Thursday, September 20, 2018

முக்தி! - சாந்திபர்வம் பகுதி – 274

Salvation! | Shanti-Parva-Section-274 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 101)


பதிவின் சுருக்கம் : முக்தி அடைவதற்கான வழிமுறைகள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, விடுதலையை {முக்தியை} வழிமுறைகளால் வென்றெடுக்க முடியுமேயன்றி வேறு வகையிலல்ல என்று நீர் சொன்னீர். அவ்வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து நான் முறையாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் ஞானியே, வழிமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்ற எப்போதும் முனைபவனாக நீ இருப்பதால், ஓ! பாமற்றவனே, நுட்பமான காரியத்தைக் குறித்து நீ செய்யும் இந்த விசாரணை உண்மையில் உனக்குத் தகுந்ததே ஆகும்.(2) ஒருவன் தன் பயன்பாட்டுக்காக மண் குடத்தைச் செய்யும்போது இருந்த மனநிலை, அந்தக் குடம் {மண்குடத்தைச் செய்யும் அந்தப் பணி} நிறைவடைந்ததும் மறைந்தது போகிறது. அதே வகையிலேயே, எந்தக் காரணம் ஒரு மனிதனை முன்னேற்றத்திற்கும், செழிப்புக்குமான வேராக அறத்தைக் கருதச் செய்யுமோ, அது {அந்தக் காரணம்} விடுதலையை அடைய முனைபவர்களிடம் இல்லாமல் போகிறது[1].(3) கிழக்கத்திப் பெருங்கடலுக்கு வழிவகுக்கும் பாதையின் மூலம் ஒருவன் மேற்கத்திப் பெருங்கடலுக்குச் செல்ல முடியாது. விடுதலைக்கான {முக்திக்கான} வழிவகுக்க ஒரே பாதை மட்டுமே இருக்கிறது. (அடையத்தக்க வேறு எந்தப் பொருளுக்கும் வழிவகுக்கும் எதுவும் அதனோடு ஒப்பிடத்தக்கதல்ல). இது குறித்து விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)

[1] "ஒரு மனிதனுக்கு மண்குடம் தேவைப்படும்போது, அதை உண்டாக்க அவன் செயல்படுகிறான். அவனிடம் அஃது இருக்கும்போது, அவனது தேவை நிறைவடைந்துவிட்டதால் அவன் அதே மனநிலையில் இருப்பதில்லை. அதே போலவே, அறத்தின் வெகுமதியாகச் சொர்க்கம் மற்றும் உலகம் சார்ந்த செழிப்பை விரும்பும் மனிதர்களுக்குப் பிரவிருத்தி, அல்லது செயல்களே வழிமுறைகளாக இருக்கின்றன. அத்தகைய அறத்தை அடைந்த பிறகு, விடுதலை அடைவதில் தங்களை நிறுவிக் கொண்டோரிடம், அனைத்துமாக நிவிருத்தியே {தியானம் / யோகம் போன்ற அகச்செயலே} இருப்பதால் அது {பிரவிருத்தி} அல்லது அவை {செயல்கள்} செயல்படுவதில்லை.

பிழைபொறுத்தல் பயில்வது {மன்னிப்பது}, கோபத்தை அழிப்பது, அனைத்து நோக்கங்களையும் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் ஒருவன் ஆசையை வேரறுக்க வேண்டும். சத்வ குணத்தைப் பயில்வதன் மூலம்[2] ஒருவன் உறக்கத்தை {சோம்பலை} வெல்ல வேண்டும்.(5) விழிப்புணர்வின் மூலம் ஒருவன் அச்சத்தை விலக்க வேண்டும், ஆன்ம சிந்தனையின் மூலம் ஒருவன் மூச்சை வெல்ல வேண்டும்[3]. பொறுமையின் மூலம் ஒருவன் விருப்பு, வெறுப்பு, காமம் ஆகியவற்றை விலக்க வேண்டும்;(6) பிழை {குற்றம்}, அறியாமை, ஐயம் ஆகியவற்றை உண்மை கல்வியின் மூலம் விலக்க வேண்டும். ஞானத்தைத் தேடுவதன் மூலம் ஒருவன் அக்கறையின்மை மற்றும் விருப்பமில்லாத பொருட்களைக் குறித்த விசாரணை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்[4].(7) மிகக் குறைந்த அளவில் எளிய, செரிக்கத்த உணவின் மூலம் ஒருவன் சீரின்மை மற்றும் நோய்கள் அனைத்தையும் விலக்க வேண்டும். நிறைவின் மூலம் ஒருவன் பேராசை மற்றும் தீர்மான மயக்கம் ஆகியவற்றையும், உண்மை ஞானத்தின் மூலம் உலகம் சார்ந்த அனைத்து காரியங்களையும் தவிர்க்க வேண்டும்[5].(8)

