Thursday, September 06, 2018

தர்மதர்சனர்! - சாந்திபர்வம் பகுதி – 264

Dharmadarsana ! | Shanti-Parva-Section-264 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 91)


பதிவின் சுருக்கம் : ஜாஜலி உண்மையை அறிந்து கொள்ள, அவர் வளர்த்த பறவைகளை அழைக்குமாறு அவரிடம் சொன்ன துலாதாரன்; கொல்லாமையின் முக்கியத்துவம் குறித்து ஜாஜலியிடம் பறவைகள் பேசிய நீதிமொழி; தர்மதர்சனர் உரைத்த நீதிகள் என பறவைகள் சொன்னது; ஜாஜலியும், துலாதாரனும் சொர்க்கத்தை அடைந்தது...


துலாதாரன், "ஓ! ஜாஜலி, நான் சொன்ன கடமையின் பாதையைப் பின்பற்றிய நல்லோரும், அல்லோரும் யாவர் என்பதை உமது கண்களாலேயே காண்பீராக. அப்போதுதான் உண்மையின் நிலை என்ன என்பதை நீர் முறையாகப் புரிந்து கொள்வீர்.(1) வானத்தில் வட்டமிடும் பறவைகள் பலவற்றைக் காண்பீராக. அவற்றுக்கு மத்தியில் உமது தலையில் வளர்ந்த பறவைகளும், பருந்துகள் பலவும், பிற இனங்களைச் சேர்ந்தவை பலவும் இருக்கின்றன.(2) ஓ! பிராமணரே, அந்தப் பறவைகள் தங்கள் தங்களுக்குரிய கூடுகளில் நுழைய தங்கள் சிறகுகளையும், கால்களையும் சுருக்குவதைப் பாரும். ஓ! மறுபிறப்பாளரே, அவற்றை அழைப்பீராக.(3) உம்மால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட அந்தப் பறவைகள் தங்கள் தந்தையான உம்மீது தாங்கள் கொண்ட அன்பை அங்கே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஓ! ஜாஜலி, நீரே அவற்றின் தந்தை என்பதில் ஐயமில்லை. உமது பிள்ளைகளை அழைப்பீராக" என்றான்".(4)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அப்போது ஜாஜலியால் அழைக்கப்பட்ட அந்தப் பறவைகள், எவ்வுயிருக்கும் எத்தீங்குமிழைக்காத அவ்வறத்தின் விதிகளுக்கு ஏற்ப பதிலளித்தன.(5) {அப்போது அந்தப் பறவைகள்}[1]"எவ்வுயிரினுக்கும் தீங்கிழைக்காமல் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் (அவற்றைச் செய்தவனுக்கு) பயன்படத்தக்கனவாக இருக்கின்றன. எனினும், பிறருக்குத் தீங்கு செய்து செய்யப்படும் செயல்களோ, நம்பிக்கையை அழிக்கின்றன, நம்பிக்கை அழிந்ததும், அஃதை அழித்தவனும் {அந்தச் செயல்களைச் செய்தவனும்} அழிவடைகிறான்.(6) அடைவதையும், அடையாமல் போவதையும் ஒரே ஒளியில் கருதுவோர், நம்பிக்கையுடன் கூடியோர், தற்கட்டுப்பாடுடையோர், அமைதியான மனம் கொண்டோர், (கனியின் மீது கொண்ட விருப்பத்தால் அல்லாமல்) கடமையுணர்வால் வேள்விகளைச் செய்வோர் ஆகியோரால் செய்யப்படும் வேள்விகள் கனியை உண்டாக்குகின்றன.(7) ஓ! மறுபிறப்பாளரே, பிரம்மத்தைப் பொறுத்தவரையில் நம்பிக்கை {ஸ்ரத்தை} என்பவள் சூரியனின் மகளாவாள். நம்பிக்கை என்பது (வேத) மந்திரங்கள் மற்றும் தியானத்தின் மூலம் பிறக்கும் தகுதியை {புண்ணியத்தை} விட மிக மேன்மையானதாகும்.(8) பேச்சுக் குறைபாட்டால் தரமிழந்த ஒரு செயலானது நம்பிக்கையின் மூலம் காக்கப்படுகிறது. மனக்குறைபாட்டால் தரமிழந்த ஒரு செயலும் நம்பிக்கையால் காக்கப்படுகிறது. ஆனால் நம்பிக்கை இன்மையால் தரம் தாழ்ந்த ஒரு செயலை வாக்காலோ, மனத்தாலோ ஒருபோதும் காக்க முடியாது[2].(9)

