவதில் வெற்றியடைவாயாக.(16) தூய்மையடைந்த, மேன்மையான புத்தியைச் சார்ந்து, பிரம்மமாகவே ஆவதில் நீ வெல்வாயாக. ஒவ்வொரு உலகப் பற்றிலிருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு, தூய்மையடைந்த ஆன்மாவை அடைந்து, ஒவ்வொரு வகை பாவத்தையும் கடந்து,(17) மலையுச்சியில் இருந்து பூமியின் பரப்பில் ஊர்ந்து செல்லும் உயிரினங்களைக் காணும் ஒருவனைப் போல நீ இந்த உலகைக் காண்பாயாக. கோபத்துக்கோ, மகிழ்ச்சிக்கோ வசப்படாமல், கொடூரமான ஆசை எதையும் அமைத்துக் கொள்ளாமல், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும், அழிவையும் காண்பதில் வெற்றியடைவாயாக.(18) ஞானம் கொண்ட மனிதர்கள், இத்தகைய செயலையே அனைத்திலும் முதன்மையானதாகக் கருதுகிறார்கள். உண்மையில், அறவோரில் முதன்மையானோராலும், உண்மையை அறிந்த தவசிகளாலும், வாழ்வெனும் ஆற்றைக் கடக்கும் இச்செயலே ஒருவன் நிறைவேற்ற வேண்டிய அனைத்து செயல்களிலும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.(19) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருக்கும்} ஆன்மாவைக் குறித்த இந்த அறிவே, ஒருவனுடைய மகனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதெனக் கருதப்படுவதாகும். புலன்களைக் கட்டுப்படுத்தி, நேர்மையான நடத்தையுடனும், அடக்கம் அல்லது பணிவுடனும் இருக்கும் ஒருவனுக்கு இதை {இந்த அறிவை} மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும்.(20)

ஓ! குழந்தாய், நான் இப்போது உன்னிடம் சொன்னதும், ஆன்மாவின் மூலமே உண்மையாகச் சாட்சி காணப்படுவதுமான இந்த ஆன்ம அறிவானது, புதிர்கள் அனைத்திலும் பெரியதும், ஒருவன் அடையக்கூடியதிலேயே மிக உயர்ந்த அறிவுமாகும்.(21) ஆண், பெண், அலி என்ற பாலினமேதும் பிரம்மத்திற்குக் கிடையாது. அதற்குத் துன்பமோ இன்பமோ கிடையாது. அது தன் சாரமாகக் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தைக் கொண்டிருக்கிறது.(22) பிரம்ம அறிவை அடைபவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ, எந்தப் பாலினமாகவோ இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் மறுபிறப்பை அடைய வேண்டியதில்லை. மறுபிறவியைத் தவிர்க்கும் நிலையை அடைவதற்காக இந்தக் கடமை (யோகக் கடமை) மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும்.(23) இக்காரியத்தில் பல்வேறு தவசிகளின் சொன்ன பல்வேறு மேம்பட்ட கருத்துகள் வழிவகுக்கும் வகையிலேயே உன் கேள்விக்குப் பதிலளிக்க நான் பயன்படுத்திய இந்த வார்த்தைகளும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும். இக்காரியம் எவ்வாறு விளக்கப்பட வேண்டுமோ அவ்வகையிலேயே நான் உனக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறேன். அக்கருத்துகள் சில வேளைகளில் கனியை உண்டாக்கின்றன, சில வேளைகளில் உண்டாக்குவதில்லை. (எனினும், நான் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் வேறுவகையைச் சார்ந்தவை, ஏனெனில், இவை நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும்).(24) ஓ! நற்குழந்தாய், இந்தக் காரணத்தினாலேயே, நிறைவு, தகுதி மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மகன் அல்லது ஒரு சீடனால் கேட்கப்படும்போது, ஓர் ஆசான் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், என் மகனான உனது நன்மைக்காக என்னால் மனத்தில் ஆழப் பதிய வைக்கப்பட்ட இந்தப்போதனைகளை, உண்மையில் உள்ளது உள்ளபடியே அவனது மனத்தில் ஆழப் பதிய வைக்க வேண்டும்" என்றார் {வியாசர்}.(25)

சாந்திபர்வம் பகுதி – 250ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்