[2] "சோம்பல்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலம் என்று உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "யோகத்தின் மூலம் ஒருவன் தன் மூச்சை ஒழுங்குசெய்து, இறுதியாக அதை நிறுத்த வேண்டும். புறச் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு ஒரு யோகியால் காலகாலத்திற்கும் வாழ முடியும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "நித்திரை Nidraa என்பது அநாணுசந்தானம் ananusandhaana அல்லது ஆவலின்மை, அல்லது ஆர்வமின்மை என்று விளக்கப்படுகிறது. பிரதிபா pratibhaa என்பது முறையற்ற அல்லது விருப்பமற்ற பொருட்களைக் குறித்த விசாரணை என்ற பொருளைக் கொள்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] "உண்மையென்னவென்றால் உலகம் உண்மையற்றதாகவும், ஒரு முடிவைக் கொண்டதாகவும் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



நல்லுணர்வைப் பயில்வதன் மூலம் ஒருவன் அநீதியை வெல்ல வேண்டும். அனைத்து உயிரினங்களையும் மதிப்பதன் மூலம் ஒருவன் அறத்தை ஈட்ட வேண்டும். எதிர்பார்ப்பு எதிர்காலம் தொடர்புடையது என்பதைச் சிந்திப்பதன் மூலம் ஒருவன் அதைத் தவிர்க்க வேண்டும்; ஆசையைக் கைவிடுவதன் மூலம் அவன் செல்வத்தைக் கைவிட வேண்டும்.(9) (இம்மையில் உள்ள) அனைத்தும் நிலையற்றவை என்பதைச் சிந்திப்பதன் மூலம் நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதன் பற்றைக் கைவிட வேண்டும். அவன் யோகம் பயில்வதன் மூலம் பசியை அடக்க வேண்டும். நல்லுணர்வைப் பயில்வதன் மூலம் அவன் தன்முக்கியத்துவம் கொண்ட கருத்துகளை அனைத்தையும் விலக்கி, மனநிறைவின் மூலம் அனைத்து வகைத் தீவிர நாட்டங்களையும் விரட்ட வேண்டும்.(10) உழைப்பின் மூலம் ஒருவன் காரிய தாமதத்தையும், உறுதிப்பாட்டின் மூலம் அனைத்து வகை ஐயங்களையும், எண்ணங்களை வெளியிடாததன் மூலம் அளப்பளத்தலையும் {அதிகம் பேசுவதையும்}, துணிவின் மூலம் அனைத்து வகை அச்சங்களையும் அடக்க வேண்டும்[6].(11) புத்தியின் மூலம் வாக்கும், மனமும் அடக்கப்பட வேண்டும். ஞானக்கண்ணின் மூலம் புத்தி அடக்கப்பட வேண்டும். ஆன்ம அறிவின் மூலம் ஞானமும், இறுதியாக ஆன்மாவின் {பரமாத்மாவின்} மூலம் ஆன்மாவும் {அகங்காரம்} கட்டுப்படுத்தப்பட வேண்டும்[7].(12)