[1] இங்கே ஜாஜலியிடம் யார் பேசுவது என்ற குறிப்புக் கங்குலியில் இல்லை; கும்பகோணம் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் வெவ்வேறு வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "உடனே அந்த ஜாஜலி தர்மத்தினால் அந்தப் பக்ஷிகளை அழைக்க, (அவை) தர்மத்தைப் பற்றிய வார்த்தைகளால் மறுமொழி சொல்லின. துலாதாரன், "ஓ பிராமணரே, கொல்லாமை முதலானவையே இம்மைக்கும் மறுமைக்கும் போதுமான தர்மம்" என்று துலாதாரனே சொல்லத்தொடங்குகிறான். ஆனால் பிபேக் திப்ராயின் பதிப்பிலோல் அந்தப் பறவைகள் பேசியதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இந்த இடத்தில் பறவைகள் பேசத் தொடங்குவதாகவே தெரிகிறது. 18ம் ஸ்லோகத்தில் இதற்குரிய திறப்புக் கிடைக்கிறது.

[2] "பேச்சுக்குறைபாடு என்பது மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பதாகும். மனக்குறைபாடு என்பது பதற்றம் மற்றும் அக்கறையின்மை முதலியவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



பழங்காலத்தில் நேர்ந்தவற்றை அறியும் மனிதர்கள், இது தொடர்பாகப் பிரம்மன் பாடிய பின்வரும் ஸ்லோகத்தைக் குறிப்பிடுகின்றனர். (உடலாலும் செயல்களாலும்) தூய்மையான, ஆனால் நம்பிக்கையில்லாத {ஸ்ரத்தையில்லாத / அக்கறையில்லாத} ஒரு மனிதனின் வேள்விக் காணிக்கைகளையும், (உடலாலும், செயல்களாலும்) தூய்மையற்ற, ஆனால் நம்பிக்கையுள்ள {ஸ்ரத்தையுள்ள / அக்கறையுள்ள} மற்றொருவனின் வேள்விக் காணிக்கைகளையும் தேவர்கள் (ஏற்பதற்கான தகுதியின் அடிப்படையில்) ஒன்றாகவே கருதினார்கள். வேதங்களை அறிந்தவனும் கஞ்சனுமான ஒருவனின் உணவையும், வட்டித் தொழில் செய்பவனும் தயாளனுமான மற்றொருவனின் உணவையும்(10,11) கவனமாகக் கருத்தில் கொண்ட தேவர்கள் தேவர்கள் (ஏற்பதற்கான தகுதியின் அடிப்படையில்) அவற்றை ஒன்றாகவே ஏற்றனர். அப்போது, உயிரினங்கள் அனைத்தின் உயர்ந்த தலைவன் (பிரம்மன்) அவர்கள் பிழை செய்துவிட்டதாக அவர்களிடம் சொன்னான்.(12) தயாளனின் உணவு நம்பிக்கையால் புனிதப்படுத்தப்பட்டது. எனினும், நம்பிக்கையற்றவனின் உணவோ அத்தகைய நம்பிக்கையின்மையின் விளைவால் ஒன்றுக்குமாகாததாகிறது. வட்டிக்கு விடும் தயாளனின் உணவு ஏற்புடையது, ஆனால் கஞ்சனின் உணவோ ஏற்பில்லாததாகும்.(13) இவ்வுலகில், நம்பிக்கையில்லாதவன் {ஸ்ரத்தையில்லாதவன் / அக்கறையில்லாதவன்} என்ற ஒருவன் மட்டுமே தேவர்களுக்குக் காணிக்கையளிக்கத் தகாதவனாவான். அத்தகைய மனிதனின் உணவு மட்டுமே உண்ணத்தகாததாகும். இதுவே கடமைகள் அறிந்த மனிதர்களின் கருத்தாகும்.(14)

நம்பிக்கையின்மை {ஸ்ரத்தையின்மை / அக்கறையின்மை} பெரும்பாவமாகும். நம்பிக்கையே பாவங்களைக் கழுவுகிறது. பாம்பு தனது சட்டையை உரிப்பதைப் போலவே, நம்பிக்கையுள்ள ஒரு மனிதன் தன் பாவங்கள் அனைத்தையும் விலக்குகிறான்.(15) நம்பிக்கையுடன் கூடிய துறவறமானது, புனிதமாகக் கருதப்படும் அனைத்துப் பொருட்களைக் காட்டிலும் மேன்மையானதாகும். நடத்தையில் உள்ள களங்கள் அனைத்தையும் தவிர்க்கும் ஒருவன் நம்பிக்கையுடன் இருப்பதால் புனிதமடைகிறான்.(16) அத்தகைய மனிதனுக்குத் தவங்கள், நடத்தை அல்லது பொறை ஆகியவற்றிற்கான தேவையென்ன இருக்கிறது? மனிதர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களே. எனினும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களால் பாதிக்கப்பட்ட மூன்று வகை நம்பிக்கைகள் இருக்கின்றன. அதன்படியாக ஒருவன் கொண்ட நம்பிக்கை வகையின் அடிப்படையிலேயே அவன் அழைக்கப்படுகிறான்.(17) நல்லியல்பு மற்றும் அறநெறியின் உண்மையான உள்ளொளியைக் கொண்டவர்களே இவ்வாறான கடமைகளை விதித்திருக்கின்றனர். எங்கள் விசாரணையின் விளைவால் இவை யாவற்றையும் தர்மதர்சனர் என்ற தவசியிடம் இருந்து நாங்கள் பெற்றோம்.(18) ஓ! பெரும் ஞானியே {ஜாஜலியே}, நம்பிக்கை கொண்டால் மேன்மையான நிலையை {பரத்தை} அடைவீர்; எனவே நம்பிக்கை கொள்வீராக. எவன் (ஸ்ருதிகளின் தீர்மானங்களில்) நம்பிக்கையுடனிருக்கிறானோ, (அவை தனக்கான நன்மைக்கானவை என்ற நம்பிக்கையில்) அவை சொன்னவற்றின்படி எவன் செயல்படுகிறானோ அவன் நிச்சயம் அற ஆன்மா {தர்மாத்மா} ஆவான். {நம்பிக்கையுடன் கூடிய இந்த வணிகன் {துலாதாரன்}, நம்பிக்கையெனும் அறத்தைப் பின்பற்றுகிறான்}. ஓ! ஜாஜலி, எவன் (நம்பிக்கையின் ஆதிக்கத்தின் கீழ்) தன் பாதையைப் பின்பற்றுவானோ அவன் மேன்மையானவனாவான்" {என்றன அப்பறவைகள்}".(19)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சிறிது காலத்திற்குப் பிறகு, பெரும் ஞானம் கொண்டவர்களான துலாதாரன் மற்றும் ஜாஜலி ஆகிய இருவரும் சொர்க்கத்திற்கு உயர்ந்து,(20) தாங்கள் செய்த செயல்களால் ஈடப்பட்ட தங்களுக்குரிய இடங்களை அடைந்து அங்கேயே மகிழ்ச்சியில் திளைத்தனர்.[3] இந்த வகையிலான பல உண்மைகள் துலாதாரனால் சொல்லப்பட்டன.(21) அந்தத் திறமிக்க மனிதன் (தீங்கிழையாமை என்ற) இவ்வறத்தை முழுமையாகப் புரிந்து கொண்டான். இந்த நித்திய கடமைகள் அவனாலேயே {துலாதாரனாலேயே} அறிவிக்கப்பட்டன.(22) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, கொண்டாடத்தக்க சக்தியைக் கொண்ட துலாதாரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு மறுபிறப்பாளரான ஜாஜலி அமைதியடைந்தார். இவ்வழியில் துலாதாரன் சொன்ன பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பல உண்மைகள் போதனைக்கான உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீ கேட்க விரும்பும் பிற உண்மைகள் யாவை?" {என்று கேட்டார் பீஷ்மர்}.(23)

[3] "இங்கே திவம் Divam என்ற வார்த்தை ஹார்தாகாசத்தைக் Haardaakaacam குறிப்பதாக எண்ணி உரையாசிரியர் பொருள் கொண்டிருக்கிறார். அவர்கள் (சொர்க்கத்தின் சாதாரண இன்பநிலையில் திளைக்காமல்) யோகபலத்தில் திளைத்தனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸ்வல்பகாலத்தில் மஹாபுத்திமான்களான அந்த ஜாஜலியும் துலாதாரனும் ஸ்வர்க்கத்தை அடைந்து தங்கள் கர்ம பலத்தினால் உண்டு பண்ணப்பட்ட தங்கள் தங்கள் ஸ்தானத்தை அடைந்து ஸுகமாகக் களித்தார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இருவரும் சொர்க்கமடைந்து மகிழ்ச்சியில் திளைத்ததாகவே இருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 264ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்