[6] "யோகத்தின் மூலம் அஃதாவது உடலிள்ள காற்றை {வாயுவை} ஒழுங்குமுறை படுத்துவதன் மூலம் பசி அடக்கப்பட வேண்டும். உறுதிப்பாட்டின் மூலம் ஐயம் விலக்கப்பட வேண்டும்; அஃதாவது ஐயத்தை விலக்குவதன் மூலம் குறிப்பிட்ட ஞானம் நாடப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஐயம் நிறைந்த தீர்மானங்கள் அனைத்தும் சாத்திர நம்பிக்கையின் மூலம் விலக்கப்படுவதையே இது குறிக்கிறது என்று உரையாசிரியர் நினைக்கிறார். இந்த ஸ்லோகத்தில் "அச்சம்" என்று சொல்வதன் மூலம் அச்சத்திற்கான தோற்றுவாயான உலகம் சொல்லப்படுகிறது. ஆசை, கோபம், பேராசை, பிழை {குற்றம்} செருக்கு மற்றும் பொறாமை ஆகிய ஆறையும் வெல்வதன் மூலம் அது {உலகமென்ற அச்சம்} வெல்லப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[7] "யோகப் பயிற்சியே இங்கே விதிக்கப்படுகிறது. முதலில், புலன்கள் மனத்தில் கலக்கப்பட வேண்டும், பிறகு மனமானது புத்தியில் கலக்கப்பட வேண்டும், பிறகு புத்தியானது ஆன்மாவில், அல்லது அகங்காரத்தில் கலக்கப்பட வேண்டும். இந்த அகங்காரமானது இறுதியில் பரமாத்மாவில் கலக்கப்பட வேண்டும். அகங்காரத்தைப் புரிந்து கொள்ளும்போது, பிரம்மத்தைக் காணலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தூய செயல்களையும், அமைதியான ஆன்மாவையும்[8] கொண்டோர், கல்விமான்களால் சொல்லப்படும் யோகத்தின் ஐந்து தடைகளை அடக்குவதன் மூலம் இந்த இறுதியான நிலையை {ஆன்மாவில் ஆன்மா கலக்கும் நிலையை} அடைகின்றனர்.(13) ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகியவற்றைக் கைவிடுவதன் மூலம் ஒருவன் பேச்சைக் கட்டுப்படுத்தி, யோகத்திற்குச் சாதகமான பழக்கங்களான(14) தியானம், கல்வி, கொடை, வாய்மை, பணிவு, வெளிப்படைத்தன்மை, பிழைபொறுக்கும் {மன்னிக்கும்} தன்மை, இதயத் தூய்மை, உணவுத்தூய்மை, புலனடக்கம் ஆகியவற்றைப் பயில வேண்டும்.(15) இவற்றின் மூலம் ஒருவனுடைய சக்தி பெருகி, பாவங்கள் அகன்று, விருப்பங்கள் கனியால் மகுடம் சூட்டப்பட்டு, (பல்வேறு வகைகளிலான) ஞானம் அடையப்படுகிறது.(16)

[8] "தூய செயல்கள் என்பன நிஷ்காம தர்மத்தில் {ஆசையற்ற அறத்தில்} உள்ளனவாகும். ஆன்ம அமைதி என்பது நாட்டங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தையும் விலக்குவதன் மூலம் அடையப்படும் ஆன்மத் தூய்மையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஒருவன் தன் பாவங்கள் கழுவப்பட்டு, சக்தி மற்றும் எளிய உணவைக் கொண்டு தன் புலன்களுக்குத் தலைவனாகி, ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் வெல்லும்போது, பிரம்மத்தை அடைய முனைகிறான்.(17) (சாத்திரங்களைக் கேட்பது மற்றும் கற்பதன் மூலம் கிட்டும்) அறியாமை தவிர்ப்பு, (துறவின் விளைவால் உண்டாகும்) பற்றின்மை, (மனநிறைவு மற்றும் பிழைபொறுத்தலைப் பின்பற்றுவதன் மூலம் கிட்டும்) கோபம் மற்றும் ஆசையில் இருந்து விடுதலை {கோபமின்மை மற்றும் ஆசையின்மை}, யோகத்தின் மூலம் வெல்லப்படும் பலம், செருக்கு மற்றும் அலட்சியம் இன்மை, (அனைத்து வகை அச்சத்தையும் அடக்குவதன் மூலம் கிட்டும்) கவலையில் இருந்து விடுதலை {கவலையின்மை} இல்லம் மற்றும் குடும்பம் போன்ற எதனிலும் பற்றின்மை(18) ஆகியவையே விடுதலையின் {முக்தியின்} பாதையாக அமைகின்றன. அந்தப் பாதை இனிமைநிறைந்ததும், களங்கமற்றதும், தூய்மையானதுமாகும். அதேபோல, ஆசையின்மையின் மூலம் செய்யப்படும் வாக்கு, உடல் மற்றும் மனக்கட்டுப்பாடு ஆகியவையும் விடுதலையின் பாதையாக அமைகின்றன" என்றார் {பீஷ்மர்}.(19)

சாந்திபர்வம் பகுதி – 274ